என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு சலுகைகள்"

    • அட்சயம் என்றால் வளர்வதும், பெருகுவதும் ஆகும்.
    • மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ கிடைக்கும்‌.

    அட்சய திருதியை இந்த ஆண்டு மே 10ம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொறு ஆண்டும் சித்திரை அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய மூன்றாம் நாள் திருதியை திதியில் அட்சய திருதியை சுப தினமாக கொண்டாடப்படுகிறது.

    அட்சயம் என்றால் வளர்வதும், பெருகுவதும் ஆகும். அதனால், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் அது பெருகி வளம் சேர்க்கும். குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தரும் திருநாளாக அட்சய திருதியை போற்றப்படுகிறது.

    தர்மர் சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், இவ்வளவு ஏன் சிவபெருமான் அன்னபூரணித் தாயாரிடம் தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் இந்நாளில் தான்.

    இந்நாளில் தங்கம் மட்டும் வாங்காமல் உப்பு, அரிசி, ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

    அன்றைய தினம் கல் உப்பு. மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.நம்முடைய வீட்டில் செல்வம் பெருகும்.

    அதன்படி, மே 10ம் தேதி காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும். எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெள்ளிக்கிழமையில் அட்சய திருதியை வருவதால் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

    இரு தினமும் காலை 5.33 மணி முதல் மதியம் 12.18 மணி வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாகும்.

    இந்நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு லலிதா ஜூவல்லரி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, தங்க நகைகள் மீதான சேதாரம் ஒரு சதவீதம் குறைத்து சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வைர நகைகள் மீது கேரட்டுக்கு ரூ.5 ஆயிரம் குறைக்கப்படுகிறது.

    இந்த சலுகை கடந்த 3ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. நாளை தினம் அட்சய திரிதியை என்றாலும், இந்த சலுகை வரும் 12ம் தேதி வரை நீட்டித்து லலிதா ஜூவல்லரி அறிவித்துள்ளது.

    • லுலு ஹைப்பர் மார்க்கெட் இந்த சீசனில் இரண்டு அற்புதமான நிகழ்வுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி.
    • அனைவருக்கும் நம்பமுடியாத தள்ளுபடிகள் மற்றும் அற்புதமான போட்டிகளை வழங்குகிறது.

    லுலு ஹைப்பர் மார்க்கெட் இந்த சீசனில் இரண்டு அற்புதமான நிகழ்வுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. அதன்படி, லுலு சூப்பர் ஃப்ரைடே மற்றும் லுலு பியூட்டி திருவிழா, அனைவருக்கும் நம்பமுடியாத தள்ளுபடிகள் மற்றும் அற்புதமான போட்டிகளை வழங்குகிறது. 

    லுலு சூப்பர் ஃப்ரைடே: நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை

    எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை சாமான்கள் மற்றும் பல பொருட்கள் உட்பட பலதரப்பட்ட தயாரிப்புகளில் ஆச்சரியமூட்டும் தள்ளுபடியுடன் உங்கள் விடுமுறை ஷாப்பிங்கைத் தொடங்குங்கள்.

    அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பதற்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சரியான பரிசுகளைக் கண்டறிவதற்கும் இது சரியான வாய்ப்பு.

    தேதி: நவம்பர் 22 முதல் டிசம்பர் 1 வரை.

    சலுகைகள்: பல்வேறு வகைகளில் 50% தள்ளுபடி வரை சலுகை.

    லுலு பியூட்டி திருவிழா: நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை 

    தோல் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் தொடர்பான பொருட்களுக்கு பிரத்யேக சலுகைகளுடன் அழகு சாதணங்களை அள்ளுங்கள்.

    தேதி: நவம்பர் 28 முதல் டிசம்பர் 8 வரை

    சலுகைகள்: அழகு சாதனப் பொருட்களில் 50% வரை தள்ளுபடி.

    பியூட்டி திருவிழா போட்டிகள்: டிசம்பர் 7

    டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் லுலு பியூட்டி ஃபெஸ்ட் கோ கிளாம் போட்டியில் உங்கள் திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள். உற்சாகமான சவால்களில் பங்கேற்று, அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.

    நிகழ்வு தேதி: டிசம்பர் 7

    போட்டிகள்:

    * மெஹந்தி போட்டி: அற்புதமான மெஹந்தி வடிவமைப்பை உருவாக்குங்கள்.

    * நெயில் ஆர்ட்: உங்கள் நகத்தை படைப்பாற்றலுடன் பெயிண்ட் செய்யுங்கள்.

    * ஐலைனர் சவால்: தலைசிறந்த ஐலைனர் வடிவமைப்புகளை உருவாக்கவும்.

    நிகழ்வு தேதி: டிசம்பர் 7

    தகுதி: 15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள்

    பதிவு: நவம்பர் 28 ஆம் தேதி முதல் லுலு வாடிக்கையாளர் சேவை மேசையில் தொடங்குகிறது.

    இந்த விழாக்காலத்தை லுலு ஹைப்பர் மார்க்கெட்டுடன் உண்மையிலேயே சிறப்பானதாக மாற்றவும். மேலும் விவரங்களுக்கு லுலு ஹைப்பர்மார்க்கெட் கோயம்புத்தூரின் சமூக ஊடக சேனலை பின்பற்றுங்கள்.

    முகாமில் கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ ஆலோ சனை முகாம் நடைபெற்றது.

    முகாமை, ராஜகுமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். ஜெம் மருத்துவமனை இயக்குனரும், குடல்நோய் மருத்துவ நிபுணருமான செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். முகாமில், மகளிர் நலம், வயிற்றுக்கோளாறு, உடல் பருமன், குடலிரக்கம், கல்லீரல், கணையம், பித்தப்பை மற்றும் குடல் சம்பந்தமானபிரச்னை களால் பாதிக்கப்ப ட்டவ ர்களுக்கு பரிசோத னைகள் மேற்கொ–ள்ள ப்பட்டு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

    மேலும் முகாமில் எண்டோஸ்கோப்பி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைதேவைப்ப டுவோர்க்கு 50 சதவீதம் வரை சிறப்பு சலுகைகள் வழங்க ப்படவுள்ளது. நிகழ்ச்சியை ஜெம்ம ருத்து– வமனை, மயிலா டுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் குத்தாலம் ஸ்ரீஆதிச ங்கரர் பேரவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பாலச்சந்திர சிவச்சாரியார், ஏ.ஆர்.சி. விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொன்டனர்.

    ×