search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "31 feet"

    • புதிய ஆயக்காட்டு பாசனப் பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • வரட்டுப் பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணை 33 அடி கொள்ளளவு கொண்ட அணையாகும்.

    மழைக்காலங்களில் மலைப்பகுதிகளில் பொழியும் மழை நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு கோடை காலங்களில் பாசனத் திற்காகவும், வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் தண்ணீராகவும் பயன்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் பாசனத்திற்காக புதிய ஆயக்காட்டு பாசனப் பகுதிகள் பாசன வசதி பெரும் வகையில் 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் நேரடியாக 3 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெருகின்றன. இதனைத் தொடர்ந்து இன்று வரட்டுப் பள்ளம் அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×