search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகண்டை கூட்டுரோடு அருகே  மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
    X

    மின்சாரம் தாக்கி பலியான செல்வராஜ்.

    பகண்டை கூட்டுரோடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

    • அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் செல்வராஜை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர்.
    • இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு அருகே மரூர்மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 54) விவசாயி. இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் செல்வராஜ் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் செல்வராஜை தேடி விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது மின்சாரம் தாக்கி செல்வராஜ் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜின் குடும்ப த்தினர் இது குறித்து பகண்டை கூட்ரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சூர்யா, சோலை ஜெயராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செ ல்வராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறி த்து போ லீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×