என் மலர்
நீங்கள் தேடியது "அட்சய திருதியை"
- அட்சய திருதியை நாளில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்ய பொதுமக்கள் கோரிக்கை.
- 2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது.
சென்னை:
பத்திரப்பதிவுத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மங்களகரமான நாளான நேற்று (ஏப். 30-ந் தேதி) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நேற்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.
2025-26-ம் நிதியாண்டில் இதற்கும் அதிகமாக நேற்று ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒரு நாள் வருவாய் வசூலில் இதுவரை இல்லாத அளவில் அதிக வசூல் செய்து புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது என வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தங்க வர்த்தகத்தில் 60 சதவீத வணிகம் பெங்களூருவிலும், மீதமுள்ளவை பெரும்பாலும் ஹூப்பள்ளி, மங்களூரு மற்றும் மைசூருவிலும் நடைபெற்றது.
- நேற்று ஒரு கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ராமர் உருவம் கொண்ட நாணயங்களுக்கான தேவை அதிகரித்தது.
பெங்களூரு:
அட்சய திருதியை நாளான நேற்று (புதன்கிழமை) கர்நாடக மாநிலம் முழுவதும் தங்க நகைகள் அதிகமாக வாங்கப்பட்டது. மாநிலத்தில் கிட்டத்தட்ட 2 டன் தங்கம் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.1,700 கோடி ஆகும்.
தங்க வர்த்தகத்தில் 60 சதவீத வணிகம் பெங்களூருவிலும், மீதமுள்ளவை பெரும்பாலும் ஹூப்பள்ளி, மங்களூரு மற்றும் மைசூருவிலும் நடைபெற்றது.
கடந்த ஆண்டும் மாநிலத்தில் சுமார் 2 டன் மட்டுமே வர்த்தகம் செய்யப்பட்டிருந்தாலும் விலை குறைவாக இருந்தது. கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு விற்பனை அளவு சமமாக உள்ளது.
தங்கத்திற்கான மிகப்பெரிய தேவை விலை உயர்வுக்கு வழிவகுத்தது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்குவது குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்க நாணயங்கள் மற்றும் ராமர் உருவம் கொண்ட நாணயங்களுக்கான தேவை அதிகரித்தது. கூடுதலாக, ஆன்லைன் கடைகளில் இருந்து 10 நிமிடங்களுக்குள் தங்கத்தை வாங்க முடியும் என்பதால் வாடிக்கையாளர்களுக்கு தங்கம் வாங்குவதை இன்னும் எளிதாக்கியது.
- அட்சய திருதியை தினம் அனைவர் வாழ்விலும் வெற்றி, செழிப்பு, மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.
- இந்த தினம் வளர்ந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய பலத்தை அளிக்கட்டும்.
அட்சய திருதியை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அட்சய திருதியை தினம் அனைவர் வாழ்விலும் வெற்றி, செழிப்பு, மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். இந்த தினம் வளர்ந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய பலத்தை அளிக்கட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பித்ரு கடன் தீர்க்க உகந்த நாள்.
- திருதியை திதியின் அதிதேவதை கவுரி என்பதால் பார்வதி தேவியை வழிபட்டால் திருமணத் தடை அகலும்.
அட்சய திருதி நாளில் செய்ய வேண்டிய சுப காரியங்கள்:
அட்சய திருதியை நாளான இன்று புதுக்கணக்கு தொடங்க, புதிய தொழில் துவங்க வீடு கட்ட ஆரம்பிக்க, கிணறு தோண்ட, நெல் விதைக்க, கல்வி கற்க ஆரம்பித்தல், பெண் பார்க்க, திருமணம் நிச்சயித்தல் போன்றவற்றிற்கு சிறந்த நாளாகும்.
பித்ரு கடன் தீர்க்க உகந்த நாள்.
திருதியை திதியின் அதிதேவதை கவுரி என்பதால் அன்று பார்வதி தேவியை வழிபட்டால் திருமணத் தடை அகலும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.
பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து செந்தாமரை மலர்களால் வழிபட்டால் தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.
- தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வியில் மேன்மை கிட்டும்.
- தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும்.
நமது நாட்டில் பெரும்பான்மையான பண்டிகைகள் பஞ்சாங்கத்தின் முக்கிய அம்சங்களான திதி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு அனுசரிக்கப்படுகின்றன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பிடுவது திதியாகும். பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் வளர்தல் என்று பொருள்.
அட்சய திருதியை நாளான இன்று செய்ய வேண்டிய தான தர்மங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
* கோடை வெயில் தாக்கம் தீர குடை, விசிறி, காலணி, பாய், போர்வை வழங்கினால் இன்ப வாழ்வு உண்டாகும்.
* ஆடை தானம் செய்ய மன நிம்மதி கிட்டும்.
* தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வியில் மேன்மை கிட்டும்.
* தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும்.
* தீராத நோயால் அவதிப்படுபவர்கள், உடல் நிலை மோசமானவர்களுக்கு மருந்து வாங்கித் தருவதால், உடல் ஆரோக்கியமாகும்.
* பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.
* பெண்கள் புடவை, ஜாக்கெட் மற்றும் மங்களப் பொருட்களை தானமாக வழங்க சுமங்கலித்தன்மை கூடும்.
* படிக்கும் மாணவர்களுக்கு தேவையான பள்ளி உபகரணப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
- காலை முதலே சென்னையில் உள்ள அனைத்து நகைகக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.
- நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வருகிற 3-வது திதியை 'அட்சய திருதியை' என்று குறிப்பிடுவார்கள். அந்த நாளில் சிறிய அளிவிலாவது தங்கம் உள்பட மங்கல பொருட்களை வாங்குவது வழக்கம். தங்க ஆபரணங்களை வாங்குவது நன்மை தரும் என்றும் அதன் மூலம் மேலும், மேலும் தங்கம் அபிவிருத்தியாகும் என்பது மக்களின் நம்பிக்கை.
இந்த நிலையில், இன்று அட்சய திருதியை ஆகும். இதனால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் காலை முதலே சென்னையில் உள்ள அனைத்து நகைகக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு வரை விற்பனை நடைபெறும் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் விலையில் மாற்றமில்லை. ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.8,980-க்கும் ஒரு சவரன் ரூ.71,840-க்கும் விற்பனையாகிறது.
காலை 10.30 மணிக்கு தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதால் காலையில் நகைக்கடைகளுக்கு செல்வோர் பழைய விலையில் தங்கம் வாங்கலாம் என நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
- அட்சய திருதியை நாளில் ஆதிசங்கரருக்கு ஏழை பெண் வறுமையிலும் நெல்லிக்கனியை தானம் தந்தார்.
- கிருஷ்ணன் தனது நண்பர் குசேலர் அன்புடன் கொடுத்த அவலை அட்சயம் என்று கூறி மூன்று பிடி உண்டு கோடி கோடியாக செல்வங்களை அள்ளிக் கொடுத்து குசேலனை குபேரனாக்கினார்.
அட்சய திருதியை நாளில் நடந்த வரலாற்று சம்பவங்கள்
* படைத்தல் தொழிலை நடத்தி வரும் பிரம்மா அட்சய திருதியை நாளில் உலகத்தை படைத்தார். அதனால் தான் உலக மக்களுக்கு தேவையான வளங்கள் உற்பத்தியாகிக் கொண்டு இருக்கிறது. மக்கள்தொகை உபரியாகிக் கொண்டு இருக்கிறது.
*அட்சய திருதியை நாளில் ஆதிசங்கரருக்கு ஏழை பெண் வறுமையிலும் நெல்லிக்கனியை தானம் தந்தார். மனம் குளிர்ந்த ஆதிசங்கரர் ஏழைப் பெண்ணின் வறுமை நீங்கும் எனக்கூறி, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமகாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஏழை பெண்ணின் வறுமையை போக்க தங்க நெல்லிக் கனிகளை மழையாக பொழியச் செய்தார்.
* இதே நாளில் கிருஷ்ணன் வறுமையில் வாடிய தனது நண்பர் குசேலர் அன்புடன் கொடுத்த அவலை அட்சயம் என்று கூறி மூன்று பிடி உண்டு கோடி கோடியாக செல்வங்களை அள்ளிக் கொடுத்து குசேலனை குபேரனாக்கினார்.
* மகா விஷ்ணுவின் அதிபதி கிழமையான புதன்கிழமையும் கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியும் இணைந்த நாளில் அட்சய திருதியை வருவதால் அன்றைய தினம் மகாலட்சுமி, நாராயணர் படம் வைத்து கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம் பாடி, குசேலர் கதை படித்து அவல் பாயாசம் வைத்து வழிபட்டால் பல தலைமுறை வறுமை, கடன், தீராத சொத்து பிரச்சினை, திருமணத் தடை தீரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
* திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்கு கடன் வழங்கிய குபேரன் அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியை வழிபட்டு சங்கநிதி, பதும நிதியை பெற்றதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் லட்சுமி குபேர பூஜை செய்தால் குறையாத செல்வம் உள்ள செல் வந்தர்களாக, லவுகீக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெற்று பூரண நலத்துடன் வாழலாம்.
- அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
- அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை.
அட்சயம் என்ற சொல்லுக்கு குறைவில்லாதது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளரும், இந்த நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து பாக்கிய பலனை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
சமீப காலத்தில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்ற நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை.
பரணி, பூரம், பூராடம் போன்ற சுக்கிரனின் நட்சத்திரம் வரும் நாட்களில் புதன், சுக்கிர ஹோரையில் தங்க நகை வாங்கலாம். அதே போல் புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் சேர்ந்தது போல இருக்கும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும்.
அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் ஐஸ்வர்யம் எப்போதும் தங்கும்.
அட்சய திருதியை அன்று வாங்கக் கூடிய சில சுப மங்களப் பொருட்கள்:
மண்பானை, துளசி செடி, கல் உப்பு, மல்லிகை பூ, சர்க்கரை, வெள்ளை தாமரை, நவதானியங்கள், ராமர் பாதம், சோழி, ஸ்ரீசக்கரம், வலம்புரிச்சங்கு, ஸ்வஸ்திக் சின்னம் போன்ற பொருட்களை வாங்கலாம்.
சந்தனம், மஞ்சள் கிழங்கு, குங்குமம், வெற்றிலை பாக்கு, முனை முறியாத பச்சரிசி போன்றவற்றை வாங்கினால் லட்சுமி கடாட்சம் கூடும்.
- தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.
- செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அட்சய திருதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் கோலம் போட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்ற வேண்டும். குத்து விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்கவும்.

பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்துக் கோலம் போடவும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன், சிறிய நகைகள் போடவும். அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். அதன் மீது தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும்.
இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயாசம் நைவேத்யம் செய்யலாம்.
இவ்வாறு பூஜை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும். அட்சய திருதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாக்கும்.

பொருளை தேடிக் கொள்வதைப் போல புண்ணியத்தையும் தேடிக் கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சரியான சந்தர்ப்பமாக அட்சய திருதியை வருகிறது. நீங்கள் மனம் உவந்து ஏழைகளுக்கு செய்யும் தான, தர்மம், பல மடங்காக வளர்ந்து, அதன் புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அட்சய திருதியை தினத்தன்று நீங்கள் 10 சதவீதம் தானம் 10 சதவீதம் தர்மம் செய்தாலே, அது பல்கி பெருகி உங்களுக்கு 100 சதவீத புண்ணியத்தைத் தேடித் தரும். இத்தகைய சிறப்பான தினத்தன்று, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி பூஜையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
இதனால் செல்வம் பெருகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மகாலட்சுமி படம் முன்பு நெய் தீபம் ஏற்றி லட்சுமி துதியை மனம் உருக சொல்ல வேண்டும். நிச்சயம் அலை மகள் உங்கள் வீட்டில் அவதரிப்பாள்.
- குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
- குழந்தை திருமணங்கள் நடைபெற்றால், கண்டறிந்து, சம்பந்தப்பட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூர்:
அட்சய திருதியை யையொட்டி குழந்தை திருமண ங்கள் நடைபெறு வதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இதுகுறித்து கலெக்டர் வினீத் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வரும் 22 ம் தேதி அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, குழந்தை திருமணங்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், அனைத்து மகளிர் போலீசார், சைல்டு லைன், ஹிந்து அறநிலையத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், சமூக நல விரிவாக்க அலுவலர், மகளிர் ஊர் நல அலுவலர்கள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
குழந்தை திருமணங்கள் நடைபெற்றால், கண்டறிந்து, சம்பந்தப்பட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- சென்னையில் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன.
- வாடிக்யைாளர்களும் காலையிலேயே நகைக்கடைகளுக்கு சென்று ஆர்வமுடன் நகை வாங்க தொடங்கினார்கள்.
சென்னை:
அட்சய திருதியை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கும் வருவது தங்கம்தான். அட்சய திருதியை என்பது மங்களகரமான தொடக்கத்திற்கு உகந்த நாள்.
ஆனால் அதையும் தாண்டி தங்கம் வாங்குவதற்கு உகந்த நாள் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது.
ஏனெனில் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மேலும் மேலும் வீட்டில் தங்கம், செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதனால் பெரும்பாலானோர் அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதற்காக சிலர் தங்க நாணயங்களை வாங்குகிறார்கள். நகை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுக்கு பிடித்த நகைகளை வாங்குகிறார்கள்.
இந்த ஆண்டில் திருதியை திதியானது இன்று காலை 7.49 மணிக்கு தொடங்கியது. நாளை (23-ந்தேதி) காலை 7.47 மணி வரை திருதியை திதி உள்ளது. சூரிய உதய நேரத்தில் உள்ள திதியே அந்த நாளின் திதியாக கருதப்படும். இதன் அடிப்படையில் பார்த்தால் நாளை (23-ந்தேதி)தான் அட்சய திருதியை நாளாக கருதப்படுகிறது.
ஆனால் நாளை (23-ந்தேதி) காலை 7.47 மணி வரை மட்டுமே திருதியை திதி உள்ளது. அதே நேரத்தில் இன்று காலை 7.49 மணிக்கே திருதியை திதி தொடங்கி விடுவதால் இன்றும் அடசய திருதியை நாளாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே இந்த ஆண்டு இன்றும், நாளையும் என 2 நாட்கள் காலையில் திருதியை நாளாக கணக்கிடப்படுகிறது.
இன்று காலை 7.49 மணி முதல் பகல் 12.20 மணி வரை தங்கம் வாங்குவதற்கு முகூர்த்த நேரம் என்பதால் இன்று காலையிலேயே ஏராளமானோர் நகைக் கடைகளில் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை வாங்கினார்கள்.
ஆனால் அந்த நேரத்தில்தான் தங்கம் வாங்க வேண்டும் என்பதில்லை. நாள் முழுவதும் தங்கம் வாங்கலாம்.
தங்கம் வாங்க முடியாதவர்கள் உப்பு, மஞ்சள், மல்லிகைப்பூ மற்றும் மங்கள பொருட்களை வாங்கி வீட்டில் உள்ள சாமி படத்தின் முன்பு வைத்து பூஜை செய்து வழிபடலாம். தங்கமோ, மங்கள பொருளோ எதுவானாலும் சாமி படத்துக்கு முன்பு வைத்து வழிபட்ட பிறகு அன்றைய நாள் முழுவதும் அந்த பொருளை அங்கேயே வைத்து விட வேண்டும் மறுநாள் அந்த பொருட்களை எடுத்து நாம் பயன்படுத்தலாம்.
சென்னையில் அட்சய திருதியை விற்பனை இன்று காலையிலேயே தொடங்கியது. இதையடுத்து சென்னையில் உள்ள பெரும்பாலான நகைக்கடைகள் இன்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. வாடிக்யைாளர்களும் காலையிலேயே நகைக்கடைகளுக்கு சென்று ஆர்வமுடன் நகை வாங்க தொடங்கினார்கள். இதனால் சென்னையில் உள்ள அனைத்து நகைக் கடைகளிலும் இன்று காலையிலேயே வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையில் உள்ள பிரபலமான நகைக்கடைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. தங்க நாணயம் வாங்க வந்தவர்களுக்கு சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு அவர்களுக்கு உடனுக்குடன் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன. மேலும் நகை வாங்க வந்தவர்களும் நீண்ட நேரம் காத்திருந்து தங்களுக்கு பிடித்த டிசைன்களில் நகைகளை வாங்கினார்கள்.
இதுகுறித்து சென்னையை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு அட்சய திருதியை இன்றும், நாளையும் என 2 நாட்கள் வருவதால் இன்று காலை 6 மணிக்கே கடைகள் திறக்கப்பட்டு நகை விற்பனை தொடங்கியது. காலை முதலே கூட்டம் அமோகமாக உள்ளது.
வாடிக்கையாளர்களை கவருவதற்காக நகைக்கடைகள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி சில நகைக்கடைகளில் தங்க நகைகளுக்கு பவுனுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பெரும்பாலான நகைக்கடைகள் ஒரு மாதத்துக்கு முன்பே அட்சய திருதியை விற்பனைக்கான நகை முன்பதிவை தொடங்கின. அப்படி ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் இன்று கடைகளுக்கு வந்து நகைகளை வாங்கிச் சென்றனர்.
மேலும் கடைசி நேர நெருக்கடியை தவிர்ப்பதற்காக பலர் ஏற்கனவே சென்று நகைகளை தேர்வு செய்து வைத்திருந்தனர். அவர்களும் இன்று நகைக்கடைக்கு சென்று தாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த நகைகளை பணம் கொடுத்து வாங்கிச் சென்றனர்.
ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு அன்றைய விலையிலேயே தங்க நகைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேரம் செல்லச் செல்ல கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்தபடியே உள்ளது.
இன்று இரவு முழுவதும் அட்சய திருதியை உள்ளதால் இன்று இரவு வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கும் வரை கடைகள் திறந்திருக்கும். விற்பனை நேரமும் அதிகரிக்கப்படும். மேலும் நாளை (23-ந்தேதி) காலை 6 மணிக்கு மீண்டும் நகைக்கடகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெறும்.
நாளையும் இரவில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை பொறுத்து விற்பனை நேரம் நீட்டிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த நாள் பல முக்கியமான சம்பவங்களைக் குறிக்கிறது.
- இந்த நாளில் அன்னபூரணி தேவி பிறந்தாள்.
அட்சய திருதியை நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். இந்த நாளில் தொடங்கும் எதுவும் எப்போதும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த நாள் நல்ல அதிர்ஷ்டம், வெற்றி மற்றும் அதிர்ஷ்ட ஆதாயங்களின் அடையாளமாகும்.
அட்சய திருதியை எப்போது கொண்டாடப்படுகிறது?
தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் மூன்றாவது நாளில் அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி, இது ஏப்ரல்-மே மாதங்களில் வருகிறது. இந்த நாளில்தான் சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் தங்கள் கிரகங்களில் சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நாள் 'அகா தீஜ்' என்றும் அழைக்கப்படுகிறது.
அட்சய திருதியை வரலாறு
புராணங்கள் மற்றும் பண்டைய வரலாற்றின் படி, இந்த நாள் பல முக்கியமான சம்பவங்களைக் குறிக்கிறது.
* விநாயகப் பெருமானும் வேத வியாசரும் இதிகாசமான மகாபாரதத்தை இந்த நாளில்தான் எழுதினார்கள்.
* இந்த நாள் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
* இந்த நாளில் அன்னபூரணி தேவி பிறந்தாள்.
* இந்த நாளில், கிருஷ்ணர் தனது உதவிக்காக வந்த தனது ஏழை நண்பரான சுதாமாவுக்கு செல்வத்தையும் பண ஆதாயங்களையும் வழங்கினார்.
* மகாபாரதத்தின்படி, இந்த நாளில் கிருஷ்ணர் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது அவர்களுக்கு 'அக்ஷய பாத்திரத்தை' வழங்கினார். அவர்களை ஒருபோதும் பசியடையச் செய்யாத வரம்பற்ற அளவிலான உணவைத் தொடர்ந்து உற்பத்தி செய்யும் இந்தக் கிண்ணத்தை அவர்களுக்கு அருளினார்.
* இந்த நாளில் கங்கை நதி வானத்திலிருந்து பூமியில் இறங்கியது.
* இந்த நாளில்தான் குபேரர் லட்சுமி தேவியை வழிபட்டார், இதனால் கடவுளின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது.
* சமண மதத்தில் இந்த நாள் அவர்களின் முதல் கடவுளான ஆதிநாதரை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியையின் போது சடங்குகள்
விஷ்ணு பக்தர்கள் இந்நாளில் விரதம் இருந்து கடவுளை வழிபடுகின்றனர். பின்னர், ஏழைகளுக்கு அரிசி, உப்பு, நெய், காய்கறிகள், பழங்கள், ஆடைகள் வழங்கி தொண்டு செய்யப்படுகிறது. விஷ்ணுவின் அடையாளமாக துளசி நீர் சுற்றிலும் தெளிக்கப்படுகிறது.
கிழக்கு இந்தியாவில், இந்த நாள் வரவிருக்கும் அறுவடை காலத்திற்கான முதல் உழவு நாளாகத் தொடங்குகிறது. மேலும், தொழிலதிபர்களுக்கு, அடுத்த நிதியாண்டுக்கான புதிய தணிக்கைப் புத்தகத்தைத் தொடங்கும் முன், விநாயகப் பெருமானையும், லட்சுமி தேவியையும் வழிபடுகின்றனர். இது 'ஹல்கத்தா' என்று அழைக்கப்படுகிறது.
இந்நாளில் ஏராளமானோர் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்குகின்றனர். தங்கம் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அடையாளமாக இருப்பதால், இந்த நாளில் இதை வாங்குவது புனிதமாக கருதப்படுகிறது.
இந்த நாளில் புதிய தொழில் முயற்சிகள், கட்டுமானப் பணிகள் இந்நாளில் தொடங்கும்.
மற்ற சடங்குகளில் கங்கையில் புனித நீராடுதல், புனித நெருப்பில் பார்லியை சமர்ப்பித்தல் மற்றும் இந்த நாளில் நன்கொடைகள் மற்றும் பிரசாதம் வழங்குதல் ஆகியவை அடங்கும்.
ஜைனர்கள் தங்களின் ஒரு வருட தபஸ்யை இந்நாளில் முடித்து, கரும்புச்சாறு அருந்தி வழிபாட்டை முடிக்கின்றனர்.
ஆன்மீக நடவடிக்கைகள், தியானம் மற்றும் புனித மந்திரங்களை உச்சரிப்பது எதிர்காலத்தில் நல்ல அதிர்ஷ்டத்தை உறுதிப்படுத்த முக்கியமாக கருதப்படுகிறது.
பகவான் கிருஷ்ணரின் பக்தர்கள் இந்த நாளில் சந்தனத்தால் கடவுளுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால், அந்த நபர் இறந்த பிறகு சொர்க்கத்தை அடைவார் என்று நம்பப்படுகிறது.






