என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Servalar Dam"

    • சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், நேற்று தீபாவளி அன்று பகலில் மழை இல்லை. இரவில் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்த நிலையில், இன்றும் காலை முதல் அனைத்து இடங்களிலும் சாரல்மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை புறகர் பகுதிகளான ராதாபுரம், நாங்குநேரி, களக்காடு, சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக ராதாபுரத்தில் 36 மில்லிமீட்டரும், நாங்குநேரி, சேரன்மகாதேவியில் 17 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவிகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அங்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் அருவியை தூரத்தில் இருந்து ரசித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அணைகளை பொறுத்தவரை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 93.25 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 109.38 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1/2 அடி உயர்ந்து 96 அடியாகவும் உள்ளது.

    52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 43 அடியை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்யும் நிலையில் அந்த அணை நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணை பகுதியில் இன்று காலை நிலவரப்படி 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாநகர பகுதியில் நேற்று பெரிய அளவில் மழை இல்லை. அதேநேரம் மாலை நேரத்தில் மழை பெய்தது. ஏற்கனவே தொடர்மழையால் மாநகரின் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் சாலையில் மேடு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் சகதிக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் குடியிருப்புவாசிகளும் , வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்க்குடி சுற்றுவட்டாரத்தில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக தென்காசி சுற்றுவட்டாரத்தில் கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர் மழையால் தீபாவளி பட்டாசு வெடிக்க முடியாமல் இளைஞர்களும், சிறுவர்களும் வீடுகளில் முடங்கினர்.

    இதேபோல் நகரின் மற்ற பகுதிகளான சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது. அதிபட்சமாக தென்காசியில் 6 மில்லிமீட்டரும், சிவகிரியில் 8 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை கடனா நதி அணை பகுதியில் சுமார் 5 சென்டிமீட்டர் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 56½ அடியை எட்டியுள்ளது. இதேபோல் ராமநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 ½ அடி உயர்ந்து 66 அடியாக உயர்ந்துள்ளது. அடவிநயினார் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 120 ½ அடியாக உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. கயத்தாறு, கடம்பூர், கழுகு மலை ஆகிய பகுதிகளில் தலா 9 மில்லிமீட்டரும், எட்டயபுரத்தில் 8½மில்லி மீட்டரும், சூரன்குடியில் 15 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
    • அடவிநயினார் அணை தனது முழு கொள்ளளவை 3-வது முறையாக எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மலைப்பகுதியில் தொடர்மழையால் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 116.10 அடியாக இருந்த நிலையில், இன்று 2 அடி உயர்ந்து 118.30 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 108.20 அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 115.68 அடியை எட்டியுள்ளது.

    இந்த அணைகளுக்கு நேற்று வினாடிக்கு 1176 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், தொடர்மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று காலை நிலவரப்படி 3936 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 10 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மாநகர பகுதியில் பாளையில் 4.40 மில்லிமீட்டரும், நெல்லையில் 3.40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. சேரன்மகா தேவி சுற்றுவட்டார பகுதிகளில் 1 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள செங்கோட்டை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அங்கு 12 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் கோவில் அணை தனது முழு கொள்ளளவை 3-வது முறையாக எட்டி நிரம்பி வழிந்து வருகிறது.

    தற்போது 60 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அணை நிரம்பி வழிந்து வருவதால் 60 கனஅடி நீர் அப்படியே வெளியேறி வருவதால் அனுமன் நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கானது ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றுபடுகை ஓரம் யாரும் செல்ல வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குண்டாறு அணை பல மாதங்களாக நிரம்பி வழிகிறது. இந்த 2 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தலா 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 1½ அடி உயர்ந்து 68.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 61 அடியாகவும் உள்ளது.

    • கடந்த 4 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி உயர்ந்துள்ளது.
    • மாஞ்சோலையில் 18 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று அணை நீர்மட்டம் 123 ½ அடியாக இருந்த நிலையில் இன்று 3 ½ அடி உயர்ந்து 127 அடியை எட்டியுள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 3 அடி உயர்ந்து 142.68 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 346 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 1,500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 4 நாட்களில் பாபநாசம் அணை நீர்மட்டம் சுமார் 12 அடி உயர்ந்துள்ளது. கடந்த 23-ந்தேதி அணையில் 115 அடி நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று 127 அடியை எட்டியுள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 23-ந்தேதி 122 அடியாக இருந்த நிலையில் இன்று 142.68 அடியை எட்டியுள்ளது.

    இதனால் கடந்த 4 நாட்களில் அணை நீர்மட்டம் சுமார் 20 ½ அடி அதிகரித்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 96 அடியை கடந்துள்ளது. மாஞ்சோலை மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 28 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 25 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 22 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 18 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
    • செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இன்றும் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 912 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணை பகுதியில் இன்று காலை வரை 28 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 1/4 அடி உயர்ந்து 90.50 அடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டமும் 1 1/2 அடி உயர்ந்து இன்று 103.51 அடியாக உள்ளது. அங்கு 19 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 88.40 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 487 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நம்பியாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 29 மில்லிமீட்டரும், கொடுமுடியாறு நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே களக்காடு தலையணையில் நீர்வரத்தால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருக்குறுங்குடி நம்பி கோவில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    செங்கோட்டை, தென்காசி, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் இரவு தொடங்கி இன்று வரை பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் பகுதிகளில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    வைப்பார், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், சூரங்குடி, வேடநத்தம், கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளிலும் தொடர்மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். மாநகரில் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கிவிட்டதால் உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    • மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நெல்லை அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 75.55 அடியாக உள்ளது. அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 77.62 அடியாக இருந்தது. தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை 82.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 965 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 87.45 அடி நீர் இருப்பு உள்ளது.

    மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கண்ணடியன் கால்வாய் பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    களக்காடு, சேரன்மகாதேவி, நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி, அம்பை, ராதாபுரம், நம்பியாறு அணை பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தொடர்மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை தொடர்கிறது.

    களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நேற்று முதல் ஓரமாக நின்று குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
    • கன்னடியன் கால்வாய் பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 10.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள குற்றாலம், தென்காசி, ஆய்க்குடி, செங்கோட்டை, சிவகிரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் அணை பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.

    தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 57 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 66 அடியானது. இதேபோல் 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் நேற்றில் இருந்து 8 அடி உயர்ந்து இன்று 45 அடியானது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நேற்று 40 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 10 அடி உயர்ந்து 50 அடியானது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 32 அடியில் நீடிக்கிறது.

    மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரையிலும் பலத்த மழை பெய்தது. இன்றும் காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக அடவி நயினாரில் 70 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 42.6 மில்லிமீட்டரும், ஆய்க்குடியில் 21 மில்லி மீட்டரும், கடனாவில் 22 மில்லிமீட்டரும், ராமநதியில் 20.3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, களக்காடு, ராதாபுரம், அம்பை, நாங்கு நேரி, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வள்ளியூரில் சாரல் பெய்தது. அதிகபட்சமாக அம்பையில் 18.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 16 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 10.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. அங்கு நேற்று 48 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், இன்று 5 அடி உயர்ந்து காலை நிலவரப்படி 53.50 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 3,882 கனஅடிநீர் வந்து கொண்டிருப்பதால் மேலும் நீர்மட்டம் உயரும்.

    சேர்வலாறு அணையில் நேற்று 73.46 அடி நீர் இருந்த நிலையில், தொடர்மழையால் ஒரே நாளில் 17 அடி உயர்ந்து 90.19 அடியை எட்டியுள்ளது. அங்கு 43 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.80 அடியாக நீடிக்கிறது.

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
    • அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.25 அடியாக இருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்மழை பெய்வதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 56.25 அடியாக இருந்த நிலையில், தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து இன்று மேலும் 3 அடி உயர்ந்தது.

    இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 59.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 69.75 அடியாக இருந்த நிலையில் மேலும் 11 அடி அதிகரித்து இன்று காலை 81.03 அடியானது. அணைகளுக்கு வினாடிக்கு 2,874 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாநகர பகுதியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதியை பொறுத்தவரை அம்பையில் அதிகபட்சமாக 8 மில்லிமீட்டர் மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    கன்னடியன் கால்வாய் பகுதியில் 8.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவியில் 3 மில்லிமீட்டரும், களக்காட்டில் 4.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 20 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மாஞ்சோலையில் கனமழை பெய்தது. கடந்த 4 நாட்களாக ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி எஸ்டேட்டுகளில் பெய்து வரும் கனமழையால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

    நாலுமுக்கு எஸ்டேட்டில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 62 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 42 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி அமைந்துள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவிநயினாரில் அதிகபட்சமாக 25 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 18.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 46.60 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 30.74 அடியாகவும் உள்ளது. குண்டாறு அணையின் நீர்மட்டம் நேற்று 21 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 2 அடி உயர்ந்து 23.25 அடியாக உள்ளது.

    அடவிநயினார் அணை நீர்மட்டம் 84.25 அடியாக இருக்கிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் நேற்றில் இருந்து 3 அடி உயர்ந்து 55 அடியாக அதிகரித்துள்ளது. குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தென்காசி, கடையம், பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் தொடங்கி சாரல் மழை பெய்து வருகிறது.

    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது.
    • தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு இதமான காற்றும் வீசியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து சில இடங்களில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. களக்காடு பகுதியில் 2.8 மில்லிமீட்டரும், கன்னடியன் பகுதியில் 1.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணை பகுதிகளிலும் நேற்று மாலையில் தொடங்கி இரவு வரையிலும் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று பகலில் சுமார் 350 கனஅடி நீர்மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், தொடர்மழையால் இன்று காலை 2649 கனஅடி நீர் வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. நேற்று 102 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், இன்று காலை 104.10 அடியாக இருக்கிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 113 அடியாக இருந்த நிலையில் நீர் வரத்து அதிகரிப்பால் இன்று ஒரே நாளில் 7 அடி அதிகரித்து 120.44 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.85 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர் மட்டம் 2 அடி அதிகரித்து 40 அடியாக உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு இதமான காற்றும் வீசியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கடையம் அருகே உள்ள கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ராமநதி அணை பகுதியில் 24 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கருப்பாநதியில் 11 மில்லிமீட்டரும், கடனா அணையில் 3 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேலும் அடவிநயினார் அணை பகுதியில் அதிகபட்சமாக 37 மில்லிமீட்டரும், குண்டாறில் 31 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து இன்று 76 அடியை எட்டியுள்ளது. கடனா அணை நீர்மட்டம் 55.30 அடியாகவும், கருப்பாநதி அணை 47.73 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணையில் 95.75 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி நகர் பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்த நிலையில், இன்றும் காலை முதலே நகர் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கோட்டை, குற்றாலம், தென்காசி, ஆய்க்குடி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக செங்கோட்டையில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடியில் நேற்று மாநகர பகுதியில் திடீர் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்ததோடு ஆலங்கட்டி மழையும் பெய்தது. மாநகர பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. கீழ அரசடி பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மற்ற இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    • மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • கடையம் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. குறிப்பாக அணை பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று தொடங்கி இன்று காலை வரையிலும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக இன்று காலை வரை 44 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு சுமார் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. இதனால் ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 4 ½ அடி உயர்ந்து 110.80 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து 129.20 அடியாகவும் உள்ளது.

    இந்த அணைகளில் இருந்து பாசனத்திற்காக மாவட்டத்தின் 7 கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாய் நீர் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களில் கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த கால்வாய் வரத்து குளங்களுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அந்த அணை பகுதியில் 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சாரல் மழை பரவலாக பெய்தது. இன்று காலை முதல் வெயில் அடித்தது. கன்னடியன் பகுதியில் 6.4 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 5.6 மில்லிமீட்டரும், களக்காட்டில் 6.8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. நாங்குநேரியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து இன்று அதிகாலை வரையிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக குண்டாறு அணையில் சுமார் 7 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணை நிரம்பி ஒரு மாதமாக தண்ணீர் வெளியேறி வரும் நிலையில் நேற்று கூடுதல் தண்ணீர் வெளியேறியது.

    கடையம் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. நேற்று ஒரே நாளில் அந்த அணையின் நீர் இருப்பு 4 ½ அடி உயர்ந்தது. 84 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை நிரம்புவதற்கு இன்னும் 2 அடி நீரே தேவைப்படுகிறது. 85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 63 அடியை எட்டியுள்ளது.

    அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 35 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 35 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணைகள் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும் விவசாய பணிகளும் தீவிரம் அடைந்து வருகிறது.

    ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள தென்காசியில் 15 மில்லிமீட்டரும், சிவகிரியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. நகர் பகுதிகளை பொறுத்தவரை செங்கோட்டையில் 58.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் தமிழக -கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள ஆரியங்காவு பாலருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 

    • மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்தது
    • பாபநாசம் அணையின் நீர்மட்டம் 111.90 அடியை எட்டியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று வரை அணைக்கு வினாடிக்கு 835 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து உள்ளது. வினாடிக்கு தற்போது 2,295 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் 111.90 அடியை எட்டியுள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 110 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.

    சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 117.20 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 121.45 அடியை எட்டி உள்ளது. இந்த 2 அணை பகுதிகளிலும் இன்றும் காலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 15.50 அடி மட்டுமே இருக்கிறது.

    அந்த அணைக்கு நீர்வரத்து ஏதும் இல்லை. கொடுமுடியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இன்று காலை வரை சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 20 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 26 அடியை எட்டியுள்ளது.

    • மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 73 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்து 76 அடியை கடந்துள்ளது.
    • தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் இன்று 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    நெல்லையில் ஒரு வாரத்துக்கும் மேலாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 73 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்து 76 அடியை கடந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 1,782 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று மேலும் ஒரு அடி உயர்ந்து 88 அடியை கடந்துள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 2130 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அங்கு அதிகபட்சமாக 22 மில்லி மீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று அந்த அணையில் 82.68 அடி நீர் இருப்பு இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சுமார் 9 அடி உயர்ந்து 91.38 அடியை எட்டியுள்ளது.

    இதனிடையே தாமிரபரணி ஆற்றில் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு இல்லை என்றாலும் பரவலாக பெய்து வரும் மழையால் சுமார் 2100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழையும் தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே பொதுமக்கள் தாமிரபரணி ஆறு மற்றும் ஏரிகள், குளங்கள், ஓடைகளில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    எனினும் அதனை கண்டுகொள்ளாமல் நெல்லை மாநகரப் பகுதியில் குறுக்குத்துறை வண்ணாரப்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறைகளில் பொதுமக்கள் இன்று காலையில் இருந்து குளித்து வருகின்றனர்.

    மாநகர் பகுதியில் நேற்று மாலையில் தொடங்கி இரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இன்று காலை முதல் டவுன் சந்திப்பு, வண்ணார்பேட்டை, மேலப்பாளையம், கேடிசி நகர், டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் பலதரப்பட்டவர்களும் மிகுந்த அவதி அடைந்தனர். அவர்கள் குடை பிடித்தபடி சாலையில் சென்றனர். மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சேரன்மகாதேவி, களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையில் இருந்தே பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிசான பருவ நெல் சாகுபடி பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தொடர் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் இன்று 8-வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. களக்காடு தலையணையிலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அங்கும் தடை நீடிக்கிறது. பாபநாசம் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று விட்டுவிட்டு சில இடங்களில் சாரல் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் இருந்து பரவலாக சாரல் மழை அடித்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    அணைப்பகுதிகளை பொறுத்தவரை 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 57.50 அடியை எட்டியுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 65 அடியாக உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கருப்பாநதி அணை நீர்மட்டம் 47.57 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 56.25 அடியாகவும் உள்ளது. கடனாநதி அணைப்பகுதியில் 51 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ராம நதிகள் 16 மில்லி மீட்டர், குண்டாறு பகுதியில் 18 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதையடுத்து சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 93.11 அடியாக உயர்ந்துள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை கொட்டுகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல ஓடியது. நேற்று காலையில் கடும் வெயில் அடித்தது. மதியம் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன.

    பின்னர் பல பகுதிகளில் கன மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணைப்பகுதியில் 70 மில்லிமீட்டர் மழை பதிவானது. சிவகிரியில் 37 மில்லிமீட்டர் மழையும், சங்கரன்கோவிலில் 25 மில்லிமீட்டர் மழையும், ஆய்க்குடி மற்றும் கருப்பாநதியில் தலா 24 மில்லிமீட்டர் மழையும் பெய்தது.

    பாளையில் 18.20 மில்லிமீட்டர் மழை, சேர்வலாறில் 18 மில்லி மீட்டர் மழை, நெல்லையில் 14 மில்லிமீட்டர் மழை, ராதாபுரத்தில் 6 மில்லிமீட்டர் மழை, செங்கோட்டையில் 2 மில்லிமீட்டர் மழை பதிவானது. மலைப்பகுதியில் பெய்த மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 100.70 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 604 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 85.89 அடியாக இருந்தது. இரவு பெய்த மழையினால் இந்த அணை நீர்மட்டம் இன்று 93.11 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.60 அடியாக உள்ளது.

    சங்கரன்கோவில் தொடர் மழையினால் சங்கரன்கோவில் இருமன்குளத்தை சேர்ந்த வேல்சாமி, தங்கப்பாண்டி ஆகியோரது வீடுகள் இடிந்து சேதமடைந்தன. இன்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை பெய்தது.

    ×