search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ringworm"

    • காலை தூங்கி எழுந்ததும் உடலில் அரிப்பு தொடங்கலாம்.
    • தோல் நோய்களில் இந்த கரப்பான் நோய் மோசமானது.

    விதவிதமான தோல் நோய்கள் என்று இருந்தாலும் அதில் நம்மை அதிகம் சிரமத்துக்கு ஆளாக்குவது என்றால் கரப்பான் நோய் தான். இந்த கரப்பான நோய் மற்றும் தோல் நோய் அனைத்துக்கும் பயன்படும் ஆயுர்வேத மூலிகைகள் என்ன, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தோல் நோய் தீர்க்கும் கஷாயம்:

    காலை தூங்கி எழுந்ததும் உடலில் அரிப்பு தொடங்கலாம். அதேபோன்று அலுவலகம் சென்று வந்ததும் மீண்டும் அரிப்பு தொடங்கலாம். இப்படி உடல் முழுவதும் அரிப்பு தொடங்கி அதை சொரிந்து சொரிந்து அரை மணி நேரம் சொரிந்த பிறகு மீண்டும் படுக்கைக்கு செல்லும் போது அரிப்பு தொடங்கலாம். தோல் நோய்களில் இந்த கரப்பான் நோய் மோசமானது.

    இந்த கரப்பான் நோயை முற்றிலும் குணமாக்க இயலாத நோயாக பார்க்கப்படுகிறது. நோய் தீவிரமாக இருந்தாலும் கட்டுக்குள் வைக்கவே இந்த சிகிச்சை உதவுகிறது. ஆனால் அரிப்பு இல்லாத சிகிச்சையை ஆயுர்வேத மூலிகைகள் அளிக்கிறது. ௧௩ வகையான கரப்பான் நோய்கள் இருக்கும் நிலையில் அரிப்பற்ற நிலைக்கு உதவும் ஆயுர்வேத கஷாயம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    அமுக்கிரான் கிழங்கு சூரணம் - 2 கிராம்

    திரிபலா சூரணம் - 2 கிராம்

    திரிகடுகு சூரணம் - 2 கிராம்

    ஓமம் - 2 கிராம்

    பரங்கிப்பட்டை பொடி - 2 கிராம்

    நீரடி முத்து பொடி - 2 கிராம்

    ஜாதிக்காய் பொடி - 2 கிராம்

    ஜாதிபத்திரி பொடி - 2 கிராம்

    கிராம்பு பொடி - 2 கிராம்

    தண்ணீர் - 300 மில்லி

    செய்முறை:

    தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருள்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அவை 1௦௦ மில்லியாக குறைந்து வரும் வரை கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும். கடுமையான கசப்பும் துவர்ப்பும் கொண்ட அருமருந்து.

    அறிகுறிகள்

    கரப்பான் அரிப்பு என்பது மோசமானது. இந்த நோய் தீவிரம் வேதனையானது. சொரி, சிரங்கு என்று அழைக்கப்படும் இது பெரியவர்களை தாண்டி குழந்தைகளிடமும் பார்க்கலாம். கால்களில், கைகளில் முகத்திலும் கூட இவற்றை பார்க்கலாம். இதனால் குழந்தை அரித்து அரித்து சிரமப்படுவதை பார்த்திருப்போம்.

    கரப்பான் நோய் சிரமத்தை மாற்ற வேண்டுமெனில் அவர்கள் அசைவத்தை தவிர்த்து சைவமாக இருக்க வேண்டும். உணவு முறையில் உடலில் பித்தத்தை அதிகரிக்கும் கொழுப்பு சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் அரிப்பு தீவிரம் அதிகமாக இருக்கும். மன அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.

    தோல் சார்ந்த தொற்று நோய்கள், பூஞ்சை சார்ந்த தொற்றுகள், தோல்களில் குணப்படுத்த முடியாத சொரியாசிஸ் நோய்கள் என கொண்டிருப்பவர்கள் சிகிச்சை மருந்துகளோடு இணை மருந்தாக இந்த 9 மூலிகைகள் கொண்ட கரப்பான் நோய் தீர்க்கும் கஷாயம் அருந்தினால் தோல் அரிப்பு, தோல் உணர்ச்சியின்மை தடுப்பு, எரிச்சல் தடுப்பு உண்டாகி உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்நாள் முழுவதும் அரிப்பு இல்லாமல் பார்த்துகொள்ளலாம்.

    கஷாயத்தை காலை ஒரு வேளை, மாலை ஒரு வேளை என்று எடுத்துவரலாம். தோல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இதை எடுக்க விரும்பினால் மருத்துவரிடம் தெளிவான ஆலோசனை பெறுவது அவசியம்.

    ×