search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவர்கள்"

    • கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை.

    ஊதிய உயர்வு உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    பொது சுகாதாரம், நோய் தடுப்பு துறை இயக்குனர், மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குனர், மருத்துவம், ஊரக நல பணிகள் துறை இயக்குனர் ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

    • ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன.
    • மருத்துவ உள்ள புகார்கள் எது இருந்தால் உடனே பொதுமக்கள் 104க்கு தகவல் தெரிவிக்கலாம்.

     திருப்பூர்:

    தமிழகத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இங்கு சிகிச்சைக்காக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வந்து செல்கின்றனர்.மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவம னைகளில் பணியாற்றும் ஒரு சில டாக்டர்கள் சரியான நேரத்துக்கு வராமலும் சிலர் 3 நாட்களுக்கு ஒரு முறை பணிக்கு வந்து வருகை பதிவேட்டில் பணிக்கு வராத நாட்களிலும் கையொப்பமிடுவதாக புகார்கள் அரசுக்கு தொடர்ந்து சென்றது.

    இதையடுத்து அரசு டாக்டர்களின் வேலை நேரத்தை கண்காணிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் ககன்தீப்சிங் பேடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மாவட்ட, தாலுகா, தாலுகா அல்லாத மருத்துவமனைகளில் உள்ள தலைமை டாக்டர்கள் காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும், மாலை 3மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நிர்வாக பணியில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

    இதர டாக்டர்கள் காலை 7:30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் இருப்பதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணி நேரங்களில் இல்லையா, மருத்துவ சேவை குறைகள், அரசு மருத்துவமனையில் லஞ்சம் கேட்கிறார்களா உள்ளிட்ட புகார்கள் இருந்தால் உடனே பொதுமக்கள் 104க்கு தகவல் தெரிவிக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

    • புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
    • ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.

    சென்னை:

    அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாமதமாக பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

    புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் படுகாயமடைந்தது.
    • மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மான்கள், காட்டு எருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது மலை பகுதியில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் தண்ணீர் தேடி அடிவாரப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

    மலை அடிவாரமான தென்றல் நகர் அணைத்தலை பகுதியில் உள்ள தோப்புக்கு 12 வயதுடைய ஆண் புள்ளிமான் தண்ணீர் தேடி வந்தது. அப்போது அப்பகுதி யில் சுற்றித்திரிந்த நாய்கள் மானை துரத்தி கடித்தது. இதை பார்த்த பிரபல தொழிலதிபர் குவைத்ராஜா நாய்களை விரட்டி விட்டு மானை காப்பாற்றினார்.

    நாய்கள் கடித்து குதறியதில் மான் படுகாய மடைந்தது. இதுகுறித்து குவைத்ராஜா வனத் துறைக்கு தகவல் தெரிவித் தார். விரைந்து வந்த அவர்கள் புள்ளி மானை மீட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பின் வனத்துறை அதிகாரிகளிடம் மான் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வனவர் இளைய ராஜா கூறுகையில், காய மடைந்த மானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயங்கள் குணமாகிய பின் மானை வனப்பகுதியில் விடுவோம் என்றார்.

    • கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு ஏற்படும்.
    • அதிக தூரம் நடக்கும் போது இளைப்பு ஏற்படும்.

    அவினாசி :

    சோமனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி அளிக்கப்படுகிறது.கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி அளித்து ஆயுஷ் மருத்துவ அலுவலர் அருள் ஜோதி பேசியதாவது:- கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு ஏற்படும். சிறிய பிரச்னைக்கு பெரிய அளவில் பதற்றம் உண்டாகும். அதை எளிதில் தவிர்க்க முடியும். மேலும் எடை அதிகரிப்பு, உணவு சாப்பிடும் போது மூச்சடைப்பு, அதிக தூரம் நடக்கும் போது இளைப்பு ஆகியவை ஏற்படும். பிரசவ நேரத்திலும் அவதி ஏற்படும்.இவற்றை தவிர்க்க தினமும் மூச்சு பயிற்சி செய்வது அவசியமாகும்.

    காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் மனதுக்கு அமைதியும் உடலுக்கு வலிமையும் கிடைக்கும்.அதேபோல் சிறு சிறு யோக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.கர்ப்ப காலத்தில் உடல் முழுவதும் தசை நார்கள், ரத்த குழாய்கள் நீட்சி அடைய பயிற்சி செய்யவேண்டும். அப்போதுதான் பிரசவ காலத்தில் எந்த பிரச்னையும் ஏற்படாது.இவ்வாறு அவர் பேசினார். 

    • மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு, பதவி உயர்வை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வருவாரா? என முன்னாள் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
    • இதற்கான அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என்றார்.

    மதுரை

    திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. பிரமுகருமான டாக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-

    நாட்டின் மருத்துவ தலைநகராக தமிழ்நாடு விளங்கி வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தரமான மருத்துவ சிகிச்சையை குறைந்த செலவில் பெறபலரும் தமிழகத்திற்கு வருகிறார்கள்.

    நமது மாநிலம் சுகாதாரத் துறையில் முன்னணி மாநில மாக திகழ்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு பலரது பாராட்டையும் பெற்று தந்தார். தமிழக மக்களுக்கும் குறைந்த கட்ட ணத்தில் தரமான சிகிச்சை கிடைக்க அம்மாவின் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

    ஆனால் தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் தங்கள் ஊதிய, பதவி உயர்வுக்காக தொடர்ந்து போராட வைக்கப்படுகிறார்கள். இது நியாயமா? தற்போதுள்ள 8, 15, 17, 20 ஆண்டுகள் முடித்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5, 9, 11, 12 ஆண்டு கள் முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்று கடந்த 2009-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் கருணா நிதி ஆட்சியின்போது அர சாணை பிறப்பிக்கப்பட்டது.

    மத்திய அரசு மருத்து வர்கள் 4, 9, 13, 20 ஆண்டுகள் கழித்து ஊதிய, பதவி உயர்வு பெறுகின்றனர். அவர்க ளுக்கு 7-வது ஊதிய குழுவில் 14-வது ஆண்டில் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் அடிப்படை ஊதியமாக பெறுகிறார்கள். மத்தியஅரசு மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் குறைந்தது 15 அல்லது 20 ஆண்டுகள் கழித்து பெறுகின்ற நிலை உள்ளது. இதன் காரணமாக மாநில அரசு மருத்துவர் ரூ.86 ஆயிரம் மட்டுமே அடிப்படை ஊதியமாக பெறுகிறார்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இதுதொடர்பாக சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர், எனது கோரிக்கைக்கு ஆவண செய்யப்படும் என பதில் அளித்தார். ஆனால் கொரோனா காரணமாக காலதாமதமானது. கடந்த 2009-ம் ஆண்டு பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னையில் மருத்துவர்கள் உண்ணா விரத போராட்டம் நடத்தி னர்.

    அப்போது மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சி அமைந்தவு டன் கோரிக்கை நிறைவேற் றப்படும் என உறுதி அளித்தார். தி.மு.க. ஆட்சி அமைத்து 1½ வருடம் ஆகியும் மருத்துவர்களின் நியாயமான ஊதிய, பதவி உயர்வு நிறைவேற்றப்படவில்லை. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முத்துப்பேட்டை வட்டாரத்தில் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
    • நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஹிர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்தில் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

    இதில் 15 மருத்துவ பணியிடங்கள் உள்ளன.

    தற்போது 4 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

    இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சிகிச்உசை பெறுவதற்கு காத்திருக்கும் சூழல் உள்ளது.

    எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒருவர் மட்டுமே பணிக்கு வருவதாக கூறப்படுகிறது.
    • ஸ்கேன் பார்ப்பதற்கு செல்லும் கர்ப்பிணி பெண்களை அலைக்கழிப்பதாக கூறுகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி தாலுகா திப்பனம்பட்டி கிராமம் அரியப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 மருத்துவர்கள் பணியாற்றி வந்தநிலையில் கடந்த 6 மாத காலமாக ஒருவர் மட்டுமே பணிக்கு வருவதாக கூறப்படுகிறது.

    வாரத்தில் செவ்வாய்க் கிழமை தோறும் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரி சோதனைகள் செய்வதற்கு மருத்துவர் இல்லாத சூழ்நிலை இருந்து வருகிறது.

    இங்கு பணியில், இருக்கும் ஒரு மருத்துவரும் கர்ப்பிணி பெண்களிடம் கூறும் பதில், தென்காசிக்கு செல்லுங்கள். இங்கே நான் ஒருவர் என்ன செய்ய முடியும். அதனால் ஸ்கேன் பார்ப்பதற்கு தென்காசிக்கு செல்லுங்கள் என்று கூறுகிறார். தென்காசி சென்றால் அங்கும் இன்று போய் நாளைவா என்று கூறி கர்ப்பிணி பெண்களை அலைக்கழிப்பதாக புகார் கூறுகின்றனர்.

    தினசரி கூலிக்கு வேலைக்கு செல்லும் நபர்களும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்பி உள்ளனர். இவர்கள் தென்காசிக்கு செல்வதற்கு இங்கிருந்து பஸ் போக்கு வரத்து வசதிகள் ஏதும் கிடையாது.

    எனவே இதை கவனத்தில் கொண்டு கர்ப்பிணி பெண்கள் நலன்கருதி தேவையான மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழன் மக்கள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர்.
    • அடையாள அட்டை பெறாத மாற்றுதிறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் பள்ளியில் படிக்கும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ சான்று வழங்குவதற்கு வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது. இம்முகாமில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட மாற்று திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர் நகரத்தை சேர்ந்தவர்களுக்கு தஞ்சாவூர் மேம்பாலம் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் நாளை (வியாழக்கிழமை ) இந்த முகாம் நடைபெற உள்ளது.

    இதேபோல் ஒரத்தநாடு வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 21-ந் தேதி கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ் உலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. கும்பகோணம் வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு வரும் 24-ந் தேதி புனித தூய நடுநிலைப் பள்ளியிலும், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு வருகிற 28-ந் தேதி பள்ளத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தஞ்சாவூர் ஊரகத்தை சேர்ந்தவர்களுக்கு வரும் 31-ந் தேதி வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், திருவிடைமருதூர் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் நடுநிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

    திருவையாறு வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி திருவையாறு சீனிவாசராகவ மேல்நிலைப் பள்ளியிலும், திருப்பனந்தாளை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 4-ந் தேதி எஸ்.கே.ஜி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பூதலூரை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி திருக்காட்டுப்பள்ளி சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியிலும், பேராவூரணியை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

    பட்டுக்கோட்டை வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அடுத்த மாதம் 11-ந் தேதியும், அம்மாபேட்டையை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 14-ந் தேதி ரெஜினா சேலி மேல்நிலைப் பள்ளியிலும், திருவோணம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 16-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மதுக்கூரை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், பாபநாசம் வட்டாரத்தை சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 18-ந் தேதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளும் நடைபெறுகிறது.

    இந்த சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுதிறனாளிகள் ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -5, இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்று திறனாளிகள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை , ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களுடன் நேரில் வந்து கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்கு றையாக இருப்பதாக தலைமை மருத்துவர் தெரிவித்தார்.
    • அரசு மருத்துவமனையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு சட்ட பேரவை பொது கணக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், ஜவாஹிருல்லா ஆகியோர் ஆய்வு மேற்கொ ண்டனர்.

    அப்பொழுது வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விதைகள் மற்றும் உரக்கிடங்கை பார்வையிட்டு போதுமான கையிருப்பு உள்ளதா என அதிகாரிளிடம் கேட்டறிந்தனர்.

    மேலும் 15 விவசாயிகளுக்கு தென்னங் கன்றுகளையும் இரு விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான், ஐந்து விவசாயிகளுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் மூன்று விவசாயிகளுக்கு 200 கிலோ ஜிப்சம் நான்கு விவசாயிகளுக்கு 20 கிலோ பாசிப்பயிறு உளுந்து உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து சீர்காழி அரசு மருத்துவமனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது சிடிஸ்கேன் மையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் எனவும் சீர்காழி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தலைமை மருத்துவர் தெரிவித்தார்.

    இதனை அடுத்து தொலைபேசியில் சட்டமன்ற பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரம ணியனிடம் தொடர்பு கொண்டு சீர்காழி அரசு மருத்துவ மனையில் மருத்துவர்கள் குறைவாக இருப்பதாக கூறி கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா.முருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • ஓட்டநத்தம் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு டாக்டர் வாரம் இருமுறை சிகிச்சை அளிக்க வந்து சென்றார்.
    • மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகள் நோயாளிகளை பரிசோதித்து மாத்திரை கொடுக்கின்றனர்.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தட்டப்பாறை ரோட்டில் உள்ளது. இங்கு ஒரு பெண் மருத்துவர், ஒரு ஆண் மருத்துவர் என 2 டாக்டர்கள் பணிபுரிந்து வந்தனர்.

    பிரசவம்

    இவர்கள் நோயாளிகளை பரிவுடன் கவனித்து வந்ததால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து பயனடைந்து சென்றனர். பிரசவம் பார்க்கவும் ஏராளமான பெண்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து பயனடைந்தனர்.

    இந்த ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த டாக்டர்கள் மேற்படிப்புக்கு சென்று விட்டனர். இதனால் ஓட்டநத்தம் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரு டாக்டர் வாரம் இருமுறை சிகிச்சை அளிக்க வந்து சென்றார்.

    தற்போது ஒரு வாரமாக அவரும் பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் சிரமப்படுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

    மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகள் நோயாளிகளை பரிசோதித்து மாத்திரை கொடுக்கின்றனர். இங்கு பிரசவத்திற்கு வரும் பெண்களை 108 ஆம்புலன்சில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர். 3 மாதமாக இந்த மருத்துவமனையில் எவ்வித பிரசவமும் பார்க்கப்பட வில்லை. இந்த மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் சுற்றுவட்டார கிராம மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    எனவே உடனடியாக தினமும் பணிபுரியும் படியாக நிரந்தர டாக்டரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • இரண்டாவது குழந்தையை சுகபிரசவத்தில் வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவு செய்தனர்.
    • நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் தாய் சேய் நலமாக உள்ளார்களா என பார்த்து விட்டு செல்கிறோம்.

    சீர்காழி:

    சீர்காழி அருகில் எருக்கூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி பெல்சியா.

    இவர்களுக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவமணையில் மருத்துவர்களால் பிரசிவிக்க பட்டது.

    இதனால் 2-வது குழந்தையை சுகபிரசவம் மூலம் பெற்றெடுக்க விரும்பினர்.

    மருத்துவர்கள் முதல் குழந்தை அறுவை சிகிச்சையில் பிறந்ததால் இரண்டாவது குழந்தையும் அறுவை சிகிச்சைதான் என்றனர்.

    அதை விரும்பாத தம்பதியினர் இரண்டாவது குழந்தையை சுகபிரசவத்தில் வீட்டிலேயே பெற்றெடுக்க முடிவு செய்துஅதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி மருந்து மாத்திரை ஊசிகள் பயன்ப டுத்தாமல் நேற்று மாலை மரூட்டி சுகபிரசவத்தின் வாயிலாக அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்.

    குழந்தை பிறந்து நஞ்சுகொடி (பிளசன்டா) வருவதற்காக காத்திருந்தனர்.

    அந்நேரத்தில் அங்கு வந்த சுகாதார துறையை சேர்ந்தவர்களும் அந்த பகுதி செவிலியரும் தம்பதியினரிடம் தாய் சேய் உயிருக்கு ஆபத்து உடனடியாக மருத்துவமனை வரவேண்டும் என்று கூறினர்.

    அதற்கு நாங்கள் வீட்டிலேயே பார்த்து கொள்கிறோம் என்று தம்பதியினர் கூறினர்.

    நீண்ட நேர காத்திருப்பிற்கு பின் குழந்தை தாய் நலமாக உள்ளார்களா என்று பார்த்துவிட்டு செல்கி றோம் என்று தாயின் கை நாடியை பிடித்து பார்த்துவிட்டு நலமாக உள்ளனர் என்று அங்கிருந்து சுகாதாரதுறையினரும் செவிலியரும் திரும்பி சென்று விட்டனர்.

    நாங்கள் நினைத்தபடி சுகபிரசவத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தை பிறந்ததால் தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ×