search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச மருத்துவ ஆலோசனை முகாம்
    X

    முகாமை தொழிலதிபர் ஏ.ஆர்.சி. விஸ்வநாதன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

    முகாமில் கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ ஆலோ சனை முகாம் நடைபெற்றது.

    முகாமை, ராஜகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஜெம் மருத்துவமனை இயக்குனரும், குடல்நோய் மருத்துவ நிபுணருமான செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். முகாமில், மகளிர் நலம், வயிற்றுக்கோளாறு, உடல் பருமன், குடலிரக்கம், கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் சம்பந்தமானபிரச்னை களால் பாதிக்கப்ப ட்டவ ர்களுக்கு பரிசோத னைகள் மேற்கொ–ள்ள ப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    மேலும் முகாமில் எண்டோஸ்கோப்பி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைதேவைப்ப டுவோர்க்கு 50 சதவீதம் வரை சிறப்பு சலுகைகள் வழங்க ப்படவுள்ளது. நிகழ்ச்சியை ஜெம்ம ருத்து– வமனை, மயிலா டுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் குத்தாலம் ஸ்ரீஆதிச ங்கரர் பேரவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பாலச்சந்திர சிவச்சாரியார், ஏ.ஆர்.சி. விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொன்டனர்.

    Next Story
    ×