search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water pipe"

    • குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    • குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து காடையாம்பட்டி பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    இதன் மூலம் ஓமலூர், காடையாம்பட்டி, தொப்பூர், தாரமங்கலம், மேச்சேரி பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அனல்மின் நிலையம் செல்லும் சாலையில் காடையாம்பட்டி ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

    தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
    • உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    திருப்பூர்:

    திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

    சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய்கள் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்களும் உடைக்கப்பட்டது. அந்த உடைப்பை சரி செய்யாமல் அதற்கு மேலே ரோடு போடும் பணி இன்று காலை நடைபெற்றது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் 44 வது வார்டு கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் கிடைத்ததும் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக மாநகராட்சி கவுன்சிலர் கண்ணப்பன் கூறும்போது, நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும் இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

    • மலைரெயில் பாதைகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
    • காட்டு யானை நடமாட்டம் குறித்து ரயில்வே ஊழியர்களும் கண்காணித்து பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக பிறந்த குட்டியுடன் 10 யானைகள் முகாமிட்டு உள்ளன. அவை மலைப்பாதையில் உள்ள கிராமங்களான பர்லியாறு, கே.என்.ஆர், மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன. அவற்றை வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அந்த யானைகள் கூட்டம் காட்டேரி பூங்கா அருகே உள்ள ரண்ணிமேடு ரயில் நிலையம் அருகில் திடீரென முகாமிட்டன. பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றன. பின்னர் குடியிருப்பு பகுதிக்கு இரவு நேரத்தில் சென்ற காட்டு யானைகள் அங்கு உள்ள விளைநிலங்களில் பயிரிட்டு உள்ள வாழை மரங்களை மிதித்து சேதப்படுத்தின.

    இந்நிலையில் வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானை கூட்டம் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுத்து நிறுத்தி விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் இரவில் தனியாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறியதாவது:-

    தொடர்மழை காரணமாக குன்னூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது. எனவே சமவெளி பகுதிகளில் இருந்து வரும் காட்டு யானைகள், மலைப்பாதைகளில் முகாமிட்டு வருகிறது இதனை விரட்டி அடிக்கும் பணியில் வனஊழியர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். மேலும் மலைரெயில் பாதைகளில் அவ்வப்போது யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    குன்னூரில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட மேட்டுப்பாளையம் மலை ரெயில், ரன்னிமேடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் பாதையில் யானைகள் நின்றதால் அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் யானைகளை காட்டுக்குள் விரட்டினோம். இதுதொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. காட்டு யானைகளை சமவெளி பகுதிக்கு விரட்டும் பணி நடந்து வருகிறது.

    மேலும் காட்டு யானை நடமாட்டம் குறித்து ரயில்வே ஊழியர்களும் கண்காணித்து பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும். வாகன ஓட்டிகளும் மலைப்பாதையில் மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் யானைகள் நடமாடும் இடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடை யாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
    • குடிநீர் குழாயானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி காவிரியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு காடை யாம்பட்டி கூட்டுக்குடி நீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையம் மூலம் நாளொன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் மூலம் மேச்சேரி, தொப்பூர், காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை அனல்மின் நிலைய சாலையில் உள்ள காடையாம்பட்டி செல்லும் கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. இதனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாகியது.

    இதனை அறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நீரேற்று நிலையத்தில் தண்ணீர் பம்ப் செய்வதை உடனடியாக நிறுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் வெளியேறியதால் சாலை முழுவதும் வெள்ளமாக காட்சியளித்தது.

    அவ்வழியே சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றது. குடிநீர் குழாயில் உடைப்பு காரணமாக பல ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வீணானது. இதனால் காடையாம்பட்டி பகுதிக்கு குடிநீர் வினியாகம் பாதிக்கப்பட்டது .

    உடைப்பு ஏற்பட்ட பகுதியை மாலை 4 மணி அளவில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் சரி செய்தனர். அதன் பின்னர் நீர் திறந்து விடப்பட்டது.

    குடிநீர் குழாயானது மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் இதே பகுதியில் பல முறை குழாயில் உடைப்பு ஏற்பட்டு தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகிறது. பழுதான நிலையில் உள்ள ராட்சத குழாய்களை மாற்றினால் மட்டுமே பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க முடியும் என அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • புதிய குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது.
    • குழாய் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதிக்குட்பட்ட உறுவையாறு மூகாம்பிகை நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.36 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது.

    இதன் தொடக்க விழா அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நடந்தது. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் பூமி பூஜை செய்து குழாய் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கிராம சுகாதார குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் திருநாவுக்கரசு இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • தொட்டியில் இருந்து வெளியே வரும் தண்ணீர் பைப் துரு பிடித்து பல வருடங்கள் ஆகிறது.
    • இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு டெங்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பால சமுத்திரம் அருகில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து வெளியே வரும் தண்ணீர் பைப் துரு பிடித்து பல வருடங்கள் ஆகிறது. இதுகுறித்து புகார் நோட்டில் எழுதி வைத்து 1 மாதம் ஆகிறது. இதுவரை அந்த பைப் மாற்றப்படாமல் உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு டெங்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. இந்த தண்ணீர் 9 பகுதிகளுக்கு செல்கிறது. அதாவது, கற்பகாம்பாள் நகர், லண்டன் சிட்டி, சி.எஸ்.ஐ. காலனி, பாலசமுத்திரம், பொடாரம்பாளையம், ஆதிதிராவிடர் காலனி மற்றும் பொடாரம்பாளையம் தொடக்க பள்ளிக்கும் இந்தத் தண்ணீர் செல்கிறது. பொதுமக்கள், பள்ளி மாணவ -மாணவிகள் நலன் கருதி உடனடியாக இந்த தண்ணீர் வடியும் கேட் வால்வு மற்றும் துரு பிடித்த பைப்பை புதுப்பித்து தர வேண்டும் என்று அப்பகுதியின் சமூக ஆர்வலரும், பா.ஜ.க. பிரமுகருமான குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி
    • டெல்லியில் உள்ள அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் வீடுகள் முன்பு குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளத்தில் குடிநீர் குழாய் வைத்து, மூடப்பட்டுள்ளது.

    தற்போது வீடுகள் முன்பு குடிநீர் குழாய் அமைக்காமல், தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமலும் காலதாமதம் செய்து வருகின்றனர். இதனால் மிகவும் குறுகலாக உள்ள அனைத்து தெருக்களில் மோட்டார் சைக்கிள் உள்பட வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றன.

    பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

    இதுகுறித்து கண்ணமங்கலம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கோவர்த்தனன் கூறும்போது:-

    இந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணியை பார்வையிட டெல்லியில் உள்ள அதிகாரிகள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதனால் குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. அதன் பின்னர் சாலைகள் சீரமைக்கப்படும் என்றார்.

    • கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் ந.சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.
    • பழுதுகளை சரி செய்வதற்கு ரூ.40 லட்சம் மதிப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் நகராட்சி அலுவலகத்திலுள்ள நகர்மன்ற கூடத்தில் காங்கயம் நகர்மன்ற சாதாரண கூட்டமானது நடைபெற்றது.நகர்மன்ற தலைவர் ந.சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் துணைத் தலைவர் கமலவேணி, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலக ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில் காங்கயம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் குடிநீர்க் குழாய்கள் மற்றும் மின் மோட்டார்களின் பழுதுகளை சரி செய்வதற்கு ரூ.40 லட்சம் மதிப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    மேலும் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில் இருந்து 9-வது வார்டு வரை குடிநீர் குழாய்களில் ஏற்படும் பழுதை சரி செய்வதற்கும், மின் மோட்டார்கள் மற்றும் சிறு மின் விசைப்பம்பு ஆகியவற்றில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதற்கும் ரூ.20 லட்சம் மதிப்பிலும், 10-வது வார்டு முதல் 18-வது வார்டு வரை உள்ள குடிநீர் குழாய்கள் மற்றும் மின் மோட்டார்கள் பழுதுகளை சரி செய்ய ரூ.20 லட்சம் மதிப்பிலும் மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    காங்கயம் நகராட்சி பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்குவதற்கு ரூ.1 லட்சம் மதிப்பில் நகராட்சி பொது நிதியிலிருந்து வழங்கப்படுவது உள்பட மொத்தம் 18 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து காங்கயம் நகராட்சியின் நகர்மன்றத் தலைவர், ஆணையாளர், நகர்மன்ற துணைத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • குட்டைத்திடலில் நாராயணகவிமணிமண்டபம் உள்ளது
    • மாணவர்கள் இங்கு வந்து புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் குறிப்புகள் எடுத்து பயன் அடைந்து வருகின்றனர்

    உடுமலை : 

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட குட்டைத்திடலில் நாராயணகவி மணிமண்டபம் உள்ளது.கடந்த 2001-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்ட இந்த மணிமண்டபம் தற்போது வரையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இங்கு வந்து புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் குறிப்புகள் எடுத்து பயன் அடைந்து வருகின்றனர். அதன் பயனாக ஒரு சிலர் அரசு பதவிகளையும் அலங்கரித்து வருவதாக தெரிகிறது. ஆனால் அடிப்படை வசதியில் ஒன்றான குடிநீர் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் நிலவி வருகிறது.அதைத் தொடர்ந்து மணிமண்டபத்தை நிர்வகித்து வரும் மாற்றுத்திறனாளி பணியாளர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்க்கு சென்று குடிநீர் பிடித்து வந்து தேர்வர்களுக்கு அளித்து வருகிறார். இதற்காக இவர் நாள்தோறும் உடுமலை- திருமூர்த்திமலை பிரதான சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையை திடகாத்திரமான உடல் நிலையில் உள்ளவரே கடப்பதற்கு சிரமப்பட வேண்டிய நிலையில், மாற்றுத்திறனாளி ஒருவர் கடந்து செல்வது இயலாத காரியமாகும். மணிமண்டபத்தில் குடிநீர் குழாய் அமைத்து தரக்கோரி கோரிக்கை வைத்தும் நகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனால் தேர்வர்களும், பணியாளரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாராயணகவி மணிமண்டபத்தில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • குசலகுமாரி சம்பவத்தன்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார்.
    • ஆத்திரம் அடைந்த அமிர்தலெட்சுமி உள்பட 4 பேரும் சேர்ந்து குசலகுமாரியை தாக்கினர்.

    களக்காடு:

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்தி பாட்டை சேர்ந்தவர் விஜய குமார் மனைவி குசலகுமாரி (வயது44). இவர் சம்பவத்தன்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பால கிருஷ்ணன் மனைவி அமிர்தலெட்சுமி (48), முத்து வேல் (27), முத்துவேல் மனைவி சரண்யா (27), பால கிருஷ்ணன் மகள் சவுமியா (23) ஆகியோர் களுக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தலெட்சுமி உள்பட 4 பேரும் சேர்ந்து குசலகுமாரியை தாக்கினர். இதுபற்றி அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அமிர்த லெட்சுமி, முத்துவேல் ஆகியோரை கைது செய் தனர். மேலும் சரண்யா, சவுமியாவை தேடி வருகின்றனர்.

    • நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு ஆத்தூரங்கால் பாலம் அருகில் குரங்கணி செல்லும் வழியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஆறாக ஒடிக்கொண்டு இருக்கிறது.
    • தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்திருப்பேரை:

    நெல்லை- திருச்செந்தூர் மெயின் ரோடு ஆத்தூரங்கால் பாலம் அருகில் குரங்கணி செல்லும் வழியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக ரோட்டில் ஆறாக ஒடிக்கொண்டும், அருகில் உள்ள மரங்களுக்கு சென்று கொண்டும் இருக்கிறது. ஏற்கனவே இந்த இடத்தில் குடிநீர் குழாய் உடைந்து சரிசெய்யப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி கொண்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய துறையினர் உடனடியாக குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் தண்ணீர் வீணாக செல்வதை தவிர்க்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆம்புலன்சில் மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்
    • பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள அனைத்து தெருக்களில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    குடிநீர் குழாய் அமைக்கும் பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் செல்லும் பஸ்கள் பாதி வழியிலேயே திரும்பி செல்வதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லும் நிலை உள்ளது.

    இந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் கர்ப்பிணிகள் கூடுதல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அடுக்கம்பாறை அல்லது தச்சூர் வட்டார மருத்துவமனைக்கும் அழைத்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    எனவே பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் நலன் கருதி குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×