search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Experiment"

    • அவைகளை சேகரித்த போலீசார் பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தனர்.
    • மூலிகை பொடி கொடுத்து கொலை செய்து வீட்டில் பின்புறம் புதைத்துள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி (வயது 47).

    இவரிடம் அதே பகுதியை சேர்ந்த அசோக்ராஜ் (27) என்பவர் சிகிச்சைக்காக சென்றார்.

    அப்போது மூலிகை மருந்து கொடுத்து அசோக்ராஜூடன், கேசவமூர்த்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். அப்போது அசோக்ராஜ் மயங்கி விழவே அவரை கொலை செய்து வீட்டில் புதைத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து நேற்று முன்தினம் கேசவமூர்த்தி வீட்டில் பள்ளம் தோண்ட தோண்ட எலும்பு துண்டுகள் கிடைத்தன.

    அவைகளை சேகரித்த போலீசார் பரிசோதனைக்கா தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில்

    கூறியிருப்பதாவது:-

    கைது செய்யப்பட்ட போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி ஓரினச்சேர்க்கை பழக்கம் உடையவர். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருணம் ஆகியுள்ளது. குழந்தையின்மையால் இருவரையும் பிரிந்து வாழ்ந்தார். சென்னையில் கட்டிடப்பணி அசெய்து வந்த காலத்தில் நாட்டு வைத்தியர் ஒருவரிடம் உதவியாளராக பணியாற்றியதில் நாட்டுவைத்தியம், மூலிகை செடிகள் பற்றி தெரிந்து கொண்டு சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்து தானும் மருத்துவர் தான் என கூறி சித்த வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.

    குறிப்பாக இளைஞர்களுக்கு போதை மற்றும் பாலுணர்வை தூண்டும் மருள் ஊமத்தை செடியால் தயாரித்த மூலிகைப் பொடியை கொடுத்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அசோக்ராஜீடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அசோக்ராஜ், தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்வதாக கூறியுள்ளார். எனவே இனி அவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முடியாது என கருதிய கேசவமூர்த்தி, அசோக்ராஜை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 13-ந் தேதி இரவு அளவுக்கதிகமாக மூலிகை மருந்தை கொடுத்து மயங்கிய நிலையில் அசோக்ராஜை கொலை செய்து உடல் பாகங்களை தனிதனியே அறுத்து வீட்டின் பின்புறம் , கழிவறை உள்ளிட்ட இடங்களில் புதைத்துள்ளார். தற்போது உடல்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சோழபுரத்தில் காணாமல் போன முகமது அனாசுடனும், கேசவமூர்த்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அசோக்ராஜ் போலவே முகமது அனாசும், ஒரு பெண்ணை திருமணம் செய்யும் முடிவை கேசவமூர்த்தியிடம் தெரிவித்தார். இதனால் கேசவமூர்த்தி ஆத்திரம் அடைந்து முகமது அனாசுக்கு மூலிகை பொடி கொடுத்து கொலை செய்து வீட்டில் பின்புறம் புதைத்துள்ளார்.

    பின்னர் சிறிது நாட்களுக்கு பின் புதைத்த இடத்தை தோண்டி எலும்புகளை சுடுகாட்டில் வீசிவிட்டு தாடை, எலும்பு, வெள்ளி செயின் இரண்டை மட்டும் எடுத்து வீட்டினுள் மறைத்து வைத்திருந்தார். இதனால் முகமது அனாஸ் மாயமான வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

    மேலும் கேசவமூர்த்தியிடம் சிகிச்சை பெற்ற நபர்கள், அவருடன் தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு விசாரணை நடத்து வருகிறது. மேலும் கேசவமூர்த்தியிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கருப்பை, வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • முடக்கத்தான் அடை மற்றும் தினை லட்டு போன்றவை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு மருந்துத்துறை இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு இன்று மருத்துவ முகாமை நடத்தியது. புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் கருணாநிதி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இம்முகாமினை கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இம்முகாமில் தஞ்சாவூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருதய மருத்துவம், நுரையீரல் , காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பிரிவுகளும், ஹூமோகிளோபின், இரத்த வகை கண்டறிதல், சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, இ.சி.ஜி. ஸ்கேன், கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மருத்துவ குழுவினரால் 250 தூய்மை பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு ஆசோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 43 தூய்மை பணியாளர்கள் மருத்துவர்களால் மேற்பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதனைதொடர்ந்து இயற்கை யோக தினமான இன்று ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யாபழம், வாழைப்பழம், நெல்லிக்காய், ஊட்டச்சத்து பொடி, உலர்ந்த திராட்சை மற்றும் முந்திரி உள்ளிட்டவை அடங்கிய "நலவாழ்வு பைகள்" முகாமில் பங்கேற்ற தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் நிலவேம்பு குடிநீர், மூலிகை தேநீர், பானகம், சிவப்பு அவுல், முளைகட்டிய பயிர் வகைகள், முடக்கத்தான் அடை மற்றும் தினை லட்டு போன்றவை வழங்கப்பட்டது.

    மேலும் கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றமைக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், மருத்துவர் முத்துகுமாருக்கு சுழற்கேடயத்தை வழங்கினார். கரந்தை, மகர்நோம்புசாவடி, சீனிவாசபுரம் சிறப்பிடம் பெற்றதற்காகவும் மருத்துவ குழுவினருக்கு பாரா ட்டுகளை தெரிவித்தார்.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாநகராட்சி மாநகர்நல அலுவலர் டாக்டர். சுபாஷ் காந்தி தலைமையிலான மருத்துவர்கள் செய்திருந்தனர்.

    • லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.
    • பிேரத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 63) விவசாயி.

    சம்பவத்தன்று இவர் தான் வளர்த்து வரும் மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டிலிருந்து ஓட்டி சென்றார்.

    சிறிய தூரம் சென்றபோது மாடு திடீரென மிரண்டு ஓட தொடங்கியது.

    இதையடுத்து மாட்டை பிடிப்பதற்காக அண்ணா துரை பின் தொடர்ந்து ஓடினார்.

    அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணாதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரமேஷ் அதே ஊரில் தனியாக டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.
    • விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் மகன் ரமேஷ் (42). இவர் அதே ஊரில் தனியாக டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார்.இவர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக திருக்கனூர் சென்று விட்டு காப்பியம் புலியூர் செல்வதற்காக பனையபுரம் கூட்டுச்சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிசென்ற லாரி இவர் மீது மோதியதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    இந்த தகவல் அறிந்து விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரமேஷின் தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இ.சி.ஜி., ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • முடிவில் ஊராட்சி துணை தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

    சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் வட்டார மருத்துவர் டாக்டர் கிளின்டன், ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி செயலர் உமாபதி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. யுமான நிவேதா முருகன் முகாமை திறந்து வைத்து பெசினார்.

    முகாமில் கண் பரிசோதனை, சக்கரை நோய் கண்டறிதல், ஹெச்.ஐ.வி. சோதனை கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தல், இ சி ஜி, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கர், திமுக துணைத் தலைவர் செல்வமணி, ஒன்றிய செயலாளர்கள் இமயநாதன், முருகமணி, மற்றும் நடராஜன், செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் சுகாதார அலுவலர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    • முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
    • பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும்.

    ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

    இதற்காக ககன்யான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கி.மீ. தொலைவுள்ள புவிதாழ் வட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரா்களை அனுப்பி, அவா்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாகத் திருப்பி அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

    இந்தத் திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    அதன்படி, முதல்கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. மனிதா்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் மாதிரி கலனை தரையில் இருந்து 17 கி.மீ. தொலைவு வரை அனுப்பி மீண்டும் அதை பாதுகாப்பாக பூமிக்கு கொண்டு வந்து வங்கக் கடலில் இறக்கப்படும். அங்கிருந்து கலன் மீட்கப்படும்.

    இதற்காக கவுண்ட்டவுன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தச் சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டா் திறன் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. பூமியில் இருந்து புறப்பட்டு சுமாா் 17 கி.மீ. உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாக பிரிந்துவிடும். அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக் கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும்.

    கடல் நீரில் கலன் விழுந்த உடன் இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினா் அதை மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில், அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வாா்கள். ககன்யான் திட்டத்தின் வெற்றிக்கு பிறகு, 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.

    • குடும்ப பிரச்சனை காரணமாக மனவேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது.
    • பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே பண்டாரவாடை வர்ணதைக்கால் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி ஹவ்ரா பீவி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது.

    சம்பவதன்று குடும்ப பிரச்சனை காரணமாக மன வேதனையில் ஹவ்ராபீவி இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஹவ்ராபீவி சேலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து ஹவ்ரா பீவி தம்பி முகமது காசிம் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குபதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஹவ்ராபீவிக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆவதால் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள கீழக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48) விவசாய கூலி தொழிலாளி.

    இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் மனேவேதனை அடைந்த முருகேசன் பூச்சி மருந்தை ( விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கம்மாள் இன்று காலை மடப்பட்டு - திருக்கோவிலூர் சாலையை கடக்க முயன்றார்.
    • சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர்

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அடுத்த பெண்ணைவலம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 75). இவர் இன்று காலை மடப்பட்டு - திருக்கோவிலூர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் மூதாட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி அங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திருவெண்ணைநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர். மூதாட்டி அங்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வயலுக்கு அடிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே திருப்புறம்பியம் உச்சிகட்டளை தெருவை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 58).

    விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில், இவருக்கு கடந்த சில வாரங்களாக வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு அடிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

    தகவலறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ஆனால் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் பாக்கியராஜ் கொடுத்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • அவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.
    • பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை- திட்டைக்கு இடையே உள்ள ரெயில்வே தண்டவா ளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

    இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெ க்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

    ஆனால் அவர் யார் ? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை.

    இதனைத் தொடர்ந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரயிலில் அடிபட்டு அந்த முதியவர் இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்ற பல்வேறு கோண ங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதில் ஊழியர்கள், செவிலியர்கள் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • 77 சதவீத சலுகையில் மூத்தகுடி மக்களுக்கு சிறப்பு உடல் பரிசோதனை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் தேசியக்கொடி ஏற்றிவைத்தார்.

    நிகழ்ச்சியில் மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர்.சரவணவேல், நரம்பியல் சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர். காமேஷ் அருண், மேலாளர்கள், ஊழியர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    மேலும், 77-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் 77 சதவீத சலுகையில் மூத்தகுடி மக்களுக்கு சிறப்பு உடல் பரிசோதனை இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    ×