search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பசுமை பாதுகாவலர் விருதுகள்
    X

    பசுமை பாதுகாவலர் விருதுகள்

    • 1000 அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
    • மரக் கன்றுகள் நட்டு சிறப்புற பராமரிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பசுமை பாதுகாவலர் விருது சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தளிர்–விடும் பாரதம் சமூக சேவைக்–குழுவின் ஏற்பாட்டில், மரக்கன்றுகளை வளர்த்து பசுமைப் பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயலாற்றி வரும் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1000 அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் குமாரபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மேற்கு காலனி, நகராட்சி நடுநிலைப் பள்ளி நாராயண நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தர்மத்தோப்பு-வாசுகி நகர் ஆகிய பள்ளிகளில் செடிகள், மரக் கன்றுகள் நட்டு சிறப்புற பராமரிக்கும் மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பசுமை பாதுகாவலர் விருது சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கப்பட்டது.

    நிகழ்வில் தளிர்விடும் பாரதம் சமூக சேவைக் குழுவின் தலைவர் சீனிவாசன், செயலாளர் பிரபு வரதராஜன், ஜூவல்லரி செந்தில், மகேந்திரன், செல்வராணி உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் கெளசல்யமணி, பாரதி, நாகரத்தினம் மற்றும் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×