search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும்
    X

    பாபநாசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும்

    • எக்ஸ்பிரஸ் ரெயில் பாபநாசத்தில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.
    • மைசூர் செல்லும் ரெயில் பாபநாசத்தில் மாலை 6.45 மணிக்கும் நின்று செல்லும்.

    தஞ்சாவூர்:

    பாபநாசம் பகுதி ரயில் பயணிகள் மைசூர் விரைவு ரயில் பாபநாசத்தில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து வரும் 22-ம் தேதியில் இருந்து பாபநாசம் ரயில் நிலையத்தில் மைசூர் எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என்று அதிகார பூர்வமாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதன் படி மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் பாபநாசத்தில் காலை 5.27 மணிக்கும் மயிலாடுதுறையில் இருந்து மைசூர் செல்லும் ரயில் பாபநாசத்தில் மாலை 6.45 மணிக்கும் நின்று செல்லும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

    Next Story
    ×