என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேர்வலாறு அணை"

    • சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், நேற்று தீபாவளி அன்று பகலில் மழை இல்லை. இரவில் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்த நிலையில், இன்றும் காலை முதல் அனைத்து இடங்களிலும் சாரல்மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை புறகர் பகுதிகளான ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 36 மில்லிமீட்டரும், நாங்குநேரி, சேரன்மகாதேவியில் 17 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் அருவியை தூரத்தில் இருந்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அணைகளை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 93.25 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 109.38 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து 96 அடியாகவும் உள்ளது.

    52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 43 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்யும் நிலையில் அந்த அணை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாநகர பகுதியில் நேற்று பெரிய அளவில் மழை இல்லை. அதேநேரம் மாலை நேரத்தில் மழை பெய்தது. ஏற்கனவே தொடர்மழையால் மாநகரின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் சாலையில் மேடு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் சகதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் குடியிருப்புவாசிகளும் , வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி சுற்றுவட்டாரத்தில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக தென்காசி சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையால் தீபாவளி பட்டாசு வெடிக்க முடியாமல் இளைஞர்களும், சிறுவர்களும் வீடுகளில் முடங்கினர்.

    இதேபோல் நகரின் மற்ற பகுதிகளான சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. அதிபட்சமாக தென்காசியில் 6 மில்லிமீட்டரும், சிவகிரியில் 8 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை கடனா நதி அணை பகுதியில் சுமார் 5 சென்டிமீட்டர் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 56½ அடியை எட்டியுள்ளது. இதேபோல் ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 ½ அடி உயர்ந்து 66 அடியாக உயர்ந்துள்ளது. அடவிநயினார் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 120 ½ அடியாக உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. கயத்தாறு, கடம்பூர், கழுகு மலை ஆகிய பகுதிகளில் தலா 9 மில்லிமீட்டரும், எட்டயபுரத்தில் 8½மில்லி மீட்டரும், சூரன்குடியில் 15 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
    • அடவிநயினார் அணை தனது முழு கொள்ளளவை 3-வது முறையாக எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மலைப்பகுதியில் தொடர்மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 116.10 அடியாக இருந்த நிலையில், இன்று 2 அடி உயர்ந்து 118.30 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 108.20 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 115.68 அடியை எட்டியுள்ளது.

    இந்த அணைகளுக்கு நேற்று வினாடிக்கு 1176 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 3936 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாநகர பகுதியில் பாளையில் 4.40 மில்லிமீட்டரும், நெல்லையில் 3.40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சேரன்மகா தேவி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள செங்கோட்டை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அங்கு 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் கோவில் அணை தனது முழு கொள்ளளவை 3-வது முறையாக எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.

    தற்போது 60 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அணை நிரம்பி வழிந்து வருவதால் 60 கனஅடி நீர் அப்படியே வெளியேறி வருவதால் அனுமன் நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றுபடுகை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குண்டாறு அணை பல மாதங்களாக நிரம்பி வழிகிறது. இந்த 2 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தலா 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 68.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 61 அடியாகவும் உள்ளது.

    • கடந்த 4 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி உயர்ந்துள்ளது.
    • மாஞ்சோலையில் 18 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று அணை நீர்மட்டம் 123 ½ அடியாக இருந்த நிலையில் இன்று 3 ½ அடி உயர்ந்து 127 அடியை எட்டியுள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 142.68 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 346 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 4 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி உயர்ந்துள்ளது. கடந்த 23-ந்தேதி அணையில் 115 அடி நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று 127 அடியை எட்டியுள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 23-ந்தேதி 122 அடியாக இருந்த நிலையில் இன்று 142.68 அடியை எட்டியுள்ளது.

    இதனால் கடந்த 4 நாட்களில் அணை நீர்மட்டம் சுமார் 20 ½ அடி அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96 அடியை கடந்துள்ளது. மாஞ்சோலை மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 28 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 25 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 22 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 18 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.66 அடியாக உள்ளது.
    • கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து மழை குறைந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணி முத்தாறு அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது. நேற்று மழை குறைந்த நிலையிலும் தொடர் நீர்வரத்தால் இன்றும் அணைகள் நீர்இருப்பு அதிகரித்துள்ளது.

    143 அடி கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 91.70 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 1/2 அடி உயர்ந்து 105 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 861 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.66 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் 2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் பாபநாசத்தில் 80 அடியும், மணிமுத்தாறில் 102.05 அடியும், சேர்வலாறில் 67.39 அடியும் நீர் இருப்பு இருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் பஞ்சம் இருக்காது என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு எஸ்டேட் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மாநகரில் மழை எதுவும் பெய்யவில்லை. புறநகரில் களக்காடு, அம்பையில் பரவலாக மழை பெய்தது. அங்கு தலா 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ராதாபுரத்தில் 4 மில்லிமீட்டரும், நம்பியாறு அணை பகதியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கொடுமுடியாறு அணையில் 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. வானம் பார்த்த பூமியான சங்கரன்கோவில் சுற்று வட்டாரத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகிரியில் அதிகபட்சமாக 25 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் 3.50 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்ததது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கணிசமாக கொட்டியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கழுகுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் குளிர்ச்சி நிலவியது. ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அதேநேரம் தூத்துக்குடி மாநகர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 2 நாட்களாக பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
    • செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 912 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை பகுதியில் இன்று காலை வரை 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 1/4 அடி உயர்ந்து 90.50 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டமும் 1 1/2 அடி உயர்ந்து இன்று 103.51 அடியாக உள்ளது. அங்கு 19 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 88.40 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 487 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே களக்காடு தலையணையில் நீர்வரத்தால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறுங்குடி நம்பி கோவில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று வரை பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    வைப்பார், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், சூரங்குடி, வேடநத்தம், கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளிலும் தொடர்மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். மாநகரில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கிவிட்டதால் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    • 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு 89.20 அடியாக உள்ளது.
    • குண்டாறு அணை நிரம்பி விட்ட நிலையில் செங்கோட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோட்டை அணையும் இன்று நிரம்பியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள அணை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பிரதான அணையான பாபநசாம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் நீர் இருப்பு 89.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1658 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 768 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. சேர்வலாறு அணை பகுதியில் தொடர்மழையால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    அந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 90 அடியாக இருந்த நிலையில் நேற்று 3 அடி உயர்ந்து 93 அடியானது. தொடர்மழையால் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 99.08 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 100 அடியை நெருங்கி உள்ளது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 77.10 அடி நீர் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 24 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று மதியத்திற்கு பிறகு பலத்த மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக ஆய்குடியில் 8.8 சென்டிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் உள்ள கடனா மற்றும் ராமநதி அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. குண்டாறு அணை நிரம்பி விட்ட நிலையில் செங்கோட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோட்டை அணையும் இன்று நிரம்பியது.

    சுமார் 27 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை மூலம் 22 குளங்களில் தண்ணீர் வரப்பெற்று 366 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி பாசன வசதி பெறும். மேலும் காடுவெட்டி, தவனை, ஊரபத்து மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 100 ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாக பாசன வசதி பெறும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    அணை நிரம்பி உள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நெல்லை அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 75.55 அடியாக உள்ளது. அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 77.62 அடியாக இருந்தது. தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை 82.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 965 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 87.45 அடி நீர் இருப்பு உள்ளது.

    மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கண்ணடியன் கால்வாய் பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    களக்காடு, சேரன்மகாதேவி, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, அம்பை, ராதாபுரம், நம்பியாறு அணை பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்கிறது.

    களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நேற்று முதல் ஓரமாக நின்று குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • அதிகபட்சமாக குண்டாறில் 44.2 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
    • மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.

    நெல்லை:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் தற்போது வரை சாரல் மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் அவ்வப்போது வீசி வருவதால் இதமான சூழ்நிலை விலவி வருகிறது.

    இதேபோல் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயினருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் நிலையில், புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணை பகுதிகளை பொறுத்தவரை ராமநதி, கடனா நதி, குண்டாறு, அடவிநயினார் உள்ளிட்ட அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குறிப்பாக ராமநதி அணை பகுதியில் கனமழை பெய்தது. நேற்று 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 25 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 8 அடி அதிகரித்து இன்று 33 அடியாக உயர்ந்துள்ளது. கடனா அணையின் நீர்மட்டம் 26.50 அடியாக இருந்த நிலையில் இன்று 2 அடி உயர்ந்து 28.50 அடியாக உள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் இன்று 4 அடி உயர்ந்து 25.25 அடியாக உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்தது. தொடர் மழையால் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 49 அடியாக உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறில் 44.2 மில்லிமீட்டரும், அடவிநயினாரில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. செங்கோட்டையில் 30 மில்லிமீட்டரும், ராமநதி, கடனா நதியில் தலா 13 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 41 அடியாக இருந்த நிலையில், இன்று 3 அடி உயர்ந்து 44.20 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 56.76 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 65.09 அடியாக உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது பெய்துவரும் சாரல் மழை விவசாயத்திற்கு கை கொடுக்காவிட்டாலும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவும் என்பதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    அதேநேரத்தில் ஜூன் முதல் வாரத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பார்கள். ஆனால் போதிய மழை இல்லாததால் 1 மாதம் தாமதமாகி விட்டது. எனவே மழை தீவிரம் அடைந்தால் இந்த மாதத்திலாவது பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கிறது. மாஞ்சாலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநகரில் லேசான சாரல் பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோரும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் குடைபிடித்தபடி சென்றனர்.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
    • கன்னடியன் கால்வாய் பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 10.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம், தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் அணை பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.

    தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 57 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 66 அடியானது. இதேபோல் 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் நேற்றில் இருந்து 8 அடி உயர்ந்து இன்று 45 அடியானது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நேற்று 40 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 10 அடி உயர்ந்து 50 அடியானது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 32 அடியில் நீடிக்கிறது.

    மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரையிலும் பலத்த மழை பெய்தது. இன்றும் காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அடவி நயினாரில் 70 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 42.6 மில்லிமீட்டரும், ஆய்க்குடியில் 21 மில்லி மீட்டரும், கடனாவில் 22 மில்லிமீட்டரும், ராமநதியில் 20.3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, ராதாபுரம், அம்பை, நாங்கு நேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வள்ளியூரில் சாரல் பெய்தது. அதிகபட்சமாக அம்பையில் 18.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 10.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அங்கு நேற்று 48 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், இன்று 5 அடி உயர்ந்து காலை நிலவரப்படி 53.50 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 3,882 கனஅடிநீர் வந்து கொண்டிருப்பதால் மேலும் நீர்மட்டம் உயரும்.

    சேர்வலாறு அணையில் நேற்று 73.46 அடி நீர் இருந்த நிலையில், தொடர்மழையால் ஒரே நாளில் 17 அடி உயர்ந்து 90.19 அடியை எட்டியுள்ளது. அங்கு 43 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.80 அடியாக நீடிக்கிறது.

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
    • அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.25 அடியாக இருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 56.25 அடியாக இருந்த நிலையில், தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று மேலும் 3 அடி உயர்ந்தது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 59.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 69.75 அடியாக இருந்த நிலையில் மேலும் 11 அடி அதிகரித்து இன்று காலை 81.03 அடியானது. அணைகளுக்கு வினாடிக்கு 2,874 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாநகர பகுதியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதியை பொறுத்தவரை அம்பையில் அதிகபட்சமாக 8 மில்லிமீட்டர் மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    கன்னடியன் கால்வாய் பகுதியில் 8.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவியில் 3 மில்லிமீட்டரும், களக்காட்டில் 4.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாஞ்சோலையில் கனமழை பெய்தது. கடந்த 4 நாட்களாக ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி எஸ்டேட்டுகளில் பெய்து வரும் கனமழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

    நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 62 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினாரில் அதிகபட்சமாக 25 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 18.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 46.60 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 30.74 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் நேற்று 21 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 23.25 அடியாக உள்ளது.

    அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.25 அடியாக இருக்கிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்றில் இருந்து 3 அடி உயர்ந்து 55 அடியாக அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தென்காசி, கடையம், பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் தொடங்கி சாரல் மழை பெய்து வருகிறது.

    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாஞ்சோலை வனப்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து வருகிறது.
    • 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 50 அடியாகவும், ராமநதி நீர்மட்டம் 57.50 அடியாகவும் உயர்ந்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. காலையில் இருந்து இரவு வரையிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் பெய்த மழையால் நேற்று அதன் நீர்மட்டம் 73.75 அடியாக இருந்தது.

    தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு 2,906 கனஅடியில் இருந்து 6,206 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 80.50 அடியானது. அங்கு 26 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. பலத்த மழையினால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அந்த அணையின் நீர் இருப்பு 87.20 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து 104.07 அடியானது. இன்று ஒரே நாளில் நீர்மட்டம் 17 அடி அதிகரித்தது.

    இதேபோல் மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது. அந்த அணை நீர்மட்டம் 46.65 அடியாக உள்ளது. 52.50 அடியாக இருந்த கொடுமுடியாறு அணையில் நீர் இருப்பு 20 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.49 அடியாகவும் உள்ளது.

    மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சில மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. களக்காட்டில் 11.20 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாஞ்சோலை வனப்பகுதி யில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர். ஊத்து எஸ்டேட்டில் நேற்று முழுவதும் நள்ளிரவு வரையிலும் பலத்த மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 10.5 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 90 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாஞ்சோலையில் 47 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நேற்று இரவு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.

    குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து அருவிக்கரைகளில் சாரல் மழையும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    மலை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குண்டாறு அணை பகுதியில் சுமார் 8 சென்டிமீட்டர் மழை பெய்தது. அந்த அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி நிரம்பி வழியும் நிலையில், இன்று காலை அணைக்கு வரும் 110 கனஅடி நீரும் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.

    மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 99 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 5 அடி அதிகரித்து 103.50 அடியாக உள்ளது.

    85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 50 அடியாகவும், ராமநதி நீர்மட்டம் 57.50 அடியாகவும் உயர்ந்தது. அந்த அணை பகுதிகளில் முறையே 12 மற்றும் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் 32 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் பலத்த மழை கொட்டியது. செங்கோட்டையில் 40.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. ஆய்குடியில் 26 மில்லிமீட்டரும், தென்காசியில் 20 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 

    • தொடர்மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • அணைகளில் இருந்து பாசனத்திற்காக 404 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 4 நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகள், மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 85.50 அடியாக இருந்த நிலையில் இன்று 1 அடி உயர்ந்து 86.70 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 99.31 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1082 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக 404 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மணிமுத்தாறு அணை பகுதியில் 20 மில்லிமீட்டர் மழை கொட்டியது. அணைக்கு வினாடிக்கு 366 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 57.50 அடியாக உள்ளது. திருக்குறுங்குடி அருகே உள்ள 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து 50.50 அடியாக நீடிக்கிறது. அந்த அணைக்கு வரும் 30 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் அந்த அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். இன்று காலை நிலவரப்படி 18 மில்லிமீட்டர் மழை அங்கு பதிவாகி உள்ளது.

    மாநகர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பருவமழையானது விட்டுவிட்டு பெய்து வருகிறது. ராதாபுரத்தில் 67 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. நாங்குநேரி, களக்காடு, மூலக்கரைப்பட்டி,அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் இரவில் தொடங்கி அவ்வப்போது கனமழையாக பொழிந்தது. இன்று காலை வரையிலும் ஒருசில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    மாவட்டம் முழுவதும் சராசரியாக 27.27 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 74 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 65 மில்லிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 56 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. ஊத்து எஸ்டேட்டில் 35 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குண்டாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. 36 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 30 அடி நீர் இருப்பு உள்ளது. மேற்கொண்டு அணைக்கு வரும் நீரானது பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று பெய்த மழையால் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மரத்தடி உள்ளிட்டவை மதகு பகுதியில் அடைத்தது. அப்போது மதகு சேதம் அடைந்தது. உடனடியாக அதனை பொறியாளர்கள் தலைமையில் ஊழியர்கள் சரி செய்தனர்.

    தென்காசியில் விடிய விடிய மழை பெய்தது. அங்கு 55 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஆய்குடி,சிவகிரி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை கருப்பாநதி, கடனா நதி, அடவிநயினார் அணை பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. கடனா அணை நீர்மட்டம் 1 1/2 அடியும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடியும் அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்வால் பிசான பருவ சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக இறங்கி உள்ளனர். குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வேடநத்தம், சூரன்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரில் தொடர்ந்து சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக அங்கு 40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, சாத்தான்குளம், காயல்பட்டி னம், குலசேகரன்பட்டினம், எட்டயபுரம், வைப்பார் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்வதால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

    ×