என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரிப்பு"
- குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை என்பது குறிப்பிடத்தக்கது.
- குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
குப்பைமேடுகளில் எளிதாக கிடைக்கக்கூடிய மூலிகைதான் குப்பைமேனி. பெரும்பாலானோர் இந்த செடியை கண்டிப்பாக பார்த்திருப்போம். ஆனால் இதுதான் குப்பைமேனி என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல் குப்பைமேனி செடியை களலைச்செடியாக பலர் பிடுங்கி வீசுகின்றனர்.
பல வகையான நோய்களுக்கு தீர்வு அளிக்கும் குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி குப்பைமேனி செடியின் அனைத்து பாகங்களும் சிறப்பு வாய்ந்தது. அதேபோல் பல வகையான நோய்களுக்கு மருந்தாக குப்பைமேனி பயன்படுகிறது.
குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து குடிப்பதால் சளி, இருமல், தொண்டை கட்டுதல் போன்ற நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் உடல் வெப்பத்தையும் சரி செய்கிறது.
குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து, ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடும். அதேபோல் குப்பைமேனி இலை பொடியை விளக்கெண்ணையில் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புழுக்கள் வெளியேறிவிடும்.
குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக சைனஸ் எனப்படும் நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது.
சொத்தை பல் உள்ளவர்களுக்கு பல்லில் வலி 2 அல்லது 3 இலைகளை நன்றாக கழுவி விரல்களால் நசுக்கி வலிக்கும் பல்லில் வைத்தால் சொத்தை பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும்.
அதேபோல் படை, சிரங்கு, சொறி, அரிப்பு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் சேர்த்து மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு அரைத்து தேய்த்து கழுவி வர அனைத்து நோய்களும் குணமாகும்.
உடலில் ஏற்படும் வலிகளை குணப்படுத்த குப்பைமேனி இலையின் சாற்றை நல்லெண்ணையோடு சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்தால் குணமாகும். அதேபோல் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகளுக்கு குப்பைமேனி இலையை சுண்ணாம்பு கலந்து பூசுவதால் நல்ல தீர்வு கிடைக்கிறது.
தேள், பூரான், விஷப்பூச்சி கடித்தால் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் பூசினால் விஷம் முறியும்.
- உலர் கண் நோய் ஏற்பட்டால் கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.
- தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும்போது விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.
நம் கண்களின் வெளிப்புற அடுக்கில் எண்ணெய்யும், மைய அடுக்கில் நீரும், உள் அடுக்கில் புரதமும் இருக்கும். இந்த மூன்று அடுக்குகளின் தரம் அல்லது அளவில் உண்டாகும் மாற்றமே உலர் கண் நோயாகும். கண்களின் சீரான தன்மை மற்றும் செயல்பாட்டிற்கு அதில் சுரக்கக்கூடிய கண்ணீரின் அளவு அடிப்படையானதாகும். உலர் கண் நோய் ஏற்படும்போது கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.
அறிகுறிகள்:
கண்களில் எரிச்சல், வறட்சி, அரிப்பு, வலி உணர்வு, கனம், கண்களில் நீர் வடிதல் மற்றும் மங்கலான பார்வை, புத்தகம் வாசிப்பதில் சிரமம் ஏற்படுவது போன்றவை உலர் கண் நோய்க்கான அறிகுறிகளாகும்.
காரணங்கள்:
* எந்த ஒரு பொருளையும் தொடர்ந்து நீண்ட நேரம் உற்றுப்பார்ப்பது.
* பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள், சீரற்ற ஹார்மோன் சுரப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்கள் காரணமாகவும் உலர் கண் நோய் ஏற்படும்.
* தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும் போதும், மாசுக்கள் கண்களில் தொடர்ந்து படும்போதும் விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.
* காற்றில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் உலர் கண் நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். குறிப்பாக ஏ.சி. பயன்பாட்டின்போது நம்மைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை குறைந்து, ஈரப்பதம் அதிகரிக்கும். இது கண் இமைகளில் உள்ள சுரப்புகளின் உற்பத்தியை தடுத்து, விழி நீர் படலத்தில் பாதிப்பை உண்டாக்கும்.
தீர்வு:
* உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
* கண்களுக்கான பயிற்சிகளை செய்ய வேண்டும். கண் பயிற்சிகள் செய்யும்போது ஆரம்ப காலத்தில் தலைவலி உண்டாகலாம். இந்த பயிற்சிகளை பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் செய்வது நல்லது.
* நீங்கள் இருக்கும் அறையில் ஒரு அகலமான கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். இது அறையில் உள்ள காற்றை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.
* 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவலாம். இது சருமம் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு, கண்களில் ஏற்படும் அழுத்தம் மற்றும் சோர்வை நீக்கும்.
* சீரான இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். 10 வினாடிகளுக்கு ஒருமுறை கண்களை சிமிட்டுவது அவசியமானது.
* வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிவது நல்லது. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* குளிர்ந்த அல்லது அதிக வெப்பநிலை உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
* நேரடியாக கண்ணில் வேகமான காற்று படும்படி இருப்பதை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி ஆவி பிடிப்பது, சாம்பிராணி புகை போடுவதை தவிர்க்க வேண்டும்.
- காலை தூங்கி எழுந்ததும் உடலில் அரிப்பு தொடங்கலாம்.
- தோல் நோய்களில் இந்த கரப்பான் நோய் மோசமானது.
விதவிதமான தோல் நோய்கள் என்று இருந்தாலும் அதில் நம்மை அதிகம் சிரமத்துக்கு ஆளாக்குவது என்றால் கரப்பான் நோய் தான். இந்த கரப்பான நோய் மற்றும் தோல் நோய் அனைத்துக்கும் பயன்படும் ஆயுர்வேத மூலிகைகள் என்ன, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.
தோல் நோய் தீர்க்கும் கஷாயம்:
காலை தூங்கி எழுந்ததும் உடலில் அரிப்பு தொடங்கலாம். அதேபோன்று அலுவலகம் சென்று வந்ததும் மீண்டும் அரிப்பு தொடங்கலாம். இப்படி உடல் முழுவதும் அரிப்பு தொடங்கி அதை சொரிந்து சொரிந்து அரை மணி நேரம் சொரிந்த பிறகு மீண்டும் படுக்கைக்கு செல்லும் போது அரிப்பு தொடங்கலாம். தோல் நோய்களில் இந்த கரப்பான் நோய் மோசமானது.
இந்த கரப்பான் நோயை முற்றிலும் குணமாக்க இயலாத நோயாக பார்க்கப்படுகிறது. நோய் தீவிரமாக இருந்தாலும் கட்டுக்குள் வைக்கவே இந்த சிகிச்சை உதவுகிறது. ஆனால் அரிப்பு இல்லாத சிகிச்சையை ஆயுர்வேத மூலிகைகள் அளிக்கிறது. ௧௩ வகையான கரப்பான் நோய்கள் இருக்கும் நிலையில் அரிப்பற்ற நிலைக்கு உதவும் ஆயுர்வேத கஷாயம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அமுக்கிரான் கிழங்கு சூரணம் - 2 கிராம்
திரிபலா சூரணம் - 2 கிராம்
திரிகடுகு சூரணம் - 2 கிராம்
ஓமம் - 2 கிராம்
பரங்கிப்பட்டை பொடி - 2 கிராம்
நீரடி முத்து பொடி - 2 கிராம்
ஜாதிக்காய் பொடி - 2 கிராம்
ஜாதிபத்திரி பொடி - 2 கிராம்
கிராம்பு பொடி - 2 கிராம்
தண்ணீர் - 300 மில்லி
செய்முறை:
தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அவை 1௦௦ மில்லியாக குறைந்து வரும் வரை கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும். கடுமையான கசப்பும் துவர்ப்பும் கொண்ட அருமருந்து.
அறிகுறிகள்
கரப்பான் அரிப்பு என்பது மோசமானது. இந்த நோய் தீவிரம் வேதனையானது. சொரி, சிரங்கு என்று அழைக்கப்படும் இது பெரியவர்களை தாண்டி குழந்தைகளிடமும் பார்க்கலாம். கால்களில், கைகளில் முகத்திலும் கூட இவற்றை பார்க்கலாம். இதனால் குழந்தை அரித்து அரித்து சிரமப்படுவதை பார்த்திருப்போம்.
கரப்பான் நோய் சிரமத்தை மாற்ற வேண்டுமெனில் அவர்கள் அசைவத்தை தவிர்த்து சைவமாக இருக்க வேண்டும். உணவு முறையில் உடலில் பித்தத்தை அதிகரிக்கும் கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் அரிப்பு தீவிரம் அதிகமாக இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.
தோல் சார்ந்த தொற்று நோய்கள், பூஞ்சை சார்ந்த தொற்றுகள், தோல்களில் குணப்படுத்த முடியாத சொரியாசிஸ் நோய்கள் என கொண்டிருப்பவர்கள் சிகிச்சை மருந்துகளோடு இணை மருந்தாக இந்த 9 மூலிகைகள் கொண்ட கரப்பான் நோய் தீர்க்கும் கஷாயம் அருந்தினால் தோல் அரிப்பு, தோல் உணர்ச்சியின்மை தடுப்பு, எரிச்சல் தடுப்பு உண்டாகி உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்நாள் முழுவதும் அரிப்பு இல்லாமல் பார்த்துகொள்ளலாம்.
கஷாயத்தை காலை ஒரு வேளை, மாலை ஒரு வேளை என்று எடுத்துவரலாம். தோல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இதை எடுக்க விரும்பினால் மருத்துவரிடம் தெளிவான ஆலோசனை பெறுவது அவசியம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்