search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Servalar dam"

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
    • அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.25 அடியாக இருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 56.25 அடியாக இருந்த நிலையில், தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று மேலும் 3 அடி உயர்ந்தது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 59.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 69.75 அடியாக இருந்த நிலையில் மேலும் 11 அடி அதிகரித்து இன்று காலை 81.03 அடியானது. அணைகளுக்கு வினாடிக்கு 2,874 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாநகர பகுதியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதியை பொறுத்தவரை அம்பையில் அதிகபட்சமாக 8 மில்லிமீட்டர் மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    கன்னடியன் கால்வாய் பகுதியில் 8.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவியில் 3 மில்லிமீட்டரும், களக்காட்டில் 4.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாஞ்சோலையில் கனமழை பெய்தது. கடந்த 4 நாட்களாக ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி எஸ்டேட்டுகளில் பெய்து வரும் கனமழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

    நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 62 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினாரில் அதிகபட்சமாக 25 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 18.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 46.60 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 30.74 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் நேற்று 21 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 23.25 அடியாக உள்ளது.

    அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.25 அடியாக இருக்கிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்றில் இருந்து 3 அடி உயர்ந்து 55 அடியாக அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தென்காசி, கடையம், பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் தொடங்கி சாரல் மழை பெய்து வருகிறது.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
    • கன்னடியன் கால்வாய் பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 10.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம், தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் அணை பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.

    தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 57 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 66 அடியானது. இதேபோல் 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் நேற்றில் இருந்து 8 அடி உயர்ந்து இன்று 45 அடியானது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நேற்று 40 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 10 அடி உயர்ந்து 50 அடியானது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 32 அடியில் நீடிக்கிறது.

    மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரையிலும் பலத்த மழை பெய்தது. இன்றும் காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அடவி நயினாரில் 70 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 42.6 மில்லிமீட்டரும், ஆய்க்குடியில் 21 மில்லி மீட்டரும், கடனாவில் 22 மில்லிமீட்டரும், ராமநதியில் 20.3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, ராதாபுரம், அம்பை, நாங்கு நேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வள்ளியூரில் சாரல் பெய்தது. அதிகபட்சமாக அம்பையில் 18.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 10.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அங்கு நேற்று 48 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், இன்று 5 அடி உயர்ந்து காலை நிலவரப்படி 53.50 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 3,882 கனஅடிநீர் வந்து கொண்டிருப்பதால் மேலும் நீர்மட்டம் உயரும்.

    சேர்வலாறு அணையில் நேற்று 73.46 அடி நீர் இருந்த நிலையில், தொடர்மழையால் ஒரே நாளில் 17 அடி உயர்ந்து 90.19 அடியை எட்டியுள்ளது. அங்கு 43 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.80 அடியாக நீடிக்கிறது.

    • மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நெல்லை அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 75.55 அடியாக உள்ளது. அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 77.62 அடியாக இருந்தது. தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை 82.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 965 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 87.45 அடி நீர் இருப்பு உள்ளது.

    மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கண்ணடியன் கால்வாய் பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    களக்காடு, சேரன்மகாதேவி, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, அம்பை, ராதாபுரம், நம்பியாறு அணை பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்கிறது.

    களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நேற்று முதல் ஓரமாக நின்று குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 93.11 அடியாக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டுகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடியது. நேற்று காலையில் கடும் வெயில் அடித்தது. மதியம் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.

    பின்னர் பல பகுதிகளில் கன மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 70 மில்லிமீட்டர் மழை பதிவானது. சிவகிரியில் 37 மில்லிமீட்டர் மழையும், சங்கரன்கோவிலில் 25 மில்லிமீட்டர் மழையும், ஆய்க்குடி மற்றும் கருப்பாநதியில் தலா 24 மில்லிமீட்டர் மழையும் பெய்தது.

    பாளையில் 18.20 மில்லிமீட்டர் மழை, சேர்வலாறில் 18 மில்லி மீட்டர் மழை, நெல்லையில் 14 மில்லிமீட்டர் மழை, ராதாபுரத்தில் 6 மில்லிமீட்டர் மழை, செங்கோட்டையில் 2 மில்லிமீட்டர் மழை பதிவானது. மலைப்பகுதியில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 100.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 604 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 85.89 அடியாக இருந்தது. இரவு பெய்த மழையினால் இந்த அணை நீர்மட்டம் இன்று 93.11 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.60 அடியாக உள்ளது.

    சங்கரன்கோவில் தொடர் மழையினால் சங்கரன்கோவில் இருமன்குளத்தை சேர்ந்த வேல்சாமி, தங்கப்பாண்டி ஆகியோரது வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இன்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் இரவு பெய்த மழையினால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்ந்து இன்று காலை 74.31 அடியாக உயர்ந்துள்ளது. #ServalarDam
    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயில் அடித்தது. பின்னர் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது.

    சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. குறிப்பாக ஆய்க்குடி, தென்காசி, சேர்வலாறு, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசியை அடுத்த ஆய்க்குடி பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மழைக்காக அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஒதுங்கி நின்ற ஆனந்த் என்பவர் மின்னல் தாக்கி காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதே பகுதியில் மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலியாயின.

    தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ந்த கால நிலை நிலவியது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையினால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளன. ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையினால் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணை உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால் தற்போது இந்த அணைகளில் கணிசமான அளவு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு கூடுதலாக தண்ணீர் வருகிறது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 104.40 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 647 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. சேர்வலாறு அணை பராமரிப்பு பணிக்காக நீர்மட்டம் வேகமாக குறைக்கப்பட்டது. தற்போது அணைப்பகுதியில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்த அணை நீர்மட்டம் 51.34 அடியாக இருந்தது.

    இரவு பெய்த மழையினால் இந்த அணை நீர்மட்டம் ஒரே நாளில் 23 அடி உயர்ந்து இன்று காலை 74.31 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.80 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 66 அடியாகவும், ராமநதி அணை 59.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.53 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 86.75 அடியாகவும் உள்ளன. குண்டாறு அணை ஏற்கனவே நிரம்பிய நிலையில் உள்ளது.

    குற்றாலம் மலைப்பகுதியில் நேற்று கன மழை பெய்த‌து. இதனால் நேற்று மாலை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்னீர் அதிகளவு விழுந்தது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இன்று காலை மலைப்பகுதியில் மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந்தது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே புஷ்கர விழாவுக்காக நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ள வெளி மாநில பக்தர்கள் குற்றாலத்திலும் குளிக்க குவிந்துள்ளனர்.

    சங்கரன்கோவில் பகுதியில் நேற்று பெய்த கன மழையினால் அங்குள்ள தனியார் பள்ளியில் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மழைநீர் வடிந்ததையடுத்து வகுப்புகள் நடந்தன.



    தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் நேற்று மதியம் கன மழை பெய்தது. கயத்தாறில் பெய்த கன மழையினால் அங்குள்ள உப்பாற்று ஓடையில் அதிகளவு தண்ணீர் சென்றது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    ஆய்க்குடி-37.2, கயத்தாறு-35, சேர்வலாறு-28, தென்காசி 25.8, பாபநாசம்-22, சங்கரன்கோவில்-21, கோவில்பட்டி-11, மணிமுத்தாறு-8.8, கடனா அணை 8.2, சிவகிரி-7, அம்பை-6.6, கருப்பாநதி-6, செங்கோட்டை-5, ராமநதி அணை-4, குண்டாறு-3, அடவிநயினார் அணை-2, பாளை-2. #ServalarDam
    சேர்வலாறு அணையில் எஞ்சியிருந்த தண்ணீர் பாபநாசம் கீழ் அணை வழியாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுவதால் சேர்வலாறு அணையில் நீர்மட்டம் குறைந்து சகதி மட்டுமே 19.68 அடிக்கு உள்ளது. #Servalardam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நம்பியாறு அணை பகுதியில் இன்று காலை வரை அதிகபட்சமாக 35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    திருக்குறுங்குடி நம்பியாறு பகுதியில் நேற்று இரவு சூறைக்காற்றும் வேகமாக வீசியது. அம்பையில் 11.4 மில்லி மீட்டரும், நாங்குநேரியில் 18 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 3 மில்லி மீட்டரும், கருப்பாநதி அணை பகுதியில் 1 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் லேசாக சாரல் மழை பெய்தது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 20.02 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து கால்வாய்களில் வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்மேற்கு பருவமழையில் சேர்வலாறு அணை முழு கொள்ளளவும் நிரம்பியது. இந்த நிலையில் சேர்வலாறு அணையில் இருந்து எவ்வளவு தண்ணீர் பாபநாசம் அணைக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு தண்ணீர் பாபநாசம் அணைக்கு அனுப்பப்பட்டது.

    இதனால் பாபநாசம் அணையில் தற்போது 106.90 அடி நீர்மட்டம் உள்ளது. சேர்வலாறு அணையில் எஞ்சியிருந்த தண்ணீர் பாபநாசம் கீழ் அணை வழியாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் வேகமாக இறங்கி நேற்று முன்தினம் 51 அடியிலும், நேற்று 34.51 அடியாகவும் நீர்மட்டம் குறைந்தது. அது இன்று முற்றிலும் குறைந்து சகதி மட்டுமே 19.68 அடிக்கு உள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் தண்ணீர் எதுவும் இல்லை என்றும் நீர் இருப்பு விபரத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் சேர்வலாறு அணை இந்த ஆண்டில் 3-வது முறையாக வறண்டுள்ளது. அங்கு பராமரிப்பு பணி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    மணிமுத்தாறு அணையில் இன்று 84.65 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதுபோல மற்ற அணைகளில் நீர்மட்டம் நேற்றைய அளவிலேயே தொடர்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியாறு-35, நாங்குநேரி-18, அம்பை-11.4, சேரன்மகாதேவி-3, சங்கரன் கோவில்-2, மணி முத்தாறு-1.8, பாளை-1.4, கருப்பாநதி-1 #Servalardam

    கடந்த 2 நாட்களில் சேர்வலாறு அணையில் மட்டும் 16 அடி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பழுதுபார்க்க குறைக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் தெரியவில்லை.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பு நிலையை விட அதிக அளவு பெய்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் 9 அணைகள் நிரம்பின. இதைத்தொடர்ந்து பிரதான கால்வாய்களின் நேரடி பாசன விவசாயம் நடைபெற்று வருகிறது.

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும். ஆனால் ஆவணி இறுதியிலேயே நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கி விட்டது. கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே சாரல்மழை பெய்தது. நேற்று நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழையும் மிதமான மழையும் பெய்தது.

    கொடுமுடியாறு பகுதியில் அதிகபட்சமாக 45 மில்லிமீட்டரும் அம்பையில் 28 மில்லிமீட்டர் மழையும் பாபநாசத்தில் 20 மில்லிமீட்டர் மழையும் சேரன்மகாதேவியில் 16 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற இடங்களில் குறைந்த அளவு மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 672 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசன கால்வாயில் வினாடிக்கு 20 கனஅடி தண்ணீரும், கீழ்அணையில் இருந்து ஆற்றில் 1004 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 105.50 அடியாக இருந்தது. அது இன்று சற்று உயர்ந்து 106 அடியாக அதிகரித்துள்ளது.

    ஆனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 99 அடியாக இருந்தது. அது நேற்று 91.70 அடியாக குறைந்தது. இன்று மேலும் குறைந்து 84.91 அடியாக உள்ளது. கடந்த 2 நாட்களில் சேர்வலாறு அணையில் மட்டும் 16 அடி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பழுதுபார்க்க குறைக்கிறார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் தெரியவில்லை.

    மணிமுத்தாறு அணையில் 84.95 அடியும், கடனாநதியில் 68.80 அடியும், ராமநதி 55.25, கருப்பாநிதி-58.89, குண்டாறு-33.38, வடக்கு பச்சையாறு -20, நம்பியாறு-20, கொடுமுடியாறு-37.50, அடவிநயினார்-97.75 அடியாகவும் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த ஒரு நாள் மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    அம்பை - 28.4
    சேரன்மாதேவி - 15.8
    மணிமுத்தாறு - 14.4
    பாளை - 4.2
    நெல்லை - 3.2
    ராதாபுரம் - 2.2
    சிவகிரி - 1
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளதால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்துள்ளது. #Servalardam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பு நிலையை விட சற்று அதிகமாகவே பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களாக மழை இல்லாமல் அணைகளுக்கு வரும் தண்ணீர் குறைந்தது.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. அதிகபட்சமாக செங்கோட்டை மலைப்பகுதியில் உள்ள அடவிநயினார் அணைப்பகுதியில் 50 மில்லிமீட்டரும், குண்டாறு அணைப்பகுதியில் 45 மில்லிமீட்டரும் பெய்துள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் 21 மில்லிமீட்டர் மழையும், செங்கோட்டை நகரப்பகுதியில் 21 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது. அம்பையில் 26 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு மீண்டும் தண்ணீர் வரத்து அதிகாரித்துள்ளது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 33 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக இருந்தது. ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 112.25 அடியாக உயர்ந்துள்ளது.

    பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீர் சேர்வலாறு அணைக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 114.83 அடியில் இருந்து, ஒரே நாளில் 9 அடி உயர்ந்து இன்று காலை 123.23 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 173 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 71.65 அடியாக உள்ளது. கடனா நதியின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து இன்று 83.50 அடியாகவும், ராமநதியின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து இன்று 75.25 அடியாகவும் உள்ளது.

    அடவிநயினார் அணைக்கு வினாடிக்கு 118 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 126 அடியாக உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வருகிறது. கொடுமுடியாறு அணையில் 41 அடி நீர்மட்டம் உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலைவரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார்- 50
    குண்டாறு - 45
    அம்பை - 26
    பாபநாசம் - 21
    செங்கோட்டை - 21
    ராதாபுரம் - 21
    சிவகிரி - 13
    மணிமுத்தாறு - 11
    தென்காசி - 11
    ஆய்குடி - 9.6
    சேர்வலாறு - 9
    சேரன்மாதேவி - 7
    கொடுமுடியாறு - 7
    கருப்பாநதி - 5
    ராமநதி - 3
    கடனாநதி - 2
    நெல்லை - 1 #Servalardam
    மேற்கு தொடர்ச்சி மலையில் வெகுவாக மழை குறைந்தது. ஆனாலும் பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.
    நெல்லை:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்ததால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. வறண்டு கிடந்த சேர்வலாறு அணை 3 நாட்களில் 100 அடியை தாண்டியது.

    இந்த நிலையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலையில் வெகுவாக மழை குறைந்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக அடவி நயினார் அணைப்பகுதியில் மட்டும் 12 மில்லி மீட்டரும், குண்டாறு பகுதியில் 9 மில்லி மீட்டரும், செங்கோட்டை நகரப்பகுதியில் 1 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ஆனாலும் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1061 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து205 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 63.90 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் 2 ½ அடி உயர்ந்து இன்று காலை 66.20 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணைக்கு வினாடிக்கு 813 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து இன்று 109.78 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணை 1 அடி உயர்ந்து 83.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 912 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 45 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    கடனாநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 61 அடியாகவும், ராமநதி அணை 1 அடி உயர்ந்து 69.25 அடியாகவும், கருப்பாநதி அணை ஒரே நாளில் 7 அடி உயர்ந்து இன்று 70.21 அடியாகவும், குண்டாறு அணை 2 அடி உயர்ந்து 33.13 அடியாகவும், அடவிநயினார்அணை ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 106.50 அடியாகவும் உள்ளது.

    கொடுமுடியாறு அணை முழு கொள்ளளவும் நிரம்பி 52.50 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணையில் நீர்மட்டம் எதுவும் உயரவில்லை.

    ×