என் மலர்
நீங்கள் தேடியது "இடுக்கி"
- இடுக்கி அடிமாலியில் நேற்றிரவு கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
- இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன
மழைக்காலங்களில் கேரளாவில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கம். கடந்தாண்டு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அவ்வகையில் இடுக்கி அடிமாலியில் நேற்றிரவு கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த மண்சரிவில் சிக்கிய தம்பதியரை மீட்க ஆறு மணி நேரம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கணவர் பிஜு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், காயங்களுடன் மனைவி சந்தியா மீட்கப்பட்டு கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தன. மேலும் 6 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. மொத்தம் 22 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டன.
கேரளத்தில் அடுத்த 3 நாட்களுக்கு 'கனமழை முதல் மிக கனமழை; பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
- கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
- நிலைசரிவு ஏற்பட்டுள்ள சாலையை சீர் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாரில் இருந்து தேனிக்கு செல்லும் சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நிலைசரிவு ஏற்பட்டுள்ள சாலையை சீர் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன. விரைவில் இப்பகுதியில் போக்குவரத்து சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மதுரையை சேர்ந்த 4 வாலிபர்கள், கேரள மாநிலம் இடுக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
- நெடுங்கண்டம் பகுதியில் உள்ள தூவல் அருவிக்கு அவர்கள் சென்றுள்ளனர்.
சுற்றுலா செல்லும் போது ஆபத்தான பகுதிக்கு செல்லாதீர்கள்....அங்கு நின்று படம் எடுக்காதீர்கள்... என பல சுற்றுலா தலங்களிலும் எச்சரிக்கை பலகைகள் வைத்திருப்பதை அனைவரும் பார்ப்பார்கள். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் சென்று ஆபத்தை விலை கொடுத்து வாங்கி வருபவர்கள் இன்று பலர்.
சீறி வரும் கடல் அலை களுக்கு மத்தியில் உள்ள பாறைகளில் நின்று செல்பி எடுப்பது, மலை உச்சி, ஓடும் ரெயில், பைக் சாகசம் என பலவற்றையும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் சில நேரங்களில் ஆபத்தையும் சந்தித்து வருகின்றனர். அந்த வரிசையில் சுற்றுலா சென்ற வாலிபர் ஒருவர் செல்பி மோகத்தால் அருவி பாறையில் சறுக்கி அந்தரத்தில் தொங்கி உள்ளார். அவரை உள்ளூர் மக்கள் உதவியுடன் நண்பர்கள் கயிறு கட்டி மீட்டுள்ளனர்.
மதுரையை சேர்ந்த 4 வாலிபர்கள், கேரள மாநிலம் இடுக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து மகிழ்ந்த அவர்கள், நெடுங்கண்டம் பகுதியில் உள்ள தூவல் அருவிக்கு வந்தனர். இந்தப் பகுதியில் உள்ள பாறைகள் ஆபத்தானவை. இங்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனை மீறி ஆபத்தை உணராமல் 4 வாலிபர்களில் ஒருவர் சென்று அருவி தண்ணீர் விழும் ஆபத்தான பாறையில் நின்று செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் வழுக்கி உள்ளது. இதனால் அவர் அபய குரல் எழுப்பிய வாறே கீழ்நோக்கி சென்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு அந்தப் பகுதி மக்கள் திரண்டனர்.
அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது பாறையில் வழுக்கி விழுந்த வாலிபர் பாறையோடு ஓட்டிய நிலையில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக கயிறு கட்டி உள்ளூர் மக்கள் உதவியுடன் நண்பர்கள் அவரை மீட்டனர். பாறையோடு வழுக்கிச் சென்ற வாலிபரின் கால் அங்கிருந்த மற்றொரு பாறையில் தட்டியதால் அவர் அந்தரத்தில் நின்றுள்ளார். இதனால் தான் அவரை மீட்க முடிந்தது. இது ஆபத்தான இடம். இந்த பகுதியில் கடந்த 10ஆண்டுகளில் 12 பேர் பலியாகி உள்ளனர் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
- இடுக்கியில் புதிய வகை பச்சோந்தியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
- பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்று கங்காருவை போன்று நகரும் அதன் தனித்துவத்தை கொண்டே இந்த பெயரை வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
உலகில் வாழும் பல்வேறு உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் கேரள மாநிலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. இதில் இடுக்கியில் புதிய வகை பச்சோந்தியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
5.5 முதல் 8 செண்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய வகை பச்சோந்தி, அகஸ்தியாகம எட்ஜ் என கூறப்படுகிறது. இதற்கு வடக்கு கங்காரு பச்சோந்தி என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். பின்னங்கால்களில் நிமிர்ந்து நின்று கங்காருவை போன்று நகரும் அதன் தனித்துவத்தை கொண்டே இந்த பெயரை வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் 12 ஆயிரம் ஊர்வனவற்றில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வடக்கு கங்காரு பச்சோந்தி, தொண்டையில் நீல செதில்களுக்கு மத்தியில் மத்திய சிவப்பு மற்றும் தங்க நிறத்தால் மற்ற பச்சோந்திகளில் இருந்து மாறுபட்டு நிற்கிறது.
மரத்தில் ஏறுவதை தவிர்த்து, உலர்ந்த இலைகளுக்கு மத்தியில் வடக்கு கங்காரு பச்சோந்தி தரையில் வாழ்வதாகவும், ஆபத்தை உணரும்போது, 2 கால்களில் நிற்கும் இலைகளுக்கு இடையில் தன்னை மறைத்துக்கொள்ளும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- கட்டப்பனா பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக விஷ்ணு என்பவர் காத்திருந்துள்ளார்.
- இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள பேருந்து பிழையாயத்தில் காத்திருந்த இளைஞர் மீது பேருந்து மோதிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கட்டப்பனா பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக விஷ்ணு என்பவர் காத்திருந்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று அவர் மீது மோதியுள்ளது . ஆனால் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் லேசான காயங்களுடன் விஷ்ணு உயிர் தப்பினார்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






