என் மலர்
நீங்கள் தேடியது "SA Chandrasekar"
- சுமார் 4 மணி நேரம் இரண்டு பேரும் அரசியல் குறித்து விரிவாக விவாதித்து உள்ளனர்.
- எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் காங்கிரஸ் மீதான ஈர்ப்பு இருந்துள்ளது.
திருச்சி:
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்ற தேர்தல் வரும் போதெல்லாம், ஒருமுறை அந்த கட்சி, மறுமுறை இந்த கட்சி என்ற நிலையே கடந்த கால வரலாறாக இருந்து வந்துள்ளது. ஆனால் வரப்போகும் 2026 சட்டமன்ற தேர்தல் புதிய அத்தியாயத்தை எழுதும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
எப்போதுமே தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு வரிந்து கட்டி களப்பணிகளை தொடங்கும் அரசியல் கட்சிகள் எப்போதும் இல்லாத அளவில் இந்த தேர்தலுக்காக ஓராண்டுக்கு முன்னரே தயாராகி விட்டனர். அரசியல் கட்சி தலைவர்கள் 'மக்கள் சந்திப்பு' என்ற கருப்பொருளுடன் பயணங்களை தொடங்கி விட்டனர்.
அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.வெ.க. ஆகிய கட்சி தலைவர்கள் வாகனங்களுடன் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க.வும் கட்சியை பலப்படுத்தி அதற்கேற்றவாறு அரசின் சாதனைகளை கூறி மக்கள் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
தற்போது வரை 4 முனை போட்டி என்று கணிக்கப்பட்ட நிலையில் வரும் காலங்களில் அது மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய், தங்கள் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் யாரும் தங்களுடன் சேரலாம் என்று தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்க்க பகீரத முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அந்த கனவு பொய்த்து விட்டது. ஏற்கனவே விஜய் தமது அரசியல் எதிரி தி.மு.க., கொள்கை எதிரி பா.ஜ.க. என கொள்கை முழக்கமிட்டு வந்தார். ஆகவே பா.ஜ.க. இடம்பெற்றுள்ள கூட்டணியில் இடம்பெற வாய்ப்பில்லை என்பது தெள்ளத்தெளிவானது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து விஜயுடன், ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு அரை மணி நேரம் பேசி ஆறுதல் தெரிவித்தார். இது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் கரூர் எம்.பி. ஜோதிமணி, 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் காங்கிரசில் சேர ராகுல் காந்தியை சந்தித்ததாக புது குண்டை தூக்கி போட்டார். அதன்பின்னர் கரூரில் மீண்டும் அக்கட்சியின் மாநில நிர்வாகி அருள் ராஜை அவர் சந்தித்தார்.
இந்த நிலையில் தற்போது விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான திருச்சி வேலுச்சாமியை சந்தித்து பேசியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக எஸ்.ஏ.சந்திரசேகர் விமானம் மூலம் திருச்சி வந்தார்.
இந்த திருமணத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமிக்கும் அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர் இருவரும் ஒரே காரில் திருவாரூர் புறப்பட்டு சென்றனர். அதன் பின்னர் அதே காரில் அவர்கள் திருச்சி விமான நிலையம் வந்தனர். சுமார் 4 மணி நேரம் இரண்டு பேரும் அரசியல் குறித்து விரிவாக விவாதித்து உள்ளனர்.
எஸ்.ஏ.சந்திரசேகர் நீண்ட காலமாக வேலுச்சாமி உடன் தொடர்பில் இருந்து வந்தார். தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு காமராஜர் குறித்து திருச்சி வேலுச்சாமி வைக்கும் வாதங்களை பார்த்து அவ்வப்போது பாராட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் காங்கிரஸ் மீதான ஈர்ப்பு இருந்துள்ளது.
தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி தொடர்பாக அவர்கள் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக திருச்சி வேலுச்சாமியிடம் கேட்ட போது, எஸ்.ஏ.சந்திரசேகர் எனது நீண்ட கால நண்பர். திருவாரூர் திருமண நிகழ்வில் எனக்கும் அழைப்பு வந்ததை அறிந்த அவர் என்னை தொடர்புகொண்டு பேசி என்னை திருச்சியில் சந்தித்தார். இது வழக்கமான சந்திப்பு தான். கூட்டணியை தலைமை தான் முடிவு செய்யும். நான் சொல்வது முறையல்ல.
திருவாரூர் திருமண நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பழனிசாமியின் மகன், இரண்டு முறை எம்.பி.யாக இருந்த எம்.ஜி.முருகையா மகன், காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக இருந்த பூம்புகார் சங்கர் மகன் ஆகிய மூன்று பேரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றுவதை நான் பார்க்க நேர்ந்தது. அவர்களின் தந்தைகளுடன் நான் தொடர்பில் இருந்ததால் அவர்கள் வந்து என்னிடம் நலம் விசாரித்தனர்.
இதன் மூலம் விஜய் இளைஞர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது என்றார். அதேபோல் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாகவும், அதில் அமைய உள்ள அரசியல் கூட்டணி குறித்தும் விரிவாக பேசியுள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை தேசிய கட்சியான பா.ஜ.க. வுடன் கூட்டணி வைத்தது போல், முதன்முறையாக கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்திக்கும் த.வெ.க.வும் தேசிய கட்சியான காங்கிரசுடன் கூட்டணி வைப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தநிலையில்தான் த.வெ.க. தலைவர் விஜய்யின் தந்தை, காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியை சந்தித்து பேசியது தற்போதைய அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க த.வெ.க. காய் நகர்த்துகிறதா? என்பது அடுத்துவரும் அரசியல் களம்தான் முடிவு செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
- இந்த 52 ஆண்டுகளாக எவ்வளவோ பிரச்சினைகள் இருந்துள்ளன.நான் அவளை எவ்வளவோ தொந்தரவுகள் செய்து இருக்கிறேன்.
- இந்த 52 ஆண்டு கால வாழ்க்கையை நினைத்து என் மனைவிக்கு நான் ஒரு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்திருக்கிறேன்,
இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண நாள் பரிசாக அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.
அது குறித்து அவர் பேசும் போது,
"எனக்குத் திருமணம் ஆகி 52 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 52 ஆண்டுகளாக எவ்வளவோ பிரச்சினைகள் இருந்துள்ளன.நான் அவளை எவ்வளவோ தொந்தரவுகள் செய்து இருக்கிறேன். தொல்லைகள் கொடுத்திருக்கிறேன். இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஒரு பெண் என்னுடன் இத்தனை ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறாள் மகிழ்ச்சியாக.
அதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. திருமணம் ஆன புதிதில் மனைவிக்குப் பரிசு கொடுப்பது எல்லாம் சாதாரணமான விஷயம் . ஆனால் இந்த 52 ஆண்டு கால வாழ்க்கையை நினைத்து என் மனைவிக்கு நான் ஒரு பிஎம்டபிள்யூ கார் பரிசளித்திருக்கிறேன்,அவளது மகிழ்ச்சிக்காக.
இதை நினைத்து நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்"என்று கூறியிருக்கிறார்.
- ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம் செய்தார்.
- கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கபட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாகநதி ஆற்றுபாலம் அருகில் உள்ள ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் பிரதோஷம் நடந்தது. இதில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கபட்டது.

ஆரணியில் சாமி தரிசனம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர் வந்த தகவல் ஆரணி முழுவதும் பரவியதால் விஜய் ரசிகர்கள் கோவில் வளாகம் முன்பு குவிந்தனர். தரிசனம் முடித்து வெளியே வந்த எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அரசியலில் நடிகர்கள் தொடர்ச்சியாக பின்னடைவை சந்திக்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து சென்றார்.
- நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
- எவ்வளவு வயசானாலும் அப்பா, அப்பா தான் என்று உருக்கமாக பகிர்ந்துக் கொண்டார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாத பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இரங்கல் தெரிவித்தார். அவர் கூறும்போது, நடிகர் அஜித்குமாருடைய தந்தை மறைவு செய்தி கேட்டு வருத்தமடைகிறேன். எவ்வளவு வயசானாலும் அப்பா, அப்பா தான். அந்த இழப்பு ஒரு மகனுக்கு எந்த அளவுக்கு இழப்பாக இருக்கும் என்பது அனைத்து பிள்ளைகளுக்கும் தெரியும். அப்படி அந்த தந்தையை இழந்து தவித்து கொண்டிருக்கும் அஜித்துக்கு மன ஆறுதலை தரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றார்.
- இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கருமேகங்கள் கலைகின்றன.
- இப்படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது, சினிமாவை நேசித்ததால் ஏதோ ஒரு வகையில் நம்மை அது நேசித்துக் கொண்டிருக்கும். அதற்கு உதாரணம், முதலில் இயக்கினேன், தயாரித்தேன், விநியோகித்தேன், இப்போது இந்த வயதில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நான் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். அதில், நிறைய பணம் சம்பாதித்திருக்கிறேன். ஆனால், தங்கர் பச்சான் மாதிரி பெயரை சம்பாதிக்கவில்லை.

எஸ்.ஏ.சந்திரசேகர்
அவர் விவசாயத்தில் மட்டுமல்ல, படத்திலும் கலப்படமில்லாமல் ஆர்கானிக்காகத் தான் படம் எடுப்பேன், நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அவரின் இயக்கத்தில் இந்த வயதில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி. ஒரே காலகட்டத்தில் ஒரே ஊரில் இருந்து சினிமாவிற்கு நானும் பாரதிராஜாவும் வந்தோம். ஆனால், அவர் முதலில் இயக்குனராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார்.
விஜயை நடிகராக்க வேண்டும் என்று ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டு சென்றேன். என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்? நீயே பெரிய இயக்குனர் தானே, நீயே இயக்கிக் கொள் என்று மறைமுகமாக மறுத்துவிட்டார். அவரிடம் உதவி இயக்குனராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. என் பையனை அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், அதுவும் நடக்கவில்லை.
ஆனால், தங்கர் பச்சான் ஒரே படத்தில் எங்கள் இருவரையும் நண்பர்களாக நடிக்க வைத்துவிட்டார். இவரைப் போலவே கௌதம் மேனனிடமும் ஆல்பத்தை கொண்டு சென்றேன். அவரும் மறுத்துவிட்டார். அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இல்லையென்றால் விஜய் கமர்ஷியல் நாயகனாக ஆகியிருக்கமாட்டார். அதற்காக கடவுளுக்கும் நன்றி என்றார்.
- கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தை இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கியுள்ளார்.
- பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தை வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்துள்ளார்.

கருமேகங்கள் கலைகின்றன
இந்நிலையில் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் இரண்டாம் பாடலான சுத்தமுள்ள நெஞ்சம் பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகர் விஜய் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார்.
- விஜய் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உடல் நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜய் நேரடியாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதைத்தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து நலம் விசாரித்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்- புஸ்சி ஆனந்த்
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரும் தனது வலைதள பக்கத்தில் இந்த புகைப்படத்தினை வெளியிட்டு 'பிள்ளைகள் ஒன்று சேரும்போது பெற்றோருக்கு மட்டுமல்ல மொத்த குடும்பத்திற்கே வலிமை கூடுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.
பிள்ளைகள் ஒன்று சேரும் போது
— S A Chandrasekhar (@Dir_SAC) September 15, 2023
பெற்றோருக்கு மட்டும் அல்ல
மொத்த குடும்பத்துக்கே
வலிமை கூடுகிறது.?? pic.twitter.com/OvXS9AZR2J
- நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்.
- அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து விட்டது.
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொது மக்கள், ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும் தே.மு.தி.க. கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உயிரிழப்புக்கு இயக்குனர் எஸ் .ஏ. சந்திரசேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "எனது இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிரோடு இருக்கும்போதே சந்தித்து ஆரத் தழுவி ,கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதற்காக நான் இரண்டு ஆண்டுகள் முயற்சியும் செய்தேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை."
"அவரது உயிரற்ற உடலை நான் பார்க்கக் கூடாது என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன். இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன்."
"திரையுலகிலும் சரி அரசியல் உலகிலும் சரி அவர் சகாப்தம் படைத்தவர். அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து விட்டது. இந்த நிலையில் கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை."
"அவர் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அஞ்சலியுடன் அவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலில் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபா சிறப்பு வழிபாடு செய்தனர்.
- கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தவெக மாநாடு வெற்றி பெற, விஜய்க்கு சொந்தமான கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோவிலுக்கு அவரது பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- சோபா ஆகியோர் நேரில் வந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.
இதுகுறித்து தவெக தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும். தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். அவர் பெரிய நிலைமைக்கு வர வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என்று வேண்டி விஜய்க்காக, வடசென்னையை சேர்ந்த தவெக நிர்வாகிகள், மகளிர் அணியினர் இணைந்து கொரட்டூர் பாபா கோவிலில் அன்னதானம் செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பெரிய ஆரூடம் தெரிந்தவர் எஸ்.ஏ.சி.
- எனக்கு இந்தக் கதையே புதிதாக இருந்தது.
நீதிகேட்டுப் போராடும் ஒரு நாயின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'கூரன் ' திரைப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலரும் பாராட்டி வருகிறார்கள். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் படத்தைப் பார்த்துவிட்டு, பேசும்போது, "எப்போதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் மிகப்பெரிய இயக்குநர் எஸ்.ஏ.சி. அவர்கள். அவர் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பது உலகத்திற்கே தெரியும்.
அவர் திரைக்கதையில் ஒரு மன்னர். அவர் செய்த மிகச் சிறந்த திரைக்கதை இளைய தளபதி விஜய். 1992ல் நாளைய தீர்ப்பு என்கிற படத்தில் தனது மகனை அறிமுகப்படுத்தினார். அவரது மகன் 26-வது வருடத்தில் என்ன தீர்ப்பு எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவு பெரிய ஆரூடம் தெரிந்தவர் எஸ்.ஏ.சி.
அவர் ஒரு சிறந்த நடிகராக இந்த 'கூரன்' படம் பார்த்தபோது எனக்குத் தெரிந்தது. இதற்கு முன்பு அவர் நடித்த சில படங்களை நான் பார்த்து இருந்தாலும் இதில் நடித்திருந்த அவரது பாத்திரம் சிறப்பாக இருந்தது.
நான் இந்த 'கூரன்' படம் பார்க்கும் முன்பு கதையைக் கேட்டு விட்டுத்தான் சென்றேன். இதில் ஒரு நாய் தனது குட்டிக்காகத் தனக்கு வழக்காடுவதற்காக ஒரு வழக்கறிஞரைப் போய் பார்க்கிறது. அந்த வழக்கறிஞர் தான் எஸ்.ஏ.சி. அவர்கள். எனக்கு இந்தக் கதையே புதிதாக இருந்தது.
இந்த நாய் தனது உணர்வை எப்படி வெளிப்படுத்தும்? அதற்காக இவர் எப்படி வழக்காடுவார்? இந்த ஆர்வத்தோடு தான் நான் படம் பார்த்தேன். படத்தில் அது கொஞ்சமும் குறையாமல் இருந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி. இது அவருக்கு முதல் படம். ஆனால் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அழகாகத் திரைக்கதை அமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வழக்கமான பாதையை விட்டுவிட்டுப் புதிதாகச் சிந்திக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அந்த வகையில் அமைந்துள்ள இந்தப் படத்தில் பெரிய பலமாக இருப்பது நடிக்காத அந்த நாய். இயல்பாக இருக்கிற அதன் உணர்வுகளைப் படம் பிடித்து, சரியாகப் பயன்படுத்தி உள்ளார்கள்.
அதன் பிறகு படத்தில் பிடித்தது மிகச் சிறப்பாக நடித்து இருக்கும் எஸ்.ஏ.சி. அவர்கள். அவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகன். அவர் நடித்திருக்கும் காட்சிகள், பேசி இருக்கும் வசனங்களுக்குப் பல இடங்களில் கைத்தட்டல் கிடைக்கும். இந்தப் படம் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ள படம் என்று நினைக்கிறேன்.
வீட்டில் நம் எல்லோருக்கும் குழந்தைகள் பிடிக்கும். குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகளைப் பிடிக்கும். குழந்தைகளுக்குச் செல்லப் பிராணிகள் பிடிப்பது போல் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். எஸ்.ஏ.சி. அவர்கள் எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பவர்; வெற்றி பெற நினைப்பவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்! "இவ்வாறு பார்த்திபன் பாராட்டிக் கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.







