search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waterfall"

    • மழையினால் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
    • மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் முதல் பரவலாக கனமழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையினால் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2 அருவிகளிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இருப்பினும் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டினாலும் சுற்றுலா பயணி கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் ஓரமாக நின்று குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    இன்று காலையிலும் மெயின் அருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மற்ற அருவிகளான பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்த காரணத்தினால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தற்போது வார விடுமுறையை தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி என 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

    கொடைக்கானலில் பெய்த கன மழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

    கடந்த 9 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இன்று மழை குறைந்து நீர்வரத்து சீரானது. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் கும்பக்கரை அருவியில் உற்சாகமாக குளியல் போட்டு மகிழ்ந்தனர். 

    • குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க அரசு நிதிக்கு காத்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • கம்பிகள் உருக்குலைந்து போயின.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குட்லாடம்பட்டி ஊராட்சியில் தாடகநாச்சிபுரத்தில் அருவி உள்ளது. இந்த அருவியில் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் வரும். மற்ற மாதங்களில் சுனை நீர் வரும். கோடை காலங்களில் வறண்டும் காணப்படும்.

    1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி வரலாறு காணாத அளவில் பலத்த மழை பெய்ததால் சிறுமலையின் மேல்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டோடி 60 அடி உயரமுள்ள பெரும்பாறையின் கீழ் விழுவதால் குற்றால அருவிபோல் வடிவம் உருவானது. அன்றிலிருந்து இந்த அருவி வெளிஉலகுக்கு தெரிய தொடங்கியது. அதன்பின் இங்கு மழை காலங்களில் தண்ணீர் விழும் நேரங்க ளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமானதால் மதுரை மாவட்டத்தில் மற்றொரு குற்றாலமாய் உரு வெடுத்தது.

    2001-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அருவிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு பாலம் கட்டப்பட்டது. அதேபோல் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் வனத்துறையின் சார்பாக படிகள் கட்டப்பட்டு அருவியின் முன் தளம் மற்றும் பிடி கம்பிகள் அமைக்கப்பட்டு ஆடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டது.

    சுற்றுலா தலமாக்க கோரி அப்போதைய எம்.எல்.ஏ. மாணிக்கம் சட்டசபையில் வேண்டுகோள் விடுத்ததை யொட்டி ரூ.6 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டதால் வனத்துறை மூலம் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலை சீரமைக்கப்பட்டு, அடிவாரத்தில் இருந்து அருவிக்கு செல்லும் வழியில் பேவர்பிளாக் கற்களும், படிக்கட்டு களும் கட்டப்பட்டு அருவி முன்பு தடுப்பு கம்பிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்ப தற்கு இடையே தடுப்புகம்பிகள், ஆடை மாற்றும் அறைகள் கட்டப்பட்டன.

    அருவி நுழைவு வாயிலில் அலங்கார வளைவுகளுடன் கதவுகள் அமைக்கப்பட்டது. அதன்பின் வனக்குழு மூலம் ரூ.5 குளிப்பதற்கு கட்டணமாக பெறப்பட்டது. ஆனால் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின்போது மீண்டும் அருவிக்கு செல்லும் சாலைகள் சீர்குலைந்தும், தண்ணீர் விழும் இடத்தில் தரைத்தளங்கள் பெயர்ந்தும், கம்பிகள் உருக்குலைந்து போயின.

    ஆனால் 5 ஆண்டுகளாகியும் அதை சீரமைக்கும் முயற்சியில் வனத்துறை முன்வர வில்லை. அதனால் தற்போது கற்கள் பெயர்ந்து சீர்குலைந்து காணப்படுகிறது. மேலும் அருவிக்கு செல்லும் பாதை எல்லாம் தற்போது தூர்ந்துபோய் செடிகொடிகள் வளர்ந்து அடர்ந்து மீண்டும் அடர்வனக் காடாகவே மாறிவிட்டது. மேலும் அருவி நுழைவு வாயில் பகுதியில் பூட்டு போட்டு பூட்டி வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். அதனால் அருவியை காணவரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஓடை நீரில் குளித்து விட்டு செல்கிறார்கள். தற்போது அருவி வறண்டு ஓடையிலும் நீர் இன்றி காணப்படுகிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட காப்பு காட்டுக்குள் நுழைபவர்களுக்கு அபராதமும் விதிக்கின்றனர்.

    மதுரை மாவட்டத்திலேயே இயற்கையின் கொடையாக சுற்றுலா பயணிகளுக்கு மூலிகை தண்ணீரில் நோய்களை குணப்படுத் தும் மாமருந்தாகவும் இருந்த அருவி, தற்போது சீர்குலைந்து போய் நிற்பது வேதனைக்குரியதாகும். கோடை, குளிர், மழை என்று இல்லாமல் எல்லா காலங்களிலும் எப்போது சென்றாலும் அந்த பகுதியில் மேகங்கள் திரண்டு வந்து சாரல் மழை பெய்து செல்வது குளுமையை ஏற்படுத்திவருகிறது. எனவே போர்கால அடிப்படையில் தண்ணீர் அதிகம் இல்லாத காலங்களில் மீண்டும் மராமத்து பணி செய்து தூர்ந்துபோன அருவிக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், 5 ஆண்டுகளாகியும் அதிகாரிகளின் அலட்சிய போக்கு காரணமாக அருவி தூர்ந்து போய்விட்டது. சுற்றுலா பயணிகள் இன்றளவும் வந்து ஏமாந்து செல்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் இயற்கையின் கொடை யாக உள்ள அருவியின் பயனை அனுபவிக்க முடியாமல் காட்சி பொருளாக்கி விட்டார்கள். தற்போது கோடைகாலத்தை பயன்படுத்தி இனியாவது அருவியை சீரமைக்கும் பணியை தொடங்க வனத்துறை முன்வரவேண்டும் என்றனர்.

    ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கதிர வன் கூறுகையில், வனத்துறையினர் கட்டுப் பாட்டில் குட்லாடம்பட்டி அருகி உள்ளது. மராமத்து பணி செய்ய போதிய நிதி இதுவரை கிடைக்கவில்லை. அதனால் பணி தொடராமல் இருந்து வருகிறது. ஒருமுறை மாவட்ட கலெக்டர், மாவட்ட வன அலுவலர் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு சேத மதிப்பீடு செய்தனர். தமிழக அரசு ஏழைகளின் குற்றால மான இந்த அருவிக்கு கருணை கொண்டு நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.

    வனத்துறை அதிகாரி கூறுகையில், இந்த அருவியை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட வன அலுவலர் ஆர்வமாக இருக்கி றார். அதனால் மராமத்து பார்ப்பதற்கான திட்டப்பணிகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அரசு நிதிக்காக காத்திருக்கிறோம். நிதி ஒதுக்கீடு வந்ததவுடன் பணி முழுவீச்சில் தொடங்கி ஒரே கட்டத்தில் முடிக்கப்பட்டு விடும் என்றார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
    • ர் வீழ்ச்சியின் அருவி அருகே தூய்மை பணிகள் நடை பெற்று வருகின்றது. ஆகை யால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலை யில் அறப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கை அம்மன் கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது.

    சுற்றுலா பயணிகள்

    கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோவில் அருகே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1200 படிக்கட்டுகளை கடந்து, மலை உச்சியில் 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. கொல்லி மலைக்கு விடுமுறை நாட்களில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

    இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வல்வில் ஓரி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 மற்றும் 3-ந் தேதி நடைபெற உள்ள விழா விற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தற்போது நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் படிக்கட்டுகள், தடுப்பு சுவர்கள் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நீர் வீழ்ச்சியின் அருவி அருகே தூய்மை பணிகள் நடை பெற்று வருகின்றது. ஆகை யால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கொல்லி மலைக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றுடன் வீடு திரும்பிச் செல்கின்றனர்.

    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • இந்த ஆண்டில் மட்டும் 3 வாலிபர்கள் தலக்கோணா நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியாகி உள்ளனர்.

    திருப்பதி:

    கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் சுமன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    திருப்பதி அடுத்த எரவாரி பாலம் பகுதியில் பிரபலமான தலக்கோணா நீர்வீழ்ச்சி உள்ளது. நேற்று முன்தினம் இங்கு சுமன் தனது நண்பர்களுடன் வந்தார்.

    பின்னர் தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியில் இறங்கி குளித்தனர். சுமன் பாறை மீது ஏறி நின்று நீர்வீழ்ச்சியில் குதிப்பதை வீடியோ எடுக்கும்படி தனது நண்பர்களிடம் கூறினார்.

    சக நண்பர்கள் சுமனை வீடியோ எடுத்த போது பாறையின் மேலிருந்து நீர்வீழ்ச்சியில் குதித்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக நீர்வீழ்ச்சியின் அடியில் இருந்த 2 பாறைகளுக்கு நடுவே சுமன் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் சுமன் வெளியே வராததால் பதற்றம் அடைந்தனர். அவரது நண்பர்கள் இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு நேரம் ஆகிவிட்டதால் நேற்று காலை மீண்டும் சுமனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதளுக்கு பிறகு பாறைகளுக்கு இடையில் சிக்கிய சுமனை பிணமாக மீட்டனர்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக எரவாரி பாலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுமன் பாறையின் மீது இருந்து நீர்வீழ்ச்சியில் குதிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    தலக்கோணா நீர்வீழ்ச்சியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர்.

    நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கான எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வனத்துறையினர் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இந்த ஆண்டில் மட்டும் 3 வாலிபர்கள் தலக்கோணா நீர்வீழ்ச்சியில் மூழ்கி பலியாகி உள்ளனர். ஆபத்தாக உள்ள பாறைகளை நீக்கி சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குளித்து விட்டு செல்லும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

    • இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியது.
    • நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது

    அவினாசி :

    திருப்மாவட்டம் அவினாசி ஒன்றியத்திற்குட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சிகிருஷ்ணாபுரம் பகுதியில் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு செல்லும் இரண்டாவது திட்ட குடிநீர் குழாயின் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல தண்ணீர் பீறிட்டு வெளியேறியது .

    சில நாட்களாக சிறிதளவு தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென்று நீர்வீழ்ச்சி போல தண்ணீர் 7 அடி உயரத்திற்கு அடித்தது . பள்ளி மாணவர்கள் அந்த செயற்கை நீர்வீழ்ச்சியில் விளையாடினர்.தண்ணீர் வீணாவதை தடுக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடனடியாக உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு
    • பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கிழக்கு ரத வீயியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து வரக்கூடிய தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் உடைப்பு ஏற்பட்ட குழாயிலிருந்து செயற்கை நீரூற்று போல தண்ணீர் வெளியேறி பொதுமக்களுக்கு செல்ல வேண்டிய பல லட்சம் லிட்டர் குடிநீர் அருவி போல சாலையில் சென்று வீணாகியது. கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் அதன் காரணமாக உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.இது குறித்து பொதுமக்கள் அவிநாசி பேரூராட்சிக்கு தகவல் தெரிவித்தனர்.இதனையடுத்து பேரூராட்சி ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • சுமதி கழுத்தில் கிடந்த சங்கிலியை அருகே நின்று குளித்துக்கொண்டிருந்த ஒரு பெண் பறித்துள்ளார்.

    நெல்லை:

    தொடர்விடுமுறை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இந்நிலையில் நேற்று மெயினருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் அதிக அளவு பெண்கள் நின்று குளித்து கொண்டிருந்தனர். புளியங்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணும் அங்கு குளித்துள்ளார்.

    நகை பறிப்பு

    அப்போது அவரது கழுத்தில் கிடந்த சங்கிலியை அருகே நின்று குளித்துக்கொண்டிருந்த ஒரு பெண் பறித்துள்ளார். சுதாரித்து கொண்ட சுமதி கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அவருடன் குளித்து கொண்டிருந்த மற்ற பெண்கள், நகை பறித்த பெண்ணை பிடித்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அந்த பெண்ணை குற்றாலம் போலீஸ் நிலை யத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டம் சீலைநாயக்கன்பட்டியை சேர்ந்த லெட்சுமி(வயது 39) என்பதும், அவர் மீது ஏற்கனவே சேலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
    • கூடலூர்-மசினகுடி இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளது. நேற்று நடுவட்டம்(128 மி.மீ.), கூடலூரில்(107 மி.மீ.) அதிகபட்ச மழை அளவு பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில் நடுவட்டம், பைக்காரா பகுதியில் இருந்து வரும் தண்ணீர் மாயார் ஆற்றில் கலந்து ஓடுவதாலும், முதுமலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழையாலும் எம்.ஜி.ஆர். அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதேபோல் தரைப்பாலம் மூழ்கியவாறு உள்ளதால் கூடலூர்-மசினகுடி இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பஸ் போக்குவரத்தும் இல்லாததால் மாணவ- மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வர முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    கூடலூர் நகரில் இன்று காலை முதல் கனமழை பெய்தது. பின்னர் படிப்படியாக மழை குறைந்து லேசான வெயில் தென்பட்டது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதேபோன்று தேவர்சோலை பேரூராட்சி கணியம் வயல் பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவரது வீடு மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்தது. மேலும் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் வாய்க்காலில் இன்றும் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தெருவுக்குள் வழிந்து ஓடியது.

    இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கூடலூர் சின்னப்பள்ளி வாசல் தெருவில் இருந்து கோத்தர் வயல் செல்லும் சாலையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் சாலையில் தேங்கியது. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து அடைப்புகளை அதிகாரிகள் சரி செய்தனர். அதன் பின்னர் தண்ணீர் சீராக வழிந்து ஓடியது.

    • நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார் 1600 படிக்கட்டுகள் கடந்து சென்று தான் இந்த அருவிக்கு செல்ல முடியும். இங்கு வரும் தண்ணீரானது பல்வேறு மூலிகை மரம் மற்றும் செடிகளை கடந்து வருவதால் மூலிகை நறுமணம் வீசும்.

    இந்த பகுதியில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கன மழையால் அந்த நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். அத்துடன் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர் வழிப்பாதையின் வழியாக சிறு, சிறு மரத்துண்டுகள் மற்றும் சிறு பாறைகள் உருண்டு வந்து நீர்வீழ்ச்சியின் தடாகத்தில் விழும். இதனால் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி இன்று (சனிக்கிழமை) முதல் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க மற்றும் அங்கு செல்ல தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    உத்தரகன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ளது அப்சரா கோண்டா நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியில் வானில் உள்ள தேவதைகள் நீராடியதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது.
    உத்தரகன்னடா மாவட்டம் முருடேஸ்வரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அப்சரா கோண்டா நீர்வீழ்ச்சி. மலையில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீரானது தடாகத்தில் தவழ்ந்து செல்லும் காட்சியை கண் இமைக்காமல் ரசித்து கொண்டே இருக்கலாம்.

    இந்த நீர்வீழ்ச்சியில் வானில் உள்ள தேவதைகள் நீராடியதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. மேலும் இங்குள்ள மலைகளில் பெரிய, சிறிய பாண்டவர் குகைகள் காணப்படுகிறது. இந்த குகைகளில் தான் பாண்டவர்கள் பதுங்கி வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருகே உள்ள உக்கிர நரசிம்ம கோவில், உயபா கணபதி கோவில், பசவேஸ்வர துர்கா மற்றும் ராமசந்திரபுரா மடம் போன்ற கோவில்களையும், காசர்கோடு கடற்கரையையும் கண்டு மகிழலாம். இந்த இடங்களை கண்டு ரசிக்க செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலம் சிறந்தது. 
    அமெரிக்காவின் புகழ்பெற்ற இ.எல்.கே அருவியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இந்திய பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். #ElkRiverFalls # IndianEngineer #US
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புகழ்பெற்ற இ.எல்.கே அருவி அதன் அழகுடன் சேர்த்து ஆபத்துக்கும் பெயர் போனது. இந்த  அருவியில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கோகினேனி நாகார்ஜூனா என்ற இந்திய பொறியாளர் அங்கிருந்த பாறையின் மீது ஏறி நீரில் குதித்துள்ளார்.



    அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவர் பலியானார். இதுகுறித்து மீட்புப்படை அதிகாரி பால் புசனான் கூறுகையில், பாறையின் மீது இருந்து குதித்த பொறியாளர் மீள முடியவில்லை எனவும், 2 மணி நேர தேடலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த இந்தியர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. #ElkRiverFalls # IndianEngineer #US
    ×