search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்துகள்"

    • மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • சம்பவம் குறித்து ஜப்பான் சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    டோக்கியோ:

    ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு கோபயாஷி பார்மாசூட்டிகல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெனிகோஜி கொலஸ்ட் ஹெல்ப் உள்ளிட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கிலோ பெனிகோஜி மருந்துகள் உற்பத்தி செய்துள்ளன.

    இதற்கிடையே இந்த நிறுவனத்தின் மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து கடந்த 22-ந்தேதி இந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது. எனினும் கடந்த ஒரு வாரத்தில் பெனிகோஜி மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் இறந்துள்ளனர். மேலும் 100 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    • யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும்.
    • யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும்.

    யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும். இந்த யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

    * உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலை ஏற்படும்.

    * யூரிக் அமிலம் அதிகரிப்பதன் பொதுவான அறிகுறிகளில் கீல்வாதம் முக்கியமான ஒன்று.

    * இது மூட்டுகளில் வலி, சிவந்து போவது மற்றும் விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு மூட்டுவலி.

    * யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.

    * மேலும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல் போன்றவையும் யூரிக் அமில அதிகரிப்பின் விளைவுகளாக இருக்கலாம். மருத்துவர்கள் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை கணக்கிட சில சோதனைகளை செய்கின்றனர்.

    * யூரிக் அமில அளவின் அடிப்படையில் மருந்துகள், உணவு முறை, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்

    * யூரிக் அமில அதிகரிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைக்கு மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது.

    • ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இலவசமாக பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரை,மருந்துகள் இலவசமாக. வழங்கப்பட்டது.

    திண்டிவனம் நகரம் லயன் சங்கம் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் வெண்மணி, பட்டணம் ஆத்தூர் ஊராட்சி,ஊரல் ஊராட்சி ஆகியவை இணைந்து திண்டிவனம் அடுத்த ஊரல் கிராமத்தில் இலவச பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் சிறப்பு மருத்துவம்,எலும்பு முறிவு சிகிச்சை, மருத்துவம், பொது மருத்துவம் ,முகப்பேர் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், சிறுநீரகவியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், கண் சிகிச்சை மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம் சர்க்கரை நோய் மருத்துவம் ஆகியவை இலவசமாக பரிசோதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாத்திரை,மருந்துகள் இலவசமாக. வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 500 பேர் கலந்து கொண்டனர். இதில் இதற்கான ஏற்பாடுகளை ஊரல், பட்டணம், வெண்மணியாத்தூர், ஒன்றிய கவுன்சிலர் ஊரல் சிலம்பரசன், ஊரல் ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை ஆகியோர் செய்து இருந்தனர்.லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நன்மை தரும் பூச்சி, நுண்ணுயிர்களை அவை அழிக்கும்.
    • இலைப்புள்ளி, இலை கருகல், இலையுறை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்.

    ஈரோடு, 

    வேளாண் பயிர்கள் உற்பத்தியில் பயிர்களை தாக்கி சேதத்தை ஏற்படுத்தும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சி கொல்லி மருந்துகள், பூஞ்சாண கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது.

    ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல், உடல் நல பாதிப்பு, உண்ணக்கூடிய பயிர்களை நச்சு கொண்டதாக மாற்றும். எனவே மனிதர்களுக்கு மட்டுமின்றி, கால்நடைகளுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்துவதுடன், நன்மை தரும் பூச்சி, நுண்ணுயிர்களை அவை அழிக்கும்.

    எனவே, பூச்சி கொல்லி மருந்தால், பயிர்களுக்கான உற்பத்தி செலவு அதிகரிக்கும். எனவே உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேளாண் துறையின் கீழ் செயல்படும் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் மூலம், உற்பத்தி செய்யப்படும்.

    எதிரி உயிரி பூஞ்சாணமான டிரைகோடெர்மா விரிடி பயிர்களில் ஏற்படும் வேர் அழுகல், கிழங்கு அழுகல் போன்ற மண்ணின் மூலம் பரவு நோய்களையும், எதிரி உயிரி பாக்டீரியாவான சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் மண்ணின் மூலம் பரவும் நோய்கள் மட்டுமின்றி, இலைப்புள்ளி, இலை கருகல், இலையுறை அழுகல் நோய்களை கட்டுப்படுத்தும்.

    மேலும் பல தொழில் நுட்பங்களை பயன்படுத்து–வதால், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் அனைத்தும், பூச்சி கொல்லி மருந்துகளை ஒப்பிடும்போது, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்ட விவசாயிகள், அருகே உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இந்த தகவலை வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • மேற்கு தெரு ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் திருமண்டபத்தில் இலவச மருத்துவமுகாமை நடத்துகின்றனர்
    • காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

     தஞ்சாவூர்:

    கலைஞரின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அனு மருத்துவமனை சிவகுமார் எம்.டி., டி.எம். மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி கவுன்சிலர் எஸ்.சி. மேத்தா ஆகியோர் இணைந்து நாளை 3-ந்தேதி தஞ்சாவூர் மேற்கு தெரு ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மன் திருமண்டபத்தில் இலவச மருத்துவமுகாமை நடத்துகின்றனர்.இந்த மருத்துவமுகாம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

    மருத்துவ முகாமில் பயனாளிகளுக்கு சுகாதார சோதனைகள்,ஈசிஜி, ரத்த குளுக்கோஸ் சோதனை உள்ளிட்ட சோதனைகளும், இலவச மருந்துகள் வழங்கப்பட உள்ளன.

    இந்த இலவச மருத்துவ சேவையில் அனைவரும் பங்கேற்று பயன் அடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

    • மருந்துகள் இருப்பு மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்து கேட்டறிந்தார்.
    • மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களையும் கேட்டறிந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, அங்கு வரும் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்து, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு செய்தார்.

    குறிப்பாக நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவம னையில் ஆய்வு செய்த அவர், மருந்துகள் இருப்பு மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் கேட்டறிந்தார்.

    மேலும், நாகூர் தர்கா அலங்காரவாசலில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு அங்கிருந்த பதிவேட்டை ஆய்வு செய்தார். மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்களையும் கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது நாகை நகர்மன்ற தலைவர்மாரிமுத்து, துணைத் தலைவர்செந்தில் குமார், நகர்மன்ற உறுப்பி னர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குவதற்கான மருந்துகள்.
    • செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணி திட்டம் மற்றும் சீர்காழி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய கால்நடைகளுக்கு செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கீழவெளி கிராமம், அட்டக்குளம் பகுதி மற்றும் சாந்தபுத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.எஸ்.சங்கர் தலைமை வகித்தார். வசந்த்குமார் பட்டேல், டாக்டர். வி.மனோகரன் முன்னிலை வகித்தனர்.

    சுபம் வித்யாமந்திர் பள்ளி தாளாளர் ஜி.சுதேஷ் ஜெயின் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் மயிலாடுதுறை கால்நடை பராமரிப்புத் துறையை சார்ந்த 3 கால்நடை உதவி மருத்துவர், 2 கால்நடை ஆய்வாளர், 4 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், டாக்டர். ராமபிரபா தலைமையில் மருத்துவக் குழு கலந்து கொண்டனர்.

    இதில் 50-க்கும் மேற்ப ட்ட பசு மாடுகளை உரிமையா ளர்கள் அழைத்து வந்தனர்.

    இம் முகாமில் கலந்து கொண்ட அனைத்து கால்நடைகளுக்கும் குடல் புழு நீக்குவதற்கான மருந்துகள், சத்தூட்ட மருந்துகள், செயற்கை முறையிலான கருவூட்டல் நிகழ்ச்சி மேலும் இலவசமாக அனைத்து மருந்துகளும் கொடுத்தனர்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி முன்னாள் தலைவர்கள் சுடர் எஸ்.கல்யாணசுந்தரம், சுசீந்திரன், சோலை, சி.பி.பிரசாந்த், சுபம் பள்ளியின் நிர்வாக அலுவலர் ஜி.அன்பழகன், உடற்கல்வி ஆசிரியர் ச.ஹரிஹரன், 30-க்கும் மேற்பட்ட தன்னார்வ நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள், கால்நடை உரிமையாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டி னை நாட்டு நல பணித்திட்ட அலுவலர் எஸ்.முரளிதரன் செய்திருந்தார்.

    • மா, பலா, முந்திரி, கொய்யா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்து போன மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும்.
    • பசுமை குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தென்மேற்கு பருவமழை காலத்தில் கனமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து தோட்டக்கலை பயிர்களை விவசாயிகள் பாதுகாப்பது குறித்து தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    கத்தரி, வெங்காயம், வெண்டை, மிளகாய் மற்றும் கொடி வகை காய்கறி பயிர்களுக்கு நல்ல வடிகால் வசதி, மழைநீர் தேங்கா வண்ணம் அமைக்க வேண்டும். முன் தடுப்பு நடவடிக்கையாக டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் சூேடாமோனஸ் பூஞ்சாண உயிரியியல் கட்டுபாடு மருந்துகளை மண் மூலமாகவும், இலை வழியாகவும் தெளிக்க வேண்டும். மா, பலா, முந்திரி, கொய்யா போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்து போன மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். தேவையான அளவில் வடிகால் வசதி செய்திட வேண்டும்.

    கனமழை காற்று முடிந்த உடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர்பகுதியை சுற்றி மண் நணைக்க வேண்டும். மிளகு செடிகளில் நிழலினை ஒழுங்குப்படுத்த கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். கொக்கோவில் அதிகப்படியான இலைத்த ளைகளை கவாத்து செய்ய வேண்டும். முதிர்ந்த பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.

    பசுமை குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்களை் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்ற உட்புகாமல் பாதுகாக்க வேண்டும். கிழந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும்.

    அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்பு கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.வருடாந்திர பயிரான வாழை காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும்.

    நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். வடிகால் அமைக்க வேண்டும். உபரி நீர் வடிந்த பின் நடவு, விதைவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கலாம். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுக்க வேண்டும். இதேப்போல் இதர தோட்டக்கலை பயிர்களில் அனைத்த வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும்.மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர், உதவி தோட்டகலை அலுவ லர்களை ெதாடர்பு கொள்ள வேண்டும்.

    தஞ்சை, பூதலூர் தோட்ட க்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வியை 9943422198 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு, திருவோணம் உதவி இயக்குனர் சாந்திபிரியாவை 9488945801 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதேப்போல் அம்மாபே ட்டை, திருவையாறு, பாபநாசம் தோட்டகலை உதவி இயக்குனர் பரிமே லழகனை 9445257303, கும்பகோணம், திருவிடை மருதூர், திருப்பனந்தாள் உதவி இயக்குனர் அனுசி யாவை 9842569664, பட்டுக்கோட்டை, மதுக்கூர் இயக்குனர் ராகிணியை 9597059469, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உதவி இயக்குனர் வள்ளி யம்மாளை 8903431728 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறுவன் மோகித்தை போலவே இரண்டாவது குழந்தையான விதர்சனாவிற்கும் சர்க்கரை நோய் உள்ளது.
    • டைப்-1 இன்சுலின் மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மனைவி பெயர் வித்ய ஜோதி . இவர்களுக்கு மோகித் என்ற 7 வயது மகனும் , விதர்சனா என்ற 4 வயது மகளும் உள்ளார்கள். மோகித் பிறந்த 4 வருடங்களில் இரவு நேரங்களில் அதிக அளவில் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தவுடன் பெற்றோர்களுக்கு சந்தேகம் ஏற்படவே மோகித்தை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் டைப் 1 என சொல்லக்கூடிய சர்க்கரை நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , வாழ்நாள் முழுவதும் தினமும் 4 முறை இன்சுலின் ஊசி செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

    சிறுவன் மோகித்தை போலவே இரண்டாவது குழந்தையான விதர்சனாவிற்கும் இதே சர்க்கரை நோய் உள்ளது. இவர்கள் இருவருக்கும் தினமும் 4 முறை ஊசி செலுத்த வேண்டும். இவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சர்க்கரை நோய் வகைக்கு அரசு மருத்துவமனையில் முறையான மருந்துகள் கிடைக்காததால் தனியார் மருத்துவமனையில் இருந்து மருந்துகளை வாங்கி வருகின்றனர்.

    ஒரு குழந்தைக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் என்ற வீதம் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து மாதம் ஊசிக்கு மட்டும் 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது என்கின்றனர் பெற்றோர்கள்.

    பனியன் கம்பெனியில் கிடைக்கும் வருவாயில் பாதிக்கும் மேல் குழந்தைகளின் மருந்து செலவிற்கே சென்று விடுகிறது. மீதமுள்ள பணத்தை கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்க முடியாத சூழலில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருந்து வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தோம். ஆனால் டைப் 1 இன்சுலின் மருந்து அரசு மருத்துவமனைகளில் கிடைப்பதில்லை. டைப்-2 இன்சுலின் மருந்து மட்டுமே தரப்படுகிறது. எனவே குழந்தை பாதிக்கப்பட்டிருக்கும் சர்க்கரை நோய் வகைக்கு ஏற்ற மருந்துகளை எந்த தடையும் இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளிலும் டைப்-1 இன்சுலின் மருந்து கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 

    ×