என் மலர்
நீங்கள் தேடியது "porsche car"
- இந்த வேரியண்ட் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டும்.
- இரண்டு மாடல்களும் டூயல் மோட்டார் AWD சிஸ்டம் கொண்டுள்ளன.
போர்ஷே நிறுவனம் தனது மின்சார கார் சீரிசை விரிவுபடுத்தியுள்ளது. போர்ஷே கயென் எலெக்ட்ரிக், சில தசாப்தங்களுக்கு முன்பு வந்த முதல் கயென் காரைப் போலவே மிகவும் கவர்ச்சிகரமானது. டெய்கான் மற்றும் மக்கான் EV போலவே, கயென் EVயும் எண்ணிக்கையில் மிகையானது.
இந்தியாவில் புதிய போர்ஷே எலெக்ட்ரிக் கார் விலை ரூ.1.75 கோடி மற்றும் டர்போ வெர்ஷன் ரூ.2.25 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த டர்போ டியூனில், இது 1156hp பவர் மற்றும் 1500 Nm டார்க் உருவாக்குகிறது. மேலும் பூஸ்ட் மோடில் 2.5 நொடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை எட்டும். ஸ்டான்டர்டு வேரியண்ட் 440hp பவர், 835Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த வேரியண்ட் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டும்.

இரண்டு மாடல்களும் டூயல் மோட்டார் AWD சிஸ்டம் கொண்டுள்ளன. மேலும், அளவில் பெரிய 113kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகின்றன. இது முழு சார்ஜ் செய்தால் 642 கிலோமீட்டர் ரேஞ்ச் வழங்கும். மேலும் 400 kW வரை ஃபாஸ்ட் சார்ஜ் வசதியும் கொண்டுள்ளது. இது "வயர்லெஸ் சார்ஜிங்" உடன் வரும் முதல் போர்ஷே கார் ஆகும்.
- முழு கருப்பு தோற்றத்துடன் செல்ல, 21-இன்ச் ஏரோடைனமிக் சக்கரங்களும் கிளாஸ் பெயின்ட் தீம் பெற்றிருக்கிறது.
- இரண்டு மோட்டார்கள் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை விநியோகிக்கிறது.
போர்ஷே நிறுவனம், Taycan 4S பிளாக் எடிஷனை அறிமுகப்படுத்தி, அதன் பிளாக் எடிஷன் மாடல்களின் வரம்பை விரிவுபடுத்தியுள்ளது. புதிய கார் ரூ. 2.07 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த காருடன் வரும் இதர ஆப்ஷனல் பேக்கேஜ்களை தேர்வு செய்தால், இந்த விலை மேலும் அதிகரிக்கும்.
கெய்ன் பிளாக் எடிஷனைப் போலவே, Taycan 4S காரின் நிலையான மாடலோடு ஒப்பிடும்போது வெளிப்புற மற்றும் உட்புற மாற்றங்களைப் பெறுகிறது. வெளிப்புற வடிவமைப்பில் தொடங்கி, போர்ஷே Taycan S பிளாக் எடிஷன், ஏப்ரான், சைடு ஸ்கர்ட்ஸ், ரியர் டிஃப்பியூசர் மற்றும் ORVM இன் கீழ் பகுதி உள்ளிட்ட முன்பக்கத்தில் பல பகுதிகளில் ஹை-கிளாஸ் பிளாக் பெயின்ட் செய்யப்பட்டு இருக்கிறது.
விஷயங்களை இன்னும் சிறப்பானதாக்க, நிறுவனம் பேட்ஜ்கள் மற்றும் எழுத்துக்களையும் கருப்பு நிறமாக்கியுள்ளது. முழு கருப்பு தோற்றத்துடன் செல்ல, 21-இன்ச் ஏரோடைனமிக் சக்கரங்களும் கிளாஸ் பெயின்ட் தீம் பெற்றிருக்கிறது. ஹெட்லேம்ப்களும் ஸ்மோக்டு எஃபெக்ட் பெறுகின்றன.
Taycan 4S பிளாக் எடிஷன் 13 வெளிப்புற வண்ணத் தேர்வுகளுடன் தரநிலையாக வருகிறது - பிளாக், வைட், ஜெட் பிளாக் மெட்டாலிக், ஐஸ் கிரே மெட்டாலிக், வொல்கனோ கிரே மெட்டாலிக், டோலமைட் சில்வர் மெட்டாலிக், ஜெண்டியன் புளூ மெட்டாலிக், கார்மைன் ரெட், புரோவென்ஸ், நெப்டியூன் புளூ, ஃபுரோசன் பெர்ரி மெட்டாலிக், ஃபுரோசன் புளூ மெட்டாலிக் மற்றும் பர்பிள் ஸ்கை மெட்டாலிக் ஆகியவை அடங்கும்.

உள்ளே, Taycan 4S பிளாக் எடிஷன் தோற்றம் அதன் ஸ்டாண்டர்டு மாடலைப் பிரதிபலிக்கிறது. மேலும் பிளாக் எடிஷன் கருப்பு நிறத்தில் இரண்டு Race-tex (Alcantara/leatherette) உட்புற அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களையும், இரண்டு திடமான லெதர் தேர்வுகளையும் வழங்குகிறது. டூயல்-டோன் இன்டீரியர் வடிவமைப்புகள் விரும்புவோர் தேர்வு செய்யக்கூடிய ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
அம்சங்களின் பட்டியலில் பனோரமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா, ADAS சூட், 14 வழிகளில் பவர்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற இருக்கைகள், 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் 710 வாட் திறன் கொண்ட 14-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும்.
பிளாக் எடிஷனின் பவர்டிரெய்ன் ஸ்டான்டர்டு Taycan 4S ஐப் போன்றே, 105kWh பேட்டரி பேக் (WLTP வரம்பு 668 கிமீ) கொண்டுள்ளது. மேலும் இரண்டு மோட்டார்கள் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை விநியோகிக்கிறது. இவை ஒன்றாக அதிகபட்சமாக 598 hp திறன் மற்றும் 710 Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.
இது காரை 3.7 வினாடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும். மேலும் 320kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தி பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும்.
- குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார்.
- ர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகி வரும் நிலையில், சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதாக என்று கண்டறிய எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை திரிக்க முயன்றதாக சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- சிறுவன் 2 பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
- சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் சிறுவனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளார்.
இவ்விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது மகனின் ரத்தத்தை மருத்துவமனையில் மாற்றிய தாய் ஷிவானி அகர்வாலை போலீசார் தேடி வருகின்றனர்
இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.
- சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
- மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளளது அம்பலமாகியுள்ளது.
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்து வைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளளது அம்பலமாகியுள்ளது. முன்னதாக இவ்விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஷிவானி அகர்வாலை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறுவனின் தந்தை மற்றும் தாத்தாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனது மகன் மது அருந்துவது போன்று வெளியாகியுள்ள வீடியோ போலியானது என்று ஷிவானி வீடியோவில் பேசி குறிப்பிடத்தக்கது.






