என் மலர்
நீங்கள் தேடியது "shalini"
- நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
- போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த வரிசையில் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் 'அட்டகாசம்'. இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். இப்படத்தை மீண்டும் வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், விஜய், சூர்யா இணைந்து நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமும் மீண்டும் வெளியாக உள்ளது.
இதனிடையே, நடிகை ஷாலினி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அஜித்- ஷாலினி இணைந்து நடித்த 'அமர்க்களம்' மீண்டும் வெளியாக உள்ளதாக இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு நடிகை ஷாலினிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 'அமர்க்களம்' மீண்டும் வெளியாவது குறித்த டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 'அமர்க்களம்' அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் திரையரங்குகளில் அஜித்- ஷாலினி இருவருக்குமான காதல் படத்தை காண அஜித் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
- 2000-ம் ஆண்டு அஜித்குமார் - ஷாலினி திருமணம் செய்துகொண்டனர்.
- இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தபோது அஜித் குமார், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் க்யூட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பூஜை ஒன்றில் அஜித்குமார் காலில் விழ ஷாலினி முயல்கிறார். அதை அஜித் வேண்டாம் என்று கூற, சுற்றி உள்ளவர்கள் காலில் விழுமாறு கூறுகிறார்கள். இதனையடுத்து ஷாலினி அஜித்குமார் காலில் விழுந்து வணங்குகிறார். உடனே அஜித்குமார் வீட்டுல போய்ட்டு நான் விழணும் என்ற கூற சிரிப்பலை எழுந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
- அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
- அஜித்குமாருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து 33 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையொட்டி அஜித்குமாருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், திரைத் துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமாருக்கு அவரது மனைவி ஷாலினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாவில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஷாலினி, அந்த பதிவில், நீங்கள் உங்கள் தொழிலை மட்டும் உருவாக்கவில்லை. நீங்கள் மக்களை சுமந்து, அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைத்து எல்லாவற்றையும் அருமையாக செய்துள்ளீர்கள். உங்களை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. 33 வருடங்கள் முடிந்து விட்டது" என்று தெரிவித்துள்ளார்.
- நடிப்பு மட்டுமில்லாமல் ரேசிங்கிலும் தரிப்பது அஜித் கவனம் செலுத்தி வருகிறார்.
- ஆத்விக்கிற்கு அஜித் கார் ரேஸ் பயிற்சி அளித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.
நடிப்பு மட்டுமில்லாமல் ரேசிங்கிலும் தரிப்பது அஜித் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், பிரபல கார் ரேஸர் நரேன் கார்திகேயனிடம் அஜித்குமாரின் மகன் ஆத்விக் பேசும் புகைப்படம் அஜித்குமார் ரேஸிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆத்விக் குட்டி ரேஸ் காரில் அமர்ந்திருக்க அவருக்கு பக்கத்தில் அஜித்குமார், ஷாலினி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆத்விக்கிற்கு அஜித் கார் ரேஸ் பயிற்சி அளித்து வரும் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
- அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
- அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.
நடிகர் அஜித்குமார் பத்ம பூஷண் விருது பெற்ற நிகழ்ச்சியின்போது, அவரின் மகன் ஆத்விக்கை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கொஞ்சிய புகைப்படத்தை ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், 'பொக்கிஷமான தருணம்' என ஷாலினி அஜித்குமார் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்
- இன்னும் மனதளவில் மிடில் கிளாஸாகத்தான் என்னை உணர்கிறேன்.
- அஜித் குமார், Ak, அஜித் என என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே எனக்கு போதும்.
தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி நேற்று அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இதன்பின் ஆங்கில செய்தி ஊடகமான இந்தியா டுடே நடத்திய நேர்காணலில் அஜித் குமார் பங்கேற்று பல விஷயங்களை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில், பத்ம பூஷன் அஜித்குமார் என்று அழைப்பது எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு "இன்னும் மனதளவில் மிடில் கிளாஸாகத்தான் என்னை உணர்கிறேன்.
பத்ம பூஷன் என்று சொன்னால் இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இருந்தாலும் இந்த விருதினை வாங்கியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாகவும், உணர்ச்சியாகவும் இருக்கிறேன்.
இந்த மாதிரி விருதுகளை வாங்கும்போதும் தான் நாம் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம் என தெரிகிறது. எனவே, நான் சரியான பாதையில் இருப்பதாக உணர்கிறேன்.
என்னுடைய மிகப்பெரிய பலம் எனது பெற்றோர்கள் எனது சகோதரர்கள், ஷாலினி மற்றும் எனது குழந்தைகள். என்னுடைய வெற்றி, தோல்வி என எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பது அவர்கள்தான்.
என்னுடைய மனைவி ஷாலினி எப்போதும் என்னுடைய தூணாக உள்ளார். எனக்காக நிறைய விஷயங்களை தியாகம் செய்துள்ளார். எனக்கு வரும் எந்த அங்கீகாரமும் பெரும்பகுதி எனது மனைவியையே சேரும்" என்று தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார், தல என்று பட்டங்கள் குறித்துப் பேசிய அஜித், "இந்தப் பட்டங்களில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. சினிமாவில் நடிக்கிறேன். அதற்கு நல்ல சம்பளமும் வாங்குறேன்.
அதைத் தாண்டி இந்தப் பட்டங்கள் எல்லாம் தேவையில்லை. சினிமா தவிர தனிப்பட்ட வாழ்க்கை, எனக்குப் பிடித்த வேறு பல வேலைகள், கனவுகள் இருக்கின்றன. அதனால் அஜித் குமார், Ak, அஜித் என என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே எனக்கு போதும்.
எனக்குப் பிடித்த வேலைகளை விரும்பிச் செய்கிறேன். என்னை எவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்ள முடியுமே, அவ்வளவு சாதாரணமாக வைத்துக் கொள்கிறேன்.
மக்கள் என்மீது அதீத அன்பு வைத்திருக்கிறார்கள். நான் எந்தத் துறையில் என்ன செய்தாலும் ஆதரவையும், அன்பையும் அள்ளித் தருகிறார்கள். அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக உணர்கிறேன்" என்று தெரிவித்தார்.
- கோலிவுட் கொண்டாடும் ஜோடிகளில் ஒன்றான அஜித், ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி நேற்றுடன் 25 ஆண்டுகளாகிவிட்டது.
- இந்த வீடியோவில் இருவரும் செம க்யூட்டாக இருப்பதால் இணையவாசிகளும் ரசிகர்களும் அஜித்துக்கும் ஷாலினிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தபோது அஜித் குமார், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் திருமணத்திற்கு மொத்த திரையுலகமும் திரண்டு சென்று வாழ்த்தியது. அரசியல் தலைவர்கள் தொடங்கி முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
கோலிவுட் கொண்டாடும் ஜோடிகளில் ஒன்றான அஜித், ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி நேற்றுடன் 25 ஆண்டுகளாகிவிட்டது.

இந்த நிலையில், 25-வது ஆண்டு திருமண நாளை அஜித்- ஷாலினி ஜோடியாக கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான வீடியோவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அஜித்- ஷாலினிக்கு இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டுக் கொள்கிறார்கள். இந்த வீடியோவில் இருவரும் செம க்யூட்டாக இருப்பதால் இணையவாசிகளும் ரசிகர்களும் அஜித்துக்கும் ஷாலினிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
25-வது திருமணநாளை கொண்டாடிய அஜித் குமார், ஷாலினி தம்பதிக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். இதை அஜித் ரசிகர்களும் கொண்டாடினர்.
- அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார்.
- அஜித் தனது குடும்படத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர், நடிகைகள் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் அஜித்குமாரும் மனைவி ஷாலினி மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோருடன் புத்தாண்டு கொண்டாடி உள்ளார். அந்த புகைப்படங்களை ஷாலினி வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இதில் மகள் அனோஷ்காவுடன் அஜித்குமார் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அஜித் நடித்துள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் அஜித்குமார் கதாபாத்திரம் வில்லத்தனமாக சித்தரித்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது. அடுத்து நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தில் அஜித்குமார் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அஜித்-ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.
- இவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமான அஜித், அதன்பின்னர் ஆசை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், முகவரி, தீனா, வில்லன் என பல படங்களில் நடித்து ரசிகர்களை தன்வசம் படுத்திக் கொண்டார். இவர் காதலுக்கு மரியாதை, அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைப்பாயுதே, பிரியாத வரம் வேண்டும் ஆகிய தமிழ் படங்களில் நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து அமர்க்களம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்-ஷாலினி
இந்நிலையில் அஜித்-ஷாலினி இருவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றன. அஜித்-ஷாலினி தனது குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களுக்கு இருவரும் இணைந்து நடித்த உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்ற பாடலின் வரிகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இவரின் 63-வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித்தின் புதிய புகைப்படத்தை அவரது மனைவி நடிகை ஷாலினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கூலாக அஜித் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
- செல்ல மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தாளை கொண்டாட சென்னை வந்திருந்தார் அஜித்.
- அவருக்கு பிடித்த ஃபுட்பால் வடிவத்தில் பிறந்தநாள் கேக்கையும்.ஆத்விக் ஃபுட்பால் ஜெர்சியை அணிந்து இருப்பதை நாம் இந்த புகை படத்தில் காண முடியும்.
தமிழ் சினிமாவில் செல்லமாக 'தல' என்று அழைக்கபடும் நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி என்ற படம் நடித்து வருகிறார் அதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் தனது குடும்பத்துடன் நேரங்களை செலவழிக்க எண்ணி அவரின் கடைகுட்டி சிங்கமான செல்ல மகன் ஆத்விக்கின் 9-வது பிறந்தாளை கொண்டாட சென்னை வந்திருந்தார் அஜித். அவர்களின் மனைவி ஷாலினி மூத்த மகளான அனுஷ்காவுடன் மிகவும் மகிழ்ச்சியாக பிறந்தாநாளை கொண்டாடியுள்ளார்.
ஆத்விக் ஃபுட்பால் விளையாட்டில் மிகவும் தீவிரமாக இருக்கும் நபர் என்பதால். அவருக்கு பிடித்த ஃபுட்பால் வடிவத்தில் பிறந்தநாள் கேக்கையும்.ஆத்விக் ஃபுட்பால் ஜெர்சியை அணிந்து இருப்பதை நாம் இந்த புகை படத்தில் காண முடியும்.
அதன் புகை படத்தை ஷாலினி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் அஜித்குமார் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வர வேற்ப்ப்பை பெற்று இருக்கிறது. சமூக வலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.
- அஜித்- ஷாலினி திருமண நாள் புகைப்படங்கள், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஷாலினி தலையில், லைட் அடிக்கும் கிரீடம் அணிந்து 'ஏஞ்சல்' போல காட்சியளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியானவர் ஷாலினி.
பிரபல நடிகர் அஜித்குமாருடன் நடிகை ஷாலினி முதன்முதலில் ஜோடியாக நடித்த படம் அமர்க்களம். இப்பட ஷூட்டிங்கில் ஷாலினி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அஜித் அவரை பாசத்துடன் கவனித்துக் கொண்டார். இதனால் ஷாலினிக்கு அஜித் மீது காதல் ஏற்பட்டது.

மேலும் பட ஷூட்டிங் நேரத்தில் காதல் அதிகரித்தது. இதை யொட்டி கடந்த 2000-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் அஜித்- ஷாலினி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் ஷாலினிக்கு கடந்த 2008-ம் ஆண்டில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அனோஷ்கா என பெயரிட்டனர். இதையடுத்து 7 ஆண்டுகள் கழித்து அஜித் - ஷாலினி ஜோடிக்கு 2- வதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 'ஆத்விக்' என பெயரிட்டனர்.
இந்நிலையில் அஜித்- ஷாலினி 24- வது திருமண நாளை சென்னையில் 5 நட்சத்திர ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த ஓட்டலுக்கு அஜித் வரும்போது அவரைப் பார்த்து ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஓட்டலில் உணவு டேபிளில் அஜித் அமர்ந்திருக்க அவரது மடியில் மனைவி ஷாலினி அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ஷாலினி தலையில், லைட் அடிக்கும் கிரீடம் அணிந்து 'ஏஞ்சல்' போல காட்சியளித்துள்ளார்.
மேலும் அஜித்- ஷாலினியை நேரில் சந்தித்த ரசிகர்கள் அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
அஜித்- ஷாலினி திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள், வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் "விடாமுயற்சி" படத்தில் தற்போது நடித்து வருகிறார். 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






