search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே   பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை
    X

    பண்ருட்டி அருகே பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை

    • நீலவேணி நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
    • வயிற்று வலியால் துடித்த நீலவேணி வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சின்ன சேமக்கோட்டையை சேர்ந்தவர் வேலு செங்கல்சூலை வியாபாரி. இவரது மகள் நீலவேணி (வயது 24) எம்.எஸ்.சி பட்டதாரியான இவர் நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.கடந்த 7ந் தேதி காலை 6 மணி அளவில் மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வயிற்று வலியால் துடித்த நீலவேணி வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்துள்ளார். இதனால் மயங்கிய நிலையில் இருந்த அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×