என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் இருந்த 14 பவுன் நகைகள் திருட்டு
- தன்னுடைய வீட்டில் அாிசி பையில் தனது நகைகளை வைத்திருந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதாக்கோட்டை மேல தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர்.
இவரது மனைவி ஜெசிந்தா (வயது 49). இவர் தன்னுடைய வீட்டில் அாிசி பையில் தனது நகைகளை வைத்திருந்தார்.
இந்த நிலையில் வீட்டில் அரிசி பையில் வைத்திருந்த நகையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் நகையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து அவர் 14 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்று விட்டதாக தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 14 பவுன் நகையை யாரும் திருடி சென்று விட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






