search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிர்ச்சி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
    • எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம்.

    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவியான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

    இதனால் அவரது உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியானது. அதன்பின் கேத் மிடில்டன், தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில் கேத் மிடில்டன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

    தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் கேத் மிடில்டன் உறுதி செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-

    லண்டனில் ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் வயிற்று அறுவை சிகிச்சைக்கு நான் உட்படுத்தப்பட்டேன். அறுவை சிகிச்சை வெற்றி கரமாக இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியது. இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம். நோய் பாதிப்பு குறித்த தகவல் எனக்கும், வில்லியம்சுக்கும் அதிர்ச்சி அளித்தது.அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் எடுத்தது. அதன் பிறகே இந்த சிகிச்சையை தொடங்க முடிந்தது. எங்களது பிள்ளைகளிடம் இதனை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.

    ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் வலுப்பெறுகிறேன். இதைதான் பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளேன் என்றார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு குறித்த முழு விவரம் வெளியாகவில்லை.

    இங்கிலாந்து மன்னரும், மிடில்டனின் மாமனாருமான சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
    • முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீா் வசதி பெற்று வருகின்றன.

    குடிநீா் மற்றும் பாசன தேவைகளுக்காக அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அமராவதி அணையில் இருந்து வெளியேறிய சில முதலைகள் கரையோரத்தில் நடமாடி வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் உடுமலையை அடுத்துள்ள கொழுமம் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடி அருகே பெரிய முதலை சாலையில் ஊா்ந்து சென்றுள்ளது. இதனைப்பார்த்த இளைஞர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூகவலை தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    அதனைப்பார்த்த கொழுமம், குமரலிங்கம், சாமராயப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

    இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:- அமராவதி அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. வழக்கமாக பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடும்போது அணையில் உள்ள முதலை கள் பிரதான ஷட்டா் வழியாக அமராவதி ஆற்றில் சென்று விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொது மக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம்.

    முதலைகளை பாா்த்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றனா்.

    • விலை உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3350 கோடி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • அனைத்து நகரப் பகுதிகள், கிராமப்புறங்களில் மது பிரியர்கள் மதுபானங்களின் விலையை கேட்டு ‘ஷாக்’ ஆனார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தி உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசின் வருவாய் ஆதாரங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த ஆண்டு மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்ட பிறகு தற்போது மீண்டும் விலையை உயர்த்தி உள்ளது. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட அனைத்து மதுபானங்களின் விலையும் ரூ.10 முதல் ரூ.80 வரை அதிகரித்துள்ளது.

    சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் விலை குறைவாகவும், பிரீமியம் வகை மதுபானங்கள் விலை அதிக அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10-ம், அரை பாட்டிலுக்கு ரூ.20-ம், முழு பாட்டிலுக்கு ரூ.40-ம் அதிகரித்துள்ளன.

    பிரீமியம் வகை மதுபானங்கள் குவாட்டருக்கு ரூ.20-ம், அரைபாட்டிலுக்கு ரூ.40-ம், முழு பாட்டிலுக்கு ரூ.80-ம், பீர் வகைகளுக்கு ரூ.10-ம் கூடியுள்ளது.

    மதுபானங்களின் அதிக பட்ச சில்லறை விலை 80 ரூபாய் வரை கூடியதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3350 கோடி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குவாட்டர் பாட்டில் சாதாரண, நடுத்தர வகை மதுபானங்கள் முன்பு ரூ.130, ரூ.160-க்கு கிடைத்தது. அவை தற்போது ரூ.170 ஆக கூடியுள்ளது.

    பிரீமியம் வகை குவாட்டர் பாட்டில் முன்பு ரூ.180, ரூ.190, ரூ.200, ரூ.240 என்ற அளவில் விற்கப்பட் டது. இவற்றின் விலை தற்போது ரூ.20 உயர்ந்துள்ளது.

    மெக்டவல் விஸ்கி, மெக்டவல் பிராந்தி ரூ.200-க்கு இன்று விற்கப்பட்டது. வி.எஸ்.ஒ.பி.எக்ஸ்டிரா கோல்டு பிராந்தி ரூ.220, ராயல் சேலஞ்ச் விஸ்கி, சிக்னேச்சர் பிரீமியம் விஸ்கி குவாட்டர் ரூ.240-ல் இருந்து ரூ.260 ஆக உயர்ந்தது.

    ஓல்டு காஸ்ரம் கோல்டன், கிரேப் ஆர்டினரி பிராந்தி, மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி ஆகியவை குவாட் டர் ரூ.140-க்கு விற்கப்பட்டது. டைமண்ட் பிராந்தி, விஸ்கி, ரம், சாபில் சூப்பர் ஸ்டார் பிராந்தி ஆகியவை குவாட்டர் ரூ.140 ஆக உயர்ந்தது. எம்.ஜி.எம் மீடியம் ஓட்கா, எம்.ஜி.எம். ஒயிட் மீடியம் ரம், வி.எஸ்.ஓ.பி. பிராந்தி குவாட் டர் ரூ.170-க்கு விற்கப்பட் டது.

    ஆபிசர்ஸ் சாய்ஸ், டைநைட் பிராந்தி ரூ.170, எம்.சி. ஓல்டு காஸ்க் ரம் ரூ.200, எம்.சி வின்டேஜ் கோல்டு பிளன்டட் மால்ட் விஸ்கி ரூ.230, செஞ்சூரியன் பிரெஞ்ச் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி ரூ.250 ஆக உயர்ந்து உள்ளது.

    பிரிஹான்ஸ் நெப்போலியன் பிராந்தி ரூ.210, பிரிஹான்ஸ் பிரீமி யம் விஸ்கி ரூ.200, பவர் ஆப்பிள் ஓட்கா, பவர் ஆரஞ்சு ஓட்கா ஆகியவை ரூ.170 ஆக உயர்ந்தது.

    ஓல்டு மங்க் டீலக்ஸ் ரம், கோல்டன் ஈகிள் ஆர்டினரி பிராந்தி, ஓரியன் பிராந்தி ஆகியவை குவாட்டர் ரூ.140, மேன்ஷன் ஹவுஸ் பிராந்தி குவாட்டர் ரூ.250, அரை பாட்டில் ரூ.500 ஆக கூடியது.

    கூலி தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மதுபானங்கள் குவாட்டர் பாட்டில்கள் ரூ.140 ஆகவும், அரைபாட்டில் ரூ.280 ஆகவும் உயர்ந்தன. இனிமேல் சாதாரண வகை குவாட்டர் சரக்கு அடிக்க வேண்டுமா னால் குறைந்த பட்சம் ரூ.200 தேவைப்படும். தண்ணீர் பாட்டில், கிளாஸ், சினாக்ஸ் என ரூ.250 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

    பிரீமியம் வகையான சரக்குகளை சாப்பிடுபவர்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.350 வரை செலவிட வேண்டும். மதுபானங்கள் விலை இன்று முதல் அமலுக்கு வந்ததால் மது பிரியர்கள் முனுமுனுத்து கொண்டே சரக்கு வாங்கி குடித்தனர். "குடிகாரர்கள் தலையில் தான் கடைசியில் கை வைக்கும்" என்று புலம்பிக் கொண்டே சரக்கு வாங்கியதை காண முடிந்தது.

    சென்னை உள்ளிட்ட அனைத்து நகரப் பகுதிகள், கிராமப்புறங்களில் மது பிரியர்கள் மதுபானங்களின் விலையை கேட்டு 'ஷாக்' ஆனார்கள். ஆனாலும் கடைகளில் கூட்டம் குறையவில்லை. கடைகள் இன்று திறந்ததும் சரக்கு வாங்குவதற்கு காத்து நின்றனர்.

    கூலி தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் வேதனையுடன் புலம்பலை காண முடிந்தது.

    • பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.
    • இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. ஆானலும் தேவை அதிகமாக இருப்பதால் மத்தியபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    ஆண்டு தோறும் ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும். இதனால் ஜனவரி இறுதியில் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு விற்கப்படும்.

    தமிழகத்தில் பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபாஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது பூண்டு வரத்து சீசன் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை அதிகமாகவே உள்ளது.

    முதல் தர பூண்டுகள் கடந்த 2 மாதங்களாக 350 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே வாங்கி செல்கிறார்கள். சேலம் மொத்த சந்தைகளில் இருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்பட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு பூண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் அறுவடை காலம் தொடங்கியும் வட மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணமாக வழக்கத்தை விட 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால் விலை இன்னும் 350 ருபாயாக நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இனி வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், அடி சுந்தரவாடா பஸ் நிலையத்தில் இருந்து உட்னூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் கான் என்ற கண்டக்டர் பணியில் இருந்தார்.

    அப்போது அன்ஸ்னாபூரை சேர்ந்த அசிம் கான் என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கினார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசிம்கானுக்கு சீட் கிடைக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.

    இதையடுத்து கண்டக்டர் பணத்தை திருப்பி கொடுத்து அசின் கானை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார்.

    அப்போது அசிம் கான் கண்டக்டரை தாக்கினார். அவரை கீழே தள்ளி கன்னத்தைக் கடித்து துப்பினார்.

    இதில் கண்டக்டரின் கன்னத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    அசிம் கானை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிஞ்சா வகை ஆமைகள் சென்னையின் ஏரிகளை ஆக்கிரமித்துள்ளன.
    • அதிக பராமரிப்பு தேவையில்லை மற்றும் பாசி வளர்ச்சியை சாப்பிட்டு தொட்டியை சுத்தமாக வைத்திருக்கும்.

    திருப்பதி:

    வீடுகளில் செல்ல பிராணியாக கண்ணாடி தொட்டிகளில் சிறிய வகையான வண்ண வண்ண மீன்கள் ஆசை ஆசையாக வளர்க்கப்படுகின்றன.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த வகையான மீன்களை ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி வருகின்றனர்.

    வீடுகளில் வளர்க்கப்படும் மீன்கள் குறித்து ஐதராபாத்தை தலைமை இடமாகக் கொண்ட செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் ஆராய்ச்சியாளர் கோபி கிருஷ்ணா ஆய்வு ஒன்றை மேற்கொண்டார்.

    தங்க மீன்கள் மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கேட் பிஸ் என்று அழைக்கப்படும் டேங்க் கிளீனர் இந்தியாவில் உள்ள மீன் வளர்ப்பு ஆர்வலர்களிடையே பிரபலமாக உள்ளது ஏனெனில் அதிக பராமரிப்பு தேவையில்லை மற்றும் பாசி வளர்ச்சியை சாப்பிட்டு தொட்டியை சுத்தமாக வைத்திருக்கும்.

    ஒருவேளை மீன் வளர்ப்பவர்கள் மீன் வளர்க்க தேவையில்லை என்ற முடிவு செய்தால் அவர்கள் வளர்த்துள்ள தங்க மீன்களை அருகில் உள்ள ஏரி குளங்களில் விட்டு விடுகின்றனர்.

    2 அடி அங்குலத்தில் ஏரி குளங்களில் விடப்படும் வளர்ப்பு மீன்கள் அடுத்த 2 மாதங்களில் விரைவாக அசுர வளர்ச்சி பெற்று 2 அடி நீளம் வரை வளர்ந்து விடுகிறது. மேலும் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்து விடுகின்றன.

    இதனால் ஏரி குளங்களில் உள்ள உள்ளூர் மீன்களை அழித்து விடுகிறது. நிஞ்சா வகை ஆமைகள் சென்னையின் ஏரிகளை ஆக்கிரமித்துள்ளன,

    இப்போது மற்ற தென் மாநிலங்களில் உள்ளூர் நீர் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சத்திற்காக மாறி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    • உறவினர்களின் அழுகை சத்தத்தை கேட்டு இறந்ததாக கருதப்பட்ட வாலிபர் கண் திறந்து பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது
    • மணப்பாறை அருகே அதிர்ச்சி தந்த சம்பவம்

    மணப்பாறை, 

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணூத்து அருகே உள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிநாயக்கர். (வயது 23). இவர் கடந்த சில தினங்க ளுக்கு முன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது. இதைய டுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப் பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த் துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை, மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்படி மருத்துவ மனை நிர்வாகம் அறிவுறுத்தி யதாக கூறப்படுகிறது. ஆனால் ஆண்டி நாயக்கர் குடும்பத்தினர் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்ற னர். வீட்டின் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவர், அசைவற்ற நிலையில் இருந்ததால் இறந்து விட்டதாக கருதி, உறவி னர்கள் கதறி அழுதனர். இந்த நிலையில் அனைவரின் அழுகுரல் கேட்ட வாலிபர் கண்ணை திறந்து பார்த்தார். இதனை பார்த்த உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அக்கம் பக்கத்தில் பரவவே அனைவரும் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் மற்றும் வருவாய்துறையினரும் அங்கு வந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆண்டி நாயக்கரை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கணேஷ் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • போலீசாருக்கு தலைமறைவான கணேஷ் உறவினர்கள் திருமணம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் அருளரசு (வயது 48). இவருக்கும் கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த கணேஷ் (வயது 39) என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 2014 -ம் ஆண்டு கணேஷ், அருளரசை வெட்டி கொலை செய்தார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷை கைது செய்தனர். பின்னர் கணேஷ் கடந்த 2015 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியில் வந்தார். வெளியில் வந்த கணேஷ் அதன் பிறகு தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து போலீசார் தலைமறைவான கணேஷை தேடி வந்தனர். கணேஷ் குறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்து வருவதாக நீதிமன்றத்தில் கணேஷ் உறவினர்கள் வழக்கு தொடர்ந்து தேவையின்றி விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவு பெற்றனர். இந்த நிலையில் போலீசார் தொடர்ந்து கணேஷை தேடி வந்த நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக எங்கு சென்றார் என தெரியாத நிலையில் மீண்டும் அவர்களது உறவினரிடம் கேட்டபோது கணேஷ் இறந்துவிட்டதாக தகவலும் தெரிவித்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு தலைமறைவான கணேஷ் உறவினர்கள் திருமணம் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.

    இதில் கணேஷ் உறவினர்கள் திருமண பத்திரிக்கையில் கணேஷ் பெயர் இடம் பெற்றது. ஆனால் அதில் இறந்தது போல் எந்த தகவலும் பதிவு செய்யவில்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து கணேஷ் உறவினர்களின் போன் நம்பரை ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். இதில் ஒரு நம்பருக்கு அடிக்கடி ஆந்திர மாநிலத்தில் இருந்து போன் வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக குறிப்பிட்ட நம்பரை கண்காணிக்க தொடங்கினர். மேலும் அது யாருடைய நம்பர்? அவர் யார்? என்று பார்த்தபோது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது. அந்த நம்பரை பயன்படுத்தி வந்தது கணேஷ் என்பது உறுதியாக தெரிந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப் -இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் ரகசியமாக கடந்த6 மாதமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் கடன் பெற்றிருந்ததும், அதன் மூலமாக அந்த பகுதியில் வசித்து வந்ததும் போலீசாருக்கு உறுதியாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலூரில் இருந்து தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கணேஷ் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் கடலூர் புதுநகர் ேபாலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 9 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த கொலை வழக்கு கைதியான கணேஷை போலீசார் பிடித்ததை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினர்.

    • பூர்ணிமா விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பூர்ணிமா என்ன ஆனார் ? எங்கு சென்றார் ? யாரேனும் இவரை கடத்தி சென்றனரா ?

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் பூர்ணிமா (வயது 18). இவர், விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பூர்ணிமாவை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பூர்ணிமாவின் தந்தை பாஸ்கரன் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல்ேபான பூர்ணிமா என்ன ஆனார் ? எங்கு சென்றார் ? யாரேனும் இவரை கடத்தி சென்றனரா ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த விவசாய நிலத்தில் கொட்டாய் போட்டு ஆடுகள் வளர்த்து வருகிறார்கள்.
    • மறுநாள் காலை வந்து பார்த்த போது 3 ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது .

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஏ வாசுதேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே கிராமத்தை சேர்ந்த அழகரசன் என்பவரது விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வருகிறார். அந்த விவசாய நிலத்தில் கொட்டாய் போட்டு ஆடுகள் வளர்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆடுகளை மேச்சலுக்கு விட்டு முடித்துக் கொண்டு வழக்கம்போல் இரவு விவசாய நிலத்தில் உள்ள கொட்டாயில் கட்டி விட்டு அருகில் உள்ள இவரது வீட்டிற்கு தூங்கச் சென்று விட்டனர். மறுநாள் காலை வந்து பார்த்த போது 3 ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது . இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் அனைத்து இடங்களிலும் தேடியும் எங்கேயும் கிடைக்கவில்லை. திருட்டு போன ஆடுகளின் மதிப்பு 40 ஆயிரம் என தெரிய வருகிறது. 

    • சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவிகளின் விடுதியில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அலுவலகத்தை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சரவணா நகரில் அமை ந்துள்ள தனியார் பள்ளி மாணவிகள் விடுதியின் ஒருங்கிணைப்பாளராக பரமேஷ்வரன் மகன் சேவா (வயது 58) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 8-ந்தேதி அன்று பணி நிமித்தமாக விடுதியில் உள்ள அலுவலகத்தை பூட்டிவிட்டு கோயமுத்தூர் சென்றார். மீண்டும் 10-ந்தேதி திரும்பி வந்து அலுவலகத்தை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது எல்.இ.டி. டிவி, ஸ்மார்ட் போன், தங்க நாணயங்கள், விலையுயர்ந்த டார்ச் லைட், ரூ.3 ஆயிரம் ஆகியன திருடு போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் கனியாமூர் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார், போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில், கனியாமூர் வடக்கு வீதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 39) என்பதும், மாணவிகள் விடுதியில் பணம் மற்றும் பொருள்களை திருடியதும் தெரியவந்தது. மேலும், சின்னசேலம் ராஜேஸ்வரி தியேட்டரில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்த 56.50 லட்சம் பெண்களின் மனுக்களை நிராகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
    • அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    மதுரை

    மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி கூறியதாவது:-

    புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றி னார்கள். கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அவல நிலையை உருவாக்கியுள்ளனர்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்பொழுது ஒரு கோடியே 63 லட்சம் மக்களிடத்தில் மனுக்களை பெற்று இதில், ஒரு கோடியை 6 லட்சம் பேருக்கு தான் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். 56.50 லட்சம் மனுக்களை தள்ளுபடி செய்தனர் இதனால் விண்ணப்பித்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு கோடியே 98 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி திட்டத்தை வழங்கினார். அதேபோல் அனைத்து குடும்பங்க ளுக்கும் மிக்சி கிரைண்டர் வழங்கினார். 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்க ணினி வழங்கப்பட்டது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாக அதி.மு.க. அரசு இருந்தது .ஆனால் கொடுத்த வாக்கு றுதியை நிறைவேற்றாமல் முரண்பட்ட அரசாக தி.மு.க. ஆட்சி இருக்கிறது.

    கல்வி கடனை ரத்து செய்வோம், ஐந்து பவுன் நகைஅடகு வைத்தால் ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து கூறினார்கள் ஆனால் எதையும் நிறைவேற்ற வில்லை.

    அனைத்து மக்களையும் சமமாக பார்ப்பேன் என்று பதவி பிரமாணம் ஏற்றுஇன்றைக்கு இறையாண்மைக்கு எதிராக உதயநிதி பேசுவதால் அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    நான் டெல்டாக்காரன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் இன்றைக்கு விவசாயிகளை நடுரோட்டில் நிற்க வைத்து விட்டார் .இன்றைக்கு சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, இதற்கு தீர்வு காணாமல் அதை திசை திருப்ப சனாதனம் பற்றி உதயநிதி பேசுகிறார்.இதற்கு ஆதரவாக ஸ்டாலின் திராவிட தலைவர்களை ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×