search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Irritation"

    • உலர் கண் நோய் ஏற்பட்டால் கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.
    • தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும்போது விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.

    நம் கண்களின் வெளிப்புற அடுக்கில் எண்ணெய்யும், மைய அடுக்கில் நீரும், உள் அடுக்கில் புரதமும் இருக்கும். இந்த மூன்று அடுக்குகளின் தரம் அல்லது அளவில் உண்டாகும் மாற்றமே உலர் கண் நோயாகும். கண்களின் சீரான தன்மை மற்றும் செயல்பாட்டிற்கு அதில் சுரக்கக்கூடிய கண்ணீரின் அளவு அடிப்படையானதாகும். உலர் கண் நோய் ஏற்படும்போது கண்ணீரின் அளவு குறையத் தொடங்கும்.

    அறிகுறிகள்:

    கண்களில் எரிச்சல், வறட்சி, அரிப்பு, வலி உணர்வு, கனம், கண்களில் நீர் வடிதல் மற்றும் மங்கலான பார்வை, புத்தகம் வாசிப்பதில் சிரமம் ஏற்படுவது போன்றவை உலர் கண் நோய்க்கான அறிகுறிகளாகும்.

    காரணங்கள்:

    * எந்த ஒரு பொருளையும் தொடர்ந்து நீண்ட நேரம் உற்றுப்பார்ப்பது.

    * பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள், சீரற்ற ஹார்மோன் சுரப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்கள் காரணமாகவும் உலர் கண் நோய் ஏற்படும்.

    * தூய்மையற்ற சூழலில் தொடர்ந்து இருக்கும் போதும், மாசுக்கள் கண்களில் தொடர்ந்து படும்போதும் விழி படலத்தில் பாதிப்பு ஏற்படும்.

    * காற்றில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் உலர் கண் நோய் ஏற்பட முக்கிய காரணமாகும். குறிப்பாக ஏ.சி. பயன்பாட்டின்போது நம்மைச் சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை குறைந்து, ஈரப்பதம் அதிகரிக்கும். இது கண் இமைகளில் உள்ள சுரப்புகளின் உற்பத்தியை தடுத்து, விழி நீர் படலத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

    தீர்வு:

    * உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

    * கண்களுக்கான பயிற்சிகளை செய்ய வேண்டும். கண் பயிற்சிகள் செய்யும்போது ஆரம்ப காலத்தில் தலைவலி உண்டாகலாம். இந்த பயிற்சிகளை பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் செய்வது நல்லது.

    * நீங்கள் இருக்கும் அறையில் ஒரு அகலமான கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கலாம். இது அறையில் உள்ள காற்றை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்.

    * 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவலாம். இது சருமம் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்க உதவுவதோடு, கண்களில் ஏற்படும் அழுத்தம் மற்றும் சோர்வை நீக்கும்.

    * சீரான இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். 10 வினாடிகளுக்கு ஒருமுறை கண்களை சிமிட்டுவது அவசியமானது.

    * வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிவது நல்லது. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    * குளிர்ந்த அல்லது அதிக வெப்பநிலை உள்ள இடங்களில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

    * நேரடியாக கண்ணில் வேகமான காற்று படும்படி இருப்பதை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி ஆவி பிடிப்பது, சாம்பிராணி புகை போடுவதை தவிர்க்க வேண்டும்.

    • போலீசார் , சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதிலிருந்து ஒரு நபர் தப்பி ஓட முயன்றார்.
    • போலீசார் அவரை மடக்கி பிடித்து காரை சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து சாராயம் கடத்தப்படுவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.     அதையடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சின்னக் கமணன் தலைமையான போலீசார் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்தற்ககிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதிலிருந்து நபர் தப்பி ஓட முயன்றார். சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்து காரை சோதனை செய்தனர். அப்போது காரில் 300 லிட்டர் விஷ எரிச்சாராயம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து திண்டிவனம் கலால் துறையிடம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து திண்டிவனம் கலால் துறையினர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து புதுவை மாநிலத்தை சேர்ந்த கவிநீலவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது சம்பந்தமாக கலால் டி.எஸ்.பி. பழனி விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் கவிநீலவனிடம் இருந்த 300 சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 8 லட்சம் மதிப்பிலான கார் பறிமுதல் செய்ய ப்பட்டது. கலைநீலவன் புதுவையில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து தமிழகப் பகுதியில் விற்பனை செய்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ×