என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "doctors arrest"

    • சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • 4 மருத்துவர்களும் இனிமேல் மருத்துவர்களாக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் படித்த சிலர் மற்றும் அங்கு பணியாற்றியவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பல்கலைக்கழகம் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    முன்னதாக ஜம்மு காஷ்மீர், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 2,900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக அல்பலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக அரியானா மாநிலம் நூ மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களில் ஒருவர் அல்பலா பல்கலைக்கழகத்தில் கடந்த 2-ந்தேதி பணி பயிற்சி காலத்தை நிறைவு செய்துள்ளார். மற்றொருவர் அந்த பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் முசாபர் அகமது, அதீல் அகமது ராதர், முசாமில் ஷகீல், ஷஹீன் சையீத் ஆகியோரது பெயர்கள் தேசிய மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    தேசிய மருத்துவ ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனவே இந்த 4 மருத்துவர்களும் இனிமேல் மருத்துவர்களாக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

    ஆந்திராவில் சட்டவிரோதமாக தத்தெடுப்பு மோசடியில் ஈடுபட்டதாக டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், ஜி கோந்தூரு மண்டலத்தை சேர்ந்தவர் துர்கா இவருக்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் துர்கா 3-வதாக கர்ப்பமானார். 3-வதாகவும் ஆண் குழந்தையாக பிறந்தால் தனது கணவர் ஏற்க மாட்டார் என பக்கத்து வீட்டை சேர்ந்த ஆர்.எம்.பி. டாக்டர் புஷ்பலதாவிடம் தெரிவித்துள்ளார்.எனவே குழந்தையை தத்து கொடுக்க விரும்புவதாக துர்கா புஷ்பலதாவிடம் கூறினார்.

    ஆனால் துர்காவுக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதை கவனிக்காத டாக்டர் புஷ்பலதா மருத்துவமனைக்குச் சென்று பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து பயிற்சி ஆர்.எம். பி டாக்டரான அம்ருதாவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி, இந்த குழந்தை விற்பனைக்கு உள்ளதாக கூறினார்.

    டாக்டர் அம்ருதா குழந்தையின் போட்டோ மற்றும் வீடியோவை வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பி ரூ.3 லட்சத்திற்கு குழந்தை விற்பனைக்கு உள்ளதாக பதிவிட்டு ஏலம் விட்டுள்ளனர்.

    இந்த செய்தியை பார்த்த கமலாகர் ராவ் என்பவர் உடனடியாக சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்க்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அஜித் சிங் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாய் துர்காவிடம் விசாரணை நடத்தினர். அவர் தனது அனுமதியின்றி அனைத்தும் நடந்ததாகவும், சமூக ஊடகங்களில் நடந்தவை தனக்கு தெரியாது என்று கூறினார்.

    இதையடுத்து சட்டவிரோதமாக தத்தெடுப்பு மோசடியில் ஈடுபட்டதாக டாக்டர்கள் புஷ்பலதா, அம்ருதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    ×