search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srilankan bomb attack"

    பயங்கரவாதத்தை ஒழிக்கப் போவதாக மோடி கூறுவது ஏமாற்று வேலை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். #MDMK #Vaiko #PMModi
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடைபெற்றுக் கொண்டு இருக்கின்ற 17 ஆவது பாராளுமன்றத் தேர்தல் பரப்புரையில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி வருவதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகின்றார். ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளவர்களின் பின்னணி அதிர்ச்சி அளிக்கின்றது.

    மத்தியப் பிரதேசத் தலைநகர் போபால் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கை எதிர்த்து, சாத்வி பிரக்யா சிங் என்பவரை, பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக நிறுத்தி இருக்கின்றது.

    2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் நாள், குஜராத், மராட்டிய மாநிலங்களில் 3 இடங்களில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. பத்து பேர் உயிர் இழந்தனர்; 80 பேர் காயம் அடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இந்து பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாக, புலன் விசாரணையில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர்தான் சாத்வி பிரக்யா சிங்.

    இவர், 1997 -ம் ஆண்டு, பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிசத் அமைப்பில் இணைந்தவர். இன்று அக்கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவர். வன்முறை, வெறுப்பு உணர்வை விதைக்கின்ற வகையில் பேசி வருபவர்.



    ஆனால், “சாத்வி பிரக்யா சிங் இந்தியப் பண்பாட்டுக்கும், பழம்பெருமைக்கும் அடையாளமாகத் திகழ்பவர்” என்று பிரதமர் மோடி புகழ்ந்து உரைத்துள்ளார்.

    அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்திய ஆட்சிப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற 71 அதிகாரிகள் ஒன்றாகச் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.

    அந்தக் கடிதத்தில், “மாலேகான் குண்டு வெடிப்பிற்காக என்னைக் கைது செய்தபோது, ஹேமந்த் கர்கரே என்ற காவல்துறை அதிகாரி, விசாரணையின் போது என்னைத் துன்புறுத்தினார். அவருக்கு நான் சாபம் கொடுத்தேன். அதன் விளைவாக, மும்பையை பயங்கரவாதிகள் தாக்கியபோது, ஹேமந்த் கர்கரே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று சாத்வி பிரக்யா சிங் பேசி இருக்கின்றார்.

    பயங்கரவாதிகளிடம் இருந்து அப்பாவிப் பொதுமக்களைக் காப்பதற்காகப் போராடி உயிரை ஈந்த கர்கரேவைப் இந்திய அரசு பெருமைப்படுத்த வேண்டும். அதற்கு மாறாக, அவரை இகழ்ந்து பேசிய ஒருவரை, வேட்பாளராக நிறுத்தி இருப்பதோடு மட்டும் அல்லாமல், பிரதமர் மோடி அவரை இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என புகழ்ந்து பேசி இருப்பது, எங்களைப் போன்ற அரசுப் பணியாளர்களைப் பெரிதும் புண்படுத்தி இருக்கின்றது என அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். சாத்வி பிரக்யா சிங்கை வேட்பாளராக நிறுத்தக் கூடாது” என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநில முதல்வர் புபேஷ் பாகேல், “சாத்வி பிரக்யா சிங் எந்நேரமும் ஒரு கத்தியைக் கையில் வைத்து இருப்பவர்; பிலியாகர் என்ற இடத்தில், 2001 -ம் ஆண்டு சைலேந்திர தேவகன் என்ற இளைஞரின் நெஞ்சில் கத்தியால் குத்தியவர் பிரக்யா சிங் என, நேற்று ஒரு திடுக்கிடும் குற்றச்சாட்டைக் கூறி உள்ளார்.

    குற்றப்பின்னணி கொண்ட சாத்வி பிரக்யா சிங்கை வேட்பாளராக நிறுத்தி, அவர் இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என்று புகழ்ந்து உரைக்கின்ற பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுவது ஏமாற்று வேலை.

    நியூசிலாந்து மசூதியில் தாக்குதல் நடத்தி 50 பேர்களைக் கொன்ற வெள்ளை இனவெறி ஆகட்டும், இலங்கையில் தாக்குதல் நடத்திய ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆகட்டும், மாலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய சங் பரிவார் கும்பல் ஆகட்டும், பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும், அதை எதிர்த்துப் போராடுவதே பொதுமக்களின் கடமை.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MDMK #Vaiko #PMModi
    பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டவதாக இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். #KamalHaasan #Perarasu
    கன்னியாகுமரி:

    விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி, அஜித்குமார் நடித்த திருப்பதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. இவர் இன்று கன்னியாகுமரி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சினிமா உலகில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளேன். 9 படங்களை இயக்கி இருக்கிறேன். மலையாளத்தில் சாம்ராஜ்யம் 2 படத்தையும் இயக்கியுள்ளேன். ஜூன் மாதம் மேலும் 2 அல்லது 3 படங்களை இயக்க உள்ளேன்.

    ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க விருப்பம் உள்ளது. அந்த லட்சியம் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவர் மக்கள் சேவைக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும்.

    ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களின் மன நிலை மாறவேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவது தேசத்துக்கு செய்யும் துரோகம். இது நல்ல அரசியல் இல்லை. இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.


    பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டுகிறேன்.

    நானும் மக்கள் பிரச்சனைகளுக்காக நடந்த போராட்டங்களில் பங்கெடுத்து உள்ளேன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்சனைக்காக போராடியுள்ளேன். மீனவர்கள் பிரச்சனைக்காகவும் போராடுவேன்.

    கன்னியாகுமரியில் துறைமுகம் அமைவதால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்காகவும் போராடுவேன்.

    தேர்தல் நேரங்களில் மட்டும் அரசியல் கட்சிகள் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறுகிறது. அவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பின்பு விவசாயிகளுக்கு தேவையானவற்றை செய்பவர்களே உண்மையான அரசியல்வாதிகள். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் விவசாயிகளுக்கு நல்லது செய்ய வேண்டும்.

    தேர்தல் வாக்குறுதிகளில் இலவசம் அளிப்பது பற்றி கூறும்போது, அதனை தேர்தல் கமி‌ஷன் கண்டிக்க வேண்டும். ஓட்டுக்காக இலவசம் தருவதாக அறிவிப்பதும் லஞ்சம்தான் என்பதை உணர வேண்டும். மாதம் தோறும் வங்கியில் பணம் போடுகிறேன் என்று கூறுவதை தேர்தல் கமி‌ஷன் தடுக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் யார் அதிக பணம் கொடுத்தார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்த வெற்றி உண்மையான வெற்றியாக இருக்காது. எனக்கு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரும்போது, அப்போது எந்த கட்சி நல்ல கட்சியாக எனக்கு தோன்றுகிறதோ, அந்த கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன்.

    இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து சில நாடுகள் மட்டுமே கண்டனம் தெரிவித்து உள்ளன. இதனை உலக நாடுகள் அனைத்தும் கண்டிக்க வேண்டும்.

    ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு மதத்தினர் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க முடியாது. ஒரு மதத்தை இன்னொரு மதம் எதிர்ப்பதற்கும் உரிமை இல்லை.

    வேலூர் ஜெயிலில் இருக்கும் ராஜீவ் கொலை கைதிகளான நளினி, முருகன், பேரறிவாளன் ஆகியோரை 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தேன். அவர்கள் ஆயுள் கைதிகள் அனுபவிக்கும் தண்டனை காலத்தை விட அதிக தண்டனை அனுபவித்து விட்டார்கள்.

    இவர்களை விடுவிக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடப்பட்டது. இப்போது நடந்த பாரதிய ஜனதா ஆட்சியில் கூட அவர்கள் விடுவிக்கப்படாதது மர்மமாக உள்ளது. இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளும், கவர்னரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் முறையாக நடக்கவில்லை. பலரது வாக்குரிமை மறுக்கப்பட்டு உள்ளது.

    பெரும்பாலானவர்களுக்கு பூத் சிலிப் கூட வழங்கப்படவில்லை. இதில் தேர்தல் ஆணையம் முறையாக நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #Perarasu
    ×