search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Trisha"

    • திரிஷாவை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் திரிஷா.. திரிஷா என விண்ணை முட்டும் அளவுக்கு கோஷம் எழுப்பினர்.
    • சில ரசிகர்கள் உற்சாக மிகுதியில் நடிகை திரிஷாவை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தனர்.

    தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை திரிஷா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இன்னுமும் நடிகை திரிஷா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

    நடிகை திரிஷா தற்போது மலையாளம் மொழியில் தயாராகி வரும் ஐடென்டிட்டி என்ற பேய் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் டோமினோ தாமஸ் நடித்து வருகிறார். மேலும் நடிகர் வினய் நடித்து வருகிறார். அகில்பவுல் படத்தை இயக்குகிறார்.

    இதற்கான படப்பிடிப்பு ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த சிங்கம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்காக அந்த மில்லில் பல கோடி மதிப்பில் செட் அமைத்து நடிகை திரிஷா, நடிகர் டோவினோ தாமஸ் பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை 7 மணி அளவில் நடிகை திரிஷா பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இதை அறிந்து அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர். நடிகை திரிஷா.. திரிஷா.. என்று கோஷம் எழுப்பினர். அப்போது படப்பிடிப்பு குழுவினர் தயவு செய்து படப்பிடிப்புக்கு தொந்தரவு செய்யாமல் இங்கிருந்து கலைந்து சென்று விடுங்கள் என்று கூறினர்.

    ஆனால் ரசிகர்கள் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் திரிஷாவை பார்க்காமல் இங்கிருந்து கிளம்ப மாட்டோம் என்று திரிஷா கேரவனை சூழ்ந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இது குறித்து நடிகை திரிஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் கேரவனில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை நோக்கி கையை அசைத்தார்.

    திரிஷாவை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் திரிஷா.. திரிஷா என விண்ணை முட்டும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். பலர் தங்கள் செல்போனில் நடிகை திரிஷாவை படம் எடுத்துக் கொண்டனர். சில ரசிகர்கள் உற்சாக மிகுதியில் நடிகை திரிஷாவை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தனர். சிறிது நேரம் ரசிகர்களை பார்த்து கையசைத்த நடிகை திரிஷா மீண்டும் கேரவனுக்குள் சென்று விட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இன்றும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.


    • மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகது.
    • காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை தேவை.

    நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்டபோதிலும் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளன.

    இந்நிலையில், இயக்குனர் பேரரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்!

    அவர்களின் பேச்சில் விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது!

    சமீபத்தில் ஒரு அரசியல்வாதி குறிப்பிட்ட நடிகைகளின் பெயரைச் சொல்லி அயிட்டம் என்று சொன்னது,

    ஏ.வி.ராஜூ என்பவர் இப்பொழுது திரிஷா அவர்களின் பெயரை குறிப்பிட்டு கூவத்தூர் கூத்தில் சம்பந்தப்படுத்தியது இதெல்லாம் அருவருக்க செயலாகும்!

    ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசி அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகது.

    இந்த மாதிரியான அநாகரீக செயலுக்கு பாதிக்கபட்டவர்கள் புகார் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லாமல், காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இப்படிப்பட்ட அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×