search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
    X

    நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.

    ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

    • நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது.
    • ர் வீழ்ச்சியின் அருவி அருகே தூய்மை பணிகள் நடை பெற்று வருகின்றது. ஆகை யால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலிகைகள் அடங்கிய சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கொல்லிமலை யில் அறப்பளீஸ்வரர் கோவில், எட்டிக்கை அம்மன் கோவில், மாசிலா அருவி, நம் அருவி, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளது.

    சுற்றுலா பயணிகள்

    கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் கோவில் அருகே ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல 1200 படிக்கட்டுகளை கடந்து, மலை உச்சியில் 300 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. கொல்லி மலைக்கு விடுமுறை நாட்களில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி, புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

    இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வல்வில் ஓரி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 மற்றும் 3-ந் தேதி நடைபெற உள்ள விழா விற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தற்போது நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் படிக்கட்டுகள், தடுப்பு சுவர்கள் பணி நடைபெற்று வருகிறது. மேலும் நீர் வீழ்ச்சியின் அருவி அருகே தூய்மை பணிகள் நடை பெற்று வருகின்றது. ஆகை யால் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கொல்லி மலைக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றுடன் வீடு திரும்பிச் செல்கின்றனர்.

    Next Story
    ×