search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rare species"

    • விலங்கியல் மொழியில் பைசே, அரபைப்மா கைகாஸ் என அழைக்கப்படுகிறது
    • வளர்ச்சி பெற்ற பைசே சுமார் 12 அடி நீளமும், 20 கிலோகிராம் எடையும் கொண்டவை

    பிரேசில், கொலம்பியா, பெரு மற்றும் பல தென் அமெரிக்க நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் மழைக்காடுகள், அமேசான் (Amazon). மத்திய தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா (Bolivia) நாட்டிலும் இது சுமார் 4 சதவீதம் உள்ளது.

    பொலிவியாவை ஒட்டிய அமேசான் நீர்நிலைகளில் மீன்பிடி தொழில் செய்து வந்தவர் கில்லர்மோ ஒட்டா பாரம். இவரது வலையில் முன்னெப்போதும் இல்லாத அரிய வகை மீன் சிக்கியது.

    வழக்கத்தில் பைசே (paiche) என அழைக்கப்படும் இம்மீன், விலங்கியல் மொழியில் அரபைப்மா கைகாஸ் (Arapaipma gigas) என அழைக்கப்படுகிறது.


    நன்னீர் (freshwater) மீன் வகைகளில் மிக பெரிய மீனான இது சுமார் 4 மீட்டர் (12 அடி) வரை நீளமும் 200 கிலோகிராம் நீளமும் உடையது.

    எப்பொழுதும் அதிக பசியுடன் இருக்கும் பைசே, கூட்டம் கூட்டமாக வரும் பிற சிறிய மீன் வகைகளை உண்டு விடும். பைசேவிற்கு அஞ்சி பிற மீன் வகைகள், வேறு நீர்நிலைகளை தேடி ஓடி விடுகின்றன.

    இவ்வகை மீன்கள் இருக்கும் இடங்களில் பிற வகை மீன்கள் வாழ்வது அரிதாவதால் உயிரியல் ஏற்றத்தாழ்வுக்கு இவை காரணமாவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


    பொலிவியா நீர்நிலையில் இந்த மீன் வந்த காலகட்டம் குறித்து சரிவர தகவல்கள் இல்லை. பெரு நாட்டில் உள்ள மீன் பண்ணைகளில் உற்பத்தியாகி இங்கு வந்திருக்கலாம் என தெரிகிறது.

    பைசேவிற்கு அதன் வாழ்நாளில் வருடத்திற்கு சராசரியாக 10 கிலோ வரை எடை கூடிக்கொண்டே போகும். பல சிறிய பற்களை கொண்டிருந்தாலும் அவை கூரானதாக இருக்காது. ஆனாலும், பிரன்ஹா (piranha) போன்ற ஆபத்தான மீன் வகைகளை பைசே கடித்து தின்று விடும்.

    அரிதான பைசேவின் இனம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக உயிரியல் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    அவ்வப்போது சுவாசத்திற்காக நீருக்கு மேலே தோன்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், பைசே அமைதியான நீர்நிலைகளை விரும்புகின்றன. அங்கு வரும் போது இவை பிடிபடுவது சுலபமாகிறது.


    ஆரம்பத்தில் இவ்வகை மீன் ஆபத்தானது என நினைத்து பிடிக்க அஞ்சிய மீன்பிடி தொழிலாளர்கள், இவற்றிற்கு பெருகி வரும் தேவைக்காக தேடி பிடிக்கின்றனர்.

    • ஆந்தை அலறும் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் மண்டப உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
    • உடனடியாக சத்திய மங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பழைய மார்க்கெட் பகுதியில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. பூட்டி இருந்த மண்டபத்தில் இருந்து ஆந்தை அலறும் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் மண்டப உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் சென்று பார்த்த போது ஆந்தை ஒன்று உள்ளே நடமாடிக் கொண்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் உடனடியாக சத்திய மங்கலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் திருமண மண்டபத்தில் நடமாடிய ஆந்தையை மீட்டு புளியங்கோம்பை வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர். இது அரிய வகை ஆந்தை என வனத்துறையினர் தெரிவித்தனர். 

    • நச்சுத்தன்மை இல்லாத இந்த வகை பாம்பு இரட்டை தலை பாம்பு என்றும் அழைப்பார்கள்.
    • மண்ணுக்குள்ளேயே இருந்து உணவை தேடிக் கொள்ளும்.

    பல்லடம் :

    பாம்பு வகைகளில் மண்ணுளி பாம்பும் ஒன்று. நச்சுத்தன்மை இல்லாத இந்த வகை பாம்பு இரட்டை தலை பாம்பு என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் மண்ணுக்குள்ளேயே இருந்து உணவை தேடிக் கொள்ளும்.

    இதனால் மண் உள்ளே இருக்கும் பாம்பு என அழைக்கப்பட்டு மண்ணுளிப் பாம்பு என மருவி அழைக்கப்படுகிறது. இவை விவசாய நிலங்களில் உள்ள எலிகள், பூச்சிகள் போன்றவற்றை பிடித்து உண்ணும், விவசாயிகளின் நண்பனான இந்த மண்ணுளிப் பாம்புக்கு விஷம் கிடையாது. எனினும் மனிதர்களை இந்தப் பாம்பு நாக்கு மூலம் தீண்டினால் அலர்ஜி ஏற்படும். இந்த நிலையில், பல்லடம் மங்கலம் ரோடு செந்தோட்டம் பகுதியில் வசிக்கும் 10வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சபீனா வீட்டில் புகுந்த மண்ணுளிப் பாம்பு அங்கிருந்த பூச்செடிக்குள் புகுந்து கொண்டது. இதனைப் பார்த்த சபீனா குடும்பத்தினர். அதனை சாக்கு பைக்குள் வைத்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி வனச்சரகப் பணியாளர் மணிகண்டன் பல்லடம் வந்தார். அவரிடம் சுமார் 4 அடி நீளம் உள்ள மண்ணுளிப் பாம்பு பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

    ×