search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disaster management"

    • வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கிராம மக்கள் பங்கேற்று செயல் விளக்கத்தை பார்வையிட்டனர்.

    சென்னிமலை:

    தீயணைப்பு மீட்பு மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பது மற்றும் தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    சென்னிமலை நிலைய அலுவலர் பொறுப்பு சதீஸ்குமார் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள், வருவாய்த்துறை அலுவலர் முன்னிலையில் சென்னிமலை அருகே இரட்டைபாலம் எல்.பி.பி. வாய்கால் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நபரை மீட்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.

    இந்த போலி ஒத்திகை நிகழ்ச்சியில் கிராம மக்கள் பங்கேற்று செயல் விளக்கத்தை பார்வையிட்டனர். மேலும் பேரிடர் காலங்களில் வெள்ளம் வரும்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது குறித்து அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • நாமக்கல் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண் மீட்புக் குழுவினர் நாமக்கல் கமலாலய குளத்தில் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர்.
    • போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நடந்த இந்த பயிற்சியில் அதிரடி கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    நாமக்கல்:

    வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மழை வெள்ளப் பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களைக் கண்டறிதல், தேவையான பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் பேரிடர் மேலாண்மை மீட்புக்கு ழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

    போலீசாருக்கு பயிற்சி

    நாமக்கல் மாவட்டத்தில் மாநில பேரிடர் மேலாண் மீட்புக் குழுவினர் நாமக்கல் கமலாலய குளத்தில் போலீசாருக்கு பயிற்சி அளித்தனர். போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் நடந்த இந்த பயிற்சியில் அதிரடி கமாண்டோ படை வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    இதில் மழை காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது. மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது, தண்ணீரில் விழுந்தவர்களை எவ்வாறு மீட்பது? என்பது குறித்து ஆயுதப்படை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    3 நாட்கள்

    தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ள இப்பயிற்சியை அதிரடி கமாண்டோ படை சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழங்கி வருகிறார். இப்பயிற்சியில் 25 பெண் போலீசார் உள்பட 60 போலீசார் பங்கேற்றனர்.

    • பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தேசிய தளம் என்ற பெயரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறனுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கான தேசிய தளம் என்ற பெயரில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் நடத்தப்படுகிறது.

    மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த அமர்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    கட்டுமானம் மற்றும் நகர திட்டமிடலுக்கான மாதிரிகளை உள்நாட்டு தளத்தில் நாம் உருவாக்க வேண்டும். இந்தத் துறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

    பேரிடர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்குப் பிறகு, இந்தியாவின் பேரிடர் மேலாண்மை திறனுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

    சில நகர அமைப்புகள் பேரிடர் ஏற்பட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கத் தொடங்கும். இனி அவ்வாறு இருக்க முடியாது. புதிய கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கும்போது பேரிடர் மேலாண்மையை கருத்தில் கொண்டு புதிய வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். மொத்த அமைப்புகளையும் மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது என தெரிவித்தார்.

    • சங்கராபுரத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பு ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வல் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தாசில்தார் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி, பள்ளி தாளாளர் ஜோசப்சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் வரவேற்றார். இதில் தேசிய பேரிடர் மீட்பு படையின் சார்பு ஆய்வாளர் சஞ்சீவ் தேஸ்வல் தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நில நடுக்கம், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் முதலுதவி சிகிச்சை குறித்த செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புயல்,வெள்ளம்,நிலநடுக்கம், தீவிபத்து போன்ற அவசர காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #disastermanagement #disastermanagementawards #disaster
    புதுடெல்லி:

    நிலநடுக்கம், தீவிபத்து, புயல், வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு குழுவினரின் பணிகள் இன்றியமையாததாக இருந்து வருகிறது. தேசிய மீட்பு படை மற்றும் மாநில அரசுகளின் மீட்பு படை வீரர்கள் தங்களது இன்னுயிரை துச்சமாக கருதி ஆபத்தில் சிக்கிய பல நூறு உயிர்களை பேரழிவு காலங்களில் காப்பாற்றுகின்றனர்.

    சில சம்பவங்களில் இந்த வீரர்களுக்கு உறுதுணையாக உள்ளூர்வாசிகள் மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்களும் உதவி செய்கின்றனர்.

    இந்நிலையில்,அவசர காலங்களில் மீட்பு பணிகளில் சிறப்பான சேவையாற்றும் தனிநபர்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு விருது மற்றும்  ரொக்கப்பரிசு அளித்து ஊக்கப்படுத்த மத்திய அரசு தீர்மானித்தது.

    இதன் அடிப்படையில் ‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ என்னும் புதிய விருதை ஆண்டுதோறும் வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    பேரிடர் காலங்களில் தங்களால் காப்பற்றப்பட்ட நபர்கள், கால்நடைகள் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டு தனிநபர் அல்லது எந்த தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்களும் உரிய ஆதாரங்களுடன் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என இதுதொடர்பாக மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர் தனிநபர்களாக இருந்தால் அவர்களின் சேவையை பாராட்டும் வகையில் நற்சான்றிதழுடன் 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசாக அளிக்கப்படும். தொண்டு அமைப்புகளாக இருந்தால் 51 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் நற்சான்றிதழும் அளிக்கப்படும். 

    இப்படி விருது பெறும் நிறுவனங்கள் மேற்படி பரிசுத்தொகையை பேரிடர் மீட்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    ‘சுபாஷ் சந்திரபோஸ் அபாடா பிரபந்தன் புரஸ்கார்’ விருதை பெறுவதற்கு தகுதியானவர்கள் 7-1-2019 தேதிக்குள் www.dmawards.ndma.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

    இந்தியாவில் பிறந்தவர்கள், இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். தேர்வானவர்களின் பெயர்கள் 23-1-2019 அன்று அறிவிக்கப்படும் என  மத்திய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #disastermanagement #disastermanagementawards #disaster
    ×