search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூர் அருகே  3 மாத கர்ப்பிணி பெண் அறுவை சிகிச்சைக்கு பின் சாவு
    X

    வானூர் அருகே 3 மாத கர்ப்பிணி பெண் அறுவை சிகிச்சைக்கு பின் சாவு

    • எழிலரசிக்கு(29) வயிற்று வலி ஏற்பட்டதால், அவரை வானூர் அரசு மருத்துவமனைக்கு அவரின் கணவர் செல்வகுமார் அழைத்து சென்றார்.
    • எழிலரசிக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

    விழுப்புரம்:

    வானூர் அடுத்த தொள்ளாமூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 33) டிரைவர். இவர மனைவி எழிலரசி (29). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு எழில ரசிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து எழிலரசியை வானூர் அரசு மருத்துவமனைக்கு செல்வ குமார் அழைத்து சென்றார். அங்கிருந்து திண்டி னம் அரசு மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்கான அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப் பட்ட பரிசோதனையில் எழிலரசி கருவுற்று இருப்ப தாகவும், அதே சமயத்தில் குழந்தை கருப்பைக்கு செல்லும் குழாயில் வளர்வதால் வலி உள்ளதை கண்டறிந்தனர். இதனை அடுத்து எழிலரசியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.எழிலரசிக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் முடிவெடுத்து செல்வ குமாரிடம் கூறினார்கள். இதற்கு அவர் ஒத்துக் கொள்ளவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போதுஎழிலரசிக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு நள்ளிரவு 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் வானூர் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×