search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Papanasam"

    • கோவில் தரிசனம் கோடி புண்ணியம்.
    • மகா சிவராத்திரி அன்று 4 கால வேளைகளில் வழிபட வேண்டிய ஆலயங்கள்.

    கோவில் தரிசனம் கோடி புண்ணியம். வீட்டில் இருந்தே சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டாலும், சிவராத்திரி விழாக்களை நடத்தும் திருக்கோவில்களை தரிசிப்பது கூடுதல் பலனைத் தரும். மகா சிவராத்திரி அன்று 4 கால வேளைகளிலும் வழி படக்கூடிய 4 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

     தென்குடி திட்டை

    பாவம் போக்கும் சிவராத்திரி அன்று கும்பகோணம்-தஞ்சாவூர் வழியில் உள்ள திட்டைத் திருக்கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது. ஒரு யுக முடிவில் உயிரினங்கள் யாவும் அழிந்தன. உலகு நீரில் மூழ்கியபோது ஒரு திட்டையான இடத்தில் பரமசிவனும் பார்வதியும் வசிஷ்டேஸ்வரர், உலக நாயகியாகத் தோன்றி உலகைக் காத்தனர்.

    அந்த மேட்டுப் பகுதியே திட்டைத் திருத்தலமாகும். இங்கே குரு பகவானுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இத்தல மூலவர் மீது எப்போதும் நீர் விழுந்து கொண்டிருக்கும். இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி அன்று முதல் கால பூஜையில் வழிபாடு செய்யலாம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தென்குடி திட்டை.

     தேவராயன் பேட்டை

    ஒரு பிரளய காலத்தில், ஒரு அரக்கன் பிரம்மனிடமிருந்து படைப்புத் தொழில் புரிவதற்கான வேதங்களைத் திருடிச்சென்று கடலுக்கு அடியில் மறைத்து விட்டான். திருமால் மச்சாவதாரம் (மீன்) எடுத்து, வேதங்களை மீட்டார். ஆனால் அசுரனைக் கொன்ற தோஷத்தின் காரணமாக அவரால் சுய உருவை அடைய முடியவில்லை.

    திருமால், தேவராயன் பேட்டையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தோஷம் நீங்கி, சுயஉருவம் பெற்றார். இங்குள்ள மச்சபுரீஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரியின் இரண்டாவது கால வேளை பூஜையில் வழிபடலாம். தென்குடி திட்டையில் இருந்து தேவராயன்பேட்டை சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

     பாபநாசம்

    ராவணன், கரன், மாரீசன் போன்ற அரக்கர்களை கொன்றதால், ராமபிரானுக்கு தோஷம் ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் வழிபட்டாலும், முழுமையாக பாவம் நீங்கும் வகையில் பாபநாசம் ராமலிங்க சுவாமி கோவிலிலும் ராமபிரான் வழிபாடு செய்தார். இதற்காக அனுமனிடம் ஒரு சிவலிங்கம் கொண்டு வரச் சொன்னார். அனுமன் வர காலதாமதம் ஆனதால், சீதை ஆற்று மணலால் 107 சிவலிங்கம் செய்து, அவற்றிற்கு ராமன் பூஜை செய்து வழிபட்டார்.

    பின்பு அனுமன் கொண்டு வந்த சிவலிங்கமும் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு, 108 சிவலிங்கங்களுக்கும் பூஜித்ததால், ராமரின் பாவம் முழுமையாக நீங்கியது. இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரியின் மூன்றாம் கால வேளை பூஜையில் பங்கேற்கலாம். தேவராயன்பேட்டையில் இருந்து பாபநாசம் திருத்தலம் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

     திருவைகாவூர்

    வேடன் ஒருவன், காட்டில் மான் ஒன்றை வேட்டையாட முயன்றான். அந்த மான் தப்பி ஓடி, வில்வவனேஸ்வரர் கோவிலில் தஞ்சம் புகுந்தது. அங்கு தவத்தில் இருந்த முனிவர், மானுக்கு அபயம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வேடன், முனிவரைத் தாக்க முயன்றான். முனிவர் சிவபெருமானை வணங்க, சிவன் ஒரு புலியை அனுப்பினார். புலி வேடனைத் துரத்தியது. புலிக்குப் பயந்து வில்வ மரத்தின் மீது ஏறினான். அன்றைய தினம் சிவராத்திரி.

    புலி மரத்தின் அடியிலேயே இருந்ததால், தூங்காமல் இருக்க மரத்தில் இருந்து வில்வ இலையை பறித்து கீழே போட்டுக் கொண்டே இருந்தான். வேடன் வில்வ இலையை கீழே போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. இதனால் மகா சிவராத்திரி அன்று, 4 கால வேளையிலும் தூங்காமல் இருந்து சிவனை பூஜித்த பலன் அவனுக்கு கிடைத்தது. இந்த நிகழ்வு நடந்த திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி அன்று நான்காம் கால வேளை பூஜையில் பங்கேற்று வழிபடலாம். பாபநாசத்தில் இருந்து திருவைகாவூர் திருத்தலம் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    • ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
    • பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

    பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள், மூலிகை தாவரங்கள் உள்ளது.

    இங்கு ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச் சரகங்களில் இன்று முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதனையொட்டி புலிகள் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து பயிற்சி காலையில் முடிந்தவுடன் உடனடியாக மதியமே கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து முண்டந்துறை அருகே நாளை (புதன்கிழமை) கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

    இதனையொட்டி பாபநாசம், மணிமுத்தாறு சோதனை சாவடிகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    • இரவில் பெய்த கனமழையால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
    • அணைகளை பொறுத்தவரை அதிகபட்சமாக குண்டாறில் 48 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை முதல் இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது.

    நெல்லை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான களக்காடு, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கன்னடியன் கால்வாய் பகுதிகளில் கனமழை கொட்டியது. அந்த பகுதியில் அதிகபட்சமாக 8.4 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. அம்பை, வி.கே.புரம், ஊர்காடு, கல்லிடைக்குறிச்சி, சிவந்திபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

    அம்பையில் அதிகபட்சமாக 52 மில்லிமீட்டர் மழை கொட்டியது. ராதாபுரம், சேரன்மகாதேவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்றிரவில் கனமழை பெய்தது. ஒரு சில இடங்களில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 49.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சேர்வலாறில் 27 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 16 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 991 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு பெய்த மழையால் நீர்வரத்து 1433 கனஅடியாக அதிகரித்தது.

    இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 110.80 அடியாக உயர்ந்துள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 121 அடியாக இருந்த நிலையில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 124.87 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 3/4 அடி உயர்ந்து 77.80 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 593 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணை பகுதிகளில் மழை இல்லை.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல் செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி ஆகிய இடங்களிலும் இரவில் பலத்த மழை பதிவாகியது. இரவில் பெய்த கனமழையால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.

    ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இன்று அதிகாலை வரையிலும் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. சங்கரன்கோவில், சிவகிரி ஆகிய இடங்களில் தலா 1 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    அணைகளை பொறுத்தவரை அதிகபட்சமாக குண்டாறில் 48 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 28 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. அடவிநயினார் அணை பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடனா மற்றும் ராமநதியில் தலா 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடனா நதி நீர்மட்டம் 77.30 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 78 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 79 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணை நிரம்ப இன்னும் 5 அடி நீரே தேவை.

    • வட்டார அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகியவை குறித்து விளக்கி பேசினர்.

    பாபநாசம்:

    பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் வட்டார அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி. கண்ணதாசன் தலைமை வகித்தார். பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா , ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட தொழில் மையத்தின் உதவி பொறியாளர் குணசேகரன், புள்ளி விவர ஆய்வாளர் ஞானாம்பாள் ஆகியோர் கலந்து கொண்டு திட்ட விளக்க உரையாற்றினர்.

    பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கு திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், புதிய தொழில் முனைவர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் , அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகியவை குறித்து விளக்கி பேசினர்.

    முகாமில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பாபநாசத்தில் பல்வேறு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூரில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு திருக்கருகாவூர் யூனியன் வங்கி சார்பில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் யூனியன் வங்கி திருச்சி மண்டல மேலாளர் லாவண்யா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சோழன் மழலையர் பள்ளி வளாகம், கிராம ஊராட்சி செயலக வளாகம் மற்றும் காவல் நிலைய வளாகம் உள்பட பாபநாசத்தில் பல்வேறு பகுதியில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் திருக்கருகாவூர் யூனியன் வங்கிகிளைமேலாளர் தீபக் சிங். உதவி மேலாளர் வெற்றிவேல், வங்கி ஊழியர் உமா, திருக்கருகாவூர் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், ஊராட்சி செயலர் கருணானந்தம், சோழன் பள்ளி தாளாளர் சிவசண்முகம் மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள். வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • எக்ஸ்பிரஸ் ரெயில் பாபநாசத்தில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.
    • மைசூர் செல்லும் ரெயில் பாபநாசத்தில் மாலை 6.45 மணிக்கும் நின்று செல்லும்.

    தஞ்சாவூர்:

    பாபநாசம் பகுதி ரயில் பயணிகள் மைசூர் விரைவு ரயில் பாபநாசத்தில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து வரும் 22-ம் தேதியில் இருந்து பாபநாசம் ரயில் நிலையத்தில் மைசூர் எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்று அதிகார பூர்வமாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதன் படி மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் பாபநாசத்தில் காலை 5.27 மணிக்கும் மயிலாடுதுறையில் இருந்து மைசூர் செல்லும் ரயில் பாபநாசத்தில் மாலை 6.45 மணிக்கும் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

    • இந்த நிலையில் இவரது வீட்டின் மின் இணைப்பு அறையில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திடீரென புகுந்தது.
    • பின்னர் அந்த பாம்பை சாக்குப்பையில் போட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே வங்காரம் பேட்டை தஞ்சை மெயின் சாலையில் வசித்து வருபவர் அரங்கராஜன் (வயது 55) இவர் நகை வேலை செய்து வருகிறார்

    இந்த நிலையில் இவரது வீட்டின் மின் இணைப்பு அறையில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திடீரென புகுந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அரங்கராஜன் உடனடியாக பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்ததும் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் மின் இணைப்பு அறையில் புகுந்த சாரைப்பாம்பை பிடித்தனர்.

    பின்னர் அந்த பாம்பை சாக்குப்பையில் போட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

    • பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைப்பகுதிகளில் இன்று காலை வரையிலும் மழை விட்டு விட்டு பெய்தது.

    பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு தற்போது 367 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் தற்போது 45.90 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 59 அடி நீர் உள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாலுமுக்கு எஸ்டேட்டில் 26 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 19 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அம்பை, சேரன்மகாதேவி, கொடுமுடியாறு, நம்பியாறு, பாபநாசம், பாளை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    கொடுமுடியாறு அணை பகுதியில் 10 மில்லிமீட்டரும், நம்பியாறில் 7 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மிதமான மழை பெய்தாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளுக்கு போதிய நீர்வரத்து இல்லாமல் அருவிகள் அனைத்தும் பாறைகளாகவே காட்சியளிக்கின்றன.

    • சென்னை -திருச்செந்தூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
    • எக்ஸ்பிரஸ் ரெயில் பாபநாசத்தில் 1 நிமிடம் மட்டும் தற்காலிகமாக நின்று செல்லும்.

    தஞ்சாவூர்:

    சென்னை-திருச்செந்தூர் இடையே இரு மார்க்கத்திலும் தினசரி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து புறப்படும் ரெயில் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கும், மறுமார்க்கமாக அங்கிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகிறது.

    இந்த நிலையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று செந்தூர் எக்ஸ்பிரஸ் இரு மார்க்கத்திலும் பாபநாசத்தில் 1 நிமிடம் மட்டும் தற்காலிகமாக நின்று செல்லும்.

    நாளை முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது.

    அடுத்த வருடம் ஜூன் மாதம் 3-ந் தேதி வரை இந்த சோதனை முறை அமலில் இருக்கும் என்றும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து நிரந்தர நிறுத்தமாக மாற்றப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.
    • 29, 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் இரவு 11.45 க்கு பாபநாசம் வந்து சேரும்.

    பாபநாசம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து சூரத்-புனே (மும்பை), சென்னை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயில் இயக்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து சூரத், புனே, சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரெயிலை (வண்டி எண்: 09419/09420) ரெயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது.

    இந்த வண்டி இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில் நின்று செல்லும் என்பதையும் அறிவித்துள்ளது.

    இந்த ரெயில் வருகிற 30-ந்தேதி, 6.11.2022,13.11.2022, 20.11.2022, 27.11.2022 ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு பாபநாசத்திற்கு காலை 7.25 க்கு வந்து சேரும். பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும்.

    மறுமார்க்கத்தில் 29-ந்தேதி, 5.11.2022, 12.11.2022,19.11.2022, 26.11.2022 ஆகிய சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 க்கு பாபநாசம் வந்து சேரும்.

    இந்த வண்டியின் மூலம் சென்னை, திருப்பதி (ரெனிகுண்டா), புனே, (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர்களுக்கு செல்லலாம்.

    சீரடி மற்றும் ராகவேந்திரர் மடம் அமைந்துள்ள மந்திராலயம் செல்லும் பக்தர்களுக்கு இந்த ரெயில் இணைப்பு வண்டியாக இருக்கும்.

    தற்சமயம் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ள இந்த வண்டிக்கு கிடைக்கும் பயணிகளின் வரவேற்பைபொறுத்து நிரந்தரமாக்கப்படும்.

    எனவே இந்த வாய்ப்பினை அதிகம் பயன்படுத்திக்கொண்டு முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இத்தகவலை திருச்சி தென்னக ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், பாபநாசம் ரெயில் சங்க செயலாளருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

    • சுமார் 100 - க்கும் மேற்பட்ட போலீசார் மலைப்பாதையில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சியும், மூச்சு பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.
    • வனப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் போலீசாருக்கு மன நிம்மதி ஏற்படுகிறது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்தின் கீழ் அம்பை, கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி, வீ.கே.புரம் உள்ளிட்ட 4 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    நடை பயிற்சி

    இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில், அம்பை இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் 15 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 100 - க்கும் மேற்பட்ட போலீசார் வாரத்தில் ஒருநாள் அதாவது சனிக்கிழமை பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து, காரையார் செல்லும் மலைப்பாதையில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சியும், மூச்சு பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் கூறுகையில், வனப்பகுதியில் நடைப்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சி மேற்கொள்வதால் போலீசாருக்கு மன நிம்மதியும், ஒருவித அமைதியும் ஏற்படுகிறது. இதன்மூலம் அம்பை சரகத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்படுகிறது.

    மேலும் அவர்களுக்கு மனஅழுத்தம் குறைகிறது. எங்களுக்கு ஏதேனும் தெரிவிக்க வேண்டுமனாலும் அவர்கள் எளிதில் எங்களிடம் தெரிவிக்க இந்த முகாம் உதவுகிறது. உயர் அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துகளை போலீசாருக்கும் தெரிவித்து கலந்துரையாடல் செய்ய எளிதாக உள்ளது என்றார்.

    • இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.
    • கவிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ் பாபநாசம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பிரசவத்திற்காக பாபநாசம் கீழ கஞ்சிமேடு மெயின் ரோட்டில் வசித்து வரும் மோகன்ராஜ் (வயது 30) மனைவி கவிதா (22) சேர்க்கப்பட்டார்.

    இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். கவிதாவுக்கு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் கவிதா இறந்த போய்விட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்த கவிதாவி னன் உறவினர்கள் மருத்து வமனை முன்பு திரண்டனர். கவிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கணவர் மோகன்ராஜ் பாபநாசம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாபநாசம் துணை சூப்பிரண்ட் பூரணி, பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப் - இன்ஸ்பெக்டர் இளமாறன், மண்டல துணை தாசல்தார் பிரியா, வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதா இறப்பு குறித்து மருத்துவமனையில் விசாரணை மேற்கொ ண்டனர்.

    உறவினர்கள் திரண்டு வந்து கவிதாவின்உடலை வாங்க மறுத்து மருத்துவம னையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இறந்த கவிதாவை பிரேத பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×