search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புவனகிரி அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை
    X

    புவனகிரி அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை

    • வயிற்று வலியின் காரணமாக கதவை சாத்திவிட்டு வினோதினி படுத்து உறங்கியுள்ளார்.
    • கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வினோதினி தூக்கில் தொங்கினார்.

    கடலூர்:

    மேல் புவனகிரியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவி வினோதினி (வயது 27). இவர்களுக்கு ரோகேஷ் (8), கோகுல் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை கடுமையான வயிற்று வலியின் காரணமாக தன்னுடைய வீட்டில் உள்ள கதவை சாத்திவிட்டு வினோதினி படுத்து உறங்கியுள்ளார். வயிற்று வலி அதிகமானதால், வீட்டின் கதவை உள்பக்கம் பூட்டிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கூலி வேலைக்கு சென்ற முருகவேல் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயற்சித்தார். ஆனால், கதவை திறக்க முடியவில்லை. அக்கம் பக்கம் இருந்தவர்களை உதவிக்கு அழைத்த முருகவேல், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வினோதினி தூக்கில் தொங்கினார்.

    இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வினோதினியை மீட்டு புவனகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை பரிசோதித்த டாக்டர், வினோதினி இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×