search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bleaching"

    • சில பெண்களுக்கு முழங்கை கருப்பாக இருக்கும்.
    • குளிக்கும்போது எவ்வளவு சுத்தம் செய்தாலும் அந்த கருப்பு அகலாது.

    சில பெண்களுக்கு முழங்கை கருப்பாக இருக்கும். குளிக்கும்போது எவ்வளவு சுத்தம் செய்தாலும் அந்த கருப்பு அகலாது. சிலர், சந்தையில் விற்கப்படும் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி பார்ப்பார்கள். ஆனால் இந்த சந்தை தயாரிப்புகளில் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருக்கலாம். எனவே, முழங்கை 'கருப்பை எப்படி வீட்டு தயாரிப்பு மூலம் சரி செய்யலாம் என தெரிந்துகொள்வோம்.

     முதலில் ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு கடலை மாவு எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை வெட்டி சாறு எடுத்து, அதனுடன் கலக்கவும். இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்த பிறகு, வெட்டிய எலுமிச்சையை அதில் தோய்த்து முழங்கையில் தேய்க்கவும். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் அதை உலரவிடுங்கள்.

    அதையடுத்து, தண்ணீரில் பருத்தி துணியை நனைத்து முழங்கையை சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரத்துக்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.

    கடலை மாவை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

    கடலை மாவின் தன்மையானது. சருமம் மென்மையாவதற்கும். கருத்துப் போகாமல் இருப்பதற்கும் உதவுகிறது. எந்த வகையான தோல் நோய்த்தொற்றையும் தடுக்க கடலைமாவு உதவியாக இருக்கிறது. முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தம் செய்யவும், கடலைமாவை பயன்படுத்தலாம்.

     எலுமிச்சையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

    எலுமிச்சையானது பிளீச்சிங் விளைவைக் கொண்டுள்ளது. இது சருமத்தின் கருமையை நீக்க உதவுகிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமம் கருமையாவதை தடுத்து, தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. பொதுவாக, சுத்தமான சருமத்தைப் பெற தினமும் சரியான கவனிப்பு மிகவும் முக்கியம்.

    ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி கடலை மாவு தண்ணீர் விட்டு கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி வர சருமம் மென்மையாகும்.

    குளிக்கும்போது கடலை மாவு தேய்த்துக் குளித்தால் முகம் வழுவழுப்பாகும், சுருக்கம் ஏற்படாது. இளமையாக தோன்றலாம்.

    இரண்டு தேக்கரண்டி கடலை மாவுடன், 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர், 4 தேக்கரண்டி பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும். 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது. பொலிவிழந்த சருமம் இளமை பெறும்.

    • பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான்.
    • வெள்ளைப்படுதல் என்பது, தொற்று பிரச்சினை.

    பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது இயல்பானதுதான். ஆனால் சில நேரங்களில் அது ஏதாவது ஒருசில பிரச்சினையின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். எது இயல்பாக ஏற்படும் வெள்ளைப்படுதல், எது நோய்க்கான அறிகுறி என்று கண்டறிவது சற்று சிரமம்தான்.

    வெள்ளைப்படுதல் என்பது, தொற்று பிரச்னை. இது பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, வெயில் காலத்தில் இதன் தீவிரம் அதிகமாக இருக்கலாம். இந்த பிரச்சினை குறித்து பெரும்பாலானவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. பெண்கள் வெள்ளைப்படுதல் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

    பொதுவாக பெண்களின் பிறப்புறுப்பு செல் சுவர்களில், நிறமற்ற, லேசான பிசுபிசுப்புத்தன்மை கொண்ட திரவம் இயற்கையாக சுரக்கும். அமிலத்தன்மை நிறைந்த அந்த திரவம் கிருமிகள் மற்றும் தொற்றுகள் ஏற்படாமல் பிறப்புறுப்பை பாதுகாக்கும். பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற தொற்றுக்கிருமிகள் பிறப்புறுப்பை பாதித்தால், அந்த பகுதியில் சுரக்கும் திரவத்தின் அமிலத்தன்மை காரத்தன்மையாக மாற்றமடையும்.

    நிறமற்ற நிலையில் வெளிப்படும் திரவம் அதன்பிறகு வெள்ளை, சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் வெளிப்படும். இப்படி, தொற்று காரணமாக ஏற்படும் வெள்ளைப்படுதலுக்கு, முறையாகச் சிகிச்சை எடுக்காவிட்டால், கர்ப்பப்பையிலும் இனப்பெருக்க உறுப்பிலும் பிரச்சினை ஏற்படலாம்.

    பெண்களுக்கு இனப்பெருக்க உறுப்புகளில் சிறுநீர்ப்பாதையும் பிறப்புறுப்பும் மிக நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு பகுதியில் ஏற்படும் தொற்று மற்ற இடத்துக்கு வேகமாகப் பரவும். எனவே, வெள்ளைப்படுதலால் பாதிக்கப்பட்டவர்கள் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்.

    தொற்று பாதிப்பு எதுவும் இல்லாமலும்கூட பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். இது அடுத்த சில தினங்களில் சரியாகிவிடும். பயப்படத் தேவையில்லை. பாதிப்பில்லாத இந்த வெள்ளைப்படுதல், பெரும்பாலும் பருவமடையும் காலத்துக்கு சில நாட்களுக்கு முன், மாதவிடாய்க்கு முந்தைய அல்லது பிந்தைய இரு நாள்கள் மற்றும் கர்ப்பமான நேரங்களில் மட்டுமே ஏற்படும்.

    வெள்ளைப்படுதலுக்குக் காரணமான, பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் மிகமுக்கியமான சில தொற்றுகள் குறித்தும், அது ஏற்படுத்தும் அறிகுறிகள் குறித்தும் பெண்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டும்.

    அறிகுறிகள்

    * சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்

    * பிறப்புறுப்பில் ஒவ்வாமை ஏற்பட்டு, அந்த பகுதி முழுவதும் சிவந்து காணப்படுவது

    * பிறப்புறுப்பில் புண் அல்லது கொப்புளங்கள்

    * உடலுறவின்போது பிறப்புறுப்பில் தீவிர வலி

    தடுக்கும் வழிகள்

    * பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வதன்மூலம், வெள்ளைப்படுதலை தடுக்கலாம். பெண்கள் மாதவிடாய் காலத்திலும், உடலுறுவுக்குப் பிறகும் பிறப்புறுப்பு சுகாதாரத்தில் கூடுதல் கவனமாக இருக்கவேண்டும்.

    * உள்ளாடைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கவேண்டும். பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை தேர்வு செய்வது நல்லது. நைலான் வகை உள்ளாடைகளை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

    * காசநோய், மலேரியா, மஞ்சள் காமாலை இருந்தாலும், பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டு வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

    * நீண்ட நாள் கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படலாம். எனவே கருத்தடை சாதனங்கள் உபயோகிப்பவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

    * மருத்துவர் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொள்வதாலும்கூட வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படலாம்.

    ×