search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது சுகாதாரத்துறை"

    • அறையின் சுவா்களையொட்டி மருந்துகளை வைக்காமல், அதிலிருந்து சற்று தள்ளி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
    • பொது மக்கள், சுகாதாரத்துறை களப்பணியாளா்களுக்கும் அது உகந்த நேரமாக இருக்கும்.

    சென்னை:

    பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான மருந்துகளை சேமித்து வைத்திருக்கும் குளிா் பதனக் கிடங்குகள், மருந்தகங்கள், சேமிப்பு கிடங்குகளில் உரிய காற்றோட்ட வசதி இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அறையின் சுவா்களையொட்டி மருந்துகளை வைக்காமல், அதிலிருந்து சற்று தள்ளி வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    அதேபோன்று, சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வழக்கமான நேரத்தைக் காட்டிலும் முன்னதாகவே தொடங்கி காலை 11 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.

    இதன் மூலம் வெப்ப அலையால் தடுப்பூசியின் வீரியம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும். அதனுடன், பொது மக்கள், சுகாதாரத்துறை களப்பணியாளா்களுக்கும் அது உகந்த நேரமாக இருக்கும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி, மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
    • கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

    சென்னை:

    சென்னையில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    வடகிழக்குப் பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரில் சில இடங்களில் மழைநீா் தேங்கி நோய்த்தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து, மாநகராட்சி, மாவட்ட நிா்வாகங்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் சில அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

    இது தொடா்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    பருவமழை காலத்தில் வெள்ளநீா் தேங்காத வகையில் கழிவுகளை அகற்றுவது அவசியம். மழை நீா் தேக்க மடைந்த பகுதிகளில் தூய்மைப் பணிகளை விரிவாக மேற் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்குமாறும், உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    வயிற்றுப் போக்கு, உணவு ஒவ்வாமை பாதிப்புகள், காலரா பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அது குறித்து சம்பந்தப்பட்ட தனியாா், அரசு மருத்து வமனைகள் சுகாதாரத் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று அவா்கள் தெரிவித்தனா்.

    • அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.
    • தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும்.

    சென்னை:

    பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அண்மைக் காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    புளு வைரஸ்களால் பரவும் இன்புளுயன்சா காய்ச்சல் தற்போது பரவி வருகிறது. அவை நேரடியாக நுரையீரலைப் பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோ தனை செய்ய வேண்டும்.

    மற்றொருபுறம் மருத்துவா்கள் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சைகளை வழங்குதல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள் பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்று நோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு 'ஓசல்டா மிவிா்' எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும்.

    அதேபோன்று தீவிர பாதிப்புக்கு உள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குறைதல், சீரற்ற இதயத் துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குறைதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். 'ஓசல்டாமிவிா்' உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தடுப்பூசிகள் வழங்கலாம்.

    மருத்துவத்துறையினா், சுகாதாரக் களப்பணியாளா்கள் முகக்கவசம் அணிதல் கட்டாயம். பொது இடங்களுக்குச் செல்லும் மக்கள் மூன்று அடுக்கு முகக்கவசங்களை அணிய வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கடந்த சில ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • உயர் ரத்த அழுத்தத்துடனேயே ஒருவர் இருந்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    சென்னை:

    பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்த பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள் இதற்கு பிரதான காரணமாக அறியப்பட்டாலும், சர்க்கரை நோய், மன அழுத்தம் உள்ளிட்ட இணை நோய்களும் உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கின்றன.

    தமிழகத்தைப் பொருத்தவரை 100-ல் 33 பேருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளது.அதில் கவலைக்குரிய விஷயம் என்னவெனில் பாதிப்புக்குள்ளானவர்களில் 32 சதவீதம் பேர் மட்டுமே தங்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய் உ உள்ளதை அறிந்து வைத்துள்ளனர். மற்றவர்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. இதனால், அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளையோ, சிகிச்சைகளையோ எடுத்துக் கொள்வதில்லை.

    உயர் ரத்த அழுத்தத்துடனேயே ஒருவர் இருந்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டு 30 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுதோறும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். பாதிப்பு கண்டறியப்பட்டால் மருத்துவரின் பரிந்துரைப்படி தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பொது சுகாதாரத்துறை சார்பில், உயர் ரத்த அழுத்த பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான வசதிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஓர் உணவுப் பொருள் அதீதமாக கெட்ட கொழுப்பையும், சர்க்கரை மற்றும் உப்பையும் கொண்டிருந்தால் அது ஊறு விளைவிக்கும் உணவாக (ஜன்க் புட்) அறியப்படுகிறது.
    • அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு வகை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தகைய உணவுகளை உட் கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    மாநில உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஓர் உணவுப் பொருள் அதீதமாக கெட்ட கொழுப்பையும், சர்க்கரை மற்றும் உப்பையும் கொண்டிருந்தால் அது ஊறு விளைவிக்கும் உணவாக (ஜன்க் புட்) அறியப்படுகிறது. இத்தகைய உணவுகளால் உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    இது தொடர்பாக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு வகை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அத்தகைய உணவுகளை உட் கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அதைக் கருத்தில் கொண்டு பாக்கெட் உணவுகளில் உள்ள ஊறு விளைவிக்கும் உட்பொருள்களின் தகவல்களை அவற்றின் லேபிள்களில் தெளிவாக அச்சிடுவதற்கான நடவடிக்கையை உணவுப் பாதுகாப்பு துறை மேற்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக, பொதுமக்கள் எளிதில் அவற்றை புரிந்து கொள்ளும் வகையில் நிறக் குறியீடுகள் மூலமாகவோ அல்லது வேறு எச்சரிக்கை குறியீடுகள் மூலமாகவோ அதனை குறிப்பிடவேண்டும்.

    சராசரியாக ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய கொழுப்புச்சத்து, சர்க்கரை மற்றும் உப்பு சத்துகளின் அளவையும், அதிலிருந்து சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் எத்தனை மடங்கு அதிகமாக உள்ளது என்பதையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் லேபிள்களில் அச்சடித்தல் அவசியம்.

    • நூற்றாண்டு ஜோதி தமிழ்நாடு முழுவதும் பயணித்து நூற்றாண்டு விழா நடக்க உள்ள மாமல்லபுரத்தை டிசம்பர் 5 அன்று வந்தடையும்
    • தமிழக பொதுசுகாதாரத் துறை கடந்து வந்த பாதை, சாதனைகளை கண்காட்சியாக பன்னாட்டு சுகாதார மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

    பூந்தமல்லி:

    தமிழ்நாட்டில் பொதுசுகாதாரத்துறை 1922-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கர்னல் எஸ்.டி.ரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு பொது சுகாதார துறை தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக வரும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச பொது சுகாதாரத்துறை மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    சென்னையில் நடைபெற உள்ள இந்த பன்னாட்டு பொது சுகாதார மாநாடு வரும் டிசம்பர் மாதத்தில் 3 நாட்கள் நடைபெறும். உலகளாவிய பொதுசுகாதார வல்லுநர்கள், முன்னோடிகள், ஆய்வு அறிஞர்கள் தமிழகத்திற்கு வரவழைத்து அவர்தம் திறன் நுட்பங்களை அனுபவங்களை பல்வேறு தலைப்புகளின்கீழ் நம்மோடு பகிர்ந்துகொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக பொதுசுகாதாரத் துறை கடந்து வந்த பாதை, சாதனைகளை கண்காட்சியாக இந்த பன்னாட்டு சுகாதார மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

    இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நூற்றாண்டு ஜோதி சென்னையில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பயணித்து நூற்றாண்டு விழா நடக்க உள்ள மாமல்லபுரத்தை டிசம்பர் 5 அன்று வந்தடைய உள்ளது. இதில் முதலாவதாக பூந்தமல்லி சுகாதார மாவட்டத்திற்கு நூற்றாண்டு ஜோதி சென்னையிலிருந்து வந்தடைந்தது.

    இதனைத் தொடர்ந்து பொது சுகாதார நிறுவனத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் பொது சுகாதார நிறுவன துணை இயக்குநர் மருத்துவர். செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதனை தொடர்ந்து பொது சுகாதார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பொது சுகாதார துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து பொது சுகாதார நிறுவன நிர்வாக அலுவலர் குமார் நன்றி கூறினார்.

    இந்த நூற்றாண்டு ஜோதி 3315 கிலோ மீட்டர்கள் பயணித்து விழா நடக்கும் மாமல்லபுரத்தை டிச.5 அன்று அடைகிறது. பூந்தமல்லி சுகாதார மாவட்டத்தை தொடர்ந்து திருவள்ளூர் சுகாதார மாவட்டத்திற்கு இந்த நூற்றாண்டு ஜோதி செல்ல இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    ×