search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "awards"

    • சிறந்த திரைக்கதை மற்றும் ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
    • விருது குறித்த தகவலை ஜோதிகா தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    நட்சத்திர காதல் தம்பதிகளான சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    அவர்களின் மகள் தியா (17), மகன் தேவ் (14) ஆகியோர் மும்பையில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகின்றனர்.

    தியா சமீபத்தில் மாணவ, மாணவிகளுக்கிடையே நடந்த குறும்பட போட்டியில் பங்கேற்று 'லீடிங் லைட்' என்ற ஆவணப்படத்தை இயக்கினார்.

    பெண்களின் கதைகளை பேசும் இந்த படம் சிறந்த திரைக்கதை மற்றும் ஆவணப்படமாக தேர்வு செய்யப்பட்டது.

    சிறந்த படத்தினை இயக்கியதற்காக சூர்யா மகள் தியாவுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த தகவலை ஜோதிகா தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில்,"சினிமா துறையில் ஒளிப்பதிவு தொடர்பான பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை ஆவணப்படமாக எடுத்ததற்கு பெருமைப்படுகிறேன் தியா.

    இதுபோன்று தொடர்ந்து செயல்பட வேண்டும். ஒளிப்பதிவு பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக்கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி" என்றார்.

    • அரங்கில் தி.மு.க. சாதனைகள் குறித்து கண்காட்சிக்கும் ஏற்பாடு.
    • மு.க.ஸ்டாலின் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை:

    பெரியார்-அண்ணா பிறந்தநாள், தி.மு.க. தோற்றுவிக்கப்பட்ட நாள் என ஆண்டுதோறும் தி.மு.க. முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு தி.மு.க. முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 17-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக தி.மு.க.வின் 75-வது ஆண்டு பவள விழா என்பதால் முப்பெரும் விழா கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

    இதையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பவள விழா ஆண்டை குறிக்கும் விதத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட உள்ளன. 1 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழா அரங்கில் தி.மு.க. சாதனைகள் குறித்து கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் பெரியார் விருது-பாப்பம்மாள், அண்ணா விருது-மிசா ராம நாதன், கலைஞர் விருது-ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது-கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது-வி.பி.ராஜன், மு.க.ஸ்டாலின் விருது-தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ஆகி யோருக்கு வழங்கப்படுகிறது.

    இவை மட்டுமின்றி ஒன்றிய, நகர, பேரூர், பகுதி ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் தலா ஒருவருக்கு நற்சான்று பணமுடிப்பு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.

    பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, அந்தியூர் செல்வராஜ் உள்பட பலர் பேசுகின்றனர். மாவட்டச் செயலாளர் மா.சுமணியன் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

    விழா ஏற்பாடுகளை நந்தனம் மைதானத்துக்கு சென்று அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டுளார்.

    • நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் கலந்து கொண்டார்.
    • இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    வட்டாரத் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வட்டார செயலாளர் லட்சுமணன் வரவேற்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் கலந்து கொண்டு டாக்டர். ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர், அப்பழுக்கற்ற பணி செய்து இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் மூத்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் இந்த ஆண்டு ஓய்வு பெறவிருக்கும் 10 ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேர்ந்த ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சிறந்த படம் முதல் பரிசு- தனி ஒருவன், 2-வது பரிசு- பசங்க-2, 3-வது பரிசு- பிரபா.
    • சிறந்த நடிகர்- ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை- ஜோதிகா (36 வயதினிலே).

    தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டு திரைப்பட விருது பெறும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியல் வருமாறு:-

    சிறந்த படம் முதல் பரிசு- தனி ஒருவன், 2-வது பரிசு- பசங்க-2, 3-வது பரிசு- பிரபா, சிறப்பு பரிசு- இறுதிச்சுற்று, பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு) - 36 வயதினிலே.

    சிறந்த நடிகர்- ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று), சிறந்த நடிகை- ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்பு பரிசு- கவுதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), வில்லன் நடிகர்- அரவிந்த்சாமி (தனி ஒருவன்), நகைச்சுவை நடிகர்- சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு), நகைச்சுவை நடிகை- தேவதர்ஷினி (திருட்டு கல்யாணம், 36 வயதினிலே),

    சிறந்த குணச்சித்திர நடிகர்- தலைவாசல் விஜய் (ஆபூர்வ மகான்), குணச்சித்திர நடிகை- கவுதமி (பாபநாசம்), சிறந்த இயக்குனர்- சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதையாசிரியர்- மோகன் ராஜா (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர்- ஜிப்ரான் (உத்தம வில்லன், பாபநாசம்), சிறந்த பாடலாசிரியர்- விவேக் (36 வயதினிலே), சிறந்த பின்னணி பாடகர்- கானா பாலா (வை ராஜா வை), பின்னணி பாடகி- கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே), சிறந்த ஒளிப்பதிவாளர்- ராம்ஜி (தனி ஒருவன்).

    சிறந்த ஒலிப்பதிவாளர்- ஏ.எல்.துக்காராம், ஜெ.மகேஸ்வரன் (தாக்க, தாக்க), சிறந்த எடிட்டர்- கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்), சண்டை பயிற்சியாளர்- ரமேஷ் (உத்தம வில்லன்), நடன ஆசிரியர்- பிருந்தா (தனி ஒருவன்), ஒப்பனை கலைஞர்- சபரி கிரீஷன் (36 வயதினிலே, இறுதிச்சுற்று), தையல் கலைஞர்- வாசுகி பாஸ்கர் (மாயா),

    சிறந்த குழந்தை நட்சத்திரம்- நிஷேஸ், வைஷ்ணவி (பசங்க-2), சிறந்த பின்னணி குரல் (ஆண்) - கவுதம் குமார் (36 வயதினிலே), (பெண்)- ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று). இதே போன்று தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான 2014-15-ம் ஆண்டுக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நாளை (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் விருதுகளை வழங்க உள்ளனர். விழாவில் 39 விருதாளர்களுக்கு காசோலை, அவர்கள் பெயர் பொறித்த தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளது.
    • முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து இந்திய மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு இயங்கி வருகிறது.

    இந்த கூட்டமைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் அவற்றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது.

    அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன. தற்போது முதலமைச்சரின் அறிவுறுத்தல்படியும், எனது வழிக்காட்டுதல்படியும் போக்குவரத்து துறை சிறந்த முறையில் பணியாற்றியது. இதன் பயனாக அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு மூலமாக வழங்கப்படும் 2022-23-ம் ஆண்டுக்கான தேசிய பொது பஸ் போக்குவரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் 17 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது.

    மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பெற்றுள்ளது.

    முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் 4-ல் ஒரு பங்கு ஆகும்.

    பஸ்களில் எரிபொருள் திறன், சாலை பாதுகாப்பு, டயர் செயற்திறன் (கிராமப்புறம், நகர்ப்புறம்), வாகன பயன்பாடு (கிராமப்புறம், நகர்ப்புறம்) ஆகியவற்றின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை 6 விருதுகளுக்கும், கும்பகோணம் 5 விருதுகளுக்கும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் 3 விருதுகளுக்கும், சேலம் 2 விருதுகளுக்கும் தேர்வாகி உள்ளன.

    ஏ.எஸ்.ஆர்.டி.யு. தள்ளுபடி விலையில் அதிக பொருட்கள் கொள்முதல் செய்ததற்காக முதல் இடத்துக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் ஒரு விருதும் பெற்றிட தேர்வாகி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.
    • அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    செய்துங்கநல்லூர்:

    கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை அலு வலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    பாரம்பரிய காய்கறிகள்

    பாரம்பரிய காய்கறி கள் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிக ளுக்கான விருதுகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த விருதுக்கு சொந்த அல்லது குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பம் செய்ய லாம். பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    தோட்டக்கலைத்துறை இணையதளமான https://www.tnhorticulture.tn.gov.in/ மற்றும் மாவட்ட அலு வலகங்களில் விவசா யிகளின் இதற்கான விண்ணங்களை பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்த விண்ணப் பங்களை கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகம் அல்லது மாவட்ட தோட்டக்கலைத்துறை அலு வலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விவசாயிகள் அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்தல், பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்த்தல், நீர் மேலாண்மை, முறையான மண்வள மேம்பாடு மற்றும் அங்கக முறையில் விதை களை மீட்டெடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படை யில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் விருதுக்கு தேர்வு செய்யப் படுவார்கள்.

    இதில் வெற்றி பெற்றவர்களை மாவட்ட கலெக்டர் அறிவிப்பார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மற்றும் விழாக்களின் போது இதற்கான சான்றிதழ் மற்றும் வங்கி வரவோலை, விருது வழங்கப்படும். இதில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும் , 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தாதனேந்தல் ஊராட்சிக்கு பி.வி.எம். அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
    • சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊரா ட்சி ஒன்றியம் தாத னேந்தல் ஊராட்சிக்கு ட்பட்ட பள்ளபச்சேரி கிராமத்தில் பி.வி.எம். மனநல காப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேசன், புல னாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் மற்றும் பி.வி.எம் அறக்கட் டளை நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர்.அப்துல் ரசாக் பி.வி.எம். மருத்துவ சேவை அணியின் ஆய்வு பரிந்துரையை ஏற்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் கோகிலா ராஜேந்தி ரனுக்கு ஊராட்சி மகாராணி விருது, தாதனேந்தல் சிறந்த ஊராட்சி விருது, சேவை திலகம் விருது ஆகிய மூன்று விருதுகளை வழங்கி பாராட்டினார்.

    இதில் பி.வி.எம். மருத்துவ சேவை அணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த் துக்களை தெரிவித்தனர்.

    இதே போல் ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திற னாளிகளின் நல அலுவலர் ஆர்.பாலசுந்த ரத்தின் சேவையை பாராட்டி நம்பிக்கை சிகரம் விருதும், சென்னை மாற்றுத்திறனாளி நல அலுவலர் முனைவர் கதிர்வேலுவின் மக்கள் சேவை பணிக்காக நம்பிக்கை இமய விருதும் வழங்கப்பட்டது. மேலும் பட்டயம், கேடயம், சிறப்பு மலர் மற்றும் சால்வை அணிவித்து கவுரவிக்கப் பட்டனர்.

    இதில் துறை அலுவ லர்கள், மாவட்ட தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டனர். பி.வி.எம். அறக்கட்டளை திறப்பு விழாவை சிறப்பாக நடத்திய நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக்கை பொது மக்கள் பாராட்டினர். கொடையாளர்கள், அரசு அதிகாரிகள், வருவாய் துறையினர், காவல் துறையினர், தொழிலதி பர்கள், மரு த்துவர்கள், வழக்க றிஞர்கள்,அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.அவர்களது சேவை பணியை பாராட்டி விருது, பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    • சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.
    • 17 வகையான விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.

    அதன்படி, பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக விளங்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

    எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம். சிறந்த டூர் ஆப்ரேட்டர், சிறந்த உள்நாட்டு டூர் ஆப்ரேட்டர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான கூட்டாளர், சிறந்த தங்குமிடம் என 17 வகையான விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27-ந் தேதி சென்னையில் வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

    விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலருக்கு 89251 58497 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் விருதுகளையும் பெற்றுள்ளார்.
    • விகடக்கலை மெமிக்ரி என்று மாறியதாலும் இக்கலை அழிந்து கொண்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    விகடக்கலை என்பது மன்னர்கள் காலத்தில் இருந்த பாரம்பரிய கலையாகும். சிரிப்பையும் சிந்தனையையும் ஊட்டக்கூடிய வகையில் இக்கலை மிகவும் அரிதாக இருந்துள்ளது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயர் ஆட்சியில் தெனாலிராமன் என்ற அரசவை கலைஞர் விகடக்கலையில் சிறந்து விளங்கினார்.

    தெனாலிராமன் கதைகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அலாதி பிரியம்.

    இந்நிலையில் தஞ்சையை சேர்ந்த கலைமாமணி குன்னியூர் கல்யாணசுந்தரம் (வயது 80) என்பவர் விகடகலையை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்த கலையை செய்து வருகிறார்.

    தமிழகத்தில் இவர் ஒருவர் மட்டுமே விகடக்கலையை இன்றும் சிரிப்பும் சிந்தனையுடனும், பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் நடைபெறும் விழாக்களில் நடத்தி வருகிறார்.

    அதன் மூலம் பல்வேறு தனியார் அமைப்புகள் மூலம் விருதுகளையும் பெற்றுள்ளார்.

    இவர் நிகழ்ச்சிகளில் பேசும்போது சமுதாயத்திற்கு சிந்தனை கருத்துக்கள் கூறுவது மட்டும் அல்லாமல், தனது குரலில் பறவைகள், விலங்குகள் போல் மயில், கிளி, குயில், அணில், தவளை, எருமை மாடு, நாய், ரயில், உடுக்கு சத்தம், மோட்டார் இன்ஜின் போன்ற சத்தங்க ளையும் தத்ரூபமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை ரசிக்க வைப்பார்.

    நாகரிகம் மாற்றத்திற்கு ஏற்றார் போல் விகட கலைக்கு போதிய ஆதரவு இல்லாததாலும், விகடக்கலை மெமிக்ரி என்று மாறியதாலும் இக்கலை அழிந்து கொண்டு வருகிறது.

    இதுகுறித்து விகடக்கலை கலைஞர் கல்யாணசுந்தரம் கூறும்போது, சிறுவயதில் விகடக்கலையை பற்றி தெரிந்து கொண்டு திருவிசநல்லூர் ராமசாமி சாஸ்திரிகளை மானசீக குருவாக ஏற்று தற்போது இந்த கலையை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடந்த 50 ஆண்டுகளாக நிகழ்ச்சிகள் மூலம் கொண்டு செல்கிறேன்.

    போதிய வருமானம் இல்லாததால் இந்தக் கலை தற்போது நலிவடைந்துள்ளது.

    தமிழ்நாடு அரசு சார்பில் பொற்கிழி விருது பெறுவதற்கு முயற்சி செய்கிறேன்.

    இந்தக் கலையை கவுரவப்படுத்தினால் முன்னாள் விகட கலைஞர் தெனாலிராமனை கவுரவிப்பது போல் இருக்கும் என்றார்.

    • மனிதாபிமான செயல்களுக்கான விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
    • மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டத்தில் நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துக்கள், மின்கசிவுகள், நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு ஒரு நபரின் உயிரை காப்பாற்றும் மனிதாபிமான செயல்களுக்காக ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகள் பெற தகுதியான பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஒரு பக்க அதற்கான குறிப்புரையுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ள விருதுகள் பெற விருப்பமுள்ள மற்றும் தகுதியுடையவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறப்பு சமூக பணியாளர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்பளித்த தனியார் நிறுவனம், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

    எனவே விருதுக்கு தகுதியானவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சித்திரை திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு கமிஷனர் நரேந்திரன்நாயர் விருது வழங்கினார்.
    • சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர்.

    சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீசார் வரை அனைவரையும் பாராட்டும் வகையில் விருந்தும், விருதும் வழங்கு விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

    ஆயுதப்படை மைதா னத்தில் நடைபெற்ற விழா விற்கு போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங்காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத், இந்து சமய அறநிலையத் துறை மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய துணை கமிஷனர்கள், கூடுதல் துணை கமிஷ னர்கள், உதவி கமிஷ னர்கள், இன்ஸ்பெக்டர்கள் என அனைவருக்கும் போலீஸ் கமிஷனர் விருது வழங்கி பாராட்டினார்.

    தொடர்ந்து போலீசார் அனைவருக்கும் அசைவ-சைவ விருந்து வழங்கப்பட்டது.

    ×