search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Urticaria"

    • குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை என்பது குறிப்பிடத்தக்கது.
    • குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    குப்பைமேடுகளில் எளிதாக கிடைக்கக்கூடிய மூலிகைதான் குப்பைமேனி. பெரும்பாலானோர் இந்த செடியை கண்டிப்பாக பார்த்திருப்போம். ஆனால் இதுதான் குப்பைமேனி என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல் குப்பைமேனி செடியை களலைச்செடியாக பலர் பிடுங்கி வீசுகின்றனர்.

     பல வகையான நோய்களுக்கு தீர்வு அளிக்கும் குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி குப்பைமேனி செடியின் அனைத்து பாகங்களும் சிறப்பு வாய்ந்தது. அதேபோல் பல வகையான நோய்களுக்கு மருந்தாக குப்பைமேனி பயன்படுகிறது.

    குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து குடிப்பதால் சளி, இருமல், தொண்டை கட்டுதல் போன்ற நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் உடல் வெப்பத்தையும் சரி செய்கிறது.

    குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து, ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடும். அதேபோல் குப்பைமேனி இலை பொடியை விளக்கெண்ணையில் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புழுக்கள் வெளியேறிவிடும்.

    குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக சைனஸ் எனப்படும் நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது.

    சொத்தை பல் உள்ளவர்களுக்கு பல்லில் வலி 2 அல்லது 3 இலைகளை நன்றாக கழுவி விரல்களால் நசுக்கி வலிக்கும் பல்லில் வைத்தால் சொத்தை பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும்.

    அதேபோல் படை, சிரங்கு, சொறி, அரிப்பு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் சேர்த்து மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு அரைத்து தேய்த்து கழுவி வர அனைத்து நோய்களும் குணமாகும்.

    உடலில் ஏற்படும் வலிகளை குணப்படுத்த குப்பைமேனி இலையின் சாற்றை நல்லெண்ணையோடு சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்தால் குணமாகும். அதேபோல் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகளுக்கு குப்பைமேனி இலையை சுண்ணாம்பு கலந்து பூசுவதால் நல்ல தீர்வு கிடைக்கிறது.

    தேள், பூரான், விஷப்பூச்சி கடித்தால் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

    பலருக்கும் வருகிற ஒரு சரும அலர்ஜி Urticaria. இது தமிழில் காணாக்கடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடித்தது என்னவென்று அறிய முடியாத ஒரு நச்சுக்கடி என்பதே இதற்கு அர்த்தம்.
    பலருக்கும் வருகிற ஒரு சரும ஒவ்வாமை இது. தமிழில் காணாக்கடி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடித்தது என்னவென்று அறிய முடியாத ஒரு நச்சுக்கடி என்பதே இதற்கு அர்த்தம்.

    தற்போதுள்ள வாழ்க்கை முறையில் நாம் சாப்பிடும் உணவில், நாம் சுவாசிக்கும் காற்றில், நம் சுற்றுப்புறச்சூழலில் ஏற்படும் மாசு காரணமாக இந்த காணாக்கடி இப்பொழுது நிறைய பேரை பாதிக்கிறது.

    உடல் முழுவதும் திடீரென்று பட்டை பட்டையாக சிவந்து தடித்து போகும். அரிப்பு அதிகமாகி, கொஞ்ச நேரத்தில் தானாகவே மறைந்துவிடும். இது தொண்டை, கண் இமை போன்ற இடங்களை பாதித்தால், உடல் முழுவதிலும் தடித்துக்கொண்டு, மூச்சு விடுவதிலும் சிரமம் இருக்கும். இப்படி இருக்குமானால், உடனே மருத்துவரின் உதவியை நாடுவது முக்கியம். சிலருக்கு இந்த அலர்ஜி ஏற்படும்போது வாந்தி, மயக்கம், உடல்வலி, தலைவலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் சேர்ந்தே காணப்படலாம்.

    மிகச்சிலருக்கு இது எதனால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், பலருக்கு இது எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிப்பதும் சிரமமாக இருக்கிறது.

    உண்ணும் உணவு, மாத்திரைகள், தொற்று நோய்கள், குடலில் கீரி பூச்சிகள் இருப்பது, நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பொருட்கள், பூச்சிக்கடிகள், மருந்துகள், கண்களில் அல்லது காதுகளில் விடப்படும் சொட்டு மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவையும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

    மீன், பால், வேர்க்கடலை, பீன்ஸ், கேரட், முருங்கைக்காய், இறைச்சி போன்றவையும், உணவுகளில் சேர்க்கப்படும் வண்ணங்களும், மணமூட்டிகளும், இதனை ஏற்படுத்தலாம். பற்களில் உள்ள சொத்தை, தொண்டை, காதுகளில் ஏற்படும் வலி, சீழ் உண்டாதல் போன்றவை இதை ஏற்படுத்தலாம். அது மட்டுமின்றி சுவாசக் குழாயிலும், சிறுநீர் பாதையில் மற்றும் பித்தப்பையில் உள்ள கிருமி தொற்றுகளாலும் கூட இது ஏற்படலாம்.

    குடலில் நாக்குப்பூச்சிகள் என்று அழைக்கப்படும் தொற்றுப் புழுக்கள் இருப்பதும் கூட ஒரு காரணம். பூக்களின் மகரந்தத் தூள்கள், விலங்குகளின் முடிகள் மற்றும் வீட்டில் உள்ள தூசுகளாலும் காணாக்கடி உண்டாகலாம்.

    கொசுக்கள், மூட்டைப்பூச்சிகள் கடித்தால் கூட ஒவ்வாமை ஏற்படலாம். தேனியோ குளவியோ கொட்டுவதால் வரலாம். தடுப்பூசிகள் போட்டால் சிலருக்கு அலர்ஜியினால் இதுபோன்று தடிப்புகள் ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
    ×