search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளைப்படுதல்"

    • பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான்.
    • வெள்ளைப்படுதல் என்பது, தொற்று பிரச்சினை.

    பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான். ஆனால் சில நேரங்களில் அது ஏதாவது ஒருசில பிரச்சினையின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். எது இயல்பாக ஏற்படும் வெள்ளைப்படுதல், எது நோய்க்கான அறிகுறி என்று கண்டறிவது சற்று சிரமம்தான்.

    வெள்ளைப்படுதல் என்பது, தொற்று பிரச்னை. இது பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, வெயில் காலத்தில் இதன் தீவிரம் அதிகமாக இருக்கலாம். இந்த பிரச்சினை குறித்து பெரும்பாலானவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. பெண்கள் வெள்ளைப்படுதல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    பொதுவாக பெண்களின் பிறப்புறுப்பு செல் சுவர்களில், நிறமற்ற, லேசான பிசுபிசுப்புத்தன்மை கொண்ட திரவம் இயற்கையாக சுரக்கும். அமிலத்தன்மை நிறைந்த அந்த திரவம் கிருமிகள் மற்றும் தொற்றுகள் ஏற்படாமல் பிறப்புறுப்பை பாதுகாக்கும். பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற தொற்றுக்கிருமிகள் பிறப்புறுப்பை பாதித்தால், அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாற்றமடையும்.

    நிறமற்ற நிலையில் வெளிப்படும் திரவம் அதன்பிறகு வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் வெளிப்படும். இப்படி, தொற்று காரணமாக ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு, முறையாகச் சிகிச்சை எடுக்காவிட்டால், கர்ப்பப்பையிலும் இனப்பெருக்க உறுப்பிலும் பிரச்சினை ஏற்படலாம்.

    பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் சிறுநீர்ப்பாதையும் பிறப்புறுப்பும் மிக நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு பகுதியில் ஏற்படும் தொற்று மற்ற இடத்துக்கு வேகமாகப் பரவும். எனவே, வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

    தொற்று பாதிப்பு எதுவும் இல்லாமலும்கூட பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். இது அடுத்த சில தினங்களில் சரியாகிவிடும். பயப்படத் தேவையில்லை. பாதிப்பில்லாத இந்த வெள்ளைப்படுதல், பெரும்பாலும் பருவமடையும் காலத்துக்கு சில நாட்களுக்கு முன், மாதவிடாய்க்கு முந்தைய அல்லது பிந்தைய இரு நாள்கள் மற்றும் கர்ப்பமான நேரங்களில் மட்டுமே ஏற்படும்.

    வெள்ளைப்படுதலுக்குக் காரணமான, பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மிகமுக்கியமான சில தொற்றுகள் குறித்தும், அது ஏற்படுத்தும் அறிகுறிகள் குறித்தும் பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.

    அறிகுறிகள்

    * சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்

    * பிறப்புறுப்பில் ஒவ்வாமை ஏற்பட்டு, அந்த பகுதி முழுவதும் சிவந்து காணப்படுவது

    * பிறப்புறுப்பில் புண் அல்லது கொப்புளங்கள்

    * உடலுறவின்போது பிறப்புறுப்பில் தீவிர வலி

    தடுக்கும் வழிகள்

    * பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வதன்மூலம், வெள்ளைப்படுதலை தடுக்கலாம். பெண்கள் மாதவிடாய் காலத்திலும், உடலுறுவுக்குப் பிறகும் பிறப்புறுப்பு சுகாதாரத்தில் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்.

    * உள்ளாடைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கவேண்டும். பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை தேர்வு செய்வது நல்லது. நைலான் வகை உள்ளாடைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

    * காசநோய், மலேரியா, மஞ்சள் காமாலை இருந்தாலும், பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டு வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

    * நீண்ட நாள் கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படலாம். எனவே கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

    * மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொள்வதாலும்கூட வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படலாம்.

    • ஒருசில பெண்கள் தொடர்ச்சியாக இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
    • இது ஒரு சில பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் தொற்றினால் ஏற்படலாம்.

    பெண்கள் பூப்பு எய்திய காலம் தொடங்கி அவர்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை இரும்புசத்து குறைவு ஆகும். இச்சத்து குறைவினால் உடல் சோர்வு, தலைவலி, மூச்சுவிட சிரமம், உடல் வீக்கம், முடி உதிர்வு, முறையற்ற மாதவிடாய் போன்ற பல குறிகுணங்கள் ஏற்படும். பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கீரை வகைகள், கறிவேப்பிலை, நெல்லிக்காய், அத்திப்பழம், முழு உளுந்து, கருப்பட்டி, ஈரல் வகைகள் இவைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக பருவம் அடைந்த பெண்களுக்கு காணப்படும் பொதுவான பிரச்சினை வெள்ளைப்படுதல் ஆகும். மாதவிடாய்க்கு முன்னரும், கருவுறும் காலத்திலும் வெள்ளைப்படுதல் என்பது இயல்பான ஒரு நிகழ்வு. ஆனால் ஒருசில பெண்கள் தொடர்ச்சியாக இதனால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு சில பூஞ்சை மற்றும் பாக்டீரியாவின் தொற்றினால் ஏற்படலாம். ஏனெனில் வெள்ளைப்படுதல் அதிகரிக்கும்போது பிறப்புறுப்பு தொற்று நாய் ஏற்பட வழிவகுக்கும்.

    இதனால் இடுப்பு வலி, சோர்வு, சிறுநீர் பாதை தொற்று, அடிவயிற்றில் வலி, அதிகரித்த உடல் சூடு போன்றவை ஏற்படும். குமரி என்று அழைக்கப்படும் கற்றாழை வெள்ளைப்படுதலுக்கு மிகச்சிறந்த மருந்து ஆகும். கற்றாழையின் தோல்சீவி அதன் சதைப்பகுதியை தண்ணீரில் நன்றாக கழுவி பழச்சாறு போல அரைத்து குடித்து வரலாம். மதிய உணவில் மோர் சேர்த்து வரலாம்.

    மேலும் வெந்தயக் கீரையையோ அல்லது வெந்தயத்தினையோ உணவில் சேர்த்து வரலாம்.வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை பருகலாம். சித்த மருத்துவமனைகளில் கிடைக்கும் திரிபலா சூரணத்தினை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரினைக் கொண்டு பிறப்புறுப்பினை கழுவி வரலாம். இளநீர் உடலை குளிர்ச்சியாக்கும் செய்கை உடையது. எனவே வெள்ளைப்படுதல் தொல்லை இருப்போர் இளநீர் பருகலாம்.

    வாரத்தில் 2 நாட்கள் தவறாது எண்ணெய் முழுக்கு செய்தல், பச்சை மிளகாய் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்த்தல், அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல் சூட்டினை தவிர்க்க காட்டனிலான விரிப்பினை பயன்படுத்துதல் போன்றவை உடல் சூட்டினை கட்டுப்படுத்தி வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.

    இருப்பினும் கசிவுகள் நிறம்மாறி ஏற்பட்டாலோ, அதிகப்படியான துர்நாற்ற கசிவுகள் ஏற்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனைப்படி முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். சித்த மருத்துவத்தில் இதற்கான முறையான மருந்துகள் உள்ளன. மேலும் மாதவிடாய் காலத்தில் மாதுளை, ஆப்பிள் போன்ற பழவகைகள், உளுந்து களி, எள் உருண்டை, வெந்தயக் களி போன்ற சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.
    • கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும்.

    இயல்பாக எல்லா மகளிருக்கும் பிறப்பு உறுப்பு வறட்சி ஆகாமல் இருக்க, சிறிதளவு வெண்மை நிறக்கசிவு வெளிப்படும். இதில் லேக்டிக் அமிலம் இருப்பதால் அது தொற்றுகளிலிருந்து பிறப்பு உறுப்பை பாதுகாக்கிறது. உடலுறவுக்கு முன்பும், உடலுறவின் போதும், சினை முட்டை வெளிப்படும் காலங்களிலும் வெண்கசிவு சற்று அதிகமாக காணப்படுவது இயற்கையான ஒன்றாகும்.

    சினைப்பையில் இருந்து சினை முட்டை வெளியாகி, கருப்பைக்கு வரும் காலத்திலும், மாத விலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பும், பின்பும், கர்ப்ப காலத்திலும் வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும். தாம்பத்திய உறவின் போது, பெண்களின் உணர்ச்சி உச்சம் அடையும் நிலையில் சுரப்பு அதிகப்படும்.

    ஆனால், கசிவின் அளவு அதிகரித்தும், நிறம் மாறியும், நாற்றத்துடனும் காணப்படுதல், பிறப்புறுப்பில் ஊறல், முதுகுவலி போன்றவை சேர்ந்து காணப்பட்டால், அது பெண்களின் பிறப்புறுப்பு நோய்களை காட்டுவதாகும்.நிறம், வாசனை, அளவு போன்றவை மாறுபடுவது முதல் அறிகுறி. பிறப்புறுப்பில் அரிப்பும், உள்ளாடை நனையும் அளவிற்கும், கால்களில் வழியும் அளவிற்கு இருந்தால் அது உடனடியாக கவனிக்கத் தகுந்த அறிகுறியாகும்.

    சாதாரண நிலையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். ஆபத்தான நோய்களின் அறிகுறியாகவும் வெள்ளைப்படுதல் ஏற்படலாம். அதனால், தொடக்கத்திலே வெள்ளைப்படுதலுக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கு சிகிச்சை பெற வேண்டும். நவீன சிகிச்சைகளும், மருந்துகளும் இதற்காக உள்ளன.

    வெண்கசிவு அதிகரித்தலுக்கான பிற காரணங்கள்: கருப்பை மற்றும் உள் உறுப்புகளில் ஏற்படும் தொற்று நோய்கள் (Pelvic Inflammatory Diseases), சுகாதாரமற்ற கழிவறைகளை உபயோகித்தல், உடலுறவின் மூலம் பரவும் நோய்கள் (Sexually Transmitted Diseases - syphilis and gonorrhoea), பிறப்புறுப்பில் ஏற்படும் பாக்டீரியா (Bacterial vaginosis), மற்றும் ஈஸ்ட் தொற்றுகள் (Candidiasis, Trichomonas vaginalis), கருப்பை கழுத்து உஷ்ணம் (Cervicitis), நெடுநாட்களாக கருத்தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களை எடுக்காமல் இருப்பது, கருப்பை கழுத்து புற்றுநோய் (Cervicalcancer). இதுபோன்று பல காரணங்களால் வெண்கசிவு அதிகரித்து, நிறம் மாறி, நாற்றத்துடன் காணப்படும்.

    வெள்ளைப்படுதலுக்கான சித்த மருத்துவத் தீர்வுகள்:

    1) கீழாநெல்லி சூரணம் 1 முதல் 2 கிராம் எடுத்து வெந்நீர் அல்லது மோரில் கலந்து காலை, மாலை இருவேளை குடிக்க வேண்டும்,

    2) வெண் பூசணிக்காயின் தோலை நீக்கிவிட்டு அதன் சதையை சிறிதளவு நீர்விட்டு அரைத்து குடிக்கவும். அல்லது சோற்றுக்கற்றாழை ஜெல்லை 7 முறை தண்ணீரில் கழுவி மோரில் இஞ்சி சேர்த்து, நன்றாக கலக்கி குடிக்க வேண்டும்,

    3) ஓரிதழ் தாமரை சூரணம் ஒரு கிராம் வீதம் காலை, இரவு பாலில் குடித்து வரவேண்டும்,

    4) திரிபலா சூரணம் ஒரு கிராம், படிகார பற்பம் 100 மி.கி., சிலாசத்து பற்பம் 100 மி.கி. காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின்சாப்பிட வேண்டும்,

    5) வெண் பூசணி லேகியம் 1 முதல் 2 கிராம் காலை, இரவு இருவேளை சாப்பிட வேண்டும், 6) படிகார நீர் வைத்து பிறப்புறுப்பை கழுவ வேண்டும்,

    7) நீங்கள் உட்காரும் அளவுள்ள பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் வெதுவெதுப்பான வெந்நீர் எடுத்துக்கொண்டு அதில் திரிபலா சூரணம் சிறிதளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதை ஆங்கிலத்தில் சிட்ஸ் பாத் (Sitz Bath) என்பார்கள்.

    சித்த மருத்துவ    நிபுணர் டாக்டர் ஒய். ஆர். மானக்சா, எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • இந்த கீரை தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.
    • பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒரே கீரை இதுதான்

    தாய்க்கு அருவிபோல் பால்சுரக்க.. அம்மான் பச்சரிசி கீரை உதவுகிறது. இதற்கு 'சித்திரப் பாலாடை' என இன்னொரு பெயரும் உண்டு.

    துவர்ப்பு கலந்த இனிப்புச் சுவை கொண்ட இந்த கீரையின் முழுத் தாவரமும் மருந்தாக பயன்படக்கூடியது. சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகளும் உண்டு. இதன் விதைகள் தோற்றத்திலும், சுவையிலும் அரிசிகுருணை போலிருப்பதால் பச்சரிசி கீரை என்றும் அம்மான் பச்சரிசி என்றும் அழைக்கப்படுகிறது.

    இதன் இலைகள், பூக்கள், வேர், விதை என அனைத்து பாகமும் மருத்துவக்குணம் கொண்டது. இது ஒரு கீரை வகையை சேர்ந்தது. பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒரே கீரை இதுதான். காரணம் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. மேலும், எந்த தொற்றுக் கிருமிகளையும் அண்ட விடாது.

    இதன் இலைகளை நீரில் கலந்து மிதமான தீயில் கொதிக்கவைத்து அதனை அருந்த, கொடிய தொற்றுநோய்களும் விலகும். இதன் பூக்களை மைய அரைத்து அல்லது பூக்களை நேரடியாக பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சிபருகிவர தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனை காலை மாலை என இரண்டு வேளை பனங்கற்கண்டு சேர்த்து அருந்துவதால் உடலுக்கு நல்ல பலமும் தெம்பும் கிடைக்கும்.

    இந்த அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு மைய அரைத்து மோருடன் கலந்து குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்த் தொந்தரவுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.

    அம்மான் பச்சரிசி ஆணிக் கால் நோய்க்கு நல்ல மருந்தாகிறது. மேலும், பாத வெடிப்பு, உதட்டில் ஏற்படும் வெடிப்புகள், நிறமாற்றத்திற்கும் இதனை பயன்படுத்த சிறந்த நிவாரணம் கிடைக்கும். வாய்ப்புண்கள் மறையும்.

    காலையில் வெதுவெதுப்பான நீர் அரை டம்ளர் எடுத்து அரை டீஸ்பூன் அளவு கலந்து குடித்துவந்தால் துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல் குணமாகும்.

    இதனுடன் தூதுவளை இலைகளையும் சேர்த்து துவையல் செய்து உண்ண உடல் பலம் பெரும்.பிறந்த குழந்தையை தாய்ப்பால் கொடுத்து தேற்றும் இந்த அம்மான் பச்சரிசி அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதமாக உள்ளது.

    ×