என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Experiment"

    முகாமில் கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ ஆலோ சனை முகாம் நடைபெற்றது.

    முகாமை, ராஜகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஜெம் மருத்துவமனை இயக்குனரும், குடல்நோய் மருத்துவ நிபுணருமான செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். முகாமில், மகளிர் நலம், வயிற்றுக்கோளாறு, உடல் பருமன், குடலிரக்கம், கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் சம்பந்தமானபிரச்னை களால் பாதிக்கப்ப ட்டவ ர்களுக்கு பரிசோத னைகள் மேற்கொ–ள்ள ப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    மேலும் முகாமில் எண்டோஸ்கோப்பி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைதேவைப்ப டுவோர்க்கு 50 சதவீதம் வரை சிறப்பு சலுகைகள் வழங்க ப்படவுள்ளது. நிகழ்ச்சியை ஜெம்ம ருத்து– வமனை, மயிலா டுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் குத்தாலம் ஸ்ரீஆதிச ங்கரர் பேரவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பாலச்சந்திர சிவச்சாரியார், ஏ.ஆர்.சி. விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொன்டனர்.

    • பொது மருத்துவ பிரச்சினைகளுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
    • 40 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் தீபம் மருத்துவமனை, சாந்தி நகர் நலசங்கம் இணைந்து மக்களை தேடி இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நகர் வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமில் சாந்தி நகர் நலச்சங்க செயலாளர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார்.

    தீபம் நிர்வாக இயக்குனர் நஜீபுதீன், நகர நல பொருளாளர் ஜாபர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் பொது மருத்துவ பிரச்சினைகளுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    பெண்களை பரிசோதிப்பதற்கென பெண் மருத்துவ குழுவினர் டாக்டர் மஞ்சு தலைமையில் கலந்துகொண்டனர்.

    40 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.

    மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவமனைக்கு உரியமுறையில் பரிந்துரைக்கப்பட்டது.

    முகாமில் சாந்தி நகர் நல வாசிகள், தீபம் நிர்வாக அலுவலர் சரவணன், மருத்துவமனை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில், 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • ரத்த பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி, கொசுக்களை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்தது. தொடர்ந்து ஒரு வாரமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் காய்ச்சல் குறையவில்லை.அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு செய்யப்பட்ட ரத்த பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவர் பன்றி காய்ச்சலில் இருந்து குணமடைந்து வருகிறார்.

    இன்னும் மூன்று தினங்களில் வீடு திரும்புவார் என்று கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.

    பன்றிக்கா ய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மாங்கனாம்பட்டு கிராமத்துக்கு கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் வட்டார சுகாதார ஆய்வாளர் கொளஞ்சியன், சுகாதார ஆய்வாளர்கள் கருணாகரன், சுந்தரம், வெங்கட்பிரசாத், பவித்திரன், இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ்,

    துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் சுகாதார ஊழியர்கள் சென்று ஆய்வு செய்து அப்பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி அப்பகுதியில் சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும், கொசுக்களை அழிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • முகாமில், இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
    • ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இருதய நோய்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமை சூரியனார்கோயில் ஆதீனகர்த்தர் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர் தனலெ ட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் குத்தாலம் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய இந்த முகாமில், இதய நோய், நுரையீரல் ரத்த அழுத்த நோய், இருதய தசைநார் நோய், பிறவி இருதய குறைபாடு மற்றும் இருதயம் தொடர்பான அனைத்து நோய்களுக்கு இலவச பரிசோதனை நடத்தப்பட்டது.

    மேலும், முகாமில், இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ள ப்பட்டன.

    இதில், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு குத்துவிள க்கேற்றி முகாமை தொடங்கி வைத்து அருளாசி கூறினார்.

    அவருக்கு நிர்வாகிகள் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

    முகாமில் முதியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதில், குத்தாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் சங்கீதா மாரியப்பன், பேரூராட்சி உறுப்பினர் சுகன்யா சுரேஷ், குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் மகாலிங்கம் மற்றும் சின்னதுரை,தனலட்சுமி சீனிவாசன் ஒருங்கிணைப்பாளர் அன்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மழைக்காலங்களில் ஆடுகளை நனைய விடாமல் பாதுகாப்பாக கொட்டகை அமைத்து பரண் போன்று பலகைகள் போட்டு பாதுகாத்திட வேண்டும்.
    • மூன்று மாதத்திற்கு ஒரு முறை கால்நடை மருத்துவமனை சென்று ஆடுகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் ஆடுகளுக்கான ஆட்கொல்லி நோய் மற்றும் கழிசல் நோய்க்கான தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் நூற்றுக்கணக்கான ஆடுகளுக்கு டாக்டர் ராமலிங்கம் அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகளை டாக்டர் விஸ்வேந்தர் மற்றும் அவர்களது குழுவினர் தடுப்பூசி போட்டனர்.மழைக்காலங்களில் ஆடுகளை நனைய விடாமல் பாதுகாப்பாக கொட்டகை அமைத்து பரண் போன்று பலகைகள் போட்டு பாதுகாத்திடவும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை கால்நடை மருத்துவமனை சென்று ஆடுகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தினார்.

    நிகழ்வில் துணைத் தலைவர் பாக்யராஜ், செயலர் புவனேஸ்வரன், கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×