search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Abdominal pain"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.
    • வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

    பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், கருப்பைக்கட்டி என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. வெள்ளைப்படுதல் பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய்.

    அறிகுறிகள்:

    · பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்

    · வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்.

    · வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.

    · சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்

    · வெள்ளைப்படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.

    · இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல். நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்

    · பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப்படுதல் இருக்கும்.

    · ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.

    · அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

    · தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.

    · சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.

    · அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.

    · அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.

    இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப்பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

    வெள்ளைபடுதலை தவிர்க்க

    · உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    · பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    · உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.

    · நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    வீட்டுமருத்துவம்

    * கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்து இரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

    * யானை நெருஞ்சில் சமூலத்தை எடுத்து நீர்விட்டு நன்கு அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதில் மோர் 200 மிலி. சேர்த்து நன்கு கலக்கி தினமும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

    * அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.

    * ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப் பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.

    வெள்ளைப்படுதலுக்கு வர்மப் பரிகார மருந்து

    நன்னாரி வேர் - 10 கிராம்

    அதிமதுரம் - 5 கிராம்

    காய்ந்த திராட்சை - 5 கிராம்

    மணத்தக்காளி விதை - 5 கிராம்

    சீரகம் - 1 ஸ்பூன்

    சோம்பு - 1 ஸ்பூன்

    காய்ந்த செம்பருத்திப் பூ - 5 கிராம்

    காய்ந்த ரோஜா இதழ் - 5 கிராம்

    சின்ன வெங்காயம் - 3

    நன்னாரி வேரை எடுத்து சிதைத்து அதன் உள்ளே உள்ள வேரை நீக்கி சதையை மட்டும் எடுத்து, அதனுடன் அதிமதுரம், மணத்தக்காளி விதை, காய்ந்த செம்பருத்திப் பூ, காய்ந்த ரோ ஜா இதழ், சீரகம், சோம்பு இவற்றை சேர்த்து நன்றாக இடித்து, அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த திராட்சை சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி அரை கப் அளவாக வந்தவுடன் வடிகட்டி தினமும் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் அடியோடு நீங்கும்.

    · சிறுநீர் வெளியேறும்போது சுண்டி சுண்டி இழுப்பது மாறிவிடும்.

    · மாதவிலக்குக் கோளாறு உள்ள பெண்களுக்கு அதிக குருதிப் போக்கை மாற்றும், ஒழுங்கற்ற குருதிப்போக்கை சரி செய்யும்.

    · ரத்தத்தை சுத்தப்படுத்தும். கண்களைச் சுற்றி உள்ள கருப்பு, கழுத்திலுள்ள கருப்பு, இடுப்புப்பகுதியில் உள்ள கருப்பு போன்றவற்றை மாற்றும்.

    · உடலிலுள்ள தேவையற்ற உப்புகளை நீக்கி முகத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

    · மன உளைச்சல் நீங்கும். கை கால் குடைச்சல் நீங்கும்.

    சிறுநீர் தண்ணீர்போல் வெளியேறும்வரை, இந்த கஷாயத்தை அருந்தலாம். இந்த கஷாயம் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும். தேவைப்பட்டால் கஷாயத்துடன் தேன் கலந்து அருந்தலாம்.

    உணவு முறை

    · அதிக காரம், புளிப்பு, உப்பு இவற்றை குறைக்க வேண்டும்.

    · உணவில் வெண்ணெய், பால், மோர் போன்ற உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    · உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    · தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    * சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    * முக்குளிக் கீரைச் சாறில் தான்றிக்காய் தோலை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    * துயிலிக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை தீரும்.

    * சாணாக்கிக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

    மேற்கண்ட மருந்துகளை முறையாக செய்து அருந்தினால், வெள்ளைப்படுதல்  பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

    • அடி வயிற்றில் வலி அல்லது அழுத்தம் ஏற்படலாம்.
    • திடீரென சளி, இருமல் ஏற்படவும் செய்யலாம்.

    ரத்தத்தில் கலந்திருக்கும் கழிவுப்பொருட்களை வடிகட்டுவது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, சிறுநீரை உற்பத்தி செய்வது போன்ற முக்கியமான பணிகளை சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீர் பாதை வழியாக பாக்டீரியாக்கள் சிறுநீரகத்திற்குள் நுழையும்போது சிறுநீரக தொற்று ஏற்படுகிறது. உலக அளவில் லட்சக்கணக்கானோர் சிறுநீரக நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக நோய்த்தொற்றை கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் சிறுநீரகங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவதை தடுக்கலாம். ஒருசில அறிகுறிகள் மூலம் சிறுநீரக நோய்த்தொற்றை கண்டறிந்துவிடலாம். இடுப்புக்கு சற்று மேலேயும், அடி முதுகு பகுதியிலும் தொடர்ந்து வலியை உணர்ந்தால் அது சிறுநீரக  ஒன்றாக இருக்கலாம்.

    நிற வேறுபாடு:

    வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தாலோ, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்பட்டாலோ, சிறுநீரின் நிறம் மாறுபட்டாலோ, ஏதேனும் வாசனை வெளிப்பட்டாலோ கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. அது சிறுநீரக தொற்றுக்கான அறிகுறிகளாகக்கூட இருக்கலாம்.

    காய்ச்சல்:

    ஒருவேளை சிறுநீரக தொற்று ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து மீள்வதற்கு சிறுநீரகங்கள் போராடும்போது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் வெளிப்படலாம். திடீரென சளி, இருமல் ஏற்படவும் செய்யலாம். அவை சிறுநீரக தொற்றுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

    சோர்வு:

    இரவில் நன்றாக தூங்கி எழுந்த பிறகும் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது. சிறுநீரகங்கள் நோய்த்தொற்றை தடுக்க அதிக நேரம் போராடுவதன் வெளிப்பாடாகவோ, அறிகுறியாகவோ அந்த சோர்வு அமையலாம்.

    சிறுநீரில் ரத்தம்:

    சிறுநீருடன் கலந்து ரத்தமும் வெளியேறினால் அது சிறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பதற்கான சமிக்ஞையாக இருக்கலாம். சிறுநீரக நோய்த்தொற்று மட்டுமின்றி வேறு ஏதேனும் கடுமையான உடல்நல பிரச்சினைக்கான அறிகுறியாக இருக்கலாம். உடனே பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.

    வயிற்று வலி:

    சிறுநீரகத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருப்பதன் வெளிப்பாடாக அடி வயிற்றில் வலி அல்லது அழுத்தம் ஏற்படலாம். ஆனால் அது வயிற்றுவலி போன்று இருக்காது. வயிற்றில் அத்தகைய வலியை உணர்ந்தால் சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    வலி:

    சிறுநீரக நோய்த்தொற்றுகள் நெருக்கமான தருணங்களை கூட சங்கடமானதாக மாற்றும். தாம்பத்தியத்தின்போது தொடர்ந்து வலியை அனுபவித்தால் அது சிறுநீரக நோய்த்தொற்றுக்கான அறிகுறியா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.

    • மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடம் உண்டு.
    • எலும்பை முறித்ததுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படும்.

    மழைக்கால மாதங்களில் மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடம் உண்டு. கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்கு பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்குவுக்கான அறிகுறிகள். எலும்பை முறித்ததுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது, இந்த நோயை இனம்காட்டும் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். உடலில் அரிப்பும் ஏற்படும், சிவப்பு புள்ளிகள் தோன்றும்.

    பெரும்பாலானோருக்கு 7-ம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்க சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.

    பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களால் பரவும் டெங்கு வைரசானது, ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.

    கைக்குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஏற்படுமானால் மிகவும் கவனத்துடன் விரைந்து உரிய சிகிச்சை பெற வேண்டும். டெங்கு நோய்க்கென்று தனியாக சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை. டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்தஅழுத்தம், மூச்சிளைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த ஆபத்தான பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க வேண்டியது முக்கியம்.

    • கிருஷ்ணமூர்த்தி கடந்த சில நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
    • வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி :

    தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த வர் கிருஷ்ணமூர்த்தி (வயது 44). விவசாயி, இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சம்பவத் தன்று தனது விவசாய நிலத்துக்குச் சென்றவர் அங்கு இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்து போனார். இதுகுறித்து அவரது தம்பி கோவிந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும்.
    • யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும்.

    யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும். இந்த யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

    * உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலை ஏற்படும்.

    * யூரிக் அமிலம் அதிகரிப்பதன் பொதுவான அறிகுறிகளில் கீல்வாதம் முக்கியமான ஒன்று.

    * இது மூட்டுகளில் வலி, சிவந்து போவது மற்றும் விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு மூட்டுவலி.

    * யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.

    * மேலும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல் போன்றவையும் யூரிக் அமில அதிகரிப்பின் விளைவுகளாக இருக்கலாம். மருத்துவர்கள் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை கணக்கிட சில சோதனைகளை செய்கின்றனர்.

    * யூரிக் அமில அளவின் அடிப்படையில் மருந்துகள், உணவு முறை, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்

    * யூரிக் அமில அதிகரிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைக்கு மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது.

    • சத்யாவுக்கு அடிக்கடி வந்த வயிற்று வலி அவதியுற்று வந்தார்.
    • வயிற்று வலி தாங்காமல் வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம், செஞ்சி அருகே உள்ள வேம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 39). இவரது மனைவி சத்யா (35). இவருக்கு அடிக்கடி வந்த வயிற்று வலி அவதியுற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலி தாங்காமல் வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விக்கிரவாண்டி அருகே பூச்சி மருந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வி.மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். டிராக்டர் டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று அதிக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலத்தில் அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயக்கமாகி கிடந்தார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அன்பழகனை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாக்டர் நோயின் தன்மையை அறிய சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
    • கழிவறையில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் சாவக்காட்டில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு தனது கணவரை அழைத்து கொண்டு சிகிச்சை பெற சென்றார்.

    அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர், நோயின் தன்மையை அறிய சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து அந்த பெண் சிறுநீர் சேகரிப்பதற்காக ஆஸ்பத்திரியில் இருந்த கழிவறைக்கு சென்றார்.

    அப்போது கழிவறையில் வைத்து அந்த பெண்ணுக்கு பிரசவமாகி உள்ளது. கழிவறையில் வைத்தே அவருக்கு குழந்தை பிறந்தது. வயிற்று வலிக்காக சிகிச்சை பெற அழைத்து வந்த தனது மனைவி, குழந்தை பெற்ற சம்பவம் அவரை சிகிச்சைக்காக அழைத்து வந்த கணவரை அதிர்ச்சியடைய செய்தது.

    கழிவறையில் பிரசவித்தது குறித்து அந்த பெண்ணிடம் டாக்டர்கள் கேட்டனர். அப்போது, தான் கர்ப்பமாக இருந்தது தனக்கே தெரியாது என்று அந்த பெண் தெரிவித்தார். அவர் கூறியதை கேட்ட டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் ஆச்சரியமடைந்தனர்.

    இதையடுத்து அந்த பெண் மற்றும் அவருக்கு பிறந்த குழந்தை ஆகிய இருவரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பிறந்த குழந்தைக்கு தொற்று ஏதும் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டி இருப்பதால் கூடுதல் பரிசோதனைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

    ஆனால் அந்த பெண்ணின் கணவர், தனது மனைவி மற்றும் அவருக்கு பிறந்த குழந்தையை சாவக் காட்டில் உள்ள வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    • நீலவேணி நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • வயிற்று வலியால் துடித்த நீலவேணி வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சின்ன சேமக்கோட்டையை சேர்ந்தவர் வேலு செங்கல்சூலை வியாபாரி. இவரது மகள் நீலவேணி (வயது 24) எம்.எஸ்.சி பட்டதாரியான இவர் நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடந்த 7ந் தேதி காலை 6 மணி அளவில் மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் துடித்த நீலவேணி வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்துள்ளார். இதனால் மயங்கிய நிலையில் இருந்த அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • எழிலரசிக்கு(29) வயிற்று வலி ஏற்பட்டதால், அவரை வானூர் அரசு மருத்துவமனைக்கு அவரின் கணவர் செல்வகுமார் அழைத்து சென்றார்.
    • எழிலரசிக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    விழுப்புரம்:

    வானூர் அடுத்த தொள்ளாமூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 33) டிரைவர். இவர மனைவி எழிலரசி (29). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு எழில ரசிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து எழிலரசியை வானூர் அரசு மருத்துவமனைக்கு செல்வ குமார் அழைத்து சென்றார். அங்கிருந்து திண்டி னம் அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்கான அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையில் எழிலரசி கருவுற்று இருப்ப தாகவும், அதே சமயத்தில் குழந்தை கருப்பைக்கு செல்லும் குழாயில் வளர்வதால் வலி உள்ளதை கண்டறிந்தனர். இதனை அடுத்து எழிலரசியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.எழிலரசிக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் முடிவெடுத்து செல்வ குமாரிடம் கூறினார்கள். இதற்கு அவர் ஒத்துக் கொள்ளவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போதுஎழிலரசிக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் வானூர் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை.
    • அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா இறந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கோபுராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்.

    இவரது மனைவி சித்ரா (வயது 36). இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

    பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி குணமாகவில்லை.

    இதனால் மனமுடைந்த சித்ரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார்.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா இறந்தார்.

    இதுகுறித்து சித்ராவின் தாயார் பூங்கோதை ( 66) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வயிற்று வலியின் காரணமாக கதவை சாத்திவிட்டு வினோதினி படுத்து உறங்கியுள்ளார்.
    • கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வினோதினி தூக்கில் தொங்கினார்.

    கடலூர்:

    மேல் புவனகிரியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி வினோதினி (வயது 27). இவர்களுக்கு ரோகேஷ் (8), கோகுல் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை கடுமையான வயிற்று வலியின் காரணமாக தன்னுடைய வீட்டில் உள்ள கதவை சாத்திவிட்டு வினோதினி படுத்து உறங்கியுள்ளார். வயிற்று வலி அதிகமானதால், வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கூலி வேலைக்கு சென்ற முருகவேல் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயற்சித்தார். ஆனால், கதவை திறக்க முடியவில்லை. அக்கம் பக்கம் இருந்தவர்களை உதவிக்கு அழைத்த முருகவேல், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வினோதினி தூக்கில் தொங்கினார்.

    இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வினோதினியை மீட்டு புவனகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை பரிசோதித்த டாக்டர், வினோதினி இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×