search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tweet"

    • சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்; இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்.
    • எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    அதன்படி அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்துக்கு வருவது போல், தேர்தல் காலங்களில் தமிழ்நாட்டில் வட்டமடிக்கும் பிரதமர் மோடி அவர்களே...

    குஜராத் மாடல்- சவுக்கிதார் வேடங்கள் போலி என அம்பலமானதால், கேரண்டி கார்டுடன் #Elections2024-க்கு வந்திருக்கும் பிரதமர் மோடி அவர்களே...

    இதோ இந்த கேரண்டிகளைத் தருவீர்களா?

    * சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்;

    இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு நீக்கப்படும்

    * எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்படும்

    * தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு

    * ஒருபோதும் இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிக்கப்படாது

    * மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றம்; கல்விக்கடன்கள் ரத்து

    * ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் ரூ.400

    * வேளாண் விளைபொருட்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

    * தாறுமாறாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்பேன்; செஸ், சர் சார்ஜ் என்ற வரிக் கொள்ளை அறவே நீக்கம்

    * அமலாக்கத்துறை - வருமான வரித்துறை - சி.பி.ஐ ஆகியவை சுதந்திரமாகச் செயல்படும்

    * மாநிலங்களை வஞ்சிக்காத நியாயமான நிதிப் பகிர்வு தருவேன்

    * வணிகர்களையும் சிறு குறு தொழில்களையும் வதைக்கும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம்

    * கும்பல் வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்

    * வியாபம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை பா.ஜ.க.வின் ஊழல்கள் குறித்த வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடுவேன்.

    * கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரத்தை அனுமதிப்பேன்

    * சீனா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பேன்

    * தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்பேன்; தாக்குதலை நிறுத்துவேன்

    * அக்னிபத் திட்டத்தை ரத்து செய்வேன்

    * வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து உடனடி ஒதுக்கீடு

    * சென்னை மெட்ரோ பணிகளுக்கு ஒப்புக்கொண்டபடி ஒன்றிய அரசின் நிதி விடுவிப்பு

    * தமிழை இந்தியாவின் அலுவல் மொழியாக, திருக்குறளை தேசிய நூலாக, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கச் சட்டம் இயற்றுவேன்

    * குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறுவேன்; சிறுபான்மை மக்களை இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்த மாட்டேன்

    - என இதற்கெல்லாம் நீங்கள் கேரண்டி அளிக்கத் தயாரா?

    இல்லையென்றால் உங்கள் கேரண்டி என்பது, ஊழல் கறை படிந்தவர்களுக்குக் காவிக்கறை பூசும் 'Made in BJP' வாஷிங் மெஷினுக்கு மட்டுமே என்பது மீண்டும் ஒருமுறை அம்பலமாகும்!

    #பதில்_சொல்லுங்க_மோடி!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மயங்கிய நியைில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியானது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியீடு.

    மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாலை விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், மம்தா பானர்ஜியின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    நெற்றியில் ரத்த காயத்துடன் மயங்கிய நியைில் இருக்கும் மம்தாவின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், மம்தா விரைவில் குணம் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட சாலை விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்தேன்.

    இந்த கடினமான நேரத்தில் என் எண்ணங்கள் அவருடன் இருக்கும். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில், " மேற்கு வங்க முதல்வரின் சாலை விபத்து பற்றிய செய்தி அதிர்ச்சியாக உள்ளது. அவள் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்" என்றார்.

    • பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும்.
    • உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை.

    40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்து எளிமையாக பரப்புரை செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை,

    நமது சாதனைகள் - நிதிநிலை அறிவிப்புகள் - ஒன்றிய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும்

    'இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல்' என இனி....

    இந்தியாவைக் காக்க #INDIA-வை வெற்றி பெறச் செய்வோம்!

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
    • ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது நம் நாட்டில் அடிக்கடி நடக்கிறது.

    மஹிந்திரா குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான ஆனந்த் மஹிரந்திரா சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர். தனது 10.8 மில்லியன் பின்தொடர்பவர்களுக்காக டிரெண்டிங் தலைப்புகள் மற்றும் ஈர்க்கும் கதைகள் குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

    இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் பிப்லியா ரசோடா கிராமத்தில் உள்ள ராஜ்கர் என்ற கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட 5 வயது சிறுமியின் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

    மேலும் அந்த பதிவில், " உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு நடவடிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த சம்பவம் அதிக கவனம் பெறவில்லை என்றாலும் கூட, சிறுமியின் பெற்றோருக்கு, அவர்களின் உலகமே இருண்டதாகி இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:- இந்த சம்பவம் சில்க்யாரா சுரங்கப்பாதை மீட்பு போன்ற கவனத்தை ஈர்த்திருக்காது. ஆனால் இந்த குழந்தையின் பெற்றோருக்கு, அவர்களின் உலகமே மறைந்திருக்கும்.

    பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. சில பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். மீண்டும் ஒருமுறை, நமது நாட்டின் பேரிடர் மீட்புப் படைகளுக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.

    நம் ராணுவ வீரர்களைப் போலவே, அவர்களும் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க பகலும், இரவுமாக போராடுகிறார்கள்" என்றார்.

    இருப்பினும், இன்று அதிகாலை மீட்கப்பட்ட சிறுமி சில மணிநேரங்களுக்குப் பிறகு, போபாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை வயலில் திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் மஹி என்கிற 5 வயது சிறுமி விழுந்தார். அவர் 22 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார். பின்னர், தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிர முயற்சிக்கு பிறகு இன்று அதிகாலை 2.45 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டு, பச்சோரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியில் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

    பின்னர் 70 கிமீ தொலைவில் உள்ள போபாலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணியளவில் உயிரிழந்தார் என்று தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் கிரண் வாடியா தெரிவித்தார்.

    பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குழந்தையின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    • "பாரத்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று தொடர் வலியுறுத்தல்.
    • ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

    இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா பெயருக்கு மாற்றாக "பாரத்" என்ற பெயரை சூட்ட வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் ஏராளமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக தேசிய அரசியலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலத்தரப்பட்டோரும் இது குறித்த தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் நாட்டின் பெயரை மாற்றுவது தொடர்பாக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

    இந்த விவகாரம் குறித்து, தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (முன்பு டுவிட்டர்) பதிவில், "இந்தியாவின் கருத்துக்கணிப்பு - ஆடைகளை மாற்றிக் கொள்ளும் கோமாளி, தேர்தல் நாடகத்திற்காக நாட்டின் பெயரையும் மாற்ற நினைப்பவரின் பெயரை குறிப்பிடுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    நாட்டின் பெயரை மாற்றும் விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜின் இந்த எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறிய சர்ச்சைக்குரிய பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் கடந்த 5-ந்தேதி வெளியிட்டு இருந்தார். மேலும் மாநிலம் முழுவதும் பிரசாரத்தின் போதும் இந்த கருத்தை அவர் தெரிவித்து வந்தார்.

    இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர், ஆதித்யநாத்தின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரியை பதிவை நீக்குமாறு டுவிட்டர் நிறுவனத்துக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல் வழங்கியது. இதை ஏற்றுக்கொண்ட டுவிட்டர் நிறுவனம், ஆதித்யநாத்தின் பதிவை நேற்று நீக்கியது.

    முன்னதாக தனது பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வந்த யோகி ஆதித்யநாத்துக்கு 3 நாட்கள் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. #YogiAdiyanath #Twitter #MuslimLeague 
    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள வழக்கத்துக்கு மாறான ஒரு பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. #MajesticGirLion #GirLion #Moditweet
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்து வருகிறார்.

    அவ்வகையில், குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனவிலங்கு காப்பகத்தில் ஒரு சிங்கம் மரத்தின்மீது ஏறி நிற்கும் புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ள மோடி, ‘கம்பீரமான கிர் சிங்கம், அருமையான புகைப்படம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.



    புகைப்படக்கலையிலும் ஆர்வம் கொண்டவரான பிரதமர் மோடி, கிர் பகுதியில் உள்ள வனச்சரகர் திபக் வாகர் எடுத்த இந்த புகைப்படத்தை கலையார்வத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாக சிலர் கருதும் அதேவேளையில், பல எதிர்க்கட்சிகள் தன்னை பாராளுமன்ற தேர்தலில் முற்றுகையிட்டுள்ள நிலையில் ‘எதையும் வெல்லும் குஜராத் சிங்கமாக நான் இருப்பேன்’ என்பதை மறைமுகமாக அவர் உணர்த்தியுள்ளதாகவே பலரும் கருதுகின்றனர். #MajesticGirLion #GirLion  #Moditweet
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் தவறான ட்விட்களுக்கு புகார் அளிக்க புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. #Twitter



    ட்விட்டரில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ட்விட்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. தற்சமயம் ட்விட்களை புகார் அளிக்கும் போது புதிய மெனு திறக்கும். இதில் பயனர்கள் ட்விட் பற்றி அதிகளவு விவரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு பிரச்சனையை விரிவாக புரிந்து கொள்ள முடியும்.

    புதிய வசதியை ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. பிரச்சனைக்குரிய ட்விட்களை மிகவேகமாக கண்டறிவதற்காக இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இன்று முதல் பயனர் எதிர்கொள்ளும் ட்விட்கள் பற்றி அதிகளவு விவரங்களை தெரிவிக்க முடியும்.



    இத்துடன் ரிப்போர்ட் பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை தெரிவிக்க முடியும். முன்னதாக பயனர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க ட்விட்டர் அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

    இவற்றில் பலரது குற்றச்சாட்டுகள் டாக்சிங் ஆகும். டாக்சிங் என்பது ஒருவரின் அனுமதியின்றி அவரது விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்தாகும். இது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் தீங்கு ஏற்படுத்த காரணமாக அமையும். 

    ட்விட்டரில் கருத்து சுதந்திரம் மற்றும் கேலி கிண்டல்களை வித்தியாசப்படுத்துவதில் ட்விட்டர் சிரமப்படுகிறது. அந்த வகையில் புதிய அம்சம் மூலம் அவற்றை எதிர்கொள்ள ட்விட்டர் முயன்று வருகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் விளம்பரப்படுத்த ஐபோன் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. #Samsung



    சாம்சங் மற்றும் ஐபோன்களிடை அவ்வப்போது நடைபெறும் அக்கப்போர் இம்முறை ட்விட்டரில் ஆரம்பித்து இருக்கிறது. ஆப்பிள் ஐபோன் மூலம் ஏற்கனவே சில சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில், மற்றொரு சாம்சங் அக்கவுண்ட் ஐபோன் மூலம் ட்விட் பதிவிடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    கடந்த முறை சாம்சங் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்த சாம்சங் இம்முறை எதுபோன்ற நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    சாம்சங் மொபைல் நைஜீரிய அக்கவுண்ட் ட்விட்டர் கணக்கில் சாம்சங் ஃபிளாக்ஷிப் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான விளம்பர வீடியோ ஐபோன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பிரபல யூடியூபரான MKBHD தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பதிவிட்டு இருக்கிறார். 



    விவகாரம் ட்விட்டரில் சூடுப்பிடித்த நிலையில், சாம்சங் மொபைல் நைஜீரிய ட்விட்டர் அக்கவுண்ட் சில மணி நேரங்களுக்கு டி-ஆக்டிவேட் செய்யப்பட்டு பின் மீண்டும் ஆக்டிவேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட சாம்சங் அதிகாரிகள் தான் காரணம் என தெரிகிறது.

    சமீபத்தில் ரஷ்யாவுக்கான சாம்சங் விளம்பர தூதர் செனியா சோப்சாக் பொதுவெளியில் ஐபோன் X பயன்படுத்தியதாக சாம்சங் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. பிரபல தொலைகாட்சி தொகுப்பாளரான செனியா சோப்சாக் ஐபோன் X பயன்படுத்திய வீடியோ தொலைகாட்சியில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து சாம்சங் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டது. #Samsung #iPhone
    ட்விட்டர் சமூக வலைதளத்தில் நீங்கள் பதிவிட்ட பழைய ட்விட்களை ஒரே சமயத்தில் அழிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். #Twitter #socialmedia



    ட்விட்டர் துவங்கப்பட்ட காலத்தில், இந்த வலைதளம் பிரபலங்கள் மட்டும் பயன்படுத்தும் தளமாக இருக்கும் போல என்ற கருத்து பரவலாக பரவியிருந்தது. 

    பின் படிப்படியாக ட்விட்டர் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், ட்விட்டர் பயன்பாடுகளில் அந்நிறறுவனம் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.

    ட்விட்டர் பயன்படுத்த துவங்கிய காலக்கட்டத்தில் ஒரே சமயத்தில் தொடர்ந்து அதிகப்படியான ட்விட்களை பதிவிட்டு, தற்சமயம் அவை அர்த்தமற்றதாக உணர்கிறீர்களா?

    ட்விட்டரில் நீங்கள் பதிவிட்ட ட்விட்களை ஒரே சமயத்தில் அழிப்பது சிரமமான காரியமாக தெரிகிறதா, கவலை வேண்டாம். நீங்கள் பதிவிட்ட ட்விட்களை இனியும் மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என முடிவு செய்துள்ளீர்களா?

    அப்படியெனில் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான். சமூக வலைதளங்களில் இருந்து சற்று தள்ளியிருக்கவோ அல்லது சில காலம் தனிமைப்படுத்திக் கொள்ள நினைக்கிறீர்களா. அப்படியெனில் உங்களது ட்விட்களை ஒரே சமயத்தில் அழிக்க பல்வேறு சேவைகள் இருக்கின்றன.

    ட்விட்டர் டைம்லைனில் 3200 ட்விட்கள் மட்டுமே தெரியும் என்றாலும், உங்களது பழைய ட்விட்களை சர்ச் கன்சோலில் இருந்து தேடினால் அவை கிடைக்கும். 



    பழைய ட்விட்களை பேக்கப் செய்வது

    உங்களது அனைத்து ட்விட்களையும் அழிக்க நினைக்கும் பட்சத்தில், அவற்றை டவுன்லோடு செய்து பேக்கப் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் டவுன்லோடு செய்யும் சிப் ஃபைல் அனைத்து ட்விட்கள் மற்றும் ரீட்விட்களையும் கொண்டிருக்கும்.

    உங்களின் ட்விட்டர் ஆர்ச்சிவ் ஃபைலை டவுன்லோடு செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்:

    1) முதலில் ப்ரோஃபைல் படத்தை கிளிக் செய்து செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்களை இயக்க வேண்டும்

    2) கீழ் புறம் ஸ்கிரால் செய்து பக்கத்தின் கீழ் பகுதியில் இருக்கும் Request your archive ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

    3) இனி உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும், அதில் உங்களது விவரங்கள் இருக்கும் டவுன்லோடு செய்யக்கூடிய ஃபைலாக இடம்பெற்றிருக்கும்



    ட்விட்டெலீட் (TweetDelete) சேவையை கொண்டு உங்களின் அனைத்து ட்விட்களையும் அழிக்க முடியும். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் பதிவிடும் ட்விட்களை குறிப்பிட்ட காலத்திற்கு பின் தானாக அழிந்து போக செய்ய முடியும். எனினும் மூன்றாம் தரப்பு சேவை என்பதால் சமீபத்தில் பதிவிட்ட 3200 ட்விட்களை மட்டுமே அழிக்க முடியும். 

    உங்களது எதிர்கால ட்விட்களை அழிக்க குறைந்த பட்சம்: ஒரு வாரம், இரண்டு வாரங்கள், ஒரு மாதம், இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள், ஒரு வருடம் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ட்விட்டெலீட் உங்களின் அக்கவுன்ட்டை ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை சரிபார்க்கும். ட்விட்டர் செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷன்கள் சென்று இதற்கான அனுமதியை மாற்றியமைக்கலாம்.



    ட்விட்டர்இரேசர் (TwitterEraser) கொண்டு உங்களது 3200 ட்விட்களையும் அழிக்க முடியும். எனினும் 6.99 டாலர்கள் செலுத்தி அப்கிரேடு செய்யும் போது அதிகப்படியான ட்விட்களை அழிக்கலாம்.

    உங்களது அனைத்து ட்விட்டர் ஆர்ச்சிவ்களையும் ட்விட்டெலீட்டில் அப்லோடு செய்ய வேண்டும். பின் சர்ச் ஃபில்ட்டர் மூலம் ட்விட்களை தேதி, ஹேஷ்டேக் மற்றும் குறியீட்டு சொல் கொண்டு தேடலாம். 

    பல்வேறு ட்விட்களை அழிக்கும் போது, அந்த மாற்றங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட மாட்டாது. ட்விட்டரில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ட்விட்களை மட்டுமே கோரிக்கை விடுக்க முடியும், இந்த எண்ணி்க்கை ஆயிரங்களை கடக்கும் பட்சத்தில் அதற்கான நேரம் அதிகமாகும். 

    ட்விட்களை அழிக்கும் போது அவற்றை பொது மக்கள் தேடும் போது கிடைக்காமல் போகும். எனினும் நீங்கள் அழிக்கும் ட்விட்களை ட்விட்டர் சர்வெர்களில் இருக்கும். சட்ட ரீதியிலான தேவைகளுக்காக அவை தேவைப்படலாம் என்ற காரணத்திற்காக ட்விட்டர் உங்களது ட்விட்களை பேக்கப் வைத்திருக்கும். #Twitter #socialmedia
    சுரண்டப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, துன்புறுத்தப்பட்ட மக்களுடன் வரிசையில் நான் கடைசியாக நிற்கிறேன் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi
    புதுடெல்லி:

    ‘காங்கிரஸ் முஸ்லிம்களின் கட்சி’ என்று அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக சர்ச்சை எழுந்து உள்ளது.

    இந்த சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று அவர் டுவிட்டரில் உருக்கமான கருத்து வெளியிட்டார்.

    அதில் அவர், ‘‘சுரண்டப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, துன்புறுத்தப்பட்ட மக்களுடன் வரிசையில் நான் கடைசியாக நிற்கிறேன். அவர்களுடைய மதமோ, ஜாதியோ, நம்பிக்கையோ எனக்கு பெரிது அல்ல. வலியில் உள்ளவர்களை அரவணைத்துக்கொள்ள தேடுகிறேன். வெறுப்புணர்வையும், அச்சத்தையும் நான் அழிக்கிறேன். வாழும் எல்லா உயிர்களையும் நான் நேசிக்கிறேன். நான்தான் காங்கிரஸ்’’ என கூறி உள்ளார்.

    ராகுல் காந்தியின் இந்தக் கருத்து குறித்து பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘‘அவர் (முஸ்லிம் கட்சி காங்கிரஸ் என கூறிய) தனது கருத்தை மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. மறுக்கவில்லை என்பதைவிட அவரது டுவிட்டர் கருத்தை ஒப்புக்கொள்ளுதல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்று குறிப்பிட்டார். 
    ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்தை விட அவரது தமிழ் ட்வீட்டுகள் அனைவரையும் கவர்ந்த நிலையில், அவருக்கு சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ள பிறந்த நாள் வாழ்த்து வியக்க வைத்துள்ளது.

    சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இம்முறை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அணியில் இணைந்தது முதலே தமிழில் அவ்வப்போது ட்விட் செய்து ரசிகர்களை அதிர வைத்தார். ஒவ்வொரு போட்டி முடிவிலும் அவர் தமிழில் என்ன பதிவிட உள்ளார் என பலர் எதிர்பார்க்க தொடங்கினர்.

    ஹர்பஜன் சிங்கின் ஆட்டத்தை விட அவரது தமிழ் ட்வீட்டுகள் அனைவரையும் கவர்ந்தது. தனது தமிழ் ரசிகர் ஒருவரின் மூலமே அவர் தமிழில் ட்வீட் செய்து வந்தாலும், அவரது இந்த செயல் தமிழ் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஹர்பஜன் சிங்குக்கு சச்சின் டெண்டுல்கர் சிறப்பு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



    ‘விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்’ என சச்சின் ட்வீட் செய்துள்ளார். சச்சின் தெரிவித்த பிறந்தநாளை விட அவர் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது இன்றைய இணையத்தை வைரலாக்கியுள்ளது.
    ×