என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "influencer"

    • அழகு சாதனம் பொருட்கள் விற்பனை செய்யும் இணைய தளம் சொந்தமானது எனத் தெரிவித்துள்ளார்.
    • சரியான விவரங்கள் அளிக்கப்படவில்லை. மோசடி வழக்கில் உள்ள மற்றொருவருடன் தொடர்புகள் இருந்தது கண்டுபிடிப்பு.

    பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை, சந்தீபா விர்க் என்ற இன்ஸ்டா பிரபலத்தை கைது செய்துள்ளனர். 12 லட்சம் பின்தொடர்பவர்களை (Followers) வைத்திருக்கும் சந்தீபா விர்க் 40 கோடி ரூபாய் அளவில் பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டின்படி மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் மொகாலியில் உள்ள காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டள்ளது. சந்தீபா விர்க் மோசடி வழியில் அசையா சொத்துகளை வாங்கியதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை அமலாக்கத்துறை டெல்லி மற்றும் மும்பையில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பணமோசடி வழக்கு தொடர்பாக சோதனை நடத்தியது, அப்போது இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    FDA அங்கீகாரம் பெற்ற அழக சாதன பொருட்களை விற்பனை செய்வதாக கூறும் hyboocare.com இணைய தளம் தனக்கு சொந்தமானது எனக் கூறிக்கொண்டு வந்துள்ளார். எனினும், அதில் தெரிவிக்கப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும், இணைய தளம் பயனாளர்களுக்கு குறைபாடு உள்ளதாகவும், பணம் செலுத்தும் கேட்-வே அடிக்கடி பிரச்சினையை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் தொடர்பு எண் செயல்பாட்டில் இல்லை. நிறுவனம் குறித்து வெளிப்படைத்தன்மையான விவரங்கள் இல்லாமல் இருந்துள்ளது. நிதி மோசடி செய்வதற்காக உண்மையில்லாத வணிக செயல்பாட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

    இதுபோக, தற்போது செயல்படாத ரிலையன்ஸ் கேப்பிட்டல் லிமிடெட் நிறுவுனத்தின் முன்னாள் டைரக்டர் அங்காரை நடராஜன் சேதுராமனுடன் தொடர்புகள் இருந்ததாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சேதராமனின் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது, தனிப்பட்ட ஆதாயத்திற்கான நிதியை மாற்றியது, சட்டவிரோத வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அங்காரை நடராஜன் சேதுராமன் 40 கோடி ரூபாயை தனிநபர் ஆதாயத்திற்காக நிதியை பயன்படுத்தியதாக நிறுவனம் குற்றம்சட்டியிருந்தது.

    • இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் சிம்ப்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
    • இப்படத்தை நீரோ கில்பர்ட் இயக்கியுள்ளார்.

    ஒரு தம்பதியினர் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்க வைப்பதற்காக இலங்கையின் பழைய திகில் கதைகளை ஆய்வு செய்ய பயணம் மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் பயணம் ஒரு காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் பொழுது பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது. உள்ளூர் குடும்பத்தால் மீட்கப்பட்ட அவர்கள்; உண்மையான திகில் மனித இயல்பில் இருளில் தான் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

    இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் சிம்ப்சன் கதாநாயகியாகவும், மால்டாவை சார்ந்த டேன் ஹாலண்ட் நாயகனாகவும் இலங்கை நடிகர்களான துளிகா மரப்பனா, பிரியங்கா அமர்சிங், வனிதா சேனாதிராஜா, தேவ அலோசியஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்

    இயக்கம் -

    நீரோ கில்பர்ட்

    ஒளிப்பதிவு -

    சிவசாந்தகுமார்

    எடிட்டிங் -

    சுஜித் ஜெயக்குமார்

    இம் மூவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள்..., இன்றைய UK பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.

    எக்ஸிகியூட்டிவ் ப்ரொடியூசர் -

    ஞானதாஸ் காசிநாதர்

    நிர்வாக முகாமையாளராக: செல்லையா சுதர்ஷன்

    கலை: V.S. சிந்து

    கலர் கிரேடிங்:

    பிபின் ஆண்டனி

    இணை தயாரிப்பாளர்கள் :-

    ராபின் ஏ டவுன் சென்ட் - UK

    தயாரிப்பு -

    எட்டெர்னல் ஐகான் பிலிம்ஸ் மற்றும்

    நியூ பிச் நிறுவனங்கள்.

    முதன்மை தயாரிப்பு:

    ஹரிசங்கர்

    ஜனார்த்தனம் - இந்தியர்,

    விதுசன் ஆண்டனி- Jaffna

    முதன்மை தயாரிப்பாளர்களுள் ஒருவரான ஹரிசங்கர் ஜனார்த்தனம்

    பிரபல ஒளிப்பதிவாளர் திரு.ஜி. பி கிருஷ்ணாவிடம் உதவி ஒளிப்பதிவாளராகவும், இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.

    தற்பொழுது இப்படத்தில் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது இப்படத்தில் மலையக மற்றும் ஈழத்தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பங்கேற்றுள்ளது என்பது மகிழ்ச்சிகரமானது.

    • ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாலிவுட் நடிகர் மவுனம் காத்ததாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.
    • கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்ட நிலையில் வீடியோவை நீக்கி மன்னிப்பு கேட்டார்.

    இந்திய ராணுவம் ஆபரேஷசன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டபோது, வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட பெண் இஸ்டா பிரபலத்தை கொல்கத்தா போலீசார், அரியானாவின் குருகிராமில் கைது செய்தனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாலிவுட் நடிகர்கள் மவுனம் காத்தனர் என ஷர்மிஷ்தா பனோலி என இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டியிருந்தார்.

    இந்த வீடியோவை பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பனோலியை டிரோல் செய்ததுடன், மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்துகள் பதிவிட்டனர். வீடியோவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, இன்ஸ்டாபக்கத்தில் இருநது நீக்கினார். வீடியோ வெளியிட்டதற்கான மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

    புனே சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவர். இவருக்கு எதிராக கொல்கத்தாவில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஷர்மிஷ்தா பனோலிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

    இதனால் தனது குடும்பத்துடன் தலைமறைவானார். பின்னர் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்தது. இந்த நிலையில் நேற்றிரவு குர்கிராமில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாத்தித்து வந்தார்.
    • எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என இதன் மூலம் தெரிவித்து விட்டேன்

    ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்தவர் ஃபெர்னாண்டோ பெரஸ் அல்கபா (வயது 41). அமெரிக்காவின் மியாமியில் சில காலம் தங்கியிருந்த இவர், பின்னர் ஸ்பெயினில் செட்டில் ஆனார். இவர் கிரிப்டோ கரன்சி குறித்த தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லுநராக இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிட்டு லட்சக்கணக்கில் சம்பாத்தித்து வந்தார்.

    தனக்கு கிடைக்கும் வருமானங்களை கொண்டு அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவரது ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையில் அவ்வப்போது வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இன்ஸ்டாகிராமில் அவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.

    இந்நிலையில், அர்ஜென்டினாவிற்கு சென்ற அல்கபா, ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்தார். ஜூலை 19 அன்று அந்த வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. இதனால் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டடு, அவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரத்தின் இன்ஜெனிரோ பட்ஜ் எனும் இடத்தில் உள்ள ஒரு ஓடைக்கு அருகே மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அனாதையாக கிடந்த ஒரு சிகப்பு சூட்கேஸ் பெட்டியை கண்டனர்.

    இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அப்பெட்டியை பார்த்தபோது கண்டதுண்டமாக வெட்டப்பட்ட ஒரு உடல் இருந்தது.

    அந்த உடலில் இருந்த பச்சை குத்தப்பட்டிருந்த அடையாளங்களை கொண்டு இது அல்கபாவின் உடல் என கண்டுபிடித்தனர். பிரேத பரிசோதனையில் அல்கபா துப்பாக்கியால் சுடப்பட்ட பின், அவர் உடலை துண்டு துண்டாக வெட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.

    கிரிப்டோ கரன்சியின் தற்போதைய வீழ்ச்சியினால் அல்கபா பொருளாதார சிக்கல்களை சந்தித்து வந்ததாக அவரின் சகோதரர் ரொடால்ஃபோ தெரிவித்தார்.

    அல்கபா எழுதியிருக்கும் கடைசி குறிப்பு ஒன்றில், "கிரிப்டோ முதலீடுகளில் நான் கணிசமாக பணம் இழந்துள்ளேன். அர்ஜென்டினாவில் உள்ள வன்முறை கும்பலான பர்ரா ப்ராவா குழுவினரிடமிருந்து கடன் வாங்கியுள்ளேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு யார் பொறுப்பு என இதன் மூலம் தெரிவித்து விட்டேன்" என தெரிவித்திருக்கிறார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். 

    • திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.
    • அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையிலும், 48 மணி நேரத்திற்குள் உயிரிழப்பு.

    பிரேசில் நாட்டின் சமூக வலைத்தள பிரபலமாக திகழ்ந்தவர் 19 வயதான மரியா சோபியா வலிம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய உடற்பயிற்சி, தோல் தொடர்பான அழகு குறிப்புகள் போன்றவற்றை பதிவு செய்து பிரபலமானார். மேலும், தனக்கு ஆர்வமுள்ள உயர்தர பிராண்ட்கள் குறித்தும் வெளிப்படுத்துவார். அவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

    19 வயதேயான மரியா சோபியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்ச மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு கல்லீரல் வழங்க கொடையாளர் சம்மதம் தெரிவித்து அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்திற்குள் அவர் மரணம் அடைந்துள்ளார்.

    சோபியா மரணம் அடைந்த தகவலை சியாராவில் உள்ள காசியாவின் மேயராக இருக்கும் அவரது தந்தை உறுதிப்படுத்தியுள்ளார். 19 வயதிலேயே மரணம் அடைந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் அவரை பின்தொடர்ந்தவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • மாமா எர்த் 2016 ஆம் ஆண்டில் காஸல் அலாக் மற்றும் வருண் தம்பதிகள் இருவராலும் தொடங்கப்பட்ட ஒரு ஸ்கின் கேர் நிறுவனமாகும்,
    • மாமா எர்த் பொருட்கள் நீங்கள் உபயோகித்து கொண்டு இருந்தால் அதை உடனே குப்பையில் எறிந்து விடுங்கள்" என ஒரு பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.

    மாமா எர்த் 2016 ஆம் ஆண்டில் காஸல் அலாக் மற்றும் வருண் தம்பதிகள் இருவராலும் தொடங்கப்பட்ட ஒரு ஸ்கின் கேர் நிறுவனமாகும், மார்கெட்டில் உள்ள பெரும்பாலும் ஸ்கின் கேர் பொருட்களில் நிறைய கெமிகல்களும் , நச்சு தன்மை அதிகம் உடைய வேதி பொருட்களையும் கலக்கின்றனர்.

    இதனால் அந்த பொருட்களை நாம் உபயோகிக்கும் பொழுது நமக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதை உடைக்க வேண்டும் என்பதற்காக முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயார் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான் மாமா எர்த்.

    மாமா எர்த்தின் வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து இன்று பிரபல நிறுவனமாக திகழ்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் அதிதி என்பவர்," மாமா எர்த் பொருட்கள் நீங்கள் உபயோகித்து கொண்டு இருந்தால் அதை உடனே குப்பையில் எறிந்து விடுங்கள்" என ஒரு பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.

    இந்த பதிவு எக்ஸ் பக்கத்தில் வைரலாகி, பத்து லட்சத்திற்கும் அதிக பார்வைகளை பெற்றது. இப்பதிவிற்கு மாமா எர்த்தின் சி.இ.ஓ. ஆன காசல், "வணக்கம் அதிதி , காலையில் இவ்வளவு வெறுப்புணர்வோடு இருபீங்கன்னு நான் நினைக்கவில்லை, உங்களுக்கு எங்களோட பொருட்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் கூறுங்கள் அதை சரி செய்து தருகிறோம்" என்றார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் அதிதி, "எப்படி நியாயமான கருத்து பதிவை நீங்கள் ஏற்க மறுக்கின்றீர்கள், இது எனக்கு மட்டும் நடந்தது அல்ல மக்களில் நிறைய பேர் இதை உணர்கிறார்கள், உங்கள் பொருட்களில் தரம் இல்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார். இவர் செய்த பதிவிற்கு மக்கள் அதற்கு ஆதரிக்கும் வகையில்  அதிகளவில் மாமா எர்த் பொருட்களின் மீது குற்றம் சாட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

    சாசி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஐடி செல் மற்றும் ஆர்.சி.பி. சோக்கர் கூட்டமைப்பின் சி.இ.ஓ. என்பது குறிப்பிடத்தக்கது

    ×