search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே நண்பரை பார்க்க சென்ற கல்லூரி மாணவி திடீர் மாயம்
    X

    கடலூர் அருகே நண்பரை பார்க்க சென்ற கல்லூரி மாணவி திடீர் மாயம்

    • கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெங்கடாம்புரம் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று தனது நண்பரை பார்ப்பதற்காக வடலூர் பகுதிக்கு 17 வயது கல்லூரி மாணவி செல்வதாக தனது பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு சென்றார். இந்த நிலையில் கல்லூரி மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாயமான மாணவியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து வடலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×