search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sky"

    • ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • தென்ஆப்பிரிக்கா அணியால் 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது.

    இந்தியா- ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 60 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். அவர் 56 பந்தில் 100 ரன்கள் அடிக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது.

    பின்னர் 202 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. இதனால் 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 95 இடங்களில் சுருண்டது. குல்தீப் யாதவ் 2.5 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என சமன் செய்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது.

    சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    • இந்தியா 19.3 ஓவரில் 180 ரன்கள் சேர்த்தது.
    • மழையால் தென்ஆப்பிரிக்காவுக்கு 15 ஓவரில் 152 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய இந்திய அணி 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.

    ரிங்கு சிங் 39 பந்தில் 68 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் 56 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 20 பந்தில் 29 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கோயட்சி 3 விக்கெட்டும், மார்கோ ஜான்சென், லிசாட் வில்லியம்ஸ், ஷம்சி, மார்க்கிராம் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. மழையால் அந்த அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா 7 பந்து எஞ்சியிருந்த நிலையில் இந்த இலக்கை எடுத்தது. அந்த அணி 13.5 ஒவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஹென்ரிக்ஸ் 27 பந்தில் 49 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் மார்க்கிராம் 17 பந்தில் 30 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். முகேஷ் குமார் 2 விக்கெட்டும், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

    வெற்றி பெறுவதற்கு இந்த ஸ்கோர் போதுமானது. ஆனால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் முதல் 5 முதல் 6 ஓவர்களில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்து விட்டனர். போட்டியின் முடிவையும் எங்களிடம் இருந்து எடுத்து சென்று விட்டனர். இது போன்று கிரிக்கெட்டில் நடப்பது சகஜம்தான்.

    மழை குறுக்கிட்டதால் பந்து முழுவதுமாக ஈரமானது. இதனால் பந்து வீசுவதற்கு மிகவும் சவாலாக இருந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை நாங்கள் ஒரு பாடமாகவே பார்க்கிறோம்.

    மைதானத்தில் என்ன நடந்தாலும் அதை இங்கேயே விட்டு செல்லுங்கள் என்று வீரர்களிடம் தெரிவித்தேன். 3-வது போட்டிக்காக நாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நாளை நடக்கிறது. தொடரை சமன் செய்ய இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது.

    • வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.
    • தஞ்சையில் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் தஞ்சையில் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    காலை 9 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் இந்த மழை நீடித்தது. மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தொடர்ந்து மழை விட்டாலும் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்று சூழ்நிலை தற்போது நிலவுகிறது. மழையால் தஞ்சையில் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.

    • லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு. இருப்பினும் வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
    • கால்நடைகள் நா வறட்சியால் அதிக நீர் அருந்த போதிய அளவு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் வெயில் சற்று கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வானிலை குறிப்பு விவரம் வருமாறு:-

    மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பகல் நேர வெப்பநிலை 36 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.திருப்பூரில் வரும் வாரம் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். லேசான மழை பெய்யவும் வாய்ப்புண்டு. இருப்பினும் வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.காற்றின் ஈரப்பதம் 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 30 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புண்டு.சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 14 முதல் 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். ஐந்து மாதங்களுக்கு மேலான வாழைகளுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும்.

    தற்போது நிலவும் வானிலையால் கால்நடைகள் நா வறட்சியால் அதிக நீர் அருந்த வாய்ப்புள்ளது. போதிய அளவு சுத்தமான தண்ணீரை கால்நடைகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இன்று நிலவு பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும்
    • இதே போன்று மீண்டும் ஒரு நிகழ்வு 2037-ல் நடைபெறும்

    எப்போதாவது மட்டுமே தோன்றக்கூடிய ஒரு அபூர்வ நிகழ்வு, இன்று வானில் நடைபெற போகிறது.

    சூப்பர் மூன் எனப்படும் இந்த நிகழ்வில் வழக்கமான முழு அளவை விட நிலவு சற்று பெரியதாகவும், பிரகாசமாகவும் தோன்றும்.

    நிலவோ அல்லது ஒரு செயற்கைகோளோ அதனுடைய சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் வருகின்றபோது அது பெரிஜி என அழைக்கப்படும். அவ்வாறு நிலவு வரும்போது அதன் அளவு பெரியதாகவும், அதிக ஒளியுடன் பிரகாசமாகவும் தெரியும்.

    இன்று நிலவு பூமியின் மேற்பரப்பில் இருந்து 3,57,530 கிலோமீட்டர் தொலைவிலேயே இருக்கும். அதனால் பூமியின் மீது அதிக ஒளி வீசப்படும்.

    வானியலில் பெரிஜி-சிஜிஜி (perigee-syzygy) என இந்த நிகழ்வு அழைக்கப்பட்டாலும், பார்க்க மிக அழகாக வசீகரிக்கும் விதத்தில் நிலவு தென்படுவதால், இது வழக்கத்தில் "சூப்பர் மூன்" என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன், ஜூலை மாதம் தோன்றியது.

    2023-ம் ஆண்டின் 4-வது மற்றும் கடைசி சூப்பர் மூன் செப்டம்பர் மாதத்தில் நிகழும்.

    ஆகஸ்ட் மாதம் 2 சூப்பர் மூன் தோன்றும் நிகழ்வு, இதற்கு முன்பு கடைசியாக 2018-ல் நடந்தது.

    இதே போன்று மீண்டும் ஒரு நிகழ்வு 2037-ல் நடைபெறும்.

    ஆகஸ்ட் 1-ம் தேதி சூப்பர் மூன் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தென்கிழக்கு அடிவானத்திற்கு மேலே எழும்போது முழுமையானதாகவும் பிரகாசமாகவும் தோன்றும். ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவு 12.02 மணிக்கு இந்தியாவில் இதனை காண முடியும்.

    இந்த மாதத்தின் 2-வது சூப்பர் மூன் ஆகஸ்ட் 31 அன்று நடக்கும். ஆனால், அது காலை 7.05 மணிக்கு உச்சம் அடையும் என்பதால் இந்தியாவில் அது தெரிய வாய்ப்பில்லை.

    • நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
    • ர் வீழ்ச்சியின் அருவி அருகே தூய்மை பணிகள் நடை பெற்று வருகின்றது. ஆகை யால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலை யில் அறப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கை அம்மன் கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது.

    சுற்றுலா பயணிகள்

    கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோவில் அருகே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1200 படிக்கட்டுகளை கடந்து, மலை உச்சியில் 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. கொல்லி மலைக்கு விடுமுறை நாட்களில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

    இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வல்வில் ஓரி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 மற்றும் 3-ந் தேதி நடைபெற உள்ள விழா விற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தற்போது நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் படிக்கட்டுகள், தடுப்பு சுவர்கள் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நீர் வீழ்ச்சியின் அருவி அருகே தூய்மை பணிகள் நடை பெற்று வருகின்றது. ஆகை யால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கொல்லி மலைக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றுடன் வீடு திரும்பிச் செல்கின்றனர்.

    • காற்றின் வேகம் குறையாததால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் நேற்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரை களில் நிறுத்தி வைத்திருந்தனர். தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக காற்றின் வேகம் குறையவில்லை. இதனால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெருமணல் உள்பட 9 கடற்கரை மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 1,215 பைபர் படகுகள் கடற்கரை ஓரத்தில் 2-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 450 விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அங்கும் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    • மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சில மணி நேரம் இந்த நிலை நீடித்தது.
    • நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இந்த புயலால் சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் கடந்த இரண்டு நாட்களாக குளிர்ந்த காற்று வீசி வந்தது. புயல் கரையை கடப்பதற்கு முந்தைய நாள் கடுமையான குளிர் காற்று வீசியது. ஆனால் போதிய மழை பெய்யவில்லை.

    இந்த நிலையில் தஞ்சையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. காலை 9 மணி அளவில் மிதமான மழை பெய்தது. சுமார் 40 நிமிடம் வரை மழை நீடித்தது. அதன் பின்னர் மழை இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    சில மணி நேரம் இந்த நிலை நீடித்தது. இதனைத் தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இம்முறை கனமழையாக கொட்டியது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்தது.

    சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இன்று இரவிலும் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் வல்லம், பூதலூர், பாபநாசம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இன்று மழை பெய்தது.

    • நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார் 1600 படிக்கட்டுகள் கடந்து சென்று தான் இந்த அருவிக்கு செல்ல முடியும். இங்கு வரும் தண்ணீரானது பல்வேறு மூலிகை மரம் மற்றும் செடிகளை கடந்து வருவதால் மூலிகை நறுமணம் வீசும்.

    இந்த பகுதியில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கன மழையால் அந்த நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். அத்துடன் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர் வழிப்பாதையின் வழியாக சிறு, சிறு மரத்துண்டுகள் மற்றும் சிறு பாறைகள் உருண்டு வந்து நீர்வீழ்ச்சியின் தடாகத்தில் விழும். இதனால் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி இன்று (சனிக்கிழமை) முதல் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க மற்றும் அங்கு செல்ல தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    • அதீத சப்தம் கிராமப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்து எதுவும் நடைபெறவில்லை என தெரியவந்தது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வானில் காதை பிளக்கும் பெரும் சப்தம் கேட்டது.அப்போது ,வீடுகளில் உள்ள ஜன்னல், பாத்திரங்கள் அதிர்ந்தன. இந்த அதீத சப்தம் கிராமப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனால் பொது மக்கள் பீதியில் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு உங்கள் பகுதியில் இந்த சத்தம் கேட்டதா என கேட்டுக்கொண்டனர்.

    மேலும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வானில் ராணுவ விமானங்கள் பறக்கும் போதும் போர் விமானப் பயிற்ச்சியின் போது உருவாகும் வெள்ளைக்கோடு போன்ற படங்களை பகிர்ந்து,இது விபத்தாக இருக்கலாம் என தகவல்களை பரவின. இதனையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இது குறித்து முன்னாள் படைவீரர் ஒருவர் கூறுகையில்,திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து அவ்வப்போது பயிற்ச்சிக்காக போர் விமானங்கள் ,ஹெலிகாப்டர்கள் வான் பரப்பில் பயிற்சியில் ஈடுபடுவது உண்டு.சமீப காலமாக சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தேஜாஸ்,மிக் மற்றும் ரபேல் ரக போர் விமானங்களில் விமானப்படையினர் தினந்தோறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் சி 17 க்ளோப் மாஸ்டர்,சி 130 ஜே சூப்பர் ஹெர்குலீஸ் ஆகிய ராணுவ ட்ரான்ஸ் போர்ட் விமானங்களையும் பயிற்சிக்காக பயன்படுத்தி வருகின்றனர். சூலூர் விமானப்படை ஓடு தளத்தில் இருந்து கிளம்பும் இந்த விமானங்கள் திருப்பூர் மாவட்டத்தின் வான் பரப்பில் பறந்த படி உட்சபட்ச வேகத்தில் செல்வது, ரேடாரில் சிக்காமல் தாழ்வாக பறந்து செல்வது,எதிரி நாட்டு வான் பரப்பில் மிக உயரமாக ஊடுருவி உளவு சேகரிப்பது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதில் அதி வேகத்தில் செல்ல சோனிக் பூம் எனப்படும் முறையை கையாண்டு ஒளியின் வேகத்துக்கு இணையாக பயணிக்க எரிபொருளை வெளியிட்டு எரிக்கும் போது கிடைக்கும் அதிக அழுத்தம் காரணமாக உச்சபட்ச வேகத்துடன் போர் விமானம் முன்னோக்கி பாயும்.அப்போது எரிபொருள் மொத்தமாக எரியும்போது வெடிசப்தம் எழும். வானில் இப்படி நிகழும் போது பரவலாக பல கிலோ மீட்டருக்கு இந்த சப்தம் கேட்கும்.மேலும் லேசான அதிர்வுகளும் ஏற்படும்.

    அதிக ஈரப்பதம் மேகங்களில் இருக்கும் போது, இவ்வாறு சோனிக் பூம் ஏற்படுத்தி வேகமாக செல்லும் போது மிக மிக அதீத சப்தம் காதை பிளக்கும் வகையில் இருக்கும். இது போன்ற ஒரு சத்தமே காங்கயம் சுற்று வட்டார பகுதிகளில் கேட்டிருக்கும். இதனால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

    ஆனால் வெடிசப்தம் கேட்டது முதல் சமூக வலைதளங்களில் பல்வேறு புரளிகள் கிளம்பி வரும் நிலையில்,இந்த வெடிசத்தம் குறித்து அதிகாரிகள் முறையாக விசாரித்து கூற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் விபத்து எதுவும் நடைபெறவில்லை எனவும்,விபத்து என பரவிய தகவல் புரளி எனவும் தெரியவந்தது.

    வானத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹாங்காங்கை சேர்ந்த விமான பணிப் பெண் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். #HongKong #FlightAttendant
    ஹாங்காங்:

    உலகம் முழுவதும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை ‘மீ டு’ என்கிற இயக்கத்தின் வாயிலாக பெண்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். சினிமாத்துறை தொடங்கி அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களின் பணியிடங்களில் உயர் அதிகாரிகளாலும், சக ஊழியர்களாலும் பாலியல் துன் புறுத்தல்களுக்கு உள்ளானதை வெளி உலகிற்கு தெரியப்படுத்துகிறார்கள். இந்த நிலையில் வானத்திலும் கூட பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக ஹாங்காங்கை சேர்ந்த விமான பணிப் பெண் ஒருவர் அதிர்ச்சி தெரிவித்து இருக்கிறார்.

    ஹாங்காங்கின் தனியார் விமான நிறுவனத்தின் கீழ் இயங்கும் விமானங்களில் பணிப்பெண்ணாக வேலை பார்க்கும் வீனஸ் பங் என்பவர் தனக்கு நேர்ந்த அவலம் குறித்து ஆதங்கத்துடன் கூறியதாவது:-

    வானத்திலும் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக பணியில் சேர்ந்து, முதல் முறையாக விமானத்தில் பணியை தொடங்கிய நாளில் விமானி ஒருவர் தவறான முறையில் என்னை தொட்டு தூக்கினார். அந்த தருணத்தில் கடும் கோபம் வந்தது. ஆனால் அதை விட பயமும், பதற்றமும் அதிகம் இருந்தது. நான் அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டேன். நான் அதில் இருந்து மீண்டுவர பல நாட்கள் ஆனது.

    இதுபோன்ற பாலியல் ரீதியான தாக்குதல்களை எப்படி எதிர்கொள்வது என விமானப்பணி பெண்களுக்கு உரிய பயிற்சி அளிப்பது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×