என் மலர்
நீங்கள் தேடியது "blood samples"
- பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் முககவசம் அணிந்து செல்ல சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- 38 மாவட்டங்களில் 10 முதல் 20 ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.
காய்ச்சலுடன் சேர்ந்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி ஆகிய பாதிப்புகளும் காணப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களில் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பே அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் 38 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் ஆகியவற்றில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து சுகாதாரத்துறை ஆய்வு செய்ய உள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளூயன்சா ஏ வகை தொற்று என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வேறு எதுவும் தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
38 மாவட்டங்களில் 10 முதல் 20 ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 450-க்கும் மேற்பட்ட மாதிரிகளை எடுத்து ஆய்வு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
- 9 ஆயிரத்து 688 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
- இரவு நேரங்களில் மட்டும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
கோவை
தமிழகத்தில் யானைக்கால் பாதிப்பு குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, கோவை மாவட்டத்தில் 12 வட்டாரங்கள், மாநகராட்சிப் பகுதிகள், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய 3 நகராட்சிகள் என மொத்தமாக 16 இடங்களில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 9 ஆயிரத்து 688 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதன் பரிசோதனை முடிவுகள் சமீபத்தில் பெறப்பட்டதில் யாருக்கும் யானைக்கால் பாதிப்பில்லை என்பது தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர்அருணா கூறியதாவது:-
யானைக்கால் நோய் பாதிப்பு கொசுக்கள் மூலம் ஏற்படுகிறது. இதன் பாதிப்பு உள்ளவா்களுக்கு இரவு நேரங்களில் மட்டும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இரவு நேரங்களில் மட்டுமே யானைக்கால் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் ரத்தத்தில் காணப்படும். இந்நிலையில் யானைக்கால் நோய் பாதிப்பு குறித்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட 16 இடங்களில் இரவு நேரங்களில் ஆய்வு செய்து 9 ஆயிரத்து 688 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்களை கண்டறிந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வுக் கூடங்களில் பரிசோதனை செய்யப்பட்டன.
அதன் பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் கோவையில் 9 ஆயிரத்து 688 பேரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் ஒருவருக்கு கூட யானைக்கால் பாதிப்பு இல்லை என்ற முடிவு கிடைக்கப் பெற்றுள்ளது.
மேலும் யானைக்கால் பாதிப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் அறிகுறிகள், பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரை க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
- மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளளது அம்பலமாகியுள்ளது.
புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்து வைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.
சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.
மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளளது அம்பலமாகியுள்ளது. முன்னதாக இவ்விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஷிவானி அகர்வாலை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறுவனின் தந்தை மற்றும் தாத்தாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தனது மகன் மது அருந்துவது போன்று வெளியாகியுள்ள வீடியோ போலியானது என்று ஷிவானி வீடியோவில் பேசி குறிப்பிடத்தக்கது.






