search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தற்கொலை"

    • கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சூரியன்பேட்டை சேர்ந்தவர் கந்தன். (வயது 48). இவருக்கு ரமாவள்ளி (வயது 40 ) என்ற மனைவி இருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கந்தனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று மாலை கந்தனுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. இதனால் கந்தனின் மனைவி ரமாவள்ளி கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். ரமாவள்ளி அவரது வீட்டின் கழிவறையில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை தொடர்ந்து அவரது உறவினர்கள் உடனடியாக ரமா வள்ளியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் இன்று அதிகாலை ரமாவள்ளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரெயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது39), ஓய்வுபெற்ற ராணுவவீரர்.

    இவரது 2-வது மனைவி வெண்ணிலா (28) மகள்கள் ஜெனிஸ்ரீ (6), தார்மீகா (4).கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வெண்ணிலா மனவேதனை அடைந்துள்ளார்.

    இந்நிலையில் வெண்ணிலா தனது மகள்களுடன் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தார்.

    எர்ணாகுளம்-ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு தனது 2 குழந்தைகளுடன் பாய்ந்தார்.

    இதில் வெண்ணிலா மற்றும் அவரது மகள்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

    அங்கு விரைந்த காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆற்றுக்குள் ஷீபா ஜாய் குதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
    • பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவிட்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷீபா ஜாய். இவர் கருவண்ணூர் பகுதிக்கு வந்திருக்கிறார். பின்பு அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் தனது கைப்பை மற்றும் செல்போனை வைத்துவிட்டு, பாலத்தின் மேலே இருந்து ஆற்றுக்குள் குதித்தார். ஆற்றுக்குள் ஷீபா ஜாய் குதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு ஷீபா ஜாய் பிணமாக மீட்கப்பட்டார். இதே இடத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்தார். மேலும் அந்த இடத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    அது மட்டுமின்றி இந்த இடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாலிபரும், மாணவியும் ஆற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார்கள். ஆகவே இந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • ஆனந்தியின் தந்தை முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை:

    மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவரது மனைவி ஆனந்தி (வயது 26). கடந்த 2014 ஆம் ஆண்டு குபேந்திரனுக்கும், ஆனந்திக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக குபேந்திரன், மனைவி ஆனந்தியை பிரிந்து சென்று விட்டார். ஆனாலும் மாமியார் இருளாயி மருமகள் ஆனந்தியுடன் மிகுந்த பாசமாக இருந்து வந்தார். அவரும் கடந்த 2023 மார்ச் மாதம் இறந்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து தன் மீது பாசமாக இருந்த மாமியார் கனவிலும், நேரடியாகவும் தோன்றி அழைப்பதாக கூறி ஆனந்தி அடிக்கடி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் புலம்பி கொண்டிருந்தார். இதனால் அவரை கோவில்களுக்கு அழைத்து சென்று தண்ணீர் தெளித்தனர். மேலும் சாமியார்கள், மந்திரவாதிகளிடமும் அழைத்து சென்று மந்திரித்தும் வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஆனந்தி, பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு மாமியாரிடம் செல்வதாக கூறி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆனந்தியின் தந்தை முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண் ஆனந்தியின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரதி ஒரு அறையில் நைலான் சேலை யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அரச்சலூர்:

    அரச்சலூர் அருகே டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசெல்வன் (40). இவரது மனைவி ரதி (34). மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

    இந்த நிலையில் இவர்களின் மகளுக்கு கடந்த சில மாதங்ளுக்கு முன்னர் ஏற்பட்ட இதயக்கோளாருக்கு சிகிச்சை பெறுவதற்காக கடன் பெற்று ள்ளனர். அந்த கடனை கட்ட முடியாத அளவில் தொடர் நெருக்கடிகள் ஏற்பட்டதால் மனம் உடைந்த நிலையில் ரதி காணப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று உணவு வாங்கி வர சண்முகசெல்வனும், அவரது மகனும் வெளியே சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ரதி ஒரு அறையில் நைலான் சேலை யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடைக்கு சென்று உணவை வாங்கிக்கொண்டு திரும்பிய சண்முகசெல்வன் இதனை அறிந்து அதிர்ந்து போனார். பின்னர் சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் அங்கு சென்ற அரச்சலூர் போலீசார் ரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்த உடலை பெருந்துறை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு மேற்கொண்டு விசார ணை நடத்தி வருகின்றனர்.

    • நகையை திருப்பி தராததால் கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
    • குடும்ப பிரச்சினையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சுக்காங்கால்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கண்ணன் மனைவி தேவி (வயது48). இவர்கள் சொந்த தேவைக்காக நகையை அடகு வைத்துள்ளனர். அந்த நகையை திருப்பி தராததால் கணவருடன் தேவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்றும் நகை திருப்புவது குறித்து அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முத்துக்கண்ணன் வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பியபோது தேவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் தேவியின் இறப்பு குறித்து தெரிய வரும். இது குறித்து ஓடைப்பட்டி போலீசில் அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திடிரென பூச்சி மருந்தை குடித்தார்
    • உதவி கலெக்டர் விசாரணை

    வெம்பாக்கம்:

    செய்யாறு தாலுகா வெள்ளாமலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 30). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உத்திரமேரூர் அருகே உள்ள காரனையை சேர்ந்த சந்தியா(26) என்பவருடன் திருமணம் நடந்தது.

    இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலை யில் சந்தியா திடிரென பூச்சி மருந்தை குடித்தார்.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சந்தியா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து சந்தியாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் உதவி கலெக்டர் அனாமிகா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணவேணி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை ஒன்றாக சாப்பிட்டு விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதி சாலைத் தெருவை சேர்ந்தவர் பெரு மாள் மனைவி கிருஷ்ண வேணி (வயது 48). இவர் தற்போது ஈரோடு ரங்க ம்பாளையம் ஜீவா நகரில் தனது மகன் பாலமுருகன் (27) என்பவருடன் வசித்து வந்தார்.

    கிருஷ்ணவேணி கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணவேணி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை ஒன்றாக சாப்பிட்டு விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.

    இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணவேணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவரது மகன் பாலமுருகன் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்ரா (50). இவர்களது மகன் தினகரன் (23), மருமகள் தீபிகா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
    • இன்று காலை பார்த்த போது சித்ரா வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை சுந்தர கணபதி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சித்ரா (50). இவர்களது மகன் தினகரன் (23), மருமகள் தீபிகா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை பார்த்த போது சித்ரா வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சித்ராவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சித்ரா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துநகை கடந்த 30-ந்தேதி விடுதியில் சீலிங்பேனில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா குறிச்சி பகுதியை சேர்ந்தவர் முத்துநகை (33), இவர் சேலம் வீரபாண்டியார் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்தார்.

    இவரும் குறிச்சி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து சேலம் சின்னதிருப்பதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். சந்தோஷமாக மண வாழ்க்கையை தொடங்கிய அவர்கள் வாழ்க்கையில் 2 மாதங்களில் குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் முத்து நகையின் பெற்றோர் வேலையை விட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வருமாறும் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் முத்துநகை கடந்த 30-ந்தேதி விடுதியில் சீலிங்பேனில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த விடுதி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    பின்னர் தூக்கில் தொங்கிய அவரை மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

    இந்த நிலையில் நேற்றிரவு முத்து நகை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி பிணவறையில் திரண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.

    முத்துநகையின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. தற்கொலைக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உடல்நல பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வழுதலங்குணம் கிராமத் தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 34). இவர் கணவருடன் வாழாமல் சந்தோஷ் (5) என்ற மகனுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் லட்சுமி அடிக்கடி உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து (விஷம்) குடித்துள்ளார்.

    இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உடல்நல பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வழுதலங்குணம் கிராமத் தைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 34). இவர் கணவருடன் வாழாமல் சந்தோஷ் (5) என்ற மகனுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் லட்சுமி அடிக்கடி உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்து (விஷம்) குடித்துள்ளார்.

    இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச் சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×