என் மலர்
நீங்கள் தேடியது "director perarasu"
- இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
- ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர் திரையரங்கில் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற ஆக்ஷன் நாயகனாகவும், 'கேப்டன்' என்று கோடிக்கணக்கான மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான விஜயகாந்தின் நினைவுகளைப் போற்றும் வகையில், அவரது 100-வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை புதுப்பொலிவுடன் கடந்த 22ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
1991-ம் ஆண்டு, தமிழ்ப் புத்தாண்டு அன்று இயக்குனர் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான 'கேப்டன் பிரபாகரன்', பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இசைஞானி இளையராஜாவின் அதிரடியான இசையில், விஜயகாந்துடன் சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலி கான், லிவிங்ஸ்டன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.
தற்போது, பலரும் இப்படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்று விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், இயக்குனர் பேரரசு உள்ளிட்டோர் திரையரங்கில் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.
அப்போது, இப்படத்தில் இடப்பெறும் "ஆட்டமா தேரோட்டமா" பாடலுக்கு, மன்சூர் அலிகான் மற்றும் பேரரசு நடனமாடி வைப் ஆனார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், 'கேப்டன் பிரபாகரன்' படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மன்சூர் அலிகான், பேரரசு உள்ளிட்ட பிரபலங்கள் கேக் வெட்டி விஜயகாந்த் பிறந்தநாளைக் கொண்டாடினர்.
- நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு.
- முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்.
நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதனால் அவர் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், " நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் விஜய்யின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறியதாவது:-
சினிமாவில் இருந்து விஜய் விலக வேண்டாம். எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்கும் முதல் நாள் இரவு வரை திரைப்படத் துறையில் இருந்தார். எனவே நீங்களும் சினிமாவில் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகது.
- காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை தேவை.
நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்டபோதிலும் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளன.
இந்நிலையில், இயக்குனர் பேரரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்!
அவர்களின் பேச்சில் விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது!
சமீபத்தில் ஒரு அரசியல்வாதி குறிப்பிட்ட நடிகைகளின் பெயரைச் சொல்லி அயிட்டம் என்று சொன்னது,
ஏ.வி.ராஜூ என்பவர் இப்பொழுது திரிஷா அவர்களின் பெயரை குறிப்பிட்டு கூவத்தூர் கூத்தில் சம்பந்தப்படுத்தியது இதெல்லாம் அருவருக்க செயலாகும்!
ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசி அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகது.
இந்த மாதிரியான அநாகரீக செயலுக்கு பாதிக்கபட்டவர்கள் புகார் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லாமல், காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இப்படிப்பட்ட அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி, அஜித்குமார் நடித்த திருப்பதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. இவர் இன்று கன்னியாகுமரி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சினிமா உலகில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளேன். 9 படங்களை இயக்கி இருக்கிறேன். மலையாளத்தில் சாம்ராஜ்யம் 2 படத்தையும் இயக்கியுள்ளேன். ஜூன் மாதம் மேலும் 2 அல்லது 3 படங்களை இயக்க உள்ளேன்.
ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க விருப்பம் உள்ளது. அந்த லட்சியம் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் மக்கள் சேவைக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும்.

நானும் மக்கள் பிரச்சனைகளுக்காக நடந்த போராட்டங்களில் பங்கெடுத்து உள்ளேன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்சனைக்காக போராடியுள்ளேன். மீனவர்கள் பிரச்சனைக்காகவும் போராடுவேன்.
கன்னியாகுமரியில் துறைமுகம் அமைவதால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்காகவும் போராடுவேன்.
தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறுகிறது. அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்பவர்களே உண்மையான அரசியல்வாதிகள். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் அளிப்பது பற்றி கூறும்போது, அதனை தேர்தல் கமிஷன் கண்டிக்க வேண்டும். ஓட்டுக்காக இலவசம் தருவதாக அறிவிப்பதும் லஞ்சம்தான் என்பதை உணர வேண்டும். மாதம் தோறும் வங்கியில் பணம் போடுகிறேன் என்று கூறுவதை தேர்தல் கமிஷன் தடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் யார் அதிக பணம் கொடுத்தார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்த வெற்றி உண்மையான வெற்றியாக இருக்காது. எனக்கு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரும்போது, அப்போது எந்த கட்சி நல்ல கட்சியாக எனக்கு தோன்றுகிறதோ, அந்த கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன்.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து சில நாடுகள் மட்டுமே கண்டனம் தெரிவித்து உள்ளன. இதனை உலக நாடுகள் அனைத்தும் கண்டிக்க வேண்டும்.
ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு மதத்தினர் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. ஒரு மதத்தை இன்னொரு மதம் எதிர்ப்பதற்கும் உரிமை இல்லை.
வேலூர் ஜெயிலில் இருக்கும் ராஜீவ் கொலை கைதிகளான நளினி, முருகன், பேரறிவாளன் ஆகியோரை 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவர்கள் ஆயுள் கைதிகள் அனுபவிக்கும் தண்டனை காலத்தை விட அதிக தண்டனை அனுபவித்து விட்டார்கள்.
இவர்களை விடுவிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடப்பட்டது. இப்போது நடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் கூட அவர்கள் விடுவிக்கப்படாதது மர்மமாக உள்ளது. இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளும், கவர்னரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் முறையாக நடக்கவில்லை. பலரது வாக்குரிமை மறுக்கப்பட்டு உள்ளது.
பெரும்பாலானவர்களுக்கு பூத் சிலிப் கூட வழங்கப்படவில்லை. இதில் தேர்தல் ஆணையம் முறையாக நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #Perarasu






