search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்
    X

    ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்

    • மழைக்காலங்களில் ஆடுகளை நனைய விடாமல் பாதுகாப்பாக கொட்டகை அமைத்து பரண் போன்று பலகைகள் போட்டு பாதுகாத்திட வேண்டும்.
    • மூன்று மாதத்திற்கு ஒரு முறை கால்நடை மருத்துவமனை சென்று ஆடுகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் ஆடுகளுக்கான ஆட்கொல்லி நோய் மற்றும் கழிசல் நோய்க்கான தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் நூற்றுக்கணக்கான ஆடுகளுக்கு டாக்டர் ராமலிங்கம் அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகளை டாக்டர் விஸ்வேந்தர் மற்றும் அவர்களது குழுவினர் தடுப்பூசி போட்டனர்.மழைக்காலங்களில் ஆடுகளை நனைய விடாமல் பாதுகாப்பாக கொட்டகை அமைத்து பரண் போன்று பலகைகள் போட்டு பாதுகாத்திடவும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை கால்நடை மருத்துவமனை சென்று ஆடுகளை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தினார்.

    நிகழ்வில் துணைத் தலைவர் பாக்யராஜ், செயலர் புவனேஸ்வரன், கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×