என் மலர்
உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே கடைக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் திடீர் மாயம்
- செஞ்சி அருகே கடைக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவன் திடீர் மாயமானார்.
- கடைவீதிக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவன் மீண்டும் விடு திரும்பவில்லை.
விழுப்புரம்:
செஞ்சி அருகே அனந்தபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன். அவரது மகன் சூர்யா (வயது 15).அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மன்தினம் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தவன் மாலையில் கடைவீதிக்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றவன் மீண்டும் விடு திரும்ப வில்லை.அதிர்ச்சி அடைந்த மோகன் தனது மகனை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் மோகன் கிடைக்கவில்லை. இது குறித்து மோகன் அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சூர்யா என்ன ஆனார், எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






