என் மலர்
நீங்கள் தேடியது "இயக்குனர் பூரி ஜெகன்நாத்"
- விஜய் சேதுபதியின் பான்-இந்தியா ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
- தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தலைவன், தலைவி படத்திற்கு பின் பூரி ஜெகன்நாத்தின் பான்-இந்தியா ஆக்ஷன் படத்தில் விஜய் சேதுபதி கமிட் ஆகியிருந்தார். இப்படத்தில் நடிகைகள் தபு மற்றும் சம்யுக்தா இணைந்தனர். இந்த அறிவிப்பே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சார்மி கவுர் தெரிவித்துள்ளார். முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரம்மாஜி, துனியா விஜய் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தலைப்பு செப்டம்பர் மாதம் வெளியாக இருந்தநிலையில், சிலகாரணங்களால் வெளியிடப்படவில்லை. விரைவில் தலைப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
- இயக்குனர் பூர் ஜெகன்நாத் பிறந்தநாளையொட்டி படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 'டிரெயின்', 'ஏஸ்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இதனை தொடர்ந்து பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. மேலும் பான் இந்தியா அளவில் இப்படம் தயாராக உள்ளதாவும், இப்படத்தை சார்மி கவுர் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் டீசர் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் பூர் ஜெகன்நாத் பிறந்தநாளையொட்டி படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி.
- 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது.
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி. தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து டபுள் இஸ்மார்ட் எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படமானது 2019ல் வெளியான இஸ்மார்ட் சங்கர் எனும் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இந்த படத்தை விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்க மணி ஷர்மா படத்திற்கு இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் கடந்த மார்ச் 8-ம் தேதியே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு தற்போது இப்படம் ஆனது 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது. இதனை பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






