search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIR"

    • காற்றின் வேகத்தால் தீ மளமளவென அருகில் உள்ள தோட்டங்களுக்கும் பரவியது.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே அரசன்குளம் கிராமத்தில் நாற்கரச்சாலை அருகில் உள்ள தோட்டத்தில் திடீரென தீ பிடித்தது. தற்போது பருவக்காற்று அதிகமாக வீசுவதால் தீயின் வேகம் அதிகரித்து மளமளவென அருகில் உள்ள தோட்டங்களில் 5 ஏக்கருக்கு மேல் பரவியதால் அப்பகுதி தனியார் நிறுவன காவலாளி சங்கர்ராஜ் கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அருகில் உள்ள தோட்டங்களில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

    • காற்றின் வேகம் குறையாததால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து 2 மாவட்டங்களிலும் நேற்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்கள் தங்களது படகுகளை கரை களில் நிறுத்தி வைத்திருந்தனர். தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக காற்றின் வேகம் குறையவில்லை. இதனால் இன்றும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, பெருமணல் உள்பட 9 கடற்கரை மீனவ கிராமங்களில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 1,215 பைபர் படகுகள் கடற்கரை ஓரத்தில் 2-வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 450 விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அங்கும் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    • நீர், நிலம், காற்று மாசுபடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
    • நெகிழியை ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுபம் வித்யா மந்திரி பப்ளிக் பள்ளி சார்பில், மாணவ-மாணவிகள் பொது மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

    கல்வி அறக்கட்டளை நிறுவனர் கியாந்சந்த் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் கிருஷ்ணகுமார், மகேஸ்வரி, சுதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி பழைய பேருந்து நிலையம்,புதிய பேருந்து நிலையம் அருகே பள்ளி மாணவர்கள் நீர்,நிலம்,காற்று மாசு படுவது குறித்து பொது மக்க ளிடையே விழிப்பு ணர்வை நாடகம் மூலம் நடத்தினர்.

    மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளை பாதுகாப்போம்,நெகிழியை ஒழிப்போம் என கோஷங்களை எழுப்பினர். முடிவில் ராஜமாணிக்கம் நன்றி கூறினார்

    • ஏஐஆர், இந்தியாவில் பிரைம் வீடியோவில் மே 12 அன்று வெளியாகிறது.
    • ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏஐஆர் வெளியாகிறது.

    அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டி மற்றும் மாண்டலே பிக்சர்ஸ் தயாரித்துள்ள விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்ற ஏஐஆர் (AIR)திரைப்படம் ஏப்ரல் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.



    விருது பெற்ற இயக்குனர் பென் அஃப்லெக் வழங்கும் AIR, ஏர் ஜோர்டான் பிராண்டுக்காக விளையாட்டு மற்றும் கலாச்சார உலகில் புரட்சியை ஏற்படுத்திய அப்போதைய புதுமுக வீரர் மைக்கேல் ஜோர்டானுக்கும் நைக்கின் கூடைப்பந்து பிரிவிற்கும் இடையே உள்ள நம்பமுடியாத கூட்டாண்மையை ஏஐஆர் வெளிப்படுத்துகிறது.



    அனைத்தையும் இழந்த நிலையில் இருக்கும் ஒரு விளையாட்டுக்குழு மேற்கொள்ளும் சவாலான பங்கேற்பு, தன் மகனின் மகத்தான திறமையின் மதிப்பை அறிந்த ஒரு தாயின் சமரசமற்ற பார்வை மற்றும் சிறப்பான நிலையை எட்டப் போகும் ஒரு கூடைப்பந்து வீரரின் சிறப்பு ஆகியவற்றை விமர்சிக்கிறது.



    இதில் நைக் நிர்வாகி சோனி வக்காரோவாக மாட்டாமன் மேவரிக் நடிக்கிறார், நைக்கின் இணை நிறுவனர் பில் நைட்டாக அஃப்லெக் நடித்துள்ளனர், ராப் ஸ்ட்ராஸராக ஜேசன் பேட்மேன், டேவிட் பால்க்காக கிறிஸ் மெசினா, பீட்டர் மூராக மேத்யூ மஹர், ஜார்ஜ் ராவெலிங்காக மார்லன் வயன்ஸ், ஹோவர்ட் ஒயிட், வயோலாவாக கிறிஸ் டக்கர் டேவிஸ் டெலோரிஸ் ஜோர்டானாகவும், குஸ்டாஃப் ஸ்கார்ஸ்கார்ட் ஹார்ஸ்ட் டாஸ்லராகவும் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் ஏஐஆர், இந்தியாவில் பிரைம் வீடியோவில் மே 12 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக திரையிடப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×